Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

இறைவன் சந்ததியில் இன்று

இராணுவக் காடையர்கள்

அதை பார்த்த பின்னரும்

மூலஸ்தானத்தில் இருக்கிறாயே

ஆண்டவா..........? நீ

உணமையிலையே இருக்ககிறாயா.........?

  • Replies 1.9k
  • Views 182k
  • Created
  • Last Reply

உண்மையிலே

இருக்கின்றாயா என்

அன்பே நான்

உனக்காய் காத்திருக்கின்றேன் _நீ

என் மெளனங்களேடு

பேசியவன் என்பதால்

என் சுவாசத்தில்

சிறைவைத்தேன்

என் சுவாசம்

இங்கிருக்க நீ

மட்டும் எங்கு சென்றாய்

உன்னைதேடித்தேடி

பார்க்கின்றேன் ஏனே

என்னில் நின்று

மறைந்து விட்டாய்

என்மெளனங்கள்

உடைத்து பேசுகின்றேன்

ஒரு தரம் வருவரயா?

என் அன்பே

என் அன்பே

நீ என்ன காக்கவா....?

எப்போதும் கரைகிறாய்

என் அன்பே

நீ குரங்கா..? எப்போதும்

பிடிவாதம்பிடிக்கிறாய்

என் அன்பே

நீ மாடா? எப்போதும்

அசை போடுகிறாய்...

என் அன்பே

நீ என்ன காக்கவா....?

எப்போதும் கரைகிறாய்

என் அன்பே

நீ குரங்கா..? எப்போதும்

பிடிவாதம்பிடிக்கிறாய்

என் அன்பே

நீ மாடா? எப்போதும்

அசை போடுகிறாய்...

அசை போடுகிறாய் _என் அன்பே

என்னை காதலித்ததை மட்டும்

ஏனோ !

என்னை கரம் பிடிக்க மறுத்துவிட்டாய்

காரணம் தெரியாமல் தவிக்கின்றேன்

நான் படிக்காதவன் என்றா

படித்தவனை தேடி ஓடினாய்

நான் அழகில்லை என்றா

அழகானவனை தேடி சென்றாய்

காரணம் புரியவில்லை

ஒன்றை மட்டும் புரிந்து கொள்

என்னை விட உன்னை புரிந்தவன்

உலகில் யாரும் இல்லை

உலகில் யாரும் இல்லை

எனக்கு உன்னைத் தவிர

உன் வார்த்தைகள்தான்

நான் கேட்க்கும் சங்கீதம்

அதைக் கேட்பதற்க்காக

நான் தினமும் துயில்

எழும்புகிறேன்

உந்தன் குரலோசை

கேட்க வேண்டும் தினமும்

என்னை ஏமாற்றாமல்

தினமும் வந்து விடு

உன் கூட்டை விட்டு

அண்டம் காக்காவே.........:unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காக்காவே ஒற்றுமை புகட்டும் உன் நிறமும் கறுப்பு

கருமையாய் இருப்பதால் என் பெயரும் கறுப்பி

உன்னில் தெரியும் என் நிறம் கண்டு

என்னை உணர்ந்தேன் உன்னாலே

உன்னாலே தான் இந்த உலகத்தில்

இவளவு உயிர்கள் மாண்டு

போகின்றார்கள் யாரும்

நிம்மதியாகவில்லை உனக்கு

உலகம் தொடங்கிய

நாளிலிருந்து ஓய்வே இல்லாமல்

ஓடிக் கொண்டிருக்கிண்றாய்

நீ மட்டும் ஓடினால் பறவாயில்லை

கோடிக்கணக்கான உயிர்களையும்

சேர்த்து எடுத்துக் கொண்டல்லவா ஓடுகிறாய்

என்ன முழியை உருட்டுகிறாய்

யுத்தமே உன்னிடம்தான் பேசுகிறேன்

சொல் ஒரு பதில்

பதில் தெரியாத கேள்விகளை

தொடுத்துவிட்டுப் போகும்

பெண்ணினமே..

ஆண்டாண்டு காலமாய்

ஒன்றுமேயில்லாத உன்னழகை

உயர்வாய்ப பாடிப் பாடி

உயிர்விட்ட ஆயிரக்கான

அப்பாவி ஆண் கவிகளுக்காவும்..

எனக்காகவும்..உன் பிரதிநிதிகள்

யாராவது கவிதை எழுதட்டும்..

கவிதை எழுதட்டுமா

அப்பாவி கவியே

ஒன்றுமே இல்லாத

எம் அழகை உயர்வாய்

பாடிப்பாடி ஏன்

ஐயா உயிர் விட்டீர்

இல்லாத கற்பனைகள்

நீங்கள் செய்தால்

பெண்ணவள் என்

செய்வாள் உமக்கு

கவிபடைக்க பெண்ணை

விட்டால் இல்லையா

வேறு கவி

கற்பனையும் செய்துவிட்டு

கவியும் படைத்து

விட்டு புலம்பும்போது

மட்டும் பெண்ணவள்

எப்படிதப்பானால்

பெண்ணவள் அழகுதனை

ரசித்தே பழகிவிட்டீர்

ஆண்டாண்டு காலமாய் _ அதனால்

அனுமதியின்றி கற்பனை

செய்து விட்டு

தவரைமட்டும் எம்மீது

கூறுவது சரிதானா

Edited by கஜந்தி

சரிதானா எனக் கேட்பது சரிதான் பெண்ணே...

பெண்ணைப் பென்னாக்கி நீங்கள் எழுதிய

கவிதையில் சின்னத் தவறு கண்டேன்..

பெண் ஏதமில்லாதவள் என்று சொன்னவனைச்..

சாடி ஏது உள்ளதென நல்லன சில சொல் அம்மணி

  • கருத்துக்கள உறவுகள்

அம்மணின் கருணையே அவளாம் பெண்மணி !

அவளின்றேல் இவ்வுலகு அழகைத் தொலைத்திடும்!

பேதைப் பருவத்தில் ஆடும் தென்றல் !

பெதும்பையாய் சிற்றாடையில் சிறகடிக்கும் குருவி !

மங்கையாய் மாறி மனதுக்குள் முகிழ்க்கும் !

மடந்தையாய் மலர்ந்து புதுஇல்லில் மணக்கும் !

அரிவையாய் செழித்து கருவிணை சுமக்கும் !

தெரிவையாய் சுற்றங்கள் வாழ்த்த வாழும் !

பேரிளம்பெண்ணாய் பெரும்பயணத்தைத் தொடரும்... !

பெண்மையாலன்றோ மானிடம் வாழுதே.

மானிடம் வாழுதே இங்கே

இப்படி சொல்பவர் யாரடா

இங்கே

மானிடம் இறந்து காலம்

பல ஓடி விட்டது

இங்கே மானிடம் பற்றி

பேசுவது உன் மடமையடா

உன்னிடம் மானிடம்

இருந்தால் அதனை

மூட்டை கட்டி வையடா

என் தோழனே

மானிடத்தால் இந்த

உலகத்தில் நடக்கப்

போவது ஏதுமில்லை

மானிடம் அழிந்து விட்டது

மானிட தன்மையும்

அழிந்து விட்டது

இனி நீயும் நானும்தான்

மிச்சம் அழிவதற்க்கு............!

அழிவதற்க்கு தேதும் இல்லையடா தோழா

எல்லாமே அழிந்தேவிட்டதடா

யுத்தம் என்ற கொடுரத்தால்

நாடே அழியுதடா

பணம் என்ற பேராசையால்

உறவுகள் தடுமாறுதடா

காதல் என்ற பிரிவினால்

குடும்பங்கள் தொலையுதடா

இதில் எங்கே மனிடம் வாழும்

வாழும் காலம் சிறிது

அதில் நீ செய்யும்

பாவங்கள்தான் பெரிது

வாழ்வது பெரிய

விடயமில்லை

வாழ்ந்து காட்டுபதுதான்

பெரியது

வாழ்ந்து காட்டுவதை விட

உத்தமனாக வாழ்ந்து

காட்டுவதுதான் பெரியது

இதுவரை வாழ்ந்தது போதும்

இனி மேல் வாழ்ந்து காட்டு

உத்தமனாக..........

உத்தமனாய் இருந்து

விட்டால் எத்தனை

பேர்வாழ்கையது

சிரிந்திடும் பூக்களாகும்

யார்சொல்லியும்

கேட்காத உன்

மனது எப்போது

உத்தமனாய் மாறிவிடும்

மாறிவிடும் வாழ்க்கையில்

மாறத வசந்தகாலங்களாக

உன்னோடு வாழ்ந்த

எனது வாழ்க்கையின்

தருணங்கள்

நீ தந்து போன மூச்சுக்

காற்றுத்தான் நான்

சுவாசிக்கும் சுவாசக்காற்று

உன் பாதத் தடங்கள்

என் மனசில் இன்னும்

அழிய வில்லை

ஆனால் உன்னுடல்

இந்த உலகத்தில்

எங்குமில்லை.........

எங்குமில்லை எங்குமில்லை

பூமிதனில் எங்குமேயில்லை

இவள்கனவுகள்

இருள்நிறைந்த வானில்

தூரத்தே தெரித்த

நிலவாய் நின்ற

இவள்கனவுகளை

கொண்டு வந்த

கவிதைகளே

என்நினைவுகள்

உங்கள் விம்பங்களாய்

திரும்ப ஏன்

பதிந்தது

ஏன் பதிந்தது

அவள் நினைவுகள் மட்டும்

அவளை மறக்க முடிந்த _என்னால்

அவள் நினைவுகளை

மறக்கமுடியவில்லையே

அவளால் மட்டும் எப்படி முடித்தது

எப்படி முடிந்தது..

என்னை நானே கேட்டேன்..

ஏழைமகன்..நான்..

இன்னலெல்லாம்..

சொல்லவொணாத் துயர் தரவே..

எழுந்தேன்..ஒருகாலில்..

ஊரெல்லாம்.. ஓடி..

உழைக்கின்றேன்..

நிம்மதியாய் உறங்குகிறேன்..

அம்மா இருந்தபோது

அவளுக்கு ஆசைமுத்து

எல்லாம் இழந்தபின் நான்

இன்று பிச்சைமுத்து

  • கருத்துக்கள உறவுகள்

முத்து விளைவது சிப்பியிலே !

மகிழ்ச்சி மலர்வது மனத்தினிலே !

பதிந்ததும் பதிவதும்

துன்பங்களின் கீதமோ !

கவிதையிலும் கதையிலும்

சோகம்தான் ரசிக்குமோ !

துன்பத்தை விதைத்தால்

இன்பத்தை பெறலாமோ !

சிந்திப்போம் கவிஞர்காள்

விதிகளை விலத்தி வைத்து !

வன்னியில் விமானமும் வீழுது

சென்னியில் தேனும் பாயுது !

எங்கும் இன்பம் , எதிலும் இன்பம் -- இனி

காண்பதும் இன்பம் , கேட்பதும் இன்பமே !!!!! :blink::lol:

இன்பமே நீ

எங்கே ? என்று

தேடினேன் எங்கு

இல்லையென்று

வாடினேன் புரியாது

தேடிவிட்டாள் இந்த

பேதை_ நீ

எனக்குள் இருப்பதை

இருப்பதை மறைத்து

முகத்திற்கு பூச்சு

ஆணுலகம்முட்டாளா ஆச்சு..

நளின நடையில்..

மயக்கப்பார்வையில்..

வசீகரப் புன்னகையில்..

கவுந்து போச்சு..

வேணாம் வேணாம் எண்டாலும்

கேளாத மனசுக்கு..

கடிவாளம் எதுவெண்டால்

கல்யாணமாமே..

பெண்ணிற்கு விற்க

சொன்னால்

என் சுதந்திரம் கறிபோகாதா..

நான் மாட்டேன்..என்னவும்தான்

என் நாமாட்டேன் என்கிறதே..

ஒரு பியா கள்ளுக்காக

கள்ளுக்கடை.யை வாங்கணுமா..

ரொம்ப லொள்ளுத்தான் போ..

Edited by vikadakavi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போ என்று சொல்கின்ற உன் உதட்டில்

வா என்று அழைக்கின்ற உன்நெஞ்சமதில்

ஆ த்மாக்கள் இணை பிரியா சங்கமங்கள்

தா வென தாவி பிடிக்கும் உந்தன் கவியது

பா வாய் எந்தன் மனதினில் உருப்பெற்று

நா வழி இசைத்திடும் போதினிலே

போகும் வழி தெரியவில்லை

போகும் இடம் புரியவில்லை

ஏனென்று கேட்பதற்கு

எனக்கு யாரும் இங்கில்லை...

சொந்தமென்று சொல்லி கொள்ள

வந்த நாட்டில் யாருமில்லை

எந்தனுக்கு உதவிடவே- இன்று

இங்கு யாரும் இல்லை....

கையெடுத்து வணங்கி வந்த

கடவுள் கூட மறந்து விட்டான்

எந்த நாடு போயுடுவேன்

எனக்கு வழி தெரியவில்லை...

சொந்த நாட்டை பிரிந்து வந்து

சோகமதை தாங்கி வந்தேன்

வந்த நாட்டில் வாழ்ந்திடவே

வதிவிடமே எனக்கு இல்லை...

நாடோடி போல நானே

நாடு நாடாய் அலைகிறேனே

எந்தனது வாழ்க்கையிலே

என்று விடியல் பிறந்திடுமோ....???

:D:D:rolleyes::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.