Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் - 141 ஆம் இடத்தில் சிறிலங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் சீர்குலைவு: சர்வதேச ஊடக அமைப்பு எச்சரிக்கை

சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் பாரிய சீர்குலைவுக்குள்ளாக்கப்பட்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகைச் சுதந்திரத்தின் உலகளாவிய நிலைவரம்

உலகம் பூராவும் ஊடகத்துறை இன்று மிகவும் ஆபத்து மிகுந்த தொழிலாக மாறியிருக்கும் சூழ்நிலையில், எல்லை கடந்த நிருபர்கள் (Reporters Without Borders)என்ற சர்வதேச அமைப்பு இவ்வாரம் வெளியிட்டிருக்கின்ற உலகளாவிய பத்திரிகைச் சுதந்திரச் சுட்டெண் அறிக்கையில் (World wide Press Freedom Index )உள்ள விபரங்கள் எமது கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருக்கின்றன. கடந்த செப்டெம்பர் இறுதி வரை செய்தி ஊடகங்களுக்கு எதிராக நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அடிப்படையாக வைத்தே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பத்திரிகைச் சுதந்திர சுட்டெண் தொடர்பில் எல்லை கடந்த நிருபர்கள் அமைப்பு வெளியிட்டிருக்கும் ஐந்தாவது வருடாந்த அறிக்கை இதுவாகும்.

வடகொரியா, எரித்திரியா, துருக்மேனிஸ்தான், கியூபா, பர்மா மற்றும் சீனா ஆகியவற்றை பத்திரிகைச் சுதந்திரத்தைப் படுமோசமாகச் சூறையாடும் நாடுகள் என்று அறிக்கை வர்ணித்திருக்கிறது. கடந்த சில வருடங்களாக வெளியிடப்பட்டு வந்த அறிக்கைகளுக்குப் பின்னர் பத்திரிகைச் சுதந்திரம் தொடர்பில் நாடுகளின் செயற்பாடுகளை அவதானித்து 168 நாடுகளை அறிக்கை வரிசைப்படுத்தியிருக்கிறது. மேற்கூறப்பட்ட ஐந்து நாடுகளிலும் நிலைவரம் எந்தவகையிலும் மாற்றமடைய வேயில்லை. பத்திரிகைச் சுதந்திரச் சுட்டெண் கணிப்பு வீதத்தில் வட கொரியா கடைசி இடத்தில் (168) இருக்கிறது. மொரித்தானியா மற்றும் ஹெய்டி போன்ற சில வறிய நாடுகள் பத்திரிகைச் சுதந்திரம் தொடர்பிலான அவற்றின் செயற்பாடுகளில் சிறு மேம்பாட்டைக் காட்டியிருக்கின்ற அதேவேளை, பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான் போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகள் கணிப்பு வீதத்தில் வீழ்ச்சி கண்டிருக்கின்றன.

பத்திரிகைச் சுதந்திரத்தைப் படுமோசமாக சூறையாடுபவை என்று வர்ணிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் மக்களுக்குத் தகவல்களை வழங்குகின்ற பணிக்காக ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் உயிராபத்தை அல்லது சிறைவாசத்தை எதிர்நோக்க வேண்டியிருப்பதாக அறிக்கை கூறுகிறது. ஈரான், சவூதி அரேபியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் 162 ஆவது இடத்தில் இருக்கிறது. ரஷ்யாவிலும் பெலாரஸிலும் நிலைவரத்தில் மேம்பாட்டைக் காண முடியவில்லை. சுயாதீன ஊடகங்களை ரஷ்யா தொடர்ந்தும் சிதைத்துக் கொண்டே வருகிறது. அண்மையில் புலனாய்வு ஊடகவியலாளரான அனா பொலிற்கோவிஸ் கயா கொலை செய்யப்பட்ட சம்பவம் ரஷ்யாவில் எதிர்வரும் நாட்களில் பத்திரிகைச் சுதந்திரம் எதிர்நோக்கப் போகின்ற ஆபத்துக்கு கட்டியம் கூறுவதாக அமைந்திருக்கிறது.

வட ஐரோப்பிய நாடுகள் கணிப்பு வீதத்தில் உச்ச நிலையில் இருக்கின்றன. இந்நாடுகளில் செய்தித் தணிக்கையோ, ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலோ அல்லது அவர்கள் தாக்குதலுக்குள்ளாகும் ஆபத்தோ இல்லை. பின்லாந்து, அயர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகியவை சுட்டெண்ணில் முதலிடங்களில் இருக்கின்றன. கடந்த வருடம் முதலாமிடத்தில் இருந்த டென்மார்க் இத்தடவை 19 ஆம் இடத்துக்கு பின் தள்ளப்பட்டிருக்கிறது. நபிகள் நாயகத்தைப் பற்றிய கேலிச் சித்திரத்தை வரைந்த ஓவியர்களுக்கும் அக் கேலிச் சித்திரம் வெளியான பத்திரிகைகளின் பிரசுரகர்த்தாக்களுக்கும் எதிரான அச்சுறுத்தல்களே டென்மார்க்கிற்கு இப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றன. யேமன் இத்தடவை 4 இடங்கள் பின் தள்ளப்பட்டு 149 ஆவது இடத்தில் இருக்கிறது. பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டமையும் கேலிச்சித்திரத்தை மறுபிரசுரம் செய்த பத்திரிகை அலுவலகங்கள் மூடப்பட்டமையுமே இதற்குக் காரணமாகும். இந்தக் கேலிச்சித்திரச் சர்ச்சை காரணமாக அல்ஜீரியா, ஜோர்தான், இந்தோனேசியா மற்றும் இந்தியா ஆசிய நாடுகளிலும் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்பட்டிருக்கிறா

141

முன்னுக்கு உள்ள 14

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.