Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நிலத்தடி நீர் பாதுகாப்பு - ஒருங்கிணைந்த அனுகுமுறை அவசியம் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நிலத்தடி நீர் பாதுகாப்பு -  ஒருங்கிணைந்த அணுகுமுறை உருவாகுதல் அவசியம்

- வ.ஐ.ச.ஜெயபாலன்

1.

சுன்ணாக நிலத்தடி நீர் விசேடமாக பெரோலிய கழிவுகளாலும் பொதுவாக ஏனைய யாழ்குடா நாட்டு பகுதிகள்போல விவசாய ரசாயனங்களாலும் மனிதக் கழிவுகளாலும் மாசுபட்டுள்ளது. எனவே ஒருங்கினைந்த யாழ் நிலதடி நீர் பாதுகாப்பு செயல் திட்டத்தின் அவசர கவனிப்புகுரிய ஒரு பகுதியாகவே சுன்ணாகம் பெரோலிய மாசு கழைதல் பிரச்சினையை நோக்க வேண்டும்.

ஏனைய இடங்களிலும் குறிப்பாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள வலி வடக்கில் சீமெந்து தொழிறசாலை மற்றும் இராணுவ முகாம் போன்றவர்றின் எண்ணைக் சேமிப்பு சார்ந்தும் இத்தகைய நிலத்தடி நீர் பெற்றோலிய பாதிப்புக்குள்ளான வட்டாரங்கள் உருவாகி இருக்க வாய்ப்புள்ளாது. யாழ் முழுவதிலும் நிலத்தடி நீர் பெற்றோலிய பாதிப்புகுள்ளான பகுதிகள் கண்டறியப் படவேண்டும்.

 

2

இப் பிரச்சினையை தனிய சுன்ணாகம் பெற்றோலிய மாசு பிரச்சினையாக தனிமைப் படுத்திக் கையாளுவது முழுமையான அனுகுமுறையல்ல. ஒருங்கிணைந்த யாழ் நிலத்தடி நீர்ப் பாதுகாப்பு செயல் திட்டத்தின் அவசர கவனிப்பைக் கோரும்  ஒரு பகுதியாகவே சுன்ணாக பிரச்சினையை கையாள வேண்டும்.

 

சூழல் இயல் தேர்ந்தவரான வட மாகாணசபை அமைச்சர் ஐங்கர நேசன் போன்ற வர்கள் யாழ் பல்கலைக் கழகத்தை குறிப்பாக விஞான மருத்துவ பொறியியல் பீடங்களையும் யாழ்ப்பாணக் கல்லூரி போன்ற உயர் கல்வி அமைப்புக்களையும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த ஓய்வு பெற்றவர்களையும் புலம்பெயர் தமிழ் வல்லுனர்களையும் ஆர்வலர்களையும் இனம் காண்டு  ஒருங்கிணைத்தல் வேண்டும். .  

சுண்ணக்கல் மீது அமைந்த யாழ்குடாநாட்டிலும் பெரும்பகுதியும் மணல் வண்டல் மண் சார்ந்த நொய்ந்த நிலப்பரப்பைக் கொண்ட வட கிழக்கிலும் நிலத்தடி நீர் மோசமடைந்து வருகிறது. ஏற்க்கனவே நீரில் மனிதக் கழிவு கலக்கும் பிரச்சினை கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி போன்ற மக்கள் தொகை அடர்த்தி அதிகரித்த பகுதிகளில் தீவிரமான அச்சுறுத்தலாகிவிட்டது.

எனவே சுண்ணாகத்தில் நிலத்தடி நீர் மாசுபடும்  பிரச்சினையை பெற்றோலிய மாசுபடல் பிரச்சினையாக மட்டும் அணுகப்  படக்கூடாது. பதிலாக இப்பிரச்சினை பெறோலிய மாசு (கைட்ரோ கார்பன்) விவசாய ரசாயனங்கள் (நைட்ரேட்ஸ்) மனித கழிவுகள் நிலத்தடி நீரை மாசு படுத்தும் பிரச்சினையாக ஒருங்கினைந்த பார்வையுடன் அனுகப்பட வேண்டும். அத்தகைய அனுகுமுறை சுன்ணாகத்தை முழு யாழ்குடா நாட்டுக்கான நிலத்தடி நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஆய்வுகூடமாகவும் தொடக்கப் புள்ளியுமாக மேம்படுத்தும். இது முழு வடகிழக்கு மாகாண நீர் பாதுகாப்புக்கும் சூழல் மேம்பாட்டுக்கும் உழைக்க அவசியமான அறிவையும் ஆற்றல் ஆர்வம் உள்வர்களையும் உருவாக்கும்,  

ஈழத்து மண்ணியல் நீரியல் இரசாயனவியல் பொறி

யியல் சூழலியல் விஞானிகளின் ஒருங்கிணைவுக்கும் ஆய்வுக்கும் பங்களிப்பும் செயல்பாட்டுக்கும் வழிசமைப்பதாக சுன்ணாகத்தில் ஆரம்பிக்கவிருக்கும் ஒருங்கினைந்த நிலத்தடி நீர் பாதுகாப்பு திட்டம் அமையவேண்டும்.

3

சுன்ணாகம் ஈழம் முழுமைக்குமான ஆய்வுகூடமாக செயல்படவேண்டும். அதற்கான ஆய்வு பரப்புரை திட்ட அலுவலகம் ஒன்றை புலம் பெயர்ந்த தமிழ் ஆர்வலர்கள் வடமாகாண விவசாய அமைச்சினதும் யாழ் பல்கலைக் களகத்தினதும் அனுசரனையுடன் உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம். அத்தகைய அமைப்பு ஆய்வுகளில் மட்டுமன்றி நம் தாயகச் சுழலை பாதுகாப்பதில் மக்களை ஈடுபடுத்திக் கற்பிக்கும் செயல்பாட்டுக்கு முன்னுரிமை வளங்க வேண்டும். அதற்காக யாழ்பாணக் கல்லூரி யாழ் தொழில்நுட்ப்பக் கல்லூரி யாழ் செமினறி ஒஸ்மானியா கல்லூரி போன்ற உயர்கல்வி அமைப்புகளையும் தொண்டு நிறுவனங்களையும் தொழில் சங்கங்களையும் ஊடகத் துறையினரையும் தையும் முடுக்கி விடுவது மிக முக்கியமானதாகும்.

 

 

யாழ்ப்பாணத்தில் சுன்ணாகம் மின் நிலையம் உட்ப்பட சகல எண்ணை மாசு சிந்தும் அமைப்புகளையும் அகற்றுவது அவசியம். விவசாய இரசாயனங்கள்மீது கடுமையான கட்டுப்பாடு அமூலாக்கப் பட வேண்டும், ஒருங்கினைந்த மலம் சாக்கடை திட்டம் உருவாக்கப் பட வேண்டும். காற்று மின்சார உற்பத்திக்கு பயன்படுத்துவதை ஊக்குவிப்பது அவசியம்.

 

மனித கழிவுகளை மீழ் சுழற்சி முறையில் அனல் மின்சாரத்துக்கான உயிரியல் வாயுவாகவும் உரமாகவும் மார்றூவது பற்றியும் நாம் ஆராயவேண்டும்

 

புலம்பெயர்ந்த தமிழ் விவசாயிகள் யாழ் / ஈழம் இயற்க்கை வேழான் பொருட்களூக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் ஈழத்தின் சுற்று சூழல் பாதுகாப்பில் புலம் பெயர்ந்த தமிழ் வாடிக்கையாளர்களை இணைக்க முன் வருவது நல்ல ஆரம்பமாக அமையும்,

 

  

 

 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் எல்லாம் பெயரளவில் கூறுவதற்கு நல்லாத்தான் இருக்கு, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வடமாகாண முதலமைச்சரது செயலாளருக்கு தொலைபேசித் தொடர்பெடுத்து இதுபற்றியும், நீர் மாசடைதல் பற்றிய ஆராய்வுக்காக ஏற்படுத்தப்பட்ட நிபுணர் குழுவில் யாழ்பல்கலைகழக மருத்துவ பீட டீனை இடைநிறுத்தியது ஏன் என்பதனையும் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில்

 

"வெளிநாட்டில இருந்துகொண்டு எங்களுக்கு நீங்கள் அட்வைஸ் பண்ண வெளிக்கிடாதையுங்கோ, எங்கட அலுவல் எங்களுக்குத் தெரியும்" என

 

அப்ப என்ன செய்யலாம் எண்டு நினைக்கிறியள்.

 

சுமந்திரனிலிருந்து அங்க அலுவலகத்தில வேலை செய்கிற கடைநிலை ஊழியர் வரைக்கும் நாங்கள் எல்லாம் வெளிநாட்டில கக்கூஸ் கழுவத்தான் லாயக்கு எனும்கோதாவிலதான் கதைக்கினம்.

 

புலம்பெயர் தேசத்து உறவுகளது செயற்பாட்டிலேயே முள்ளிவாய்க்கலுடன் தொரும் தமிழர் இன அழிப்பு எனும் அவலம் சர்வதேசப்படுத்தப்பட்டது என்பதையே ஏற்பதற்கு அவர்களால் இயலவில்லை.

 

சிங்கள அரசும் சுங்களக் கொள்கைவகுப்பளர்களும் புலத்துத் தமிழர்களையும் புலம்பெயர் தமிழர்களை இருவேறு முகாம்களாக வேறுதிசைகளில் பயனிப்பவையாக வைத்திருக்கவே விரும்புகிறது அதற்கான முயற்சிகளையும் செவ்வனே செய்கின்றது.

 

கருனாவை பிடித்திழுத்தது போல் புலம்பெயர் தேசங்கள் எங்கும் தமிழர் குரலை அடக்குவதற்கான வேலைகளை சிங்களம் செய்ய ஆரம்பித்துவிட்டது அதன் முதல் நிலையே லண்டனில் யாழ் இந்துக்கல்லூரியின் பழையமாணவர்களுடனான சந்திப்பு எனும் விடையத்தை புலம்பெயர் தேசமெங்கும் கசியவிட்டிருப்பது.

 

அந்தக் கைங்கரியத்தை எமது யாழ் கள உறவான அர்ச்சுணும் இணைந்து கச்சிதமாக தன் பங்குக்கு நடாத்திக்கொடுக்கிறார்.

 

கூத்தமைப்பு சம்பந்தன் சுமந்திரன் தலைமையில் தங்களது பங்குக்குப் புலம்பெயர் தமிழர்களைப் பரிகசிக்கிறார்கள். தவிர சிங்களத்தின் இப்போதைய பிரதம நீதிபதியும் தம்பங்குக்கு இவவிடையத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

 

காலப்போக்கில் இன்னும் பலபேர் காட்சிக்கு வருவார்கள். பொறுத்திருந்து பாருங்கள்.

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழமைக்குரிய எழுஞாயிறு, தங்கள் ஆதங்கம் புரிகிறது. எனினும். வாழ்விழந்த் மக்கள் நிலை கருத்தில் கொண்டு சில வருடங்கள் பொறுமையாய் செயல்பட வேண்டும். புனர்வாழ்வு புனர் நிர்மாணாக் காலக் கட்டத்தில் முரன்பாடுகளோடும் அவர்களுடன்  சேர்ந்து அல்லது மோதாமல் தனிவழியில் சமாந்திரமாக பனியாற்ற இடம் (space) உள்ளது. இதுதான் உலக வரலாற்றின் படிப்பினை.  இறுதியின்  இறுதியில் மக்கள்சார்பாக காலம் வெல்லும்.  உங்க்கள் எங்கள்  கனவுகள் நனவாகும்

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.