Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மின்பிறப்பாக்கிகளை இயக்க தொடர்ந்தும் தடை!! மேல்நீதிமன்று உத்தரவு!!

Featured Replies

முறையான வகையில் கழிவு எண்ணை அகற்றப்படுமானல் மின் நிலையம் தொடர்ந்து இயங்குவதில் தப்பு எதுவும் இல்லை.
 
யாழ்ப்பாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தங்கு தடையின்றிய மின் வினயோகம் அவசியம். 
 
ஐங்கரநேசன் ஏற்கனவே சொல்லியது போல் குண்டு வீச்சில் மண்ணுக்குள் ஓடிய டீசல் மற்றும் முன்னைய கழிவு எண்ணை மாசு போன்றவைதான் இப்போது நிலத்தடி நீரில் கலந்து காணப்படுகிறது. 
 
சுன்னாகத்து நீரை தொடர்ந்து சுத்திகரிப்பதன் மூலம் இதனை விரைவாக அகற்றலாம். 
 
இதை விட பெருமளவில் எண்ணைக் கழிவுகள் நீரை மாசுபடுத்தும் நிகழ்வுகள் வேறு நாடுகளில் நடந்துள்ளன. அவற்றை அகற்றி இருக்கிறார்கள்.
 
இப்போது நீரையும் பெற்றோலிய பொருட்களையும் இலகுவாகப் பிரித்தெடுக்கும் புதிய தொழில் நுட்பங்களும் வந்துள்ளன. வேறொரு திரியில் சொல்லியது போல் "ஓஸோர்ப்" என்ற அமெரிக்க அரசாங்கத்தின் நிதியில் ஆய்வு சேய்யப்பட்டு தற்போது பாவனையில் இருக்கும் பொறிமுறை இதற்கு ஒரு உதாரணம்.
 
தற்போது எண்ணை மாசு ஒரு சிறிய வட்டத்திற்குள் தான் இருக்கிறது. இதை விரைவாக அகற்றினால் ஏனைய பகுதிக்கு பரவுவது தடுக்கப்படலாம்.
 
மன்னார் எண்ணை அகழ்விற்கும் இதற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. காரணம்.
 
1. ஏன் சுன்னகத்தை அண்டிய பகுதியில் மாத்திரம் எண்ணைப்படலம் ?
2. மன்னர் எண்ணைப் படுக்கைகள் உண்மையில் வாயுப் படிவுகள் தான். திரவம் அல்ல. 
 
யாழ்ப்பாணத்தில் ஒரு போதும் பெற்றோலிய எண்ணைப்படிவுகள் கண்டு பிடிக்கப்படப் போவதில்லை. 
 
இலங்கையில் மன்னாரிலும் மிஞ்சிப் போனால் திருகோணமைலைக் கடற்கரையை அண்டிய பகுதிகளிலும் வாயுப் படிவுகள் காணப்படலாம். இந்த இரண்டு இடங்களிலும் வாயுப் படிவு காணப்படுவதற்குக் காரணம் காவேரி ஆறு பல ஆயிர‌ம் வருடங்களாக கடலினுள் கொண்டு வந்து கொட்டும் தாவரப் பொருட்கள் உக்கி உருவாகும் வாயுப் படையும், திருகோணமலையில் மாகவலி கங்கை கொண்டு வந்து கொட்டும் சேதனப் பொருட்களுமேயாகும்.  
 
 
https://www.youtube.com/watch?v=czZD-meOfkU
 
 
https://www.youtube.com/watch?v=p_pKBJ6OWHk
 
   
.

Edited by ஈசன்

 

 
 
தற்போது எண்ணை மாசு ஒரு சிறிய வட்டத்திற்குள் தான் இருக்கிறது. இதை விரைவாக அகற்றினால் ஏனைய பகுதிக்கு பரவுவது தடுக்கப்படலாம்.
 
மன்னார் எண்ணை அகழ்விற்கும் இதற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. 
 
 

 

80பதுகளின் ஆரம்பக் காலகட்டத்தில் இதனைக் கண்கூடாக பார்த்துள்ளேன். காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் என்ஜின் தரிக்குமிடத்தில் கழிவு எண்ணை கொட்டப்படுவது வழமை. இது பல்லாண்டுகளாக நடைபெற்று வந்தது. இதனால் அருகே உள்ள சில வீடுகளின் கிணற்றில் எண்ணை கசியத் தொடங்கியிருந்தது. சிறு வயதில் "கிணத்திலை எண்ணையாம்" என்று ஓடிப் போய்ப் பார்த்தது ஞாபகம் வருகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.