Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமாதானப் பேச்சு & தமிழர்கள் படுகொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கம் சமாதானப் பேச்சு - இன்னொரு பக்கம் தமிழர்கள் படுகொலை!

இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தகிடுதத்தம்!

முதல்வர் கலைஞர், பிரதமரிடம் வற்புறுத்தியதற் நற்பலன் கிடைத்துள்ளது

முதல்வர் டில்லி செல்லும்போது பிரதமரிடமும், சோனியாவிடமும் வற்புறுத்த வேண்டும்.

சிங்கள இராணுவத்திற்கு விமானப்பயிற்சி அளிப்பதை இந்தியா நிறுத்தவேண்டும்!

இப்பிரச்சினையில் அரசியல் வேண்டாம் - ஒன்றுபட்டுக் குரல் கொடுப்போம்

ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக தற்காலச் சூழல்களை எடுத்துக்காட்டி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

இலங்கையில் நடைபெற்றுவரும் ராஜபக்சே ஆட்சி ஓர் இரட்டை வேட ஆட்சி; அப்பட்டமான சிங்கள வெறித்தனத்தின் சிம்மாசனம்!

முழுக்க முழுக்க சிங்கள அடாவடித்தனத்தையும் அடக்கு முறையையும் கட்டவிழ்த்துவிட்டு, அப்பாவித் தமிழர்கள் - அவர்களின் பச்சிளம் குழந்தைகள், முதியோர்கள், பெண்கள், அகதிகள் ஆக எவராயினும் சரி, அவர்கள்மீது குண்டுமழை பொழியவும் தயங்கா கொடுமையின் கோரத்தாண்டவ ஆட்சியாகவே அது நடந்து வருகிறது!

ராஜபக்சேயின் இரட்டை வேடம்!

ஒரு கோட்டுக்குப் பக்கத்தில் மற்றொரு பெரிய கோட்டைப் போட்டு, பக்கத்தில் உள்ள முந்தைய கோட்டை சிறிய கோடு ஆக்குவதுபோல், ராஜபக்சே ஆட்சி, சந்திரிகா குமாரதுங்கே ஆட்சியைவிட மோசமாகிவிட்டது.

ஒருபுறம் சமாதானப் பேச்சு - வெளிநாட்டவர்கள் முன்னிலையில்; மறுபுறம் அதேநேரத்தில் தமது ஆளுமைக்கு உள்பட்ட தமிழ்ப் பெருமக்கள் வாழும் பகுதிகளில் குண்டுவீச்சு! ஒருபுறத்தில் வெளிநாட்டவருடன் பேச்சு; மறுபுறம் இந்திய அரசிடம் பசப்புப் பேச்சுகளும், தூதுகளும்! சர்வதேச அரங்கில் இதுவரை அவர்கள் நடத்திய தகிடுதத்தம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. UN அவையின் பொதுச்செயலாளர் கோபி அன்னான் முதல் இங்கிலாந்து நாட்டின் அரசு உள்பட இலங்கை அரசு இன ஒடுக்கல் - பழிவாங்கும் முறையை அடையாளம் கண்டு, அது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும் என்று கூறும் நிலை வெளிப்படையாக ஏற்பட்டது - ஒரு புதுத்திருப்பம் ஆகும்!

திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம்

உணவு இன்றி, பசியோடு போராடும் ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசு உணவுப் பொருள்களை அனுப்பிட வேண்டும் என்றும், கலைஞர் அரசும் இதுபற்றி மத்திய அரசின் - பிரதமரை வற்புறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். 12.11.2006 நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் இதை வலியுறுத்தியதோடு, செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அவ்வுதவிகள் செய்தால்தான் பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சென்றடையும் என்று வற்புறுத்தினோம். கலைஞரின் வற்புறுத்தலுக்கு நல்ல பலன்!

முதல்வர் கலைஞர் அவர்களும் இந்த உணர்வுடன் நீண்ட காலமாக ஒன்றிப் போனவர்; அந்த உணர்வுக்காகவே கடும் விலையாக தனது ஆட்சியை இழந்தவர் - இலட்சியப் பயணத்தில் இது இயற்கை என்று வீரத்துடனும், விவேகத்துடனும் முழங்கியவர். பிரதமருக்கு மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு அவர்கள்மூலம் சொல்லி அனுப்பியும், கடிதம் தந்தும் தமிழர்களின், தமிழ்நாட்டின், தமிழ்நாட்டு அரசின் கவலையையும், கடமைப் பொறுப்பையும் கலைஞர் அவர்கள் வற்புறுத்தியதற்கு நல்ல பலன் கிட்டியுள்ளது!

பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் ஆக்கபூர்வமான சில கருத்துகள், பதிலும் இடம்பெற் றுள்ளது வரவேற்கத் (அக்கடிதம் ஆறாம் பக்கத்தில் காண்க) தக்கது. தமிழ்நாட்டுக் கட்சிகளுக்கு ஒரே இலக்குதான்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சியினரும் இலங்கை அரசின் தமிழர் அழிப்புக் கண்டனத்தில் ஒருமித்து நிற்கிறார்கள்.

இப்பிரச்சினையில் அவரவர் எல்லையில் நின்று தனித்தனியே குரல் கொடுத்தாலும், அதன் ஒட்டுமொத்தக் கூட்டு ஒரே இலக்கை நோக்கித்தான் என்பதை இலங்கை அரசும், இந்திய அரசும் பார்க்கத் தவறிடக் கூடாது!

கட்சிகளும்இ காட்சிகளும் வெவ்வேறு என்றாலும், ஈழத் தமிழர் இன்னல் தடுப்பு என்ற அவர்தம் மீட்சியில் நாம் அனைவரும் ஓர் அணிதான்! டில்லி வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் மத்திய அரசு இம்முறை திட்டவட்டமாக வற்புறுத்திட வேண்டும்.

சிங்கள இராணுவத்துக்கு இந்தியா விமானப்படைப் பயிற்சி அளிப்பதா?

இன்னொரு முக்கியச் செய்தி. மீண்டும் சண்டிகரில் விமானப் படைப் பயிற்சியை இலங்கை இராணுவத்திற்கு இந்திய இராணுவம் தருகிறது என்ற செய்தி வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியது.

இதுபற்றி தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்பட்ட போதே, முதல்வர் கலைஞர் பதில் அளித்துள்ளார்; மீண்டும் அதே வேலையை மத்திய அரசு செய்வது இந்திய மண்ணில் செய்வது, எவ்வகையில் நியாயம்?

குண்டுவீச்சைத் தடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறிஇ அரசியல் பிரச்சினையை இராணுவ நடவடிக்கையால் தீர்க்க முடியாது என்று பிரதமர் கூறிக்கொண்டே இலங்கை இராணுவ விமானப் படைக்குப் பயிற்சி தருகிறது இந்திய அரசு என்றால், உலகத்தார் இதுபற்றி என்ன நினைப்பார்கள்? பிரதமரைச் சுற்றியுள்ள அதிகார வர்க்கம்!

பிரதமரைச் சுற்றியுள்ள ஓர் அதிகார வர்க்கத்தின் அணுகு முறையும், போக்கும் கொஞ்சமும் இப்பிரச்சினையில் மாறவே இல்லை என்பதைத்தானே இது காட்டுகிறது?

தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இசைவு இன்றி, இப்படிப்பட்ட செயல்கள் நடைபெறுவது விரும்பத்தக்கதா என்றும், மத்திய அரசும், பிரதமரும் சிந்திக்கவேண்டும்.

இம்மாதம் 29 ஆம் தேதி டில்லி செல்லும் நம் முதல்வர் அவர்கள், முல்லை பெரியாறு அணை சம்பந்தமாகப் பேசுவதற்காகச் செல்கிறார் என்றாலும், திருமதி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரிடம் ஈழத்தமிழர் படுகொலை தடுப்புப் பற்றியும் பேசி ஒரு நல்ல விளைவை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று உரிமையுடனும், உணர்வு காரணமாகவும் கேட்டுக்கொள்கிறோம். அரசியலாக்க வேண்டாம்!

இதற்கிடையில் ஈழத்தமிழர்களுக்கான போராட்டம் பல்வேறு முனைகளில் நடத்த முன்வரும் அனைத்துக் கட்சிகளும் இதில் அரசியல் தூண்டிலைத் தூக்காமலிருப்பதும் முக்கிய கடமை என்பதை அந்தச் சகோதரர்களுக்கும், உரிமையுடன் தெரிவித்துக் கொள்வது நமது கடமையாகும்.

கி. வீரமணி - தலைவர்

திராவிடர் கழகம்.

-விடுதலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.