Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்ட TCC உறுப்பினர் : விசித்திர வழக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்ட TCC உறுப்பினர் : விசித்திர வழக்கு

05/04/2015

நெதர்லாந்தில் ஹேக் நீதிமன்றத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பும் அதனைத் தொடர்ந்து குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவர் வழங்கிய வாக்குமூலமும் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக மக்களிடம் பணம் திரட்டியவர்கள் என்ற குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேரின் மேன் முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.

இதுவரை நெதர்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்கள்

வெளிப்படையாகவே செயற்பட்டு வந்தனர். அலுவலகங்களை நடத்தி வந்தனர். கடந்த 30 ஆம் திகதி வெளியான தீர்ப்பு திடீர் மாற்றம் ஒன்றைக் காட்டுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகத் தீர்பில் கூறிய ஹேக் நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேரையும் புலிகளின் உறுப்பினர்களாக அடையாளப்படுத்தியது.

சட்டவிரோத அமைப்பான புலிகளுக்குப் பணம் வழங்குமாறு நெதர்லாந்தில் வாழும் தமிழர்களை மிரட்டியதால் ஐந்துபேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. மூன்று வருடங்களின் பின்னர் மேன் முறையீடு வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் இத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பின்னரும் புலிகள் சார்பாகச் செயற்பட்டதால் செயற்பட்டதைக் கருத்தில் கொண்டு தண்டனை வழங்கப்படுவதாகத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமச்சந்திரன் செல்லையா என்பவருக்கு 6 வருடங்கள் 3 மாதங்களும், ரங்கன் ராமலிங்கம் என்பவருக்கு 4 வருடங்கள் 11 மாதங்களும், ஈஸ்வரன் திருநாவுக்கரசு என்பவருக்கு 2 வருடங்கள் 8 மாதங்களும். ஜேசுரட்ணம் எபவருக்கு 2 வருடங்கள் 3 மாதங்களும், லிங்கம் தம்பையா என்பவருக்கு 19 மாதங்களும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

ரங்கன் ராமலிங்கம் என்பவர் நீதிபதிகளிடம் குறிப்பிட்ட விடையங்கள் மேலும் பல சந்தேகங்களை வலுப்படுத்துகின்றன.

அவர் முன்னர் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை வழங்கியதாகவும், இப்போது உண்மை கூற விரும்புவதாகவும் கூறினார். தொடர்ந்த அவர் தான் தமிழீழ விடுதலைப் புலிகளால் பயிற்றுவிக்கப்பட்டதாகவும் பயிற்சியை முடித்துக்கொண்ட பின்னர் திரு.மணிவண்ணன் அல்லது கஸ்ரோ என்பவரால் நெதர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறினார். நெதர்லாந்தில் புலிகளின் அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கிய பதவியை வகித்ததாகவும் கூறிய அவர், ராமச்சந்திரன் செல்லையா சர்வதேச ஒருங்கிணைப்பாளர் என்று கூறினார். அதேவேளை தான் ஐரோப்பாவில் சேகரிக்கப்படும் பணத்திற்குப் பொறுப்பானவர் என்று கூறி, இளவரசன் திருநாவுக்கரசு தனது உதவியாளர் என்றும் குறிப்பிட்டார்.

தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் அவர் இவ்வாறு கூறியுள்ளமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஐரோப்பிய நாடுகளில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறது. இந்தவகையில் அந்த அமைப்புச் சார்ப்பான நடவடிக்கைகள் சடவிரோதமானவை அல்ல என இவர்கள் வாதிட்டிருக்கலாம் எனினும் அதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. மில்லியன்களை மக்களிடமிருந்து சுருட்டிக்கொண்டவர்கள் அதனைப் பாதுகாப்பதற்காக குறுக்கு வழிகளை நாடுவதாகவே தோன்றுகிறது. இனிவரும் காலங்களில் விடுதலைக்காகப் போராடிய அப்பாவிகளை இவர்கள் காட்டிக்கொடுப்பார்களோ என்ற அச்சமும் எழாமலில்லை.

ராஜபக்சக்களை உருவாக்கிய ஏகாதிபத்திய நாடுகள் தேவை அற்றுப்போன போது சிரிசேனவை ஆட்சியிலமர்த்தின. இன்று அமெரிக்க அரசு இலங்கை அரசுடன் தேனிலவு கொண்டாடுகிறது. புதிய அரசுடன் பேசி தமிழர்கள் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. இந்த நிலையில் தாமே உருவாக்கிய புலம்பெயர் அமைப்புக்களை அழிப்பதற்கு ஏகாதிபத்தியங்களும் இலங்கை அரசும் முனையலாம்.

இந்த நிலையில் ரங்கன் ராமலிங்கம் கூறிய விடையங்கள் ஐரோப்பிய நாடுகள் முழுவதுமுள்ள ரீசி.சி கிளைகள் மீது நடவடிக்கையெடுப்பதற்கு ஐரோப்பிய அரசுகளுக்கு வாய்பைக் கொடுக்கும். இதனால் இலங்கை அரசிடமோ அல்லது ஐரோப்பிய நாடுகளிடமோ சலுகைகளைப் பெற்றுக்கொண்டு ரங்கன் இவ்வாறு குறியிருக்கலாம்.

தவிர, தண்டனை உறுதியானதும், ஐரோப்பிய நாடுகளில் மக்களின் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் ஒருவர் ரங்கன் ராமலிங்கத்தோடு ஒரு உடன்பாட்டிற்கு வந்து அவரை இவ்வாறு கூறுமாறு நிர்பந்தித்திருக்கலாம்.

எது எவ்வாறாயினும், மக்களின் பணம் அவர்களிடமே திரும்ப வழங்கப்படுவதும், போராளிகளைப் பாதுகாப்பதும் இன்று அவசியமானது.

http://inioru.com/46061/%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இயக்கத்தின் பணச் சேர்ப்பிக்குப் பொறுப்பாக இருந்தவர் ஏனையோரைக் காட்டிக்கொடுத்தார்

05/07/2015 இனியொரு

‘தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்ட TCC உறுப்பினர் : விசித்திர வழக்கு‘ என்ற செய்தி இனியொருவில் வெளியானது தெரிந்ததே. இதன் தவறான பக்கங்களைச் சுட்டிக்காட்டி நெதர்லந்த்லிருந்து வியாசன் கூறும் சரியான தகவல்கள் கீழே(ஈழப் போராட்டத்தை முன்வைத்து மில்லியேனாரான பலர் இன்று காட்டிக்கொடுப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை மகள் முன் கொண்டுவரும் ஒரு பகுதியாக இனியொருவில் பல்வேறு தகவல்களும் கட்டுரைகளும் வெளியாகின. அவை தொடர்பான ஏனைய விமர்சங்கள் வரவேற்கப்படுகின்றன.):

செய்தியில் சிறு பிழை இருப்பதாக அறிய முடிகிறது. ஏனெனில் இந்த 5 பேருக்கும் 21.10.2011 அன்று தீர்ப்பு வழங்க பட்டு விட்டது. அந்த தீர்ப்பின்படி திரு ராமச்சந்திரன் செல்லையாவிற்கு 6 வருடம், றங்கன்ராமலிங்கத்திற்கு 5 வருடம்,இளவரசன் திருநாவுக்கரசுவிற்கு 3 வருடம், மனோ ஜேசுரட்னத்திற்கு 2 வருடம் 6மாதமும்,லிங்கம் தம்பையாவுக்கு 2வருடமும் தீர்ப்பளிகபட்ட்டது. இவர்கள் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடுசெய்தார்கள். மேல்முறையீடு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பே 30-04-2015 வெளியாகியது

இதில் மூவர் நன்நடத்தை காரணமாக தண்டனை காலத்துக்கு முன் விடுதலையானார்கள். நாலாமரான திரு ரஙகன் விடுதலைக்காக தண்டனை முடிந்து விடுதலைக்காக நீதிமன்றம் கொண்டுவரப் பட்ட போது ,தான் முன்னர்கூறியவை உண்மை இல்லை என்றும் இப்போது உண்மை கூற உள்ளேன் என்று கூறி அதற்கு ஒரு நாள் தரும்படி கேட்டுக்கொண்டார்.

அதன் படி நீதிமன்றம் அவரின் முறைப்பாட்டை பதிவு செய்தது, அதில் தான் விடுதலைப்புலி உறுப்பினர் என்றும் தான்ஆயுதப்பகிர்ச்சி எடுத்ததாகவும் தான் இலங்கையில் இருந்து திரு மணிவண்ணன் (கஸ்ரோ) அவர்களால் இங்குஅனுப்பப்பட்டதாகவும் இங்குள்ள புலிஅமைப்பின் ரி.சி.சி செயற்பாட்டை பொறுப்பு ஏற்றதாகவும், ரி.சி.சி இலங்கையில் உள்ள அனைத்துலக செயலகத்துக்கு கீழ் தான் செயல்படுவதாகவும் கூறினர். இதன் காரணமாக வழக்கு வேறுஒரு திசைக்கு திரும்பியது. ரங்கனை தவிர மற்ற 4 வரும் தாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என ஒத்துக்கொள்ளவில்லை.

சிலர் ரங்கனை கேட்டார்கள் ஏன் இப்படி சொன்னிர்களேன்று அதற்கு அவர் இப்படி சொன்னால் அரசாங்கம் தம் (புலி) தடையை நீக்கி சுதந்திரமாக செயல்பட விடுவதாக சொன்னார்கள் அதனால் தான் அப்படிசொன்னேன் என்றார். தண்டனை முடிந்தபின் இப்படி சொல்வதன் காரணம் இவர் யாரோ சொல்லிகொடுத்ததை சொல்லியுள்ளார். இலங்கை அரசு புலிகளை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதற்கு அனைத்து வழிகளிலும் முயற்ச்சி செய்தது. அதனை திரு ரங்கன் மிக சிறந்த முறையில் நிறைவேற்றியுள்ளார். மேலும் பயங்கரவாதிகள் என்ற முத்திரை மட்டுமல்ல மேலும் பணம் சேர்த்தவர்கள் 9 பேர் வழக்கு இன்னும் தீர்க்கப் படவில்லை அவர்களது நிலமை பாதிக்கப்படலாம்.

http://inioru.com/46118/tcc-netherlands/

தீர்ப்பு முடிஞ்சுது .ஆனால் இங்கே குறிப்பிட்ட பதிவு பற்றி சில நாட்களின் பின் மிக விபரமாக எழுதுவேன் ........இந்தப்பதிவில் குறிப்பிட்டபடி எப்போதோ முடிய வேண்டிய வழக்கு இழுபட்டதற்கு இந்த நபரும் ஒரு காரணமே ..........ஆனாலும் அதை துரோகம் என்று பார்ப்பதா மல்லது உண்மை என்று பார்ப்பதா அதற்குரிய நேரமும் காலமும் இன்னும் அமையவில்லை .......
 
என் அறிவுக்கு எட்டியவரை ..நீதிபதிகள் இலங்கை அரசின் தலையீட்டில் இருந்து இந்த வழக்கை வெற்றி கரமாக நகர்த்தினார்கள் என்பதே ..........ஆனாலும் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெஉப்பொருல் காண்பது அறிவு .விரைவில் உண்மை எழுதுவான் தமிழ்சூரியன் 
  • கருத்துக்கள உறவுகள்

வெக்கப்பட்டு வராமலுக்கு நிக்கினை போல கிடக்கு! :D

Edited by வாலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.