Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்பு மைத்திரி அரசிடம் கேட்க வேண்டிய முதல் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டமைப்பு மைத்திரி அரசிடம் கேட்க வேண்டிய முதல் கோரிக்கை
[ வியாழக்கிழமை, 22 சனவரி 2015, 01:03.53 AM GMT ]
tna_colombo_100.jpg
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மைத்திரி அரசிடம் கேட்க வேண்டிய முதல் கோரிக்கையை விடுத்து விட்டு ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறது.

அதாவது முதலில் இனஅழிப்பு வதை முகாம்களில் உள்ளவர்களின் முழுமையான பட்டியலை கோர வேண்டும். அதை இனஅழிப்பு அரசு தருமா என்பது கேள்விக்குறிதான். ஆனால் கூட்டமைப்பு வைக்க வேண்டிய முதல் கோரிக்கை அதுதான்.

 

ஏனென்றால் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் கணவன்மார் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் மறுமணமும் செய்யாமல் பெரும் அவலத்திற்குள் சிக்கி தவிக்கிறார்கள்.

இனஅழிப்பு அரசு அவர்களது இருப்பு குறித்து எந்த பதிலும் தர மறுக்கிறது.

ஒரு இனத்தின் அடிப்படையும் ஆதாரமும் பெண்கள்தான். அந்தப் பெண்களை குறிவைப்பதன் ஆழமான அரசியல் பின்புலம் இன அழிப்பு சிந்தனைகளிலிருந்தே தோற்றம் பெறுகிறது.

கொல்லப்பட்டிருந்தால் அதைத்தன்னும் உறுதிப்படுத்து என்றே அவர்கள் கேட்கிறார்கள்.(உண்மையில் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் கொல்லப்பட்டு விட்டதே உண்மை) ஆனால் திட்டமிட்ட இன அழிப்பு நோக்குடன் அந்த பட்டியலை வெளியிடாமல் தொடர்ந்து மறுத்து வருகிறது சிங்களம்.

இதனால் அந்த பெண்களினதும் அவர்கள் குழந்தைகளினதும் எதிர்காலம் குறித்து எதையும் சொல்ல முடியவில்லை. அவர்களில் பலர் தமது நிலையை உணர்ந்து மறுமணம் செய்ய தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் இறந்து விட்டார்களா என்று உறுதியாக தெரியாமல் எப்படி மறுமணம் செய்ய முடியும்?

இதனால் மே- 18 ற்கு பிறகான பல பொருளாதார வாழ்வியற் சிக்கல்களுடன் பல உளவியற் சிக்கல்களும் பாலியல் முரண்பாடுகளுமாக எமது இனத்து பெண்களின் வாழ்வு சூறையாடப்படுகிறது.

 

2009 இன அழிப்பை அடுத்து கொல்லப்பட்டவர்கள், ஊனமுற்றவர்கள், விதவைகள், அரை விதவைகள் ( Half widows) என்று கிட்டத்தட்ட எமது இனம் முடங்கிவிட்டது.

தொடர்ந்து நடைபெறும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பில் எமது இனப்பரம்பலும் சனத்தொகையும் தான் சிங்களத்தால் நுட்பமாக குறிவைக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதிதான் இந்த பட்டியலை வெளியிட மறுப்பதன் பின்னணியாகும்.

இனஅழிப்பு அரசு கட்டாய கருத்தடை தொடக்கம் காணாமல் போனவர்கள் குறித்து எந்த பதிலும் தராது எமது இனப் பெண்களின் பெரும்பகுதியை “அரை விதவைகள் ” என்ற சமூக நிலைக்குள் வைத்து தொடர்ந்து பேணுவதால் எமது பிறப்பு வீதம் முற்றாக வீழ்ச்சியடைந்து வருகிறது.

 

அண்மையில் யாழ். பல்கலையில் ‘தமிழரின் எதிர்காலம்: ஒரு குடித்தொகையியல் நோக்கு’ என்ற கருத்தரங்கில் உரையாற்றிய சமுதாய மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் இலங்கையில் தமிழினம் அழிவு அபாயத்தை எதிர் நோக்குவதாக கடந்தகால தமிழர் குடித்தொகை வளர்ச்சி வீதத்தையும் ஏனைய தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆதாரத்துடன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

நானும் எனது சக நண்பர்களும் இது குறித்து நீண்ட ஆய்வுகளை செய்திருக்கிறோம். தொடர்ந்து எச்சரித்தும் வருகிறோம்.

 

ஒரு இனத்தின் எதிர்காலம் அவர்களின் கருவளத்திலேயே பிரதானமாக தங்கி இருக்கிறது. ஒரு இனம் தன்னை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனின் அவ்வினத்தின் மொத்த கருவள வீதம் 2.1 இலும் அதிகமாக இருக்க வேண்டும்.

அதாவது சராசரியாக ஒரு பெண் 2 பிள்ளைகளுக்கு மேலாக 2.1 அளவில் பெற்றால் மாத்திரமே அதை மாற்றீடு செய்யும் கருவள வீதம் அதாவது குடித்தொகை குறையாமல் இருக்கும் ஒருநிலை என்று கூறமுடியும்.

ஆனால் இன அழிப்பு அரசு இந்த சமநிலையை பேணவிடாது தடுத்து எமது இனப்பரம்பலின் சமநிலையை குலைக்கிறது.

அதற்கு இந்த பட்டியலை வெளியிடாமல் தடுத்து வைத்திருப்பது முதன்மை காரணமாகும்.

 

அரசியல் தீர்வுகள் குறித்து நாம் விவாதிப்பதற்கு முன்பாக எமது இருப்பை உறுதி செய்ய வேண்டியது முக்கியம்.

எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக பேச வேண்டிய விடயம் இதுதான்.

 

பரணி கிருஸ்ணரஜனி

தமிழ்வின்

அதாவது முதலில் இனஅழிப்பு வதை முகாம்களில் உள்ளவர்களின் முழுமையான பட்டியலை கோர வேண்டும். அதை இனஅழிப்பு அரசு தருமா என்பது கேள்விக்குறிதான். ஆனால் கூட்டமைப்பு வைக்க வேண்டிய முதல் கோரிக்கை அதுதான்
 
முழுமையாக ஏற்கின்றேன் ஆனால் பின்னர் எழுதியவை யதார்த்தற்கு அப்பாற்பட்டதாகவே தெரிகின்றது.
 
1. எமது சமுதாயம் (புலம் பெயர்ந்தவர்களது இன்றைய தலைமுறைகள் இவ்விடயத்தில் முற்போக்கானவர்களாக உள்ளார்கள்)  மறுமணம் என்பதில் பின்நிற்பவர்களாகவே உள்ளார்கள். மறுமணம் என்பதில் ஆண்களுக்கு பெரிய பிரச்சனைகள் என்றும் இருந்ததில்லை. ஆனால் பெண்கள் நிலமையில் மாற்றங்கள் இன்றுவரை மிகவும் சிறிதளவே. ஜயோ இது முறையோ என்று கத்தி ஒதுக்கும் கூட்டம் இன்றுமுண்டு. இத்தகைய சமுதாயத்தில் பெண்களின் நிலமையை உயர்த்த கல்வி, பொருளாதாரம் முக்கியமானது. ஒரு பெண் முதலில் தன்காலில் நிற்கும்போதுதான் அவளால் சுயமாக முடிவுகளை எடுக்க முடிகின்றது. இம்முடிவுகள் பெரும்பாலும் சமுதாய மாற்றங்களை ஏற்படுத்தவல்லன. விதவைகள் (இச்சொல்லில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் தாரமிழந்த ஆண்களை யாரைம் விபுதாரன் என்றழைப்பதோ அல்லது எழுதுவதோ கிடையாது) மறமணம் என்பதிற்கு முன்னர் அவர்களது வாழ்கை தராதரத்தை உயர்த்தி பொருளாதர ரீதியில் தன்னிறைவு கொள்ளவைப்பதே முதன்மையானது. 
 
2. பிறப்புவீதம்: இது இலகுவாக அதிகரிக்கப்படக்கூடிய ஒன்றல்ல. மிகவும் வளர்ச்சியடைந்த ஸ்கன்டிநேவிய நாடுகளிலேயே அதிகரிக்கமுடியாதுள்ளது. பிறக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் பிறக்கும்போது ஊக்குவிப்புத்தொகை, தாய் அல்லது தந்தைக்கு 1வருட விடுமுறை, பிள்ளைக்கு 18 வயதுவரை மாதாமாதம் ஊக்குவிப்புத்தொகை, பிள்ளைக்கு 18 வயதுவரை பெற்றோர்க்கு வரிச்சலுகை (பிள்ளைகளின் எண்ணிக்கை அடிப்படையில்) இருந்தும் முடியாதுள்ளது. இஸ்ரேல்மாதிரி நாட்டுக்குள் குடிவரவை பெருக்கலாம். ஆனால் அதற்கு தனிநாடு தேவை. எனவே பிறப்புவீதத்தையும் கூட்டுவது கடினம். 1960களில் 5 6 பிள்ளைகள் என்பது சகஜம் ஆனால் இன்று 3 பிள்ளைகள் என்பதே அரிது. 
 
யதார்த்தத்திற்கு மாறான கருத்துக்களை வைப்பதிலும் பார்க்க யதார்த்தமாக அவர்களது கல்வி பொருளாதார முன்னேற்றத்திற்கான பங்களிற்பு மற்றும் இவைக்கான கருத்தாடல்களை முன்வைக்கலாமே. 
 
எனது இக்கருத்து எழுத்தாளர் பரணி கிருஸ்ணரஜனிக்கானது இக்கருத்தைப் பதிந்த வாத்தியாருக்கானது இல்லை.

 

Edited by ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.