Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களும் உணர்ச்சி அரசியலும் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அரசியலிலும் அரசியல் போராட்டங்களிலும் முதிர்ச்சியும் இராசதந்திரமும் தேவைப்படுவதாக நாம் உணர்கின்றோம்.  உணர்ச்சியூட்டும் அரசியலினால் நாம் அடைந்த பலன்களை கடந்த கால வரலாறு எமக்குக் காட்டி நிற்கின்றது.  அந்த வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளாது மீண்டும் அநாவசிய உணர்ச்சியூட்டும் அரசியல் செய்வது சிலரின் தனிப்பட்ட நலன்களிற்கு உதவினாலும் எமது மக்களுக்கு நன்மை பயக்கப்போவதில்லை.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற அரசியல் நடவடிக்கைகள் எமக்குக் கவலையை அளிக்கின்றன.  கருத்து வேறுபாடுகளை தர்க்கர்Pதியில் மக்கள் முன்கொண்டு செல்லாமல் கொடும்பாவி எரிப்பதும் துரோகிகள் என அடையாளம் இடுவதும் உணர்ச்சி அரசியலின் வடிவங்களே.  தமிழர்களின் உரிமைப்பிரச்சனைக்கான தீர்வை ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமாதானமாகவும் சமஉரிமையடனும் வாழ்வது என்றரீதியில் அணுகுதலே புத்திசாலித்தனமானது.

கடந்த அரசாங்கம் பதவியில் இருந்திருப்பின் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை உள்நாட்டில் முற்றாகவே நிராகரிக்கப்பட்டிருக்கும். 

தற்போதைய அரசாங்கம் மேற்படி அறிக்கையின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதற்கானதொரு உள்நாட்டுப்பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என நாம் கருதுகின்றோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைக்குழுவின் ஆணையாளர் இளவரசர் ஹீசைன் ஐ.நாவின் அறிக்கை பிற்போடுகை ஒரு தடவை மட்டுமே எனவும் செப்டெம்பர் மாதத்தில் அறிக்கை நிச்சயமாக வெளிவரும் எனவும் உறுதியளித்துள்ளார். இந்நிலையில் நாம் நீதிக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையுடன் சற்றுக்காத்திருப்பது கௌரவமானதும் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளிற்கு அளிக்கப்படும் மதிப்புமாகும்.

 தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பெருமளவில் வாக்களித்து தற்போதைய ஜனாதிபதியினைத் தெரிவு செய்துள்ளனர்.  அவர்களது நியாயமான கோரிக்கைகள் காலதாமதமின்றிப் பூர்த்தி செய்யப்படல் வேண்டும். 

பெருமளவிலான மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர்.  அவர்களது மீள்குடியேற்றம் விரைவில் மேற்கொள்ளப்படல் வேண்டும். விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.  இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வுகளை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளும், தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகளும் காலதாமதமின்றி மேற்கொள்ளப்படல் வேண்டும்.  இதற்கு திறந்த மனத்துடன் நடுநிலையாக எமது கடந்தகால அரசியலை ஆய்வு செய்வதுடன் ஜனநாயக வழிமுறைகளை வலுவுடையதாக்கிஇ எல்லா சமூகங்களினதும் இணைப்பை உருவாக்குவதும் பிரதானமாகும்.  தமிழ் மக்களின் பிரச்சனையில் அனுதாபம் கொண்டிருக்கும் சிங்கள மக்களுடன் சேர்ந்து இயங்கி சாதாரண சிங்கள மக்களுக்கு உள்ள பயங்களை நீக்குவதற்கு தமிழத்; தலைவர்கள் முன்வரவேண்டும்.

மாறாக இனரீதியிலான தீவிரவாதமான செயற்பாடுகள் சிங்கள மக்களிடையேயுள்ள இனவாத தீவிரவாத சக்திகளிற்கு வலுவூட்டுவதாக மட்டுமே அமையும்.  இச் செயற்பாடுகள் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கிடையிலான இடைவெளியை அதிகரித்து இனப்பிரச்சனைக்கான தீர்வை மேலும் தாமதப்படுத்தும்.

 

தமிழ் மக்களும் உணர்ச்சி அரசியலும்

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் பத்திரிகை அறிக்கை:-

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117274/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழர் அரசியலிலும் அரசியல் போராட்டங்களிலும் முதிர்ச்சியும் இராசதந்திரமும் தேவைப்படுவதாக நாம் உணர்கின்றோம்.  உணர்ச்சியூட்டும் அரசியலினால் நாம் அடைந்த பலன்களை கடந்த கால வரலாறு எமக்குக் காட்டி நிற்கின்றது.  அந்த வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளாது மீண்டும் அநாவசிய உணர்ச்சியூட்டும் அரசியல் செய்வது சிலரின் தனிப்பட்ட நலன்களிற்கு உதவினாலும் எமது மக்களுக்கு நன்மை பயக்கப்போவதில்லை.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற அரசியல் நடவடிக்கைகள் எமக்குக் கவலையை அளிக்கின்றன.  கருத்து வேறுபாடுகளை தர்க்கர்Pதியில் மக்கள் முன்கொண்டு செல்லாமல் கொடும்பாவி எரிப்பதும் துரோகிகள் என அடையாளம் இடுவதும் உணர்ச்சி அரசியலின் வடிவங்களே.  தமிழர்களின் உரிமைப்பிரச்சனைக்கான தீர்வை ஐக்கியப்பட்டனது இலங்கைக்குள் சமாதானமாகவும் சமஉரிமையடனும் வாழ்வது என்றரீதியில் அணுகுதலே புத்திசாலித்.தனமா

கடந்த அரசாங்கம் பதவியில் இருந்திருப்பின் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை உள்நாட்டில் முற்றாகவே நிராகரிக்கப்பட்டிருக்கும். 

தற்போதைய அரசாங்கம் மேற்படி அறிக்கையின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதற்கானதொரு உள்நாட்டுப்பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என நாம் கருதுகின்றோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைக்குழுவின் ஆணையாளர் இளவரசர் ஹீசைன் ஐ.நாவின் அறிக்கை பிற்போடுகை ஒரு தடவை மட்டுமே எனவும் செப்டெம்பர் மாதத்தில் அறிக்கை நிச்சயமாக வெளிவரும் எனவும் உறுதியளித்துள்ளார். இந்நிலையில் நாம் நீதிக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையுடன் சற்றுக்காத்திருப்பது கௌரவமானதும் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளிற்கு அளிக்கப்படும் மதிப்புமாகும்.

 தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பெருமளவில் வாக்களித்து தற்போதைய ஜனாதிபதியினைத் தெரிவு செய்துள்ளனர்.  அவர்களது நியாயமான கோரிக்கைகள் காலதாமதமின்றிப் பூர்த்தி செய்யப்படல் வேண்டும். 

பெருமளவிலான மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர்.  அவர்களது மீள்குடியேற்றம் விரைவில் மேற்கொள்ளப்படல் வேண்டும். விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.  இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வுகளை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளும், தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகளும் காலதாமதமின்றி மேற்கொள்ளப்படல் வேண்டும்.  இதற்கு திறந்த மனத்துடன் நடுநிலையாக எமது கடந்தகால அரசியலை ஆய்வு செய்வதுடன் ஜனநாயக வழிமுறைகளை வலுவுடையதாக்கிஇ எல்லா சமூகங்களினதும் இணைப்பை உருவாக்குவதும் பிரதானமாகும்.  தமிழ் மக்களின் பிரச்சனையில் அனுதாபம் கொண்டிருக்கும் சிங்கள மக்களுடன் சேர்ந்து இயங்கி சாதாரண சிங்கள மக்களுக்கு உள்ள பயங்களை நீக்குவதற்கு தமிழத்; தலைவர்கள் முன்வரவேண்டும்.

மாறாக இனரீதியிலான தீவிரவாதமான செயற்பாடுகள் சிங்கள மக்களிடையேயுள்ள இனவாத தீவிரவாத சக்திகளிற்கு வலுவூட்டுவதாக மட்டுமே அமையும்.  இச் செயற்பாடுகள் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கிடையிலான இடைவெளியை அதிகரித்து இனப்பிரச்சனைக்கான தீர்வை மேலும் தாமதப்படுத்தும்.

 

தமிழ் மக்களும் உணர்ச்சி அரசியலும்

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் பத்திரிகை அறிக்கை:-

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117274/language/ta-IN/article.aspx

 

உலகத்தில் உதிக்கிற சூரியன் ....
யாழ் பல்கலைகழகத்தில் உதிப்பது இல்லையா ?? 
  • கருத்துக்கள உறவுகள்

1995.. சூரியக்கதிர் நடவடிக்கையின் போது சந்திரிக்கா அம்மையாரின் யுத்தத்துக்கு வக்காளத்து வாங்கி மனித உரிமை என்ற பெயரில் சிங்களத்தின் கொடும் இனப்படுகொலைப் போருக்கு ஆதரவளித்தவர்களையும் இதே யாழ்பல்கலைக்கழகம்.. கொண்டுள்ளது என்பதை மறக்கக் கூடாது.

 

உலகெங்கும் மக்கள் உணர்ச்சியோடு இருப்பதால் தான் சுதந்திர நாடுகளோடு.. சுதந்திரக் கொடிகளோடும் வாழ்கின்றனர். எல்லோரும் ஒட்டி வாழ ஆசைப்பட்டிருந்தால்.. ஐநா சபையும் தேவையில்லை.. அதில் 150  நாடுகளும் அவசியமில்லை. இந்த அடிப்படையை தமிழர்கள் அனுபவிக்கக் கூடாது என்று எண்ணும் விஞ்ஞானிகளை யாழ்பல்கலைக்கழகம் கொண்டிருக்குது.. ஆனால்.. குடா நாட்டு சுற்றுச் சூழலை அவதானிக்கவும் மக்களை அறிவுறுத்தவும் ஆக்களை காணேல்ல..!!  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உந்த அறிக்கை விடுறவை... இந்த மக்களின் குரலுக்கு.. பதில் சொல்லட்டும். :icon_idea:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.