Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முருங்கையின் முத்தான நன்மைகள்

Featured Replies

இன்றைய தலைமுறை பச்சைக்காய்கறிகளை சாப்பிடுவதை பெரும்பாலும் தவிர்க்கின்றனர்.

 

உருளைக்கிழங்கு, பீட்ரூட் போன்ற கலர் காய்கறிகளில் செலுத்தும் ஆர்வத்தை பச்சை காய்கறிகளில் அவர்கள் காட்டுவதில்லை.

 

ஆனால் பீன்ஸ், அவரை போன்ற பச்சைக்காய்கறிகளில் தான் ஏராளமான சத்துக்கள் உள்ளது. அதுபோல் ஒரு பச்சைக்காய்கறி தான் முருங்கைக்காய்.

 

முருங்கையை “கற்பகத் தரு” என்றே சித்தர்கள் அழைக்கின்றனர். முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர். வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.

 

முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.

 

 

முருங்கையின் மகத்துவங்கள்

 

ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.

 

முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும்.

 

முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும்.

 

முருங்கை இலை காம்புகளை தனியாக காய்கறிகளுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும்.

 

முருங்கை பட்டை கட்டினால் வரும் வீக்கத்தை குறைக்கும்.

 

முருங்கை வேரை பாலுடன் சேர்த்து அருந்தினால் விக்கல், இரைப்பு, முதுகுவலி நீங்கும்.

 

நரம்பு தளர்ச்சிக்கு முருங்கை பூ ஒரு சிறந்த மருந்து.

 

முருங்கை காய் சூப் எடுத்துக்கொண்டால் இருமல் மற்றும் தொண்டை வலி, ஓய்வு ,நெஞ்சு நெரிசல் என எல்லாவற்றிற்கும் உதவுகிறது.

 

முருங்கைகாய் சாறு முகத்தில் தடவினால் முகம் பொலிவுபெறும்.

 

 

drumstick_002.jpg

 

 

முருங்கை கீரை சாம்பார்

 

 

முதலில் பருப்பை அலசி அத்துடன் வெள்ளை பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சீரகத்தூள், பாதி வெங்காயம் சேர்த்து குக்கரில் 3 விசிலுக்கு வைக்கவும்.

 

பின்னர் அதில் கத்தரியும், கீரையும் சேர்த்து ஒரு விசில் விட்டு உடனே திறந்துவிடவும்.

 

வாணலியில் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் தாளிக்கவும்.

 

பின் வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

 

பெருங்காயம், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.

 

அதனை பருப்பில் சேர்த்து தேவையான நீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு பின் இறக்கவும்.

 

 

பயன்கள்

 

இரத்தம் சுத்தமடையும்.

 

தாய்ப்பாலை ஊறவைக்கும்.

 

வயிற்றுப்புண்ணை ஆற்றும்.

 

அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும்.

 

 

drumstick_003.jpg

 

 

முருங்கை பூ கஷாயம்

 

முருங்கைப்பூவை நிழலில் காயவைத்து கொள்ளவும்.

 

பிறகு அதை பொடி செய்து கொள்ளவும்.

 

பின்னர் வாணலியில் நீரை விட்டு கொதிக்க வைத்து, அதில் பனைவெல்லம் சேர்த்தால் முருங்கை பூ கஷாயம் தயார்.

 

 

பயன்கள்

 

உடல் வலிமையடையும்.

 

விந்து கெட்டிப்படும்.

 

பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப்பை வலுவாகவும்.

 

பித்தம் குறையும்.

 

 

drumstick_004.jpg

 

 

http://tech.lankasri.com/view.php?222Q093c203PnBZc4e24UOlJacbeegAAbddec4MMW0bcddlOS0e4d5BnB32034r90o43

  • கருத்துக்கள உறவுகள்

முருங்கைக்காய் இப்போ சாப்பிட்டால், முந்தி இருந்த.... "எபெஃக்ட்" கிடைக்குதில்லை.
பாவியள்... அதிலும், கலப்படம் செய்கிறார்கள் போலுள்ளது.

முருங்கைக்காய் இப்போ சாப்பிட்டால், முந்தி இருந்த.... "எபெஃக்ட்" கிடைக்குதில்லை.

பாவியள்... அதிலும், கலப்படம் செய்கிறார்கள் போலுள்ளது.

 

அது... வயசும் ஒரு காரணம்!! :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முருங்கைக்காய் இப்போ சாப்பிட்டால், முந்தி இருந்த.... "எபெஃக்ட்" கிடைக்குதில்லை.

பாவியள்... அதிலும், கலப்படம் செய்கிறார்கள் போலுள்ளது.

 

டேய் குமாரசாமி நீ தனிய இல்லையடா.....உன்னை மாதிரி ஒரு கூட்டமே இருக்குதடா..... :D  :lol:

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

முருங்கையில் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டது...

முருங்கையில் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டது...

கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.

 
 
 
முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கைகீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய் இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
 
முருங்கைப் காய்
 
இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம். முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம்.
 
முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும். 
 
முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது.
 
கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து. முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம்.
 
முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம். முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது.
 
பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும். இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும். மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு.
 
முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும். முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும்.
 
இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், ஐயன், வைட்டமின் உள்ளது. கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். 
 
ஆஸ்துமா, மார்ச்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருங்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிருத்தி செய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.
 

 

 

 

 

 

  • 1 year later...

உலகத்தில் சில தாவரங்கள் மட்டுமே அவற்றின் ஒவ்வொரு பாகமும் பலன் தரக்கூடிய வகையில் படைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று முருங்கை. முருங்கை இன்று மிகவும் பிரபலமடைந்து வரும் ஒரு உணவுப்பொருள். இது பிரபலமடைய காரணம், இதில் உள்ள ஏராளமான சத்துக்கள் தான். இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை உள்ளன. இது சர்க்கரை நோய், இருதய நோய்கள், இரத்த சோகை, ஆர்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய், தோல் மற்றும் ஜீரண கோளாறுகளை போக்க கூடியது. முருங்கையின் 
காய்கள்கள், வேர்கள், பட்டை, மலர்கள், விதைகள் கூட சாப்பிட தகுந்ததாக உள்ளது. இந்த முருங்கை பொடி இன்று மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இது பல நாட்டுமருத்துவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முருங்கை என்பது வெறும் மரமல்ல; வீட்டிலேயே இருக்கும் வைத்தியர்.


 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.