Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதவி நீடிப்புக்காக காத்திருக்கும் சரத் பொன்சேகா

Featured Replies

சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் பதவிக்காலம் எதிர்வரும் மாதம் 18 ஆம் நாளில் அவரின் 56 வயதுடன் நிறைவுபெறுகின்றது.

எனினும் மேலும் ஒருவருடம் பதவிநீடிப்பு வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயளாளர் கோத்தபாய ராஜபக்ச முலம் சிபார்சுக்கடிதம் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பதவி நீடிப்புக்காக மகிந்தவின் அனுமதி இன்று வரை வழங்கப்படவில்லை. இதற்கு இராணுவ, இராஜதந்திர மட்டங்களில் இருந்து பதவி நீடிப்பு வழங்குவதை எதிர்த்து மகிந்தவிற்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

முகமாலை சமரில் இராணுவத்திற்கு ஏற்பட்ட தோல்விக்கான பொறுப்பை அண்மையில் சரத் பொன்சேகா ஏற்றிருந்தார். இந்தச்சமரில் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும், பலநூறு படையினர் காயமடைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இராணுவ மட்டத்தில் இவரால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றங்களும் அதனால் இராணுவத்தை விட்டு விலகிச்சென்ற உயர்நிலை அதிகாரிகளும் இராணுவத்தின் அதிகாரிகள் மட்டத்தில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருந்தன.

இவ்விரு காரணிகளும் தான் சரத் பொன்சேக்காவின் பதவி நீடிப்புக்கு பெரும் தடைக்கல்லாக அமைந்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.eelampage.com/?cn=29794

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவின் பதவிகாலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பு

இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவின் பதவிகாலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையக வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கையெப்பமிட்ட பதவி நீடிப்பிற்கான சிபார்சு கடிதம் இன்னும் தளபதியிடம் வந்து சேரவில்லை எனவும் இவ் இராணுவ வட்டாரங்களினால் தெரிவிக்கப்பட்டது.

சரத் பொன்சேகாவின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதியுடன் முடிவடைவதுடன் அவரின் வயது 56ஆக நிறைவு பெறுகின்றது.

இவரது பதவி நீடிப்பு தொடர்பில் இராணுவ உயர் மட்டங்களில் இருந்து பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டிருந்துள்ளது.

முகமாலை சமரில் இராணுவத்திற்கு ஏற்பட்ட தோல்விற்கான பொறுப்பை சரத் பொன்சேகா ஏற்றிருந்தார்.இந்த சமரில் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் ஆயிரம் காணக்கானோர் காயடைந்தனர்.

மேலும் இராணுவ மட்டத்தில் இவரால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றங்கள் அதனால் இராணுவத்தை விட்டு விலகிச் சென்ற உயர் மட்ட அதிகாரிகளும் எதிர்ப்பை ஏற்படுத்திருந்தன.

- வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.