Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழருக்கு ஆதரவான ஊர்வலத்தின்போது வைகோ கைது

Featured Replies

(வெள்ளிக்கிழமை) 17 நவம்பர் 2006, 20:31 ஈழம், (காவலூர் கவிதன்)

இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்ச இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் போராட்டமும் ஊர்வலமும் இடம்பெற்றது.

இலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள ராணுவத்தை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துh

தரகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ முன்னரே அறிவித்திருந்தார். இருப்பினும்இ

இதற்கு சென்னை போலீசார் அனுமதி வழங்கவில்லை.

வைகோ அறிவிப்பையடுத்து, இலங்கை தூதரகம் அமைந்துள்ள ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் துhதரகத்துக்கு வரும் அனைத்து வீதிகளிலும் இன்று போலீசார் குவிக்கப்பட்டனர். மயிலாப்பூர் லஸ் சந்திப்பிற்கருகிலுள்ள நாகேசுவரராவ் பூங்கா அருகேயிருந்து ஊர்வலமாக செல்ல ம.தி.மு.க.வினர் திட்டமிட்டிருந்தனர்.

இதனால் இன்று காலை 9 மணி முதல் நாகேசுவர ராவ் பூங்கா முன்பும் நுhற்றுக்கணக்கான போலீசார் நிறுத்தப்பட்டனர். அடிதடிப் பொலிசாரும், தண்ணீரை வீசியடித்து மக்களைக் கலைப்பதற்கான வஜ்ரா வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

நாகேசுவரராவ் பூங்கா அருகில் மக்கள் கூடினர். 10.30 மணியளவில், வைகோ அங்கு வந்ததும், அங்கு திரண்டிருந்த ம.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அவரது உரையில்:

தடையை மீறி போராட்டம் நடைபெறும். நாங்கள் துhதரகத்தினுள்ளே நுழையப் போவதில்லையே, துhதரகம் அருகே உள்ள வீதியில்தானே போராட்டம் நடத்த அனுமதி கேட்டோம். ஆனாலும் அரசு அனுமதி தரவில்லை என்றும் கூறினார்.

மத்திய அரசு இலங்கைக்கு அனுப்பும் உணவுப் பொருட்களை செஞ்சிலுவை சங்கம் மூலம் கொடுக்க வேண்டும். இலங்கை அரசிடம் கொடுத்தால் அது ராணுவத்தின் கைகளுக்கு சென்று விடும். தமிழர்களைக் கொன்று குவிக்கும் ரத்த கரங்களுடன் வரும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்குள் நுழையக்கூடாது, அவரை இந்தியாவுக்குள் அனுமதிக்கக்கூடாது.

அவர் வருவதை அறவழியில் நாங்கள் எதிர்ப்போம். அன்றைய தினம் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம். இலங்கை விமானப் படைக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது. இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

காலம் ஒருநாள் மாறும்; தமிழ் ஈழம் நிச்சயம் மலரும் என்று வைகோ உரையாற்றினார்.

பின்னர் தொண்டர்களுடன் இணைந்து போராட்டம் நடத்த ஊர்வலமாகப் புறப்பட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்களை அங்கிருந்து செல்ல போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. அங்கு வைத்து, வைகோ கைது செய்யப்பட்டார். அவருடன் ம.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் ஆயிரம் பேர்வரை கைது செய்யப்பட்டனர்.

அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட அனைவரும், மயிலாப்பூர் சாய்பாபா கோவில் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

வைகோவுடன் அவைத் தலைவர் எல்.கணேசன் எம்.பி., செஞ்சி ராமச்சந்திரன் எம்.பி., பொருளாளர் கண்ணப்பன் எம்.எல்.ஏ. கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துணைப் பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, நாசரேத் துரை, மாவட்ட செயலாளர்கள் ஜீவன், வேளச்சேரி மணி மாறன், சோமு, உட்பட ஏராளமானோர் கைதாகியுள்ளனர்.

நன்றி : புதினம்.கொம்

எது எப்படியோ விரைவில் மகிந்தன் கருணாநிதிக்கு தேசப்பிரேமி பட்டம் கொடுத்து கௌரவித்து வாழ்த்துச் செய்தி அனுப்பினாலும் அனுப்புவான் போல தெரியுது.

ஈழத்திலிருந்து

ஜானா :lol::(

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசை கண்டித்து ஊர்வலமாக செல்ல முயற்சி வைகோ கைது

இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்யும் இலங்கை அரசை கண்டித்து, தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட அக்கட்சியை சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மதிமுக சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டது. இதற்காக மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆழ்வார் பேட்டை டிடிகே சாலையில் உள்ள துணை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது.

சட்டம்ஒழுங்கு பராமரிப்பு, போக்குவரத்து ஆகியவற்றை காரணம் காட்டி போலீசார் இந்த ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்தனர். மாறாக அண்ணாசாலையில் உள்ள மன்றோ சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என போலீசார் யோசனை தெரிவித்தனர்.

ஆனால் போலீசாரின் யோசனையை ஏற்க மறுத்த மதிமுக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாகேஸ்வரராவ் பூங்காவிலிருந்து தடையை மீறி ஊர்வலம் புறப்படும் என அறிவித்தது. அதன்படி இன்று காலை 10.30 மணியளவில் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே மதிமுகவினர் திரண்டனர். கட்சியின் அவைத் தலைவர் எல்.கணேசன், துணை பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், பொருளாளர் கண்ணப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் அந்த இடத்தில் குவிந்தனர். 10.50 மணிக்கு அந்த இடத்திற்கு வைகோ வந்தார். அவர் வந்ததும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இலங்கை அரசுக்கு எதிராக மதிமுகவினர் கோஷமிட்டனர். பின்னர் அங்கு திரண்டிருந்த கட்சியினரிடையே வைகோ பேச முற்பட்டார். அப்போது அவர் பேசக் கூடாது என்று போலீசார் தடுத்தனர். இதனால் சிறிது நேரம் போலீசாருக்கும், வைகோவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்பு போலீசார் அமைதியாக இருந்து விட்டனர். அதன் பிறகு வைகோ பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: டெல்லியில் இலங்கை தூதரகம் அருகே வரும் 27ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரினோம். உலக நாடுகளின் தூதரகங்கள் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த டெல்லி போலீஸ் அனுமதி அளித்தது. ஆனால் சென்னையில் இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போக்குவரத்தை காரணம் காட்டி போலீஸ் மறுத்து விட்டது. அண்ணாசாலையில் அனுமதி தருகிறோம் என்று கூறுகிறார்கள். அங்கு நடத்தினால் போக்குவரத்து பாதிக்காதா?

எந்த சூழ்நிலையில் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் என்பதை பார்க்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு தமிழகத்திற்கு எதிர்ப்பை காட்ட கூடாதா? தமிழக சட்டசபையில் இலங்கை அரசை கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கண்டித்த இலங்கை அரசின் துணை தூதருக்கு எதிராக போராட்டம் நடத்துவது தவறா?

யாழ்ப்பாணம் சாலையை இலங்கை அரசு மூடி விட்டதால் தமிழர்கள் உண்ண உணவின்றி நோய்களுக்கு ஆளாகி அகதிகளாக உள்ளனர். அவர்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் யாழ் நெடுஞ்சாலையை திறந்து விட இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

செஞ்சோலை, வாகரை சம்பவங் களை கண்டித்து உலக நாடுகள் குரல் கொடுத்துள்ளன. ஆனால் இந்திய அரசு இந்த சம்பவங்களை கண்டிக்க முன்வரவில்லை. கடந்த ஆகஸ்ட் 30ந் தேதி டெல்லியில் நானும், எங்கள் கட்சி எம்.பி.க்களும் பிரதமரை சந்தித்து, ஈழத் தமிழர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலம் உணவு அனுப்ப வேண்டுமென்று வலியுறுத்தினோம். ஆனால் சில அதிகாரிகளின் தவறான யோசனையால் இலங்கை அரசுக்கு மத்திய அரசு கடல் வழியாக உணவுப் பொருட்களை அனுப்புகிறது.

இந்த உணவுப் பொருட்கள் தமிழர்களுக்கு பயன்படாது. இலங்கை துருப்புக்களுக்குத்தான் அது போய் சேரும். சுனாமியின் போது கூட உலக நாடுகள் வழங்கிய உணவுப் பொருட்களை இலங்கை அரசு தமிழர்களுக்கு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தில் ஒப்புக்கு சப்பாக தமிழக முதல்வர் அறிக்கை வெளி யிட்டு நாடகமாடுகிறார். அவரை தமிழர்கள் நம்ப மாட்டார்கள்.

இலங்கை தமிழர்கள் மீது குண்டு வீச அந்நாட்டு ராணுவத்துக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கதாகும். இந்த விஷயத்தில் மத்திய அரசு மீது பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம். இங்குள்ள தமிழர்கள் எரிமலையாக வெகுண்டு எழும் காலம் வெகு தொலைவில் இல்லை.

அதிமுக ஆட்சியின்போது கூட இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடத்த அனுமதி வழங்கப் பட்டது. ஆனால் இந்த ஆட்சியில் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. மதிமுக வன்முறை கட்சியல்ல. காவல் துறையினருக்கு இடையூறு செய்யாமல் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதை தடுத்து விட்டார்கள். காவலர்களின் குண்டாந் தடிகளையும், துப்பாக்கி களை கண்டு அஞ்ச மாட்டோம். இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வர கூடாது என்று டெல்லியில் அறவழி போராட்டம் நடத்தவிருக்கிறோம். தொப்புள் கொடி உறவுள்ள ஈழத்தமிழர்களுக்காக தடையை மீறி அறவழியில் ஊர்வலம் செல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

ஊர்வலம் செல்ல முயன்ற மதிமுகவினரை போலீசார் தடுத்து நிறுத்தி, அவர்களை கைது செய்து அங்கே குவிக்கப்பட்டிருந்த 25 வாகனங் களில் அவர்களை ஏற்றிச் சென்றனர். வைகோவும் மற்ற தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். மயிலாப்பூரில் உள்ள கற்பகம் திருமண மண்டபத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். மதிமுகவினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக மயிலாப்பூர் லஸ் பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

-மாலைச் சுடர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.