Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவுப்பொருள்களை அனுப்புங்கள் -ஜெயலலிதா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சிலுவை ஊடாகவே இலங்கைக்கு

உணவுப்பொருள்களை அனுப்புங்கள்

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை

இலங்கைத் தமிழருக்கு தேவையான உணவுப்பொருள்கள் மற்றும் மருந்துப்பொருள்கள் இலங்கை அரசு மூலம் அனுப்பாமல் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் வழங்கவேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள் ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னை இலங்கைத் துணைத் தூதரகம் முன் போராட்டம் நடத்த, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. அரசிடம் அனுமதி கேட்டும் அதைத் தராமல் மறுத் ததும் வைகோவைக் கைது செய்ததும் கண்டனத்துக்குரியது.

இதுபோன்ற மக்கள் நலனுக்கான போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் முக்கிய ஜனநாயகக் கடமைகளாகும். இது போன்ற போராட்டங்களுக்கு எனது ஆட்சியில் முறையாக அனுமதி தரப்பட்டது.

ஆனால், இப்போதைய தி.மு.க. அரசு அனுமதி வழங்க மறுத்து மக்கள் விரோத செயலில் ஈடுபட்டுள்ளது.

தற்போது மத்திய அரசு இலங்கையில் அவதிப்படும் தமிழர்களுக்கு உணவுப் பொருள்களை அனுப்புவதாக அறி வித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் இலங்கை அரசின் மூலமாக இத்தகைய உதவிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களைச் சென்றடையும் என்பது கேள்விக்குரியதாகும்.

எனவே, இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்து களை இலங்கை அரசு மூலம் வழங்காமல் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப வேண் டும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

-உதயன்

இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு இல்லையேல்

மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம்

தமிழக அமைப்புக்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்துவோம் என தமிழ கத்தில் உள்ள அமைப்புகளின் கூட்ட மைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் அமைப்புகள் கூட்டமைப்பின் அவசரக் கூட்டம் தலைவர் புலவர் கு. பச்சைமால் தலைமையில் நடைபெற்றது.

டாக்டர் அல்போன்ஸ் டானியல், அரிமா ரவீந்திரன், புலவர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் புலவர் கு.பச்சைமால் பேசுகையில் கூறியதாவது:

இலங்கையில் தமிழர் கிராமங்கள், குழந்தைகள் காப்பம், அகதிகள் முகாம், கோவில்களில் இலங்கை இராணுவம் குண்டு வீசி வருகிறது. இதனை தமிழ் கூட்டமைப்பு சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இலங்கையின் மனிதாபிமானம் இல்லாத இந்தச் செயல்களை சர்வதேச சமூகம் கண்டித்து வரும் வேளையில் இந்திய அரசு மௌனம் சாதித்துக்கொண்டிருப்பது வேதனைக்குரியது.

இலங்கையில் துயரத்துக்குள்ளாகி இருப்பது தமிழர்களாக இல்லாமல் வங்காளிகளாகவோ,பஞ்சாபியராகவோ அல்லது ஆந்திரர்களாகவோ இருந்திருந்தால் மத்திய அரசு இப்பிரச்சினையை எப்போதே தீர்த்திருக்கும். தமிழ் மக்கள் இதனை உணரவேண் டும். அனைத்துக் கட்சிகளும் அமைப் புக்களும் இலங்கை அரசை கண்டிக்க வேண்டும்.

இலங்கையில் தமிழ் சமூகத்தை வேரோடு அழிக்கும் நடவடிக்கையில் சிங்கள அரசு ஈடுபட்டுள்ளது. சிங்களத் தலைவர்களும் அமைச்சர்களும்இந்தியாவுக்கு வருவதெல்லாம் இந்தியாவின் நாடி பிடித்துப் பார்பதற்கும் நல உதவிகள் பெறுவதற்குமே ஆகும். தமிழ் பிரதிநிதிகளை இந்திய அரசு ஏறிட்டு பார்ப்பதில்லை. ஈழத் தமிழர் பிரச்சினை யைத் தீர்த்து வைக்கும் கடமையும் வாய்ப்பும் சக்தியும் இந்தியாவுக்கு உள் ளது. பலநாட்டுத் தலைவர்களும் இதனை வெளிப்படையாகக் கூறிவிட்டனர்.

ராஜபக்ஷவின் வருகையோடு இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண இந்திய அரசு வகை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசை கண்டித்து தமிழகமே கொந்தளிக்கும். மத்திய அரசு அலுவலகங்களின் முன் தமிழ் கூட்டமைப்பு அறப் போராட்டங்களில் ஈடுபடும் என்றார் அவர்.

டாக்டர் சிதம்பர நடராசன், சுகுமாரன், ஆதிலிங்கம், விசுவதிலகம் ஆகியோரும் பேசினர்.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.