Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓரின சேர்க்கையால் சிறைவாசம்: அன்வரை சிக்க வைத்த அரசியல் பின்னணி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லேசியாவின் முன்னாள் துணைப்பிரதமரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான அன்வர் இப்ராகிமுக்கு அந்நாட்டு ஹைகோர்ட் வழங்கிய ஐந்து ஆண்டு சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்து வழங்கியுள்ள தீர்ப்பு மலேசியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Malaysia%20Anwar.jpg

2008 ஆம் ஆண்டு  தனது ஆண் உதவியாளருடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக அன்வர் இப்ராஹிம் மீது குற்றம் சாட்டப்பட்டது. முஸ்லிம் பெரும்பான்மை நாடான மலேசியாவில் ஒருபால் உறவில் ஈடுபடுவது சட்டவிரோதமானதாகும். அங்கு பெரும்பாலும் முஸ்லிம் ஷரியா சட்டத்தையே நடைமுறையில் பயன்படுத்தி வருகிறார்கள். ஓரின சேர்க்கையில் ஈடுபடுகிறவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க அச்சட்டப்படி முடியுமென்றாலும், இந்த குற்றச்சாட்டில் மிகக் குறைவானோரே இதுவரை தண்டனைப் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் ஓரின சேர்க்கை விவகாரத்தால் சிலகாலம் அன்வரை சிறையில் அடைத்தது அரசு. அந்த காலக்கட்டத்தில் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதித்தது. ஆனால், வெளியில் இருந்த அவர் மனைவி அரசியலில் ஈடுபட்டு வந்தார். அன்வரின் விடுதலைக்காக ‘மக்கள்கூட்டணி’ கட்சியினர் பலவகையான போராட்டங்களை நடத்தினார்கள். பல நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும்  அவரை விடுதலை செய்ய கோரிக்கை வைத்தது. ஆனால், மலேஷியா அரசு செவி சாய்க்கவில்லை.

2௦12 ஆம் ஆண்டு  குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று அன்வரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. ஆனால், மலேசிய அரசு இவ்வழக்கை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்ததில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அளித்தது. அந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், அன்வர் இப்ராகிம் அமைத்த மக்கள் கூட்டணி மூன்று மாநிலங்களில் 77 இடங்களை பிடித்து பெரும் வெற்றி பெற்றது. அதன் முலம் அவர் மலேசியா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக வந்தார். திக்கி திணறித்தான் ஆளுங்கட்சியான தேசிய முன்னணி பார்டர் மார்க்கில் பாஸ் செய்து ஆட்சியமைத்தது.

இது ஒருபுறம் இருக்க அன்வர் இப்ராகிம், தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.  இந்த நிலையில்தான் கடந்த 1௦ஆம் தேதி உச்ச நீதிமன்றமும் அன்வருக்கு வழங்கப்பட்ட ஐந்து வருட தண்டனையை  உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முன்னர் மீடியாக்களிடம் பேசிய அன்வர், "என்னை சிறைக்கு அனுப்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. நான் நிரபராதி, "தற்போது என்னை எப்படியும் சிறையில் அடைக்கும் அரசியல் சதித் திட்டம் நடந்து வருகிறது. இதை என்னால் புரிந்து கொள்ள முடியும். செய்யாத தவறுக்கு போதுமான காலம் சிறை அனுபவித்திருக்கிறேன். தற்போது அதற்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டி இருக்கிறது. இது முழுக்க அரசியல் பழிவாங்கல்தான் " என்றார்.

தீர்ப்புக்கு பின் மலேசியாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. அன்வர் ஒரு முற்போக்கு சிந்தனையாளர். அதனால்தான் அவருக்கு இந்த வழக்கில் சிறை தண்டனை வழங்கி முடக்கப்பட்டுள்ளார் என்று அங்குள்ள மற்ற எதிர்கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. அது மட்டுமில்லாது, இத்தண்டனையை கிண்டலடித்து நாளிதழில் கேலிசித்திரம் வரைந்த மலேசியாவின் புகழ்பெற்ற கார்டூனிஸ்ட் ஜுனாரை கைது செய்துள்ளது மலேசிய அரசு. "சிறையில் போட்டாலும் அரசையும், நீதித்துறையை விமர்சிப்பதை என் கணவர் விடமாட்டார். இந்த மிரட்டலுக்கு அஞ்ச மாட்டார்" என்று ஜுனாரின் மனைவி பஸ்லினா அறிக்கை விட்டுள்ளார்.

ஜுனாருக்காக  சர்வதேச அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் "மனித குலத்துக்கு விரோதமான ஓரின சேர்க்கையில் ஒரு அரசியல் கட்சியின் தலைவரே ஈடுபடுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதுவும் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொண்டதாக பாதிக்கப்பட்ட அவர் உதவியாளர் கூறுவதை சர்வதேச சமுதாயம் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இஸ்லாம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. நாகரிக சமூகத்தில் இந்த ஒழுக்க கேடான செயலை அனுமதிக்க முடியாது’’  என்று வாதிடுகிறார்கள் அரசுக்கு ஆதரவானர்வர்களும், மதவாதிகளும்.

மலேசியா தேசம்  பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து, அதாவது 56 ஆண்டுகளாக அங்கு ஒரே கட்சிதான் ஆட்சியில் இருந்து வருகிறது. எப்போதும்  மன்னருக்கு கீழ்தான் நாடாளுமன்றம் செயல்பட்டு வருகிறது. மன்னர் சார்ந்த, மதம் சார்ந்த, அடிப்படைக் கொள்கைகளுடன்தான் அந்நாட்டு அரசியலும், அரசும் இயங்கி வருகிறது. புதிய சிந்தனைகளுடன் வரும் கட்சிகளுக்கு அங்கு வாய்ப்பே இல்லை. வளர விடமாட்டார்கள். அதையும் மீறி வளர்ந்தவர்தான் அன்வர் இப்ராகிம். அவர் மீது வேறு எந்த குற்றச்சாட்டும் சுமத்த முடியாத நிலையில் இந்த பிரச்னையை கிளப்பி அவரை அசிங்கப்படுத்துவது மட்டுமில்லாமல், அரசியல் செயல்பாட்டை முடக்கவும் திட்டமிட்டதன் விளைவே இந்த தண்டனை. இந்துராப் நடத்திய இந்திய வம்சாவளியினர் பட்ட கஷ்டம் எல்லோருக்கும் தெரியும் என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

Malaysia%20Anwar%201.jpgஆளுங்கட்சியின் கூட்டணியில் இடம்பெற்றாலும், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வந்த அன்வர் இப்ராகிம் தப்பு செய்தாரா இல்லையா என்பதில் அந்நாட்டு மக்களுக்கே இரண்டு கருத்து இருப்பது தொடர்கிறது. அப்படியே செக்ஸ் வைத்துக்கொண்டாலும் அது அவரின் சொந்த விஷயம் என்றும், இதற்கு இவ்வளவு பெரிய தண்டனை அதிகம் என்றும், இதில் அரசு தலையிட்டதே தவறு என்றும் மேலை நாட்டு தலைவர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

மலேசியாவில் மன்னர் குடும்பம், அவர்களுக்கு அடிவருடியாக செயல்படும் தேசிய முன்னணி ஆட்சியாளர்கள், இவர்களை அண்டியிருப்பவர்ளும் இனவெறி பிடித்தவர்களும்தான் அந்நாட்டில் அரசியலில் செயல்படமுடியும் என்ற சூழலில், இதுவல்ல ஜனநாயகம் என்று கிளம்பியவர்தான் அன்வர் இப்ராகிம் என்கிறார்கள்.

அன்வர் 1968 ஆம் ஆண்டு முதல் 1971 வரை மலாயா பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவராக இருந்தார். 1971 ஆம் ஆண்டில் ஆபீம் என்ற அமைப்பில் உறுப்பினரானார். 1974 ஆம் ஆண்டில், கிராமப்புற வறுமைக்கு எதிராக மாணவர் ஆர்ப்பாட்டத்தின் போது உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 1982 ஆம் ஆண்டில் ஆபீம் அமைப்பிலிருந்து விலகி அம்னோ என்ற அமைப்பில் இணைந்தார். தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். 1983 ல் கலாச்சாரம், இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரானார். பின்னர் 1984 ல் விவசாய அமைச்சரானார். 1986 ஆம் ஆண்டு கல்வி அமைச்சரானார். அவர் கல்வி அமைச்சர் பதவி வகித்த காலத்தில், யுனெஸ்கோவின் பொது மாநாட்டில் கல்வி அமைச்சர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1991 ஆம் ஆண்டில், நிதி அமைச்சரனார். நிதி அமைச்சர் பதவி வகித்த காலத்தில், மலேசியா வேகமாக பொருளாதார வளர்ச்சி பெற்றது. 1993ஆம் ஆண்டில் வெற்றி பெற்றவர் துனைப்பிரதமராக ஆனார். ஆரம்பத்தில் அப்போதைய பிரதமர்  மகாதீரின் நண்பராக இருந்த அன்வர், பின் எதிரியானார். மகாதீரின் சர்வதிகார போக்கு, குடும்ப அரசியல், ஊழல், நிதி மோசடியை எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தார். அங்குதான் அவருக்கு பிரச்னை ஆரம்பித்தது. இதுவரை பிரதமர்களை பார்த்து எந்த அமைச்சரும் கேள்வி கேட்டதில்லை. இப்படியே உரசல் வளர்ந்து கொண்டிருந்தது. அடுத்த பிரதமராக மக்கள் அன்வரை தேர்ந்தெடுத்டுவிடுவார்கள் என்று மகாதிரும், மன்னரும் பயந்தனர்.

அந்த நேரத்தில்தான் 1998 ஆம் ஆண்டு அன்வர் மீது ஓரின சேர்க்கை புகார் வெடித்தது. உடனே அவர் துணைப்பிரதமர் பதவியிலிருந்து தூக்கப்பட்டார். உடனே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்தபோதும் சீர்திருத்த இயக்கம் ஒன்றை அவரது ஆதரவாளர்கள் தொடங்கினார்கள். இந்த இயக்கம் ஆளும் தேசிய முன்னணி அரசுக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தியது. அந்தக் காலக்கட்டத்தில் அவருடைய மனைவி வான்இஸ்மாயில், மக்கள் நீதிக் கட்சியைத் தோற்றுவித்தார். அந்த இயக்கத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய அப்போதைய அரசாங்கம் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது.

நாட்டின் துணைப்பிரதமராக இருந்த ஒருவர், அரசியல் காரணங்களுக்காகச் சிறைவாசம் அனுபவிப்பதை விரும்பாத பொதுமக்களில் பலர் மக்கள் நீதிக் கட்சியில் சேர்ந்தனர். 2004ஆம் ஆண்டு அன்வார் இப்ராஹிம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், அவர் ஐந்து ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபடக்கூடாது என்று மலேசிய அரசாங்கம் தடை விதித்தது. அதையும் கடந்துதான் கடந்த வருடம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான இடங்களை அன்வர் கட்சி கைப்பற்றியது. அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடித்துவிடும் சூழல் ஏற்பட்டுவரும் நிலையில்தான் அவர் மீதான வழக்கில், தற்போது ஐந்து வருட தண்டனையை உறுதிசெய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இப்பிரச்னை இத்தோடு முடிந்து விடுமா அல்லது பெரும் புரட்சி ஏற்படுமா என்பது மலேசிய மக்கள் கைகளின்தான் உள்ளது.

-செ.சல்மான்

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=38522

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கழுதையுடன் புணர்பவர்கள் இருக்கும் நாட்டில் ஓரினச்சேர்க்கை ஒரு கேடா???
 
முக்கியமான விடயம் தெரிந்த ஒரு எதிராளியை உள்ளே வைத்து பூட்டப்போகின்றார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

நான் சிங்கையில் இருந்த காலத்தில்தான் முதல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டவர்.. இன்றுவரை ஆளுக்கு அலைச்சல்தான்.. வெள்ளிதிசை சரியில்லை போலக்கிடக்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

-----

இந்த நிலையில் ஓரின சேர்க்கை விவகாரத்தால் சிலகாலம் அன்வரை சிறையில் அடைத்தது அரசு. அந்த காலக்கட்டத்தில் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதித்தது. ஆனால், வெளியில் இருந்த அவர் மனைவி அரசியலில் ஈடுபட்டு வந்தார்.

 

கலியாணம் கட்டிய... அன்வர் இப்ராகிம்,

மனைவியுடன்....ஈரினச் சேர்க்கையில் ஈடுபடாமல்,

தனது ஆண் உதவியாளருடன்.... ஓரினச் சேர்க்கையில் ஏன் ஈடுபட்டார் என்று,  புரியவே... இல்லை.Musik%20(34).gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.