Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டு யுவதி உதயசிறிக்கு பொது மன்னிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசியல்வாதியும் அமைச்சருமான ரஞ்சன் நாமநாயக்க விரைவில் ஜனதிபதி சிறிசேனா உதயசிறியை விடுவிக்கும் பொது மன்னிப்பை வழங்குவார் எனச் சொல்லியுள்ளார்.

இதற்குப் பெரிதும் உதவிய நீதி அமைச்சர் ராஜபக்சேவுக்கும் நன்றி கூறியுள்ளார் ராமநாயக்க.

http://www.asianmirror.lk/news/item/7964-president-pardons-batticaloa-girl-who-scribbled-on-mirror-wall

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி.
அந்தச் சிறுமி, அறியாமல் செய்த வேலைக்கு... சிறையில் வைத்திருந்து அவரின். பாடசாலை நாட்களை வீணடிப்பது அழகல்ல.
விரைவில்.. பொது மன்னிப்பு, வழங்கப்பட்டு, தனது கல்வியை தொடர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி, சிகிரியா பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் 2 வருடம் சிறைத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இப்பொழுது அனுராதபுரம் சிறையில் வாடும் உதயசிறிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கும் பத்திரத்தில் 1ஆம் திகதி புதன்கிழமை இரவு கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை யுவதியான உதயசிறி, அனுராதபுரம் சிறையிலடைக்கப்பட்டு இப்பொழுது ஒன்றரை மாதம் கழிந்து விட்டது.

சிகிரியா குன்றிலுள்ள சுவரோவியத்தில் தனது பெயரை எழுதியமையினால் இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள உதயசிறிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அனுராதபுரம் சிறையில் வாடும் உதயசிறிக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பல அமைப்புக்கள், மற்றும் அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் இன மத பேதமில்லாது வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் இவருக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான பத்திரத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன புதன்கிழமை இரவு கையொழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இணைப்பு- http://www.tamilcnnlk.com/archives/360694.html

சீகிரியாவில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட மட்டு யுவதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்


சீகிரிய குன்றில் இருக்கும் கிறுக்கல் பாக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 27 வயதான மட்டக்களப்பு யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த சின்னத்தம்பி உதய ஸ்ரீ என்ற இந்த பெண் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி அவர் தொழில் புரியும் ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களுடன் சுற்றுலாப் பயணம் சென்றிருந்தார். சீகிரிய குன்றுக்கு சென்ற போது அங்கிருக்கும் கிறுக்கல் பாக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட யுவதிக்கு நீதிமன்றம் இரண்டு வருட சிறை தண்டனையை விதித்தது. தனது மகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை மீள்பரிசீலனை செய்யுமாறு அவரது தாய் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், யுவதிக்கு ஜனாதிபதியின் மன்னிப்பு கிடைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சீகிரிய குன்றுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள ஓவியங்கள் மற்றும் பாக்களை சேதப்படுத்த வேண்டாம் அறிவுறுத்தும் அறிவிப்பு சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் சீகிரிய சிறுக்கல் பா மீது எழுத முயற்சித்த போது கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


http://www.tamilwin.com/show-RUmtyETWSUkp4A.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. 

 

இதுவும் நம்மை முட்டாளாக்கும் முட்டாள் நாள் செய்தியில்லை என நம்புவோம்...

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி...!

சிறையில் வாடும் உதயசிறிக்கு ஒப்பமிட்டார் ஜனாதிபதி.

கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி, சிகிரியா அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, தம்புள்ளை நீதிமன்றத்தால் 2 வருடம் சிறைத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இப்பொழுது அனுராதபுரம் சிறையில் வாடும் உதயசிறிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கும் பத்திரத்தில் புதனிரவு கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை யுவதியான உதயசிறி, அனுராதபுரம் சிறையிலடைக்கப்பட்டு இப்பொழுது ஒன்றரை மாதம் கழிந்து விட்டது.

சிகிரியா குன்றிலுள்ள சுவரோவியத்தில் தனது பெயரை எழுதியமையினால்
இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள உதயசிறிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அனுராதபுரம் சிறையில் வாடும் உதயசிறிக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பல அமைப்புக்கள், மற்றும் அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் இன மத பேதமில்லாது வேண்டுகோள் விடுத்திருந்தனர்
இந்த நிலையில் இவருக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான பத்திரத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன புதனிரவு கையொழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://www.jvpnews.com/srilanka/103631.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.