Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாராக இருந்தாலும் பாரபட்சமின்றிய தண்டனை வேண்டுமாம்; டக்ளஸ் -

Featured Replies

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி விசாரணைகள் நடாத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.   ஐ.நா.வில் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை பின்போடப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.    அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,       இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற சகல அரசியல் படுகொலைகளும் விசாரணை செய்யப்பட வேண்டும்.    அந்தவகையில் தவறுகள் செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமின்றி விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்பதுடன் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும்.   இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்களான தியாகராசா மகேஸ்வரன், ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே, லக்ஸ்மன் கதிர்காமர், நாடாளுமன்ற  உறுப்பினர்களான அம்பாறை சந்திரநேரு, திருமலை தங்கத்துரை, நீலன் திருச்செல்வம், தமிழ்க் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம், ஈ.பி.ஆர்.எல.எப் உறுப்பினரும் இலங்கை சமாதான செயலகத்தின் உத்தியோகஸ்தருமான லோகநாதன் கேதீஸ்வரன், பத்திரிகையாளர்களான அற்புதராஜா நடராஜா பா.உ. பாலநடராஜா ஐயர், தராகி சிவராம், நிமல்ராஜன், ஈ.பி.ஆர்.எல.எப், நாபா அணியின் தலைவர் சுபத்திரன், மனித உரிமைகள் சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம் உள்ளிட்ட ஏனையோரது கொலைகள் தொடர்பிலும் பாரபட்சமின்றிய விசாரணைகள் நடாத்தப்படல் வேண்டும்.      தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை கூறி வருகின்றமை மட்டுமல்லாது, ஐ.நா.வின் அறிக்கையை பின்போடும் இந்தக் கூற்றை கூட்டமைப்புக்குள்ளேயே சிலர் ஆதரித்தும் எதிர்த்தும் வருகின்றனர்.   கூட்டமைப்பினர் புதிய அரசுடன் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமென்று கூறினார்கள். ஆனாலும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் இதுவரையில் அவர்களால் எவ்விதமான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்துள்ளது.   அத்துடன், கடந்த காலங்களில் எமது மக்கள் எதிர்கொண்ட அழிவுகளுக்கும் இழப்புக்களுக்கும் கூட்டமைப்பினரே பொறுப்பு கூற வேண்டியவர்களாக உள்ளனர்.   மேலும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதியதொரு சூழலை உருவாக்கி அதற்கான அணுகுமுறைகளையும் கொண்டிருக்க வேண்டும். இந்த நிலையில் தான் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானது.    கடந்த காலங்களில் கிடைக்கப் பெற்ற பல்வேறு சந்தர்ப்பங்களை கூட்டமைப்பினர் சரிவர பயன்படுத்தவில்லையென்றும் புதிய அரசுடனும் முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துக்களையும் கூறியும் வருகின்றனர்.   அந்தவகையில் தென் ஆபிரிக்காவைப் போன்ற உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவொன்றை அமைத்து அதனூடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.  -

 

 http://onlineuthayan.com/News_More.php?id=100163885323483895#sthash.A2OJeVjO.dpuf

 

 

சரியாக சொன்னிர்கள் , எப்ப நீயும் உன்னுடைய கொலைகார கூட்டமும் சரணடைய போகின்றீர்கள் ?

 

  • கருத்துக்கள உறவுகள்

இதை யார் கணக்கிலை எடுக்கின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

யாராக இருந்தாலும் பாரபட்சமின்றிய தண்டனை வேண்டுமாம்; டக்ளஸ் -

 

மாமாவுக்கு அவ்வளவு நம்பிக்கை

இது அமுலுக்கு வரவே வராது என்று......

டக்குக்கு  ஒரு  இந்தியன்  வீசா  எடுத்து  கொடுக்கலாம்  ஒருக்கா  போட்டு  வரச்சொல்லுங்கோ  :)

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தன்னிலை மறந்து ரொம்ப நாளாயிற்று. யாராவது கொஞ்சம் நினைவூட்டி விடுங்கப்பா. ஆள் யாரென்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.