Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இதற்காகவா நீ பெற்றாய்.....????

Featured Replies

இதற்காகவா நீ பெற்றாய்.....????

பெண்ணவளை

தெய்வமாக

போற்றும் இந்த

உலகினிலே...

பெண்ணே

உன்னை

கேவலமாய்

வந்தொருவன்

இழிக்கின்றானே.....

படுக்கையதை

நீ விரித்து

பத்து மாதம்

சுமந்து பெற்றாய்....

அடி

உன்னை

வந்து இன்றவனே

ஊனமதாய்

இழிக்கின்றானே....

கண்ணயரா

நீ அன்று

கண்மணி போல்

காத்தவனை

பெற்றெடுத்த

பெருந்தகையே....

உன்னையின்று

இழிக்கின்றானே

உன் மனசில்

உதைகின்றானே....

இத்தனையும்

கேட்டிடவா

இன்றவனை

நீ பெற்றாய்....???

-வன்னி மைந்தன் -

இன்று பிறந்த பிள்ளை எப்படி இவ்வளவையும் செய்யும்?

  • தொடங்கியவர்

இது தான் உங்கள் விளங்குதல் இதற்குள்

விமர்சனம் வேறு எங்கே போய் என் தலையை மோத...???

"இத்தனையும்

கேட்டிடவா

இன்றவனை

நீ பெற்றாய்"

இத்தனையும் கேட்பதற்கா இன்று அவனை நீ பெற்றாய்" என்பதுதானே இதனுடைய அர்த்தம்?

  • தொடங்கியவர்

இத்தனையும்

கேட்டிடவா

இன்றவனை

நீ பெற்றாய்"

இத்தனையும் கேட்பதற்கா இன்று அவனை நீ பெற்றாய்" என்பதுதானே இதனுடைய அர்த்தம்?

''இன்றவனை'' நிகழ்காலத்தில் நடப்பவையை வைத்தே..

அது இரு பொருளை கொண்ட சொல் அதை கவனத்தில் கொள்ளுங்கள் தோழரே...

இன்றவனை நீ பெற்றாய்"

இந்த வசனத்தில் உள்ள இரண்டு பொருட்களையும் விளக்குங்கள்!

அன்றவனை நீ பெற்றாய்" என்று எழுதி இருந்தால் சரியாக இருந்திருக்கும்.

அனால் வேறு ஏதோ பொருள் தரும் என்கிறீர்கள்.

தயவு செய்து அதை உதாரணங்களுடன் விளக்குங்கள்.

  • தொடங்கியவர்

உங்கள் பாணியில் உங்களுக்கே சொல்கிறேன் அதற்குள்ளேயே விடை இருக்கிறது....

இப்படித்தானே தாங்கள் வழமையாக சொல்லி இருந்தீர்கள் அதே போல் இதுவும்...

உன்னையின்று

இழிக்கின்றானே

உன் மனசில்

உதைகின்றானே....

எல்லா பிள்ளைகளும் அப்படியல்ல தானே மைந்தனே. இருப்பினும் யதார்த்தத்தை வடித்திருக்கிறீங்க.

வெண்ணிலா! எல்லாப் பிள்ளைகளும் அப்படி அல்ல என்று சொல்கிறீhகள்.

அப்படி என்றால் சில பிள்ளைகள் அப்படியா அல்லது பல பிள்ளைகள் அப்படியா?

  • கருத்துக்கள உறவுகள்

இன்றவனை நீ பெற்றாய்"

இந்த வசனத்தில் உள்ள இரண்டு பொருட்களையும் விளக்குங்கள்!

அன்றவனை நீ பெற்றாய்" என்று எழுதி இருந்தால் சரியாக இருந்திருக்கும்.

அனால் வேறு ஏதோ பொருள் தரும் என்கிறீர்கள்.

தயவு செய்து அதை உதாரணங்களுடன் விளக்குங்கள்.

நீங்கள் சீண்டு முடியவென்றே கருத்தெழுதுகிறீர்களா சபேசன்..ஏனென்றால்..

இன்றைய உலகில் என்றால் இன்று ( அதாவது இன்று ஒரு நாள் உள்ள உலகென்றா அர்த்தம் கொள்வீர்கள்) நிகழ்கால உலகு என்றுதானே..அப்படித்தான்...அதுவ

ஐயகோ!

"இன்று" என்ற சொல்லும் "இன்றைய" என்று சொல்லும் ஒரு பொருளையா தருகின்றன?

"எல்லோரும் வன்னிமைந்தன் மீது விமர்சனம் வைக்கின்றார்களே, நாமாவது ஆதரவாகப் பேசுவோம்" என்ற உங்களுடைய நல்ல எண்ணம் போற்றத்தக்கது.

அதற்காக தவறு ஒன்றை சரி என்று சொல்லி மற்றவர்களுக்கும் தவறான வழிகாட்டலை செய்யாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயகோ!

"இன்று" என்ற சொல்லும் "இன்றைய" என்று சொல்லும் ஒரு பொருளையா தருகின்றன?

"எல்லோரும் வன்னிமைந்தன் மீது விமர்சனம் வைக்கின்றார்களே, நாமாவது ஆதரவாகப் பேசுவோம்" என்ற உங்களுடைய நல்ல எண்ணம் போற்றத்தக்கது.

அதற்காக தவறு ஒன்றை சரி என்று சொல்லி மற்றவர்களுக்கும் தவறான வழிகாட்டலை செய்யாதீர்கள்.

நீங்கள் சப்போட் கிப்போட் என்று கூப்பாடு போடுவதை நிறுத்தி விட்டு வந்த விடயத்தைக் கவனியுங்கள். இது வன்னி மைந்தனுக்கு மட்டுமான பிரச்சனையல்ல தமிழ் பேசும் அனைவருக்குமான பிரச்சனை.

அன்று ஈழத்தமிழர்களின் மீது இரக்கம் காட்டிய உலகு இன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறது.

அன்றைய நிலையில் ஈழத்தமிழர் மீது இரக்கம் காட்டிய உலகு இன்றைய நிலையில் நீலிக்கண்ணீர் வடிக்கிறது

இந்த இரண்டிலும் நீங்கள் உணர்ந்த பொருள் வேற்றுமை என்ன..?! அன்று இன்று..என்பவை அன்று ஒரு பொழுதிலும் இன்று என்பது இன்றைய நாளின் ஒரு பொழுதிலுமா...??! தமிழ் படித்தீர்கள் தானே தமிழில் எழுதுவதற்கு முதல். :rolleyes:

அன்று - இறந்த காலத்தையும்.. இன்று - நிகழ்காலத்தையும் சுட்டி நிற்கின்றன. அன்றைய இன்றைய எச்சங்களாகி நிற்கின்றன.

Edited by nedukkalapoovan

உங்களுடைய உதாரணங்களில் இருந்தே வன்னிமைந்தன் விட்ட தவறு உங்களுக்கு புரிந்திருக்கும்.

இன்றைய" என்ற சொல்லோடு "நிலை" என்ற சொல் சேருகின்ற பொழுதுதான் "இன்று" என்ற அர்த்தம் வருகிறது.

நீங்கள் சொன்ன உதாரணத்திற்கு வருவோம்.

1.இன்று உலகம் நீலிக்கண்ணீர் வடிக்கிறது

இது சரி! இதைப் படிக்கின்ற பொழுது என்ன விளங்குகிறஹது?

அன்று உலகம் எம்மை கண்டும் காணமல் இருந்தது என்று விளங்குகிறது.

1. இன்று எமக்கு விடுதலை கிடைத்தது

இதன் மூலம் அன்று நாம் அடிமைகளாக இருந்தோம் என்ற விளங்குகிறது.

1. இன்று வன்னிமைந்தன் நன்றாக கவிதை எழுதுகிறார்

2. இன்று வன்னிமைந்தன் நன்றாக கவிதை எழுதினார்

இந்த இரண்டிலும் வருகிற "இன்று" என்பது வேறுவேறு அர்த்தங்களை கொடுக்கிறது.

முதலாவது வசனத்தின் மூலம் "முன்பு வன்னிமைந்தன் நன்றாக கவிதை எழுதவில்லை என்றும், தற்பொழுது அவர் நன்றாக கவிதை எழுதுகிறார்" என்பதும் புரிகிறது.

இரண்டாவது வசனத்தின் மூலம் "இன்றைக்கு அவர் நன்றாக கவிதை எழுதினார்" என்பது மட்டும்தான் தெரிகிறது. அவர் நேற்றைக்கும் நன்றாக கவிதை எழுதி இருக்கக்கூடும்.

ஆகவே சில இடங்களில் பயனிலையின் காலம் மாறுகின்ற பொழுதே அர்த்தங்கள் மாறி விடுகின்றன என்பதையும் கவனியுங்கள்.

ஆகவே "இன்று" என்பதை முழுமையான வசனத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும்.

"இன்று" என்பது "இன்றைய காலகட்டத்தை" குறிக்கின்ற பொழுது, "அன்று" என்பதன் அர்த்தமும் புரிய வேண்டும்.

அவ்வாறான அர்த்தத்தில் "இன்று" என்று சொல் அமையவில்லை என்றால், "இன்று" என்பது "இன்றைய காலகட்டத்தை" குறிக்காது.

இப்பொழுது வன்னிமைந்தனின் வசனத்திற்கு வருவோம்.

இன்று இவனை நீ பெற்றாய்.

இன்று இவனை பெற்றவள் அன்று என்ன செய்தாள்?

  • தொடங்கியவர்

இன்றவனை பெற்றவள்..அன்று செல்வியாக இருந்தாள்.....இது கூட விளங்காத...நீங்கள்........எல்லாம்...

..???? :blink::(:(:(

இந்த விளக்கத்தை உண்மையிலேயே நீங்கள் நகைச்சுவையாக சொல்லி இருப்பீர்கள் என்று நம்பி நானும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய உதாரணங்களில் இருந்தே வன்னிமைந்தன் விட்ட தவறு உங்களுக்கு புரிந்திருக்கும்.

இன்றைய" என்ற சொல்லோடு "நிலை" என்ற சொல் சேருகின்ற பொழுதுதான் "இன்று" என்ற அர்த்தம் வருகிறது.

நீங்கள் சொன்ன உதாரணத்திற்கு வருவோம்.

1.இன்று உலகம் நீலிக்கண்ணீர் வடிக்கிறது

இது சரி! இதைப் படிக்கின்ற பொழுது என்ன விளங்குகிறஹது?

அன்று உலகம் எம்மை கண்டும் காணமல் இருந்தது என்று விளங்குகிறது.

1. இன்று எமக்கு விடுதலை கிடைத்தது

இதன் மூலம் அன்று நாம் அடிமைகளாக இருந்தோம் என்ற விளங்குகிறது.

1. இன்று வன்னிமைந்தன் நன்றாக கவிதை எழுதுகிறார்

2. இன்று வன்னிமைந்தன் நன்றாக கவிதை எழுதினார்

இந்த இரண்டிலும் வருகிற "இன்று" என்பது வேறுவேறு அர்த்தங்களை கொடுக்கிறது.

முதலாவது வசனத்தின் மூலம் "முன்பு வன்னிமைந்தன் நன்றாக கவிதை எழுதவில்லை என்றும், தற்பொழுது அவர் நன்றாக கவிதை எழுதுகிறார்" என்பதும் புரிகிறது.

இரண்டாவது வசனத்தின் மூலம் "இன்றைக்கு அவர் நன்றாக கவிதை எழுதினார்" என்பது மட்டும்தான் தெரிகிறது. அவர் நேற்றைக்கும் நன்றாக கவிதை எழுதி இருக்கக்கூடும்.

ஆகவே சில இடங்களில் பயனிலையின் காலம் மாறுகின்ற பொழுதே அர்த்தங்கள் மாறி விடுகின்றன என்பதையும் கவனியுங்கள்.

ஆகவே "இன்று" என்பதை முழுமையான வசனத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும்.

"இன்று" என்பது "இன்றைய காலகட்டத்தை" குறிக்கின்ற பொழுது, "அன்று" என்பதன் அர்த்தமும் புரிய வேண்டும்.

அவ்வாறான அர்த்தத்தில் "இன்று" என்று சொல் அமையவில்லை என்றால், "இன்று" என்பது "இன்றைய காலகட்டத்தை" குறிக்காது.

இப்பொழுது வன்னிமைந்தனின் வசனத்திற்கு வருவோம்.

இன்று இவனை நீ பெற்றாய்.

இன்று இவனை பெற்றவள் அன்று என்ன செய்தாள்?

கவிதை எழுதியவரே என்ன அர்த்ததில் எழுதினேன் என்ற பின்னர் நீங்கள் இல்லை இப்படித்தான் எழுதினார் என்றால் உங்களோடு சின்னப்பிள்ளைகள் போல அடம்பிடித்துக் கொண்டிருக்க முடியாது.

வன்னி மைந்தன் இவர்களின் இப்படியான விளங்கா நிலை விமர்சனங்களைத் தவிர்த்துக் கொண்டு நீங்கள் தொடருங்கள்.

  • தொடங்கியவர்

அப்படியே ஆகட்டும் நெடுக்கால.போவான்...இவர்களின் நஞ்சு புத்தி அம்பலம் ஆகிவிட்டது அதுவே போதும்...

வன்னிமைந்தனுக்கு தன்னுடைய தவறுகள் விளங்கினாலும், அவர் திருந்தக் கூடாது என்பதில் நெடுக்காலபோவான் குறியாக இருக்கிறார் போல் தெரிகிறது.

உங்களுக்கு வன்னிமைந்தன் மீது அப்படி என்ன கோபம்?

நானும் வன்னிமைந்தனை தொடர்ந்து எழுதத் சொல்கிறேன். கடைசி இரண்டு நாட்களாக கவனிக்கிறேன். வன்னிமைந்தனிடம் முன்னேற்றம் தெரிகிறது.

சொற்கள் திணிக்கப்படவில்லை. சொற்கள் முறிக்கப்படவில்லை.

இப்படி நல்ல கவிதைகளை வன்னிமைந்தன் தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

ஆனால் நீங்கள் அவரை திருந்த விட மாட்டீர்கள் போல் இருக்கிறதே?

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிமைந்தனுக்கு தன்னுடைய தவறுகள் விளங்கினாலும், அவர் திருந்தக் கூடாது என்பதில் நெடுக்காலபோவான் குறியாக இருக்கிறார் போல் தெரிகிறது.

உங்களுக்கு வன்னிமைந்தன் மீது அப்படி என்ன கோபம்?

நானும் வன்னிமைந்தனை தொடர்ந்து எழுதத் சொல்கிறேன். கடைசி இரண்டு நாட்களாக கவனிக்கிறேன். வன்னிமைந்தனிடம் முன்னேற்றம் தெரிகிறது.

சொற்கள் திணிக்கப்படவில்லை. சொற்கள் முறிக்கப்படவில்லை.

இப்படி நல்ல கவிதைகளை வன்னிமைந்தன் தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

ஆனால் நீங்கள் அவரை திருந்த விட மாட்டீர்கள் போல் இருக்கிறதே?

நன்றி உங்கள் நோக்கத்தை எழுதியதற்கு. வன்னி மைந்தன் இப்போது உங்களுக்கு மேலும் தெளிவாகி இருக்கும்.

தொடர்ந்து ஜமாய்ங்கோ வன்னி மைந்தன். :P

  • தொடங்கியவர்

கருத்தாடி வந்திங்கு

வாதமிட்டோர்

கூடவே வந்திங்கு

வாழ்திட்டடோர்

அணைவருக்கும்

மீண்டும் எனது நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.