Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் விபரங்களை சமர்பிக்க ஜனாதிபதி பணிப்பு-மனோவின் கோரிக்கை ஏற்பு

Featured Replies

அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் விபரங்களை சமர்பிக்க ஜனாதிபதி பணிப்பு-மனோவின் கோரிக்கை ஏற்பு

பயங்கரவாத தடை சட்டத்தின் பிரகாரம் சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் மற்றும் வழக்கு விபரங்களையும் நிறைவேற்று சபைக்கு சமர்பித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்திட்டத்தை ஆரம்பிக்கும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார். இதன்பிரகாரம் இந்த விபரங்களை திரட்டி தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர்களின் கவனத்துக்கு சமர்பிக்கும்படி சபை செயலாளர் திலக் ரணவிராஜாவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஜமமு தலைவர் மனோ கணேசன் செய்தியாளர்களுக்கு முன்னணி ஊடக செயலகம் மூலம் அறிவித்ததாவது,

வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு பிரதேசங்களை சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகள் இன்று சிறைச்சாலைகளிலும், தடுப்பு முகாம்களிலும் இருத்தி வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஒரு சாரார் ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனை காலத்தை அனுபவிக்கின்றனர். இன்னொரு சாரார் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் நடைபெறுகின்றன. பிறிதொரு சாரார் இன்னமும் விசாரணை நிலையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வருடக்கணக்கில் குடும்பங்களை பிரிந்து வாழும் இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும். தண்டனை பெற்றவர்களும் குறிப்பிட்ட காலம் புனர்வாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும். வழக்குகளை எதிர்கொள்கின்றவர்களுக்கு பிணை வழங்கப்படவேண்டும். அல்லது அவர்களும் புனர்வாழ்வு பயிற்சி திட்டத்தில் சேர்க்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும். இவையே இந்த நீண்டகால பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்துவைக்க கூடிய வழிமுறைகள் ஆகும்.

சிறைகளில் அல்லது முகாம்களில் இருப்போரில் ஒரு சிலர் பற்றி அவர்களது குடும்ப அங்கத்தவர்களிடம் உரிய தகவல்களும் இல்லை. சிலரது உறவினர்கள் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். எனவே கைதிகளின் பெயர் விபரங்கள் வெளியே திரட்டப்படுவதற்கு சமானமாக அதிகாரப்பூர்வமாக அரசின் சார்பாகவும் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ் கைதிகளின் விபரங்கள் வெளியிடப்படுவது அவசியமானது ஆகும். புதிய அரசாங்கத்தை நமது அரசு என்று சொன்னால் அது தரும் நன்மை நமது மக்களுக்கும் கிடைக்க வேண்டும். சிறைகளுக்கு உள்ளே வாழ்பவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.

mano-ganeshan-600-06.jpg?w=300&h=268

http://dpflanka.org/2015/01/20/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-4/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகள் என்பதில் யுத்தக் கைதிகள், பயங்கரவாத தடைச் சட்டத்தில் சந்தேகத்தின் பேரில் அல்லது இராணுவ நடவடிக்கைகளில் போது கைது செய்யப்பட்டவர்கள், சிறைகளில் உள்ள பல்வேறு விடுதலைப் போராட்ட இயக்க உறுப்பினர்கள் அனைவரது பெயர்களும் உள்ளடக்கப்படவேண்டும். அரசியல் கைதிகள் என்ற சொல் பல்வேறு அர்த்தங்களில் பார்க்கப்பட்டு மனோகணேசனின் இந்த நியாயமான, அத்தியாவசியமான, மிக்க இராஜதந்திரரீதியான அணுகுமுறை வெறும் ஏமாற்று வித்தையாக மாறும் சந்தர்ப்பங்கள் உள்நாட்டு அல்லது அந்நிய சக்திகளின் அழுத்தம் காரணமாக ஏற்பட வாய்ப்பும் உள்ளது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசியல் கைதிகள் என்பதில் யுத்தக் கைதிகள், பயங்கரவாத தடைச் சட்டத்தில் சந்தேகத்தின் பேரில் அல்லது இராணுவ நடவடிக்கைகளில் போது கைது செய்யப்பட்டவர்கள், சிறைகளில் உள்ள பல்வேறு விடுதலைப் போராட்ட இயக்க உறுப்பினர்கள் அனைவரது பெயர்களும் உள்ளடக்கப்படவேண்டும். அரசியல் கைதிகள் என்ற சொல் பல்வேறு அர்த்தங்களில் பார்க்கப்பட்டு மனோகணேசனின் இந்த நியாயமான, அத்தியாவசியமான, மிக்க இராஜதந்திரரீதியான அணுகுமுறை வெறும் ஏமாற்று வித்தையாக மாறும் சந்தர்ப்பங்கள் உள்நாட்டு அல்லது அந்நிய சக்திகளின் அழுத்தம் காரணமாக ஏற்பட வாய்ப்பும் உள்ளது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

உங்கள் கருத்தே எனதும் - நன்றி

  • தொடங்கியவர்

ZERO க்களுக்கு மத்தியில் ஒரு HERO

பயங்கரவாத தடை சட்டத்தின் பிரகாரம் சிறைகளிலும் முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் மற்றும் வழக்கு விபரங்களையும் நிறைவேற்று சபைக்கு சமர்ப்பித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்றிட்டத்தை ஆரம்பிக்கும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதன்பிரகாரம் இந்த விபரங்களை திரட்டி தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர்களின் கவனத்துக்கு சமர்பிக்கும்படி சபை செயலாளர் திலக் ரணவிராஜாவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுதான் மனோ கணேசன் அவர்களின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி இவ்வாறானவர்களே எந்தச் சமூகத்திலும் மக்கள் பிரதிநிதிகளாக வரவேண்டும். மனோவின் நீண்ட கால போராட்டத்தின் அறுவடையை இன்று முழு தமிழ் சமூகம் அனுபவிக்கப் போகிறது. அவரை பராட்டி நானும் மகிழ்கிறேன்.

கடந்த காலங்களில் நீதியமைச்சர்களாக தமிழ் பேசும் இருவர் இருந்தனர். ஒருவர் ரவூப் ஹக்கீம். மற்றவர் பிரதியைமச்சர் புத்திரசிகாமணி. இவர்கள் இருவராலும் முடியாத இந்த மிகப் பெரிய காரியத்தை இந்த மனோ கணேசன் இன்று சாதித்துள்ளார்.

இந்த மனோ அமைச்சருமல்ல... பிரதிமையச்சருமல்ல.. எம்.பியுமல்ல... ஆனால் அவர் நிகழ்த்தியது இமாலய சாதனை அல்லவா?

மனோ கணேசன் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த போது அவரை முதலில் “சுன்னத்“ செய்யுமாறு கூறிய அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வரை நினைத்து வேதனைப்படுகிறேன்.

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.