Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுத்தது போதும் - கலைஞர்

Featured Replies

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறது. பொறுமையை முடித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழர்களை குறி வைத்து இலங்கை அரசு வெறித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 65 அப்பாவித் தமிழர்கள் பலியாகியுள்ளனர். வீடுகளை இழந்து மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்தவர்கள் இவர்கள்.

இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் முதல்வர் கருணாநிதியும் இச்செயலை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சில மாதங்களுக்கு முன்புதோன் செஞ்சோலை என்ற இடத்தில், இலங்கை விமானப்படை நடத்திய கொடூரத் தாக்குதலில் அப்பாவித் தமிழ் சிறார்கள் பலியானார்கள். அந்த சம்பவத்தின் கொடுமை அங்குள்ள தமிழர்களின் நினைவிலிருந்து மாறாத நிலையில் அதற்குள் இதோ இன்னொரு மரண ஓலம்.

மட்டக்களப்பு அகதிகள் முகாமில் தங்கியிருந்த அப்பாவித் தமிழர்கள் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்துள்ளனர். விமான தாக்குதல் மட்டுமல்லாமல், ஏவுகணைகளைத் தாக்கியும், பிஞ்சுக் குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கான தமிழர்களை பிணமாக்கியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நார்வே சமரசக் குழுவினர் மீதும் கூட இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது. நான் மத்திய அரசிடம் கேட்க விரும்பும் ஒரே கேள்வி என்னவென்றால், இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இலங்கையில் நடைபெறுவதை நாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம்?

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த இந்தியாவின் நிலையை மறு பரிசீலனை செய்யும் நேரம் வந்து விட்டது. இதை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

இலங்கை அரசு 'முதலைக் கண்ணீர்':

இதற்கிடையே மட்டக்களப்பு சம்பவத்திற்கு இலங்கை அரசு வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ரம்புகெவல்லா கூறுகையில், மட்டக்களப்பில் நடந்த தாக்குதலில், அகதிகளாக தங்கியிருந்தவர்கள் பலியானது குறித்து இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்கிறது.

ஆனால் அகதிகளை தங்களைக் முகாக்கும் மனிதக் கேடயங்களாக புலிகள் பயன்படுத்திக் கொண்டனர். பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கை தவிர்க்க முடியாதது. எங்களுக்கு நாட்டின் பாதுகாப்புதான் முக்கியமானது என்றார் ரம்புகவெல்லா.

(நன்றி : தட்ஸ் தமிழ்)

கலைஞருக்கு நன்றிகள் இப்படி ஆதரவுதந்தாலேயே எமக்கு போதும்

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் அவர்களுக்கு நன்றிகள். சொல்லில் மட்டுமன்றி செயலிலும் அவர் காட்டும் நடவடிக்கைகள் தான், அவரின் பெருமையை என்னும் உயர்த்தும்

கருணாநிதியின் கருத்து மகிழ்ச்சியினைத் தந்தாலும் இதைவிடக் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய ஆற்றலும் மத்திய அரசில் வலிமையும் அவருக்கு இருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை பிரதமர் சந்திப்பதைத் தடுத்தமை போன்று மகிந்தரைச் சந்திப்பதையும் சிங்கள அரசிற்கு ஆதரவு வழங்குவதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

பின்லாந்து அரசாங்கத்தால் கொண்ட வரப்பட்ட சிறிலங்காவைக் கண்டிக்கும் தீர்மானத்தை இந்தியா நிறைவேற்ற விடாமல் குறுக்கே நிற்பதை கண்டிக்க வேண்டும்.

செய்வாரா கருணாநிதி அல்லது அறிக்கை மட்டும் தானா?

கலைஞருக்கு நண்றி எல்லாம் சொல்லாதீங்கப்பா.... சகோதரங்களுக்கு செய்யவேண்டிய அவரின் கடமையைதான் செய்யுறார்....

வேண்டுமானால் அவரின் வயதை எண்ணி வணங்கலாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல்வர் கருணாநிதி அவர்கள் ஒரு பெரிய அரசியல் சாணக்கியன் ஈழதமிழர்கள் விடயத்தில் எதுவும் நடக்கலாம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல்வர் கருணாநிதி அவர்கள் ஒரு பெரிய அரசியல் சாணக்கியன் ஈழதமிழர்கள் விடயத்தில் எதுவும் நடக்கலாம்!

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் செயலில் காட்டட்டும் பிறகு பார்ப்பம்

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரிடமிருந்து இலங்கையில் தமிழ்மக்கள் எதிர்பார்ப்பது....

இலங்கையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உகந்த பொருத்தமான தீர்வொன்று குறித்து இந்திய மத்திய அரசாங்கம் சிந்திப்பது அவசியமென தமிழக முதலமைச்சரும் உலகத் தமிழர்களின் மூத்த தலைவருமான கலைஞர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு வேண்டிய அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது தனது கோரிக்கை மட்டுமல்லாமல் தமிழக மக்களின் எதிர்பார்ப்பும் கூட என்று குறிப்பிட்டிருக்கும் கலைஞர், அதேசமயம் இலங்கையில் தமிழ் தாயகமான வட, கிழக்குக்கு இந்திய அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுவை அனுப்பி உண்மை நிலைவரத்தை நேரில் கண்டறியும் யோசனை உரிய பலனைத் தரப்போவதில்லையென்ற கருத்தையும் முன்வைத்திருக்கிறார். அத்துடன், இலங்கை இனநெருக்கடித் தீர்வுக்கான யோசனைகளை முன்வைப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, மத்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டால் முன்வைப்போம் என்றும் இந்த விடயத்தைக் கையாள வேண்டியது மத்திய அரசும் அதன் வெளிவிவகார அமைச்சருமே என்று பதிலளித்திருக்கிறார்.

1983 கறுப்பு ஜூலையிலிருந்து இற்றைவரை இலங்கையிலிருந்து தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான அகதிகளை விட கடந்த ஜனவரிக்குப் பின்னர் வட, கிழக்குப் பகுதியிலிருந்து தமிழகத்திற்கு சென்றிருப்போர் தொகை 16 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது.

இந்நிலையில் மேலும் அகதிகள் வருகையைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய வகையில் அவர்கள் தமது சொந்த மண்ணில் இயல்பு வாழ்க்கை மேற்கொள்ளக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுப்பது இந்திய அரசாங்கத்திற்கும் விசேடமாக தமிழகத்திற்குமுள்ள தார்மீக கடமை என்பதில் கேள்விக்கு இடமில்லை.

வட, கிழக்கின் இன்றைய நிலைவரத்தை கலைஞர் நிச்சயம் நன்கு அறிந்திருப்பார் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. யாழ். குடாநாட்டில் 61/2 இலட்சம் தமிழ் மக்கள் பட்டினியால் வாடுவதும் திறந்தவெளிச் சிறையில் காலத்தைக் கழிப்பதும் யாவற்றுக்கும் மேலாக தமிழக பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்கள் வெளியிடும் இலங்கைத் தமிழ் அகதிகளின் கண்ணீர்க்கதைகள் நிச்சயமாக கலைஞரின் பார்வைக்கும் செவிக்கும் எட்டாமலிருக்கப்போவதில்லை.

இந்நிலையில் உள்ளூர் அரசியல் வேறுபாடுகளை தூர ஒதுக்கி வைத்துவிட்டு சகல அரசியல் கட்சிகளையும் அழைத்துப்பேசி இலங்கைத் தமிழர்களின் துன்பம் துடைக்க பரிகாரம் காண மூத்த தமிழ்த் தலைவரான கருணாநிதி முன்வர வேண்டும் என்பதே இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.

பொதுக்கூட்டங்களில் செய்தியாளர் மாநாடுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சந்தர்ப்பத்துக்கு ஏற்றவிதத்தில் பதிலளித்துவிட்டு சென்றுவிடுவது இலங்கைத் தமிழ் மக்களின் துயரங்களுக்கு ஒருபோதுமே ஆறுதலைத் தந்துவிடாது.

தமிழ்நாட்டின் ஆட்சியதிகாரத்தில் கருணாநிதி இருக்கின்றார். அவரின் திராவிட முன்னேற்றக்கழக கூட்டணி மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் குரல்கொடுக்கவல்ல சக்தியாக உள்ளது. இந்நிலையில் கட்சி அரசியலை புறந்தள்ளிவிட்டு அ.தி.மு.க., ம.தி.மு.க., பாரதீய ஜனதா, தே.மு.தி.க. மற்றும் தனது அணியிலுள்ள பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட சகல கட்சிகளையும் உடனடியாக அழைத்துப் பேசி மத்திய அரசாங்கத்திற்கு ஒருமித்த குரலில் கலைஞர் இலங்கைத் தமிழரின் துயர்துடைப்பதற்குரிய அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த தமிழர்களினதும் எதிர்பார்ப்பாகும்.

`ஆளுக்கொருவிதமாக அறிக்கைகளை விடுத்து இலங்கைத் தமிழ் மக்களின் துன்பத்தை மேலும் அதிகரிக்காமல் ஒன்றுபட்டு செயற்படுவோம்' என்று சில மாதங்களுக்கு முன்பு கலைஞர் தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த சனிக்கிழமை திருச்சிராப்பள்ளியில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில்,இந்திய மத்திய அரசு கேட்டுக்கொண்டால் தமிழக அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக சிபாரிசுகளை முன்வைக்கத் தயார் என்று அவர் கூறியிருக்கிறார்.

அவர்கள் கேட்கவில்லை? கேட்காமல் நான் எப்படி கூறுவது? என்று கையை விரிக்கும் தொனியிலான பதிலை இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் மிகுந்த மன வேதனையுடனேயே கலைஞரிடமிருந்து கேட்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழும் நிலை ஏற்பட்டால் அதனையிட்டு மகிழ்ச்சியடையும் முதலாவது ஆளாக நான் இருப்பேன் என்று கலைஞர் ஒருசமயம் கூறியிருந்தார். இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டு நிரந்தர சமாதான வாழ்வு அவர்களை சென்றடைய உதவுவதற்குரிய சக்தியும் அதிகாரமும் கலைஞர் கருணாநிதியிடம் தற்போது உள்ளது. தனது அதிகார எல்லைக்குள் இதற்கான செயற்பாடுகளில் கலைஞர் துணிந்து இறங்க வேண்டும் என்பதே இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் வேண்டுகோளுமாகும்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக உறுதியான செயற்பாட்டில் இறங்கினால் `அரசியல் ஆதாயத்தின்' எடை தனது அரசியல் பகையாளியான ஜெயலலிதா பக்கம் அதிகரித்துவிடுமெனக் கருதாது `உலகத் தமிழ் மக்களின் தலைவன்' என்ற மகுடத்துக்கு மெருகூட்டும் விதத்தில் கலைஞர் ஏதிலிகளாக தமிழகத்தின் கரைகளை இலங்கைத் தமிழ் மக்கள் வந்தடையாமல் தடுத்து நிறுத்துவதற்கும் அவர்கள் தமது தாயகத்தில் சகல விதமான அடிப்படை உரிமைகளையும் பெற்று இயல்பு வாழ்க்கையை மேற்கொள்வதற்கும் வழிசமைப்பதற்குமான நடவடிக்கைகளுக்கு உதவியும் ஒத்தாசையும் புரிய வேண்டும் என்பதே இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

-தினக்குரல்

கலைஞர் அவர்களுக்கு நன்றிகள். சொல்லில் மட்டுமன்றி செயலிலும் அவர் காட்டும் நடவடிக்கைகள் தான், அவரின் பெருமையை என்னும் உயர்த்தும்

நல்ல கருத்து தூயவன்

முதலில் செயலில் காட்டட்டும் பிறகு பார்ப்பம்

வாய்ச்சொல்லில் வீரரடி கண்ணம்மா...............

:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.