Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகனுடன் ப.சிதம்பரம் விலகினால் காங்கிரசுக்கு விமோசனம்- ஈ.வி.கே.எஸ்.தாக்கு! சோனியா கோபம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: காங்கிரஸில் இருந்து மகன் கார்த்தியுடன் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் விலகினால் கட்சிக்கு விமோசனம் கிடைக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடுமையாகத் தாக்கியுள்ளார். அதே நேரத்தில் இளங்கோவனின் இந்த கருத்தால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஜெயந்தி நடராஜன் கட்சியை விட்டு வெளியேறியது குறித்து விமர்சித்திருந்தார்.

 

31-1422679733-sonia-rahul356-600.jpg

 

பதவி சுகம் அனுபவித்த ஜெயந்தி

 

மேலும், காங்கிரசிலிருந்து விலகி, தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கியபோது, அன்றைய பிரதமர் ஐ.கே.குஜராலியிடம் கெஞ்சி, கூத்தாடி அங்கேயும் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து பதவியை ஜெயந்தி நடராஜன் அனுபவித்ததை யாரும் மறந்து விட முடியாது.

 

தமிழர்களை சுட்டுத் தள்ளிய தாத்தா

 

இவரது தாத்தா பக்தவச்சலம் ஆட்சிக்காலத்தில் தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிட்டுக்குருவிகளை சுட்டு தள்ளுவது போல தமிழ் உணர்வாளர்களை சுட்டுத்தள்ளினார். காங்கிரசை விட்டு விலகுவதாக அறிவித்து இருக்கிற ஜெயந்தி நடராஜன் தமிழ்நாட்டில் உள்ள லட்சோபலட்சம் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக கோடானு கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறியிருந்தார்.

 

சிதம்பரம் மீது தாக்கு

 

அத்துடன் , கங்கை தூய்மைப்படுகிறதோ இல்லையோ, தாங்கள் காங்கிரசை விட்டு விலகியதால் இனி காங்கிரஸ் கட்சி மேலும் பல மடங்கு தூய்மைப்படும். இன்னும் ஒருவர் தமது வாரிசோடு வெளியேறினால் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் விமோசனம் ஏற்படும். துரோகிகளையும், சந்தர்ப்பவாதிகளையும் காங்கிரஸ் கட்சி தூக்கி எறிய எப்போதும் தயங்கியதில்லை" என்றும் இளங்கோவன் குறிப்பிட்டிருந்தார்.

 

சோனியா கோபம்

 

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியைத்தான் பெயர் சொல்லாமல் இளங்கோவன் குறிப்பிட்டிருப்பது சிதம்பரம் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக கேள்விப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று இரவே இளங்கோவனை அழைத்து அதிருப்தியை வெளிப்படுத்தினார் என்றும் கூறப்படுகிறது.

 

இளங்கோவன் மறுப்பு

 

ஆனால் இளங்கோவனோ, சோனியாவிடம் இருந்து எனக்கு எந்த தொலைபேசி அழைப்புமே வரவில்லையே என்று மறுத்துள்ளார்.

 

ப.சி. ஆதரவாளர்கள் முற்றுகை

 

இதனிடையே கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய இளங்கோவனின் வாகனத்தை சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

 

http://tamil.oneindia.com/news/tamilnadu/tncc-chief-s-remarks-upset-sonia-gandhi-220024.html

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரமும், மகனும் போக்கிடம் இல்லாமல் அலையப் போகிறார்கள்.
வாசனிடம், இவர்கள் சேர்ந்தால்.... வாசன் கட்சிக்கு கிடைக்கும் வாக்குகளும் இல்லாமல் போகும்.
என்ன பிரச்சினை, என்றால்.... இவர்கள் இருந்த தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியில்,

அடுத்த தமிழக தேர்தலில்.. முதல்வர் வேட்பாளராக சிதம்பரம் தான் இருப்பார் என்று...

கார்த்திக் பயல் சொல்லி விட்டான்.
அது தான்.... இளங் கோவனுக்கு, கோவம் வந்தது. :D

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரமும், மகனும் போக்கிடம் இல்லாமல் அலையப் போகிறார்கள்.

வாசனிடம், இவர்கள் சேர்ந்தால்.... வாசன் கட்சிக்கு கிடைக்கும் வாக்குகளும் இல்லாமல் போகும்.

என்ன பிரச்சினை, என்றால்.... இவர்கள் இருந்த தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியில்,

அடுத்த தமிழக தேர்தலில்.. முதல்வர் வேட்பாளராக சிதம்பரம் தான் இருப்பார் என்று...

கார்த்திக் பயல் சொல்லி விட்டான்.

அது தான்.... இளங் கோவனுக்கு, கோவம் வந்தது. :D

 

 

தமிழனுக்கு  துரோகம் செய்தவன் எல்லோரது நிலையும் இதுதான்(தாயகம் உட்பட)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு  துரோகம் செய்தவன் எல்லோரது நிலையும் இதுதான்(தாயகம் உட்பட)

 

நிதர்சனமான.... உண்மை.

"அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும்" என்று முன்னோர்கள், அழகாகச் சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருவரும் வாரிசுவும் என்டபடியால் ஒருவேளை  சோனியாவையும், ராகுலையும் குறிப்பிட்டாரோ என்னமோ...! அதனால்தான் அவவிடம் டோஸ் வாங்கியிருக்கின்றார்...!!

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருவரும் வாரிசுவும் என்டபடியால் ஒருவேளை  சோனியாவையும், ராகுலையும் குறிப்பிட்டாரோ என்னமோ...! அதனால்தான் அவவிடம் டோஸ் வாங்கியிருக்கின்றார்...!!

 

எல்லாரும்.... 80 வயதுகளில்,

வாரிசை வைச்சுக் கொண்டதற்கு, நாம... என்ன செய்ய முடியும்.

 

பிற்குறிப்பு: தி. மு.க. வின் இளைஞர் அணி தலைவராக....

64, வயது ஸ்ராலின், மீண்டும் நியமிக்கப் பட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனமான.... உண்மை.

"அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும்" என்று முன்னோர்கள், அழகாகச் சொன்னார்கள்.

இது காணாது 5000வருடங்கள் போனாலும் நம்ம இனம் அழிக்கபட்ட வடு  மாறாது எத்தனை இரவுகள் தூக்கமிழந்தோம்  ஆண்டவா .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.