Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரிட்டனில் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் 7,000 கட்டிடங்கள் அழிவின் விழிம்பில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
UK-seaside-291214-200-world.jpg

கடல் நீர்மட்டம் அதிகரிப்பால் பிரிட்டன் கடற்கரை பகுதிகளில் வீடுகள் உட்பட சுமார் 7,000 கட்டிடங்கள் வரை கடல் அரிப்பினால் அழிந்து விடும் ஆபத்து உள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் அடுத்த 20 ஆண்டுகளில் 800 கட்டிடங்களை கடல் நீர் முழ்கடித்து விடும் என்றும் அந்த ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டில் மட்டும் சுமார் 1 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சொத்துக்கள் கடலின் ராட்சத அலைகளால் பிரிட்டன் இழக்க நேரிடும்.

  

2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் யார்க்‌ஷயர் முதல் கெண்ட் வரையிலுள்ள கடற்கரைப் பகுதிகளை மிகப்பெரிய ராட்சத அலைகள் தாக்கியதில் சுமார் 1,400 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் பல வீடுகள் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டன. இதனையடுத்து இந்த நிலை மேலும் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. கார்ன்வால் கடல்பகுதி அடுத்த 20 ஆண்டுகளில் 76 வீடுகளை கடல் நீருக்கு இரையாக்கும் ன்றும், கடந்த 50 ஆண்டுகளில் கார்ன்வாலில் மட்டும் சுமார் 132 வீடுகள் கடல் நீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் கிரேட் யார்மவுத் சுமார் 293 வீடுகளையும், சவுதாம்ப்டன் சுமார் 280 வீடுகளையும், கார்ன்வால் சுமார் 273 வீடுகளையும் இழக்க நேரிடும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சாதாரண நிலையில் கடல் அரிப்புக்கு பிரிட்டன் கடற்கரைப்பகுதிகளில் அடுத்த 20 ஆண்டுகளில் 295 வீடுகள் அழியும் என்றும் மோசமான வானிலையின் விளைவாக இருந்தால் 430 கட்டிடங்கள் அழியும் என்றும் சுற்றுச்சூழல் ஆய்வு தெரிவித்துள்ளது.

http://seithy.com/breifNews.php?newsID=123586&category=WorldNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விண்வெளி ஆராய்ச்சி செய்யுறம்....மற்றவன் அடிபடுறதுக்கு பொல்லு குடுக்கிறம் எண்டு செலவழிக்கிற காசை இஞ்சை கொட்டலாம்... :icon_idea:  :D

  • கருத்துக்கள உறவுகள்

விண்வெளி ஆராய்ச்சி செய்யுறம்....மற்றவன் அடிபடுறதுக்கு பொல்லு குடுக்கிறம் எண்டு செலவழிக்கிற காசை இஞ்சை கொட்டலாம்... :icon_idea:  :D

 

அடக்கி வாசியுங்க, குமாரசாமி அண்ணே....

அகதிகளுக்கு கொடுக்கிற காசையும், இதில் போடலாம் என்று..."ஸ்ருடன்ற் விசாவில்" உள்ளவர்கள் சொல்லப் போயினம். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அகதி அது இது என்று இந்த பக்கம் வராமல் விட்டால் சரி.

செய்த அநியாயத்துக்கு 7000 கட்டிடம் போதாது.....

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கி வாசியுங்க, குமாரசாமி அண்ணே....

அகதிகளுக்கு கொடுக்கிற காசையும், இதில் போடலாம் என்று..."ஸ்ருடன்ற் விசாவில்" உள்ளவர்கள் சொல்லப் போயினம். :D  :lol:

 

மாணவர்கள் பிரிட்டனின் 3 வது பெரிய வருமானத்தை கொண்டு வருகிறார்கள்.

 

அகதிகள் சுரண்டி எடுக்கிறார்கள். கடல் அலை போல...!! அதனால் உள்ளூர் மக்களால் அவர்கள் விரும்பப்படுவதில்லை. :lol::icon_idea:

செய்த அநியாயத்துக்கு 7000 கட்டிடம் போதாது.....

 

நம்ம நாடே போயிட்டுது.. அப்ப அது யார் செய்த அநியாயம்..???! :lol::o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடக்கி வாசியுங்க, குமாரசாமி அண்ணே....

அகதிகளுக்கு கொடுக்கிற காசையும், இதில் போடலாம் என்று..."ஸ்ருடன்ற் விசாவில்" உள்ளவர்கள் சொல்லப் போயினம். :D  :lol:

 

ஒம் உண்மைதான் சிறித்தம்பி..... :(
 
அகதிக்காசையும் இதிலை போடலாம்தான்..
ஆனால் அகதிப்பிரச்சனையள் ஆராலை எங்கையிருந்து எப்பிடி வருதெண்டு ஸ்ருடன்ற் விசாக்காரருக்கு தெரியாது போலை கிடக்கு....
ஸ்ருடன்ற் எல்லே!!!!! :icon_idea:
இன்னும் படிச்சு முடிக்கேல்லை போலை... :D
எங்கடை பிரச்சனைக்கு வருவம்...எங்களை ஆண்ட வெள்ளைக்காரன் தான் கன பிரிவுகளாக இருந்த இலங்கையை ஒரே அரசாக்கினவன்......அவன் விட்டுட்டு போகேக்கையாவது பிரிச்சு குடுத்துட்டு போயிருக்கலாம் ஏன் குடுக்கேல்லை...
வெள்ளைக்காரன் எல்லே!!! கெட்டிக்காரன்...
வெள்ளைக்காரன் விதைச்ச வினையாலைதான் நாங்கள் இஞ்சை குளிருக்கை நடுங்கி சாகவேண்டிக்கிடக்கு....
எங்கடை நாட்டிலை பிரச்சனை இருந்துருக்காவிட்டால் நாங்கள் வந்திருப்பமா? வரத்தான் இவர்கள் விடுவார்களா???
நாங்கள் இஞ்சையிருந்து அகதிக்காசு எடுக்குமளவிர்க்கு இந்த நாடுகள் முட்டாள் நாடுகள்....
 
இதை சுட்டிகாட்டுபவர்கள் பலே புத்திமான்களாம்.... :icon_idea: 
 
உந்த ஸ்ருடன்ற் விசாக்காரர் படிக்கவெண்டு வந்திட்டு செய்யுற சுத்துமாத்துக்கள் ஒண்டு இரண்டில்லை.....படிக்க வந்துட்டு சிற்றிசன் இருக்கிற அகதிப்பெட்டையளுக்கு பின்னாலை என்னத்துக்கு திரியினமாம்????
இனியும் ஸ்ருடன்ற் விசாக்கள் சிலிர்த்தால் உள்ளதெல்லாம் படங்களுடன் நாறும். :) 
 
அகதிப்பிரச்சனை.
 
இன்று உலகளாவிய ரீதியில் அகதிகளை உருவாக்கியவர்கள் யார்? மேலைத்தேயத்தவர்கள் தான். தங்கள் சுய நலத்திற்க்காக உள்ளநாட்டு யுத்தங்களை உருவாக்கி.....அகதிகளையும்  உருவாக்கி விட்டுள்ளார்கள்.அகதிகளும் அவர்களின் வருகைகளும் இவர்களுக்கு ஒருவித அரசியல்/பொருளாதார லாபங்களை தவிர நட்டங்கள் ஏதுமில்லை.
 
சும்மா இருந்த ஈராக்கை சிதைத்தவர்கள் யார்?
பொச்சுமட்டை வல்லமை இல்லாத சதாம் குசைனை அணுகுண்டு வைத்திருக்கிறார் என்று உலகிற்கு பம்மாத்து காட்டி ....சகல அட்டூழியமும் செய்தது யார்?இன்று தினசரி குண்டுவெடிப்பு எனும் பெயரில் நூற்றுக்கணக்கானவர்கள் செத்து மடிகின்றார்கள். இதன் மூலம் அகதிகள் தானே உருவானார்கள்? 
 
 
லிபியாவில் ஏன் என்ன பிரச்சனை வந்தது? எப்படி அங்கே அகதிகள் உருவானார்கள்????
 
தானும் தன்பாடும் என்று இருந்த சிரியாவை நிர்மூலமாக்கி அதன் மூலம் அகதிகளை உருவாக்கியவர் இவர்கள் தானே....
 
தானும் தன்ரை கிழங்கும் என்று இருந்த உக்கிரேனை புகை அடிச்சு பழுக்க வைச்சது யார்???
 
படிக்க வந்தவையள்...வந்தமாம்...படிச்சமாம்....நாட்டுக்கு திரும்பி போனமாம்...நாட்டுக்கு நல்லதை செய்தமாம் எண்டிருக்கோணும்....எல்லா இடத்திலையும் மூக்கை நுளைச்சால் நாங்களும்....அகதிக்கதவை ஒரு நாடும் பூட்டேல்லை. ஸ்ருடன்ற் விசா கதவை ஒரே இழுவையாய் இழுத்து பூட்டிட்டாங்கள்...ஏன்????? :D
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு.... இதுக்குப் பிறகும், இந்தப் பக்கம்....
அகதி எண்டு சொல்லிக் கொண்டு வந்தால்...
வாலை..... ஓட்ட, நறுக்க  ஆக்கள் ரெடியாய்.... இருக்கினம்.
 

"சூடு கண்ட பூனை, அடுப்பங்கரை நாடாது"
 

நாடினால்..... நடக்கிறது வேறை....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.