Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கு போட்டியில்லையே :blink:

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

போட்டியா..

எங்கே.. :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலவோ பூவோ புள்ளி மானோ

நின் நினைவுகளை மாற்ற யாம் யாரோ

நீ நன்றாக வாழ வாழ்த்திடுவோம் நிஐமாக

நிஜமாக நிழல்

ஒன்று

நிரந்தரம்

என்று

நினைத்து

நெருங்க..

நிழல்

விரிந்தது..

இனித்தது..

நிழல்

குறுகியது

உறைத்தது..

நிழல்

அற்றுப்போனது..

மனம் விட்டுப்போனது

நான் எழுத ஆரம்பிக்க தேவையிலை ,

ஏன் என்றால் விகடகவி எழுது முடித்து இருப்பார்

நான் இதை பார்த்து ரசிக்கதான் முடியும்,

நடக்கட்டும் நடக்கட்டும்.............. :unsure::unsure::blink: :P :P :blink::blink:

சொல்லி முடிக்கல கவிதை வந்திட்டு

நடக்கட்டும்

என்று நங்கை

சொன்னால்..

படிக்கட்டும்

நடக்கும்....

படிக்கட்டும்

என்று பாவை

சொன்னால்

பாறையும்

பாடும்

ஆடட்டும்

என்று அவள்

சொன்னால்

அகிலமும்

ஆடும்

ஆனால்

எந்தப் பெண் சொன்னாலும்

ஆடான் இவன்

ஆஞ்சநேயர் பக்தன் :blink:

நாதன் எங்க உங்கள் கவிதை??

நீங்கள் பக்த்தன் என்று ஆரம்பிக்க வேணும்

ஆஞ்சநேயர் பக்தன்,

நீ பக்தன் இல்லையடா -நீ

என் காதலன்

உன் பக்த்தியை கண்டு

இன்று நான் உன் பக்த்தனடா

உன் பக்த்தனுக்கு

தருவாய ஒரு

வரம்???

Edited by இனியவள்

  • கருத்துக்கள உறவுகள்

வரம் வேண்டும் இனியளே..

கருங்கூந்தல் ஏந்தலே..

இது எவ்வகை வேண்டலோ..

உன்னிடம்தான் லண்டனோ.. :lol:

கவியவன் விகடகவி

மெல்லியலார் மகிழும்படி

கவிபலவும் செய்பவன்

பொய்மழையில் புரள்பவன்

வெறுங்காதல் வேண்டி

தினந்தோறும் மறுகி

கவிக்கோலம் புனையும்

அவன் காதல் கிறுக்கன்... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் கிறுக்கன் கள்ளமில்லா உள்ளமுடன்

இதமாய் இதயத்து உணர்வினை கவிகளாய் தந்து

சாதகம் பண்ணி சந்தமாய் ஒலித்திட்டதை செவிமடுக்க

மாதவம் செய்திட வேண்டுமம்மா சிவசக்தியே

சிவ சக்தியே

சிவனவன் பாதியே

கடைக் கண்

திறந்தே பாராய்

காதலாகி கசிந்துருகும்

பெண்டிர்

கடைசியில்

கரன்சியில் கொழுத்திருப்பவன்

பக்கம் சாயும்

மாயம் என்ன கூறாய்?

அங்கையில் தாங்கி

நின்றாலும்

அன்பினை பண்பினை

வேண்டாது

அளவில் செல்வமும்

அலுங்காமல் குலுங்காமல்

போய்வர

பறக்கும் காரும்

பள பளக்கும்

பங்களாவும்

கேட்பதென்ன

கேலிகள் செய்வதென்ன?

மங்கை மனம்

மங்கைக்கு புரியுமாம்

மடையர்கள் !

சிவன் சங்கை

நெரித்து

விடம் அங்கே

தங்கச் செய்தவளே

தகவல் சொல்வாய்

புரியவில்லையம்மா

மங்கையர் குணம்

மண்ணில் ...

கண்ணில் நீர்

வர அழுதே

காரியம் செய்வார்

உனக்கேதும்

தெரியுமோ?

என் சித்தம்

தெளியச் சொல்வாய்

தேவி

தேவி அவள்

பத்துமாதம்

உனைச்சுமந்து

பத்தியம் தான்

இருந்து பக்குவமாய்

வளர்த்தவிட

வயதுக்கு நீ வந்து

விட்டாயா?

காதல் மொழி நீ

பேசி காதல் தனை

நோகடித்து கற்பனைக்குள்

கண்டதெல்லாம்

தேவியவள் வேசங்களா

எதிர்கலாம் தான்

தொலைத்து காதலுக்காய்

ஏன்அழைந்தாய்

தேவியவள் அழகுதனை நீ

ரசித்ததால் தானே

மயக்கும் கதை பேசி

ஏமாத்தி நீ

வாழ்ந்தகாலம் தனை

தேவியவள் புரிந்ததாலே

அழகாய் வெளியில்

வந்து பட்டங்கள்

தான் படித்து

வாழ்கை தனை தெரிந்து

கொண்டால்

வலிக்கின்றதா இன்று

உனக்கு

Edited by கஜந்தி

தேவி

நித்திரையில வருவாய் என்றே

நீண்ட தூக்கம் கொள்கிறேன்,

சத்தமின்றி நீ வந்த

நிசம் தெரியாமல்.

கடிதம் அனுப்புவாய் என்றே

தபால் ஆபிசில் காத்திருந்தேன்

வீட்டிற்கு நீயே வந்த

நிசம் தெரியாமல்

இப்படி எத்தனையோ

தெரியாமல் இருக்க

உன் திருமணம் மட்டும்

ஏன் தெரிந்தது?

Edited by கர்ணன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தெரிந்தது! எது தெரிந்தது!!

ஏன் அறிந்தது! எது அறிந்தது!!

ஏன் புரிந்தது! எது புரிந்தது!!

தெரிதல், அறிதல், புரிதல் யாவும்

பொது நோக்கில் ஒன்றேயாம்!

பொறுத்து நோக்கின் அவை வேறேயாம்!

நிலாவை நிமிர்ந்து பார்த்து தெரிந்து கொண்டேன்!

ஈழ எயார் பறந்ததை அறிந்து கொண்டேன்!

என்னவளின் புண்சிரிப்பில் என் பர்சின்

கனம் குறையப் போவதை புரிந்து கொன்டேன்!!!

புரித்து கொண்டேன்

என்னை நான்

என்னை நான்

மறந்தவேளை

மற்றவர்கள் நினைத்தனர்

என்னை நான்

நினைத்தவேளை

மற்றவர்கள் மறந்து

போனதை

புரித்து கொண்டேன்

Edited by கஜந்தி

புரிந்து கொண்டேன்

உன் புன்முறுவலுக்குப்

பின்

ஒளிந்து கொள்ளும்

குட்டிச் சோகத்தை...

எட்டி நான்

நின்றாலும்

விட்டு விலகிப்

போவதில்லை

கடும் நினைவுக்

கறைகளை

மனசெல்லாம்

பூசிய வண்ணம்

உன் நலன் நாடி

வேண்டுகின்றேன்

நீல வண்ணக்

கண்ணனை...

கண்ணனைக் நேசிக்கும்..

கன்னியே..

என்னை ஏன்..மறுத்தாய்..

கண்ணன் கோகுத்தில்

விளையாடினான்..கோபியரோடு..

நான் கோக் குடித்து

விளையானனேன் பியரோடு..

வெள்ளை பிகரோடு..

கண்ணன் மரத்திலேறி

பெண்குளிக்கப் பார்த்தான்..

அவன் கண்ணால் பார்த்தான்..

நான் பைனாகுலரில்

பார்த்தேன்..

கண்ணன் வெண்ணை

திருடினான்..நான்

பொன்னை திருடினேன்..

அவன் செய்ததை

நான் அபிவிருத்தி செய்தேன்..

இருந்தும்..

நீ

கண்ணனை நேசிக்கிறாய்..

என்னை தூசிக்கிறாய்..ராதா

என்ற பேரை வைத்துக் கொண்டு

நீ ராதை போல வீம்பு

செய்ய நான் கண்ணன் என்று

பேரை வைத்து..லீலை

செய்யக்கூடாதா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஆச்சு நைனா விகடகவி

துன்னுட்டியா நீனு தீஞ்ச வடைகறி

மெர்சலான மைண்டுதான் ஒனக்கு

பார்சல் பண்ண வோணும் ஒன்னை சிலோனுக்கு

சிங்காரி ஒய்யாரி எல்லாம் லவ்மேட்டருக்கு இனி

ஒத்தே வராது கண்ணா கண்டுக்கினியா நீ

பினாத்திகினே இருந்தா டயம் வேஸ்ட்டு

பிஸ்கோத்து மேட்டர்ப்பா இது வுடு ஜூட்டு.. :lol:

ஐயா.. உங்க தமிழில் நானும்.. நம் தமிழும்..

டங்குவார் அந்திரிச்சு..போதுமா..

இப்ப சந்தோசமா... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்தோசமானேன் மடல் கண்டு

மனமுடைந்தேன் மடல் இன்றி

தேடும் போது யாமின்றி

தேடலில் தொலைந்தபோதும்

விடாது தேடினும்

கிடைத்திடாது பதிலேதும்

கணைகளை தடுமாறித்

தொடுத்தானோ மன்மதன்?

மன்மதன் கணை

தொடுக்கு

மங்கைஅவள்

தவிக்க

ரோஜாவாய் முகம்

சிவக்க

தலைகுனித்தன

பூக்கள் அவள்

அழகைக்கண்டு

தாமரையால் முகம்

சிரிப்பில் மன்மதனே

தடம்புரண்டான்

ரதியென ஒரு

நொடி

நொடிக் ஒருமுறை

கனவாய் வருகிறாய்

தங்கையாய் பிறந்தாலும்

தாயாகவே வாழ்கின்றாய்

இத்தனை தூரம் கடந்தாலும்

இதயத்தினுள் இருக்கின்றாய்

எத்தனைதான் சொன்னாலும்

ஈடாகுமோ உனக்கு.

உனக்கு

உன்மீது சந்தேகம்...

எனக்கு

என்மீது சந்தேகம்...

உனக்கு

என்மீதோ...

அல்லது

எனக்கு

உன்மீதோ...

சந்தேகம் வராதவரை

வா...

நாமிருவரும் காதலிப்போம்!

கலியாணமும் செய்வோம்!

செய்வோம் ஒரு சிறை...

இடுவோமதில் ஒரு

சில கிராதகர்களை

பாதகமே..தொழிலாக..

பாவங்களே வேதனமாக..

மக்கள் வாழ்வைச் சீரழித்து

குருவிக் கூட்டைக்

கலைத்தாற்போல்

உறவுகளைச் சிதறவிட்ட

சிங்கள அரக்கருக்காய்

செய்வோம் ஒரு சிறை

சிறை கொண்ட

இவள் வாழ்கை

பூட'டப்படாத

கதவுக்குள்

சுகந்திரகாற்றை

சுவாசிக்கும்

இவள் மனதிற்கு

மட்டுமே

சிறைக்கதவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.