Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா மீது நம்பிக்கை இல்லை என்ற நிலைப்பாட்டை நிரூபித்திர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா மீது நம்பிக்கை இல்லை என்ற நிலைப்பாட்டை நிரூபித்திருக்கிறது ஜெனீவா: சு.ப.தமிழ்ச்செல்வன்

தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்கும் என்று சிறு அளவில்கூட நம்பிக்கையில்லாமல்தான் வந்தோம். ஜெனீவாவில் அது நிரூபணமாகியிருக்கிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜெனீவாப் பேச்சுக்கள் - 02 முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு:

மனிதாபிமான அவலத்தை வெளிப்படுத்தவே ஜெனீவாப் பேச்சுக்களத்தை பயன்படுத்துவோம் என்று நாம் தெரிவித்திருந்தோம். உலகத்தின் மனித உரிமைகளின் மையமான ஜெனீவாவின் மையத்தில் நின்று கொண்டு எம்மக்களினது மனிதாபிமான வேண்டுகோளை விடுத்திருக்கிறோம். அந்த வகையில் எம்முயற்சி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் எமது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவுக்கு நாங்கள் வரும்போது தெட்டத்தெளிவாக என் கருத்தை முன்வைத்துவிட்டுத்தான் வந்தோம். தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய எந்த ஒரு சிறுவிட்டுக் கொடுப்பையும் மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்கும் என்று நாம் நம்பவில்லை. முழுமையாக சர்வதேச சமூகத்தை நம்பியே அவர்களினது அழைப்புக்கு மதிப்பளித்து நாம் வந்தோம் என்று கூறியிருக்கிறோம். சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்கும் என்று சிறு அளவில்கூட நம்பிக்கையில்லாமல்தான் வந்தோம். அது இங்கே நிரூபணமாகியிருக்கிறது. தனது முகத்தை சிறிலங்கா அரசாங்கம் அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது. சிறிலங்கா அரசாங்கம் தொடர்பான தனது நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் தெளிவாக புரிந்திருக்கும்.

சர்வதேச சமூகம் எம்மை ஒரு நம்பிக்கையோடு அழைத்துக் கொண்டு வந்தது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் முரண்டுபிடித்து தன்னுடைய பிடிவாதத்தைக் காட்டி எங்களுடைய மக்களின் பேரவலத்துக்கு தீர்வேற்படுத்தும் ஒரு மிகச்சிறிய நடவடிக்கையான யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலே உள்ள நடைமுறையான 6 இலட்சம் மக்களுக்கான முக்கிய தரைவழிப்பாதையாக உள்ள ஏ௯ பாதையை திறப்பதை மறுத்துவிட்டது. இதனால் இந்தப் பேச்சுவார்த்தை முயற்சியை முடக்கியிருக்கின்றார்கள். இந்தப் பழியை சிறிலங்கா அரசாங்கமே ஏற்க வேண்டும்.

இருநாட்கள் நாங்கள் எடுத்த முயற்சிகளில் எந்த விதமான இணக்கப்பாட்டுக்கும் விட்டுக்கொடுப்புக்கும் சிறிலங்கா அரசாங்கம் முன்வரவில்லை. சிறிலங்கா அரசாங்கம் அமைதி வழியில் எமது மக்களுடைய மனிதாபிமான பிரச்சனைகளுக்கோ அரசியல் கோரிக்கைகளுக்கோ அரசியல் தீர்வு முயற்சிகளுக்கோ எந்த விதத்திலும் அனுசரித்துப் போகும் தன்மையை வெளிப்படுத்தவில்லை. அவர்கள் யுத்த வெறிப்போக்கையும் ஒரு வன்முறைச் செய்தியாக தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்கும் இன அழிப்பு யுத்தத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்குமான ஒரு வெளிப்பாட்டைத்தான் காட்டிக்கொண்டுள்ளனர். நிச்சயமாக இது தமிழ் மக்களை மட்டுமல்ல- சிறிலங்காவையே ஒரு பேரழிவுக்குள்ளுள் தள்ளுகிற முயற்சியாக சிறிலங்கா பேரினவாத தலைமைகள் தங்களது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்பதைத்தான் வெளிப்படுத்தியுள்ளனர்.

சிங்கள மக்களும் தமிழ் மக்களும் சிறிலங்கா அரசாங்கத்தின் அநீதியான-கொடூரமான செயற்பாடுகளை முறியடிக்க முன்வர வேண்டும்.

உலகம் இதனை வெகுவிரைவில் புரியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. நிச்சயமாக சர்வதேச சமூகம் சிறிலங்கா அரசாங்கம் தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். எடுக்கும் நிலை உருவாகும். சிங்கள இனவாதத்தலைவர்களை ஒரு வழிக்குக் கொண்டுவருவதற்கு சர்வதேச சமூகம் பெருமுயற்சி எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.

வலிந்த தாக்குதல்களை இருதரப்பும் மேற்கொள்ளாது என்று நோர்வே அனுசரணையாளர்கள் சொல்லியிருதனர். ஆனால் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே பேச்சுவார்த்தை அரங்கில் இருக்கும்போதே தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வலிந்த தாக்குதல் முயற்சிகளை நாம் எடுத்துக் கூறினோம். ஆனால் இதற்கான எந்த ஒரு ஆக்கப்பூர்வமான முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. சிறிலங்கா அரசாங்கமானது கண்காணிப்புக்குழுவின் செயற்பாட்டை பொய்யான காரணங்களைக் கூறி முடக்கிவிட்டு மீண்டும் மீண்டும் எமது மக்கள் மீது இன அழிப்பு யுத்தத்தை கட்டவிழ்த்துவிடத்தான் போகிறார்கள். இதிலிருந்து எமது மக்கள் விடுதலை பெற- சுதந்திரத்துக்கான போராட்டத்தை தொடர எமது தலைவரின் வழியில் நின்று போராடுவார்கள்.

புலம்பெயர் வாழ் எம்மக்கள் என்றுமில்லாத வகையில் முழுமையான ஆதரவை வழங்குவர். ஏனெனில் மனிதாபிமானம் பேசப்படுகிற ஜெனீவாவின் தலைநகரில் நாங்கள் வந்து நின்று கொண்டு எம் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனையை முன்வைத்தோம். ஆனால் நிராகரிக்கப்பட்டுள்ளதால் எம் மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளனர். அவமானப்படுத்தியுள்ளனர். ஆகவே ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அணிதிரள வைக்கின்ற ஏற்பாட்டையே இப்போது சிறிலங்கா அரசாங்கம் ஜெனீவாவிலிருந்து செய்துவிட்டுப் போகிறது.

தமிழ் மக்களை அனைத்து வகைகளிலும் அழித்தொழிக்க கொன்றொழிக்க சிறிலங்கா அரசாங்கம் முயன்று கொண்டிருக்கிறது. இராணுவ நடவடிக்கை, கொடிய பயங்கரவாத நடவடிக்கை, எம் மக்களைத் தாங்கி நிற்கும் புலம்பெயர் மக்கள் அளிக்கின்ற உதவிகளை கொண்டு சேர்க்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதி முடக்கம் ஆகியவற்றின் மூலம் இத்தகைய கொடூரத்தை நிகழ்த்த சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது. தாயகத்திலே சர்வதேச மனிதாபிமான அமைப்புகளைக் கூட முடக்கியுள்ளனர். அவர்களின் அனைத்து நடவடிக்கைளையும் பலவீனப்படுத்தியுள்ளனர். இதனை சர்வதேச அமைப்புகள் கண்டித்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூரங்கள் இதுமட்டுமல்ல. இனியும் வரும்.

எங்களுடைய மக்களுக்கு நன்மையளிக்கக் கூடியவகையில் தேவையும் சூழலையும் கருதி எங்களது உத்திகளை தலைமைப்பீடம் எடுக்கும். எமது தேசியத் தலைவரின் வருடாந்திர கொள்கைப் பிரகடனமான மாவீரர் நாள் உரையானது மிக மிக முக்கியமானது. மிகவும் எதிர்பார்க்கப்படுகிற- எதிர்பார்க்கப்படும் விடயமாக உள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூரமான நடவடிக்கைகள் தொடர்பாகவும் சர்வதேச சமூகம் மேற்கொள்ளும் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் எமது மக்கள் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விடயங்கள் தொடர்பாகவும் எமது தேசியத் தலைவரின் அந்த கொள்கைப் பிரகடன உரை வரும் என்று நினைக்கின்றேன். நிசச்யமாக நாங்களும் அந்த உரையை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

சிறிலங்கா அரசாங்கமானது பேச்சுக்களுக்கான நாட்கள் தீர்மானிக்கப்பட நிலையிலும் மிகப் பிரம்மாண்டமான ஒரு படையெடுப்பை எமது தேசத்தின் மீது கட்டவிழ்த்துவிட்டது. அதனை எம் மக்கள் எப்படி எதிர்கொண்டனர் என்பது உலகறிந்த உண்மை.

எமது மக்களின் நெற்றியிலே துப்பாக்கிகளை நீட்டி வைத்துக்கொண்டு எங்களை அழிக்க ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும்போது எம் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வழியைத் தவிர வேறு வழியில்லை.

ஆகவே சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பு நடவடிக்கை மற்றும் படையெடுப்புக்களை எதிர்கொண்டு அதனை வெற்றி கொள்ள- தங்களைப் பாதுகாக்க- தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் சுயநிர்ணய உரிமையுடன் வாழும் வழிதான் தமிழ் மக்களுக்கான வழி. அந்த இறுதிக்கட்டத்தைப் புறந்தள்ள முடியாது. போர் மீது எம் மக்கள் விருப்பமின்றி இருந்தாலும் துரதிர்ஸ்டவசமாக மக்கள் எதிர்கொள்வர். நீதியும் நியாயமும் தர்மமும் எம் பக்கமே உள்ளது. அதுவே வெற்றி பெறும் என்றார்.

சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்த இதர கருத்துகளின் தொகுப்பு:

- காலம் காலமாக சிறிலங்கா அரசாங்கத்தால் இன அழிப்புக்குள்ளாக்கப்பட்ட எம்மக்களினது உரிமைக்காகவும் சுதந்திரத்துக்காகவுமான போராட்டத்தின் தலைவராக- ஒடுக்கப்பட்ட அடக்குமுறைகளுக்குள்ளான தேசிய இனத்தின் தலைவராக- எம்மக்களை வழிநடத்திச் செல்லக்கூடிய சக்தி மிக்க தலைவராக- அனைத்து மக்களாலும் மதிக்கப்படக்கூடிய கௌரவிக்கப்படக்கூடிய தலைவராக தலைவர் பிரபாகரன் தான் எங்கள் தேசிய இனத்தில் தோன்றிய தலைவர். அழிந்துபோகும் நிலையில் இருந்த மக்கள் அவருடைய காலத்தில்தான் இன்று உலகத்திலே தலைநிமிர்ந்து நிற்கின்றனர். அவரால்தான் எம்மக்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து சுதந்திரத்துக்காகவும் உரிமைக்காகவும் போராடும் சக்தியைப் பெற்றுள்ளனர். ஆகவே அவரது காலத்தில்தான் நாம் விடுதலை பெற வேண்டும் என்பதுதான் உலகத்தில் வாழ்கின்ற அத்தனை தமிழ் மக்களினது வேண்டுகையாக உள்ளது. ஆகவே அடுத்த தலைமைகளைப் பற்றி எமது தமிழ்த் தேசிய இனம் சிந்திக்க வேண்டிய தேவையோ அவசியமோ இல்லை. ஆப்பிரிக்க மக்களுக்கு ஒரு நெல்சன் மண்டேலா- அமெரிக்க மக்களுக்கு ஜோர்ஜ் வாசிங்ரன்- கியூபா மக்களுக்கு பிடல் காஸ்ரோ- சீன மக்களுக்கு மா-சேதுங் இப்படி பல்வேறு நாடுகளில் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.