Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்ற வார நிகழ்ச்சிகள் & உரிமைப் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வார நிகழ்ச்சிகள் சிலவும், தமிழர் உரிமைப் போராட்ட முன்னெடுப்பும் -(பீஷ்மர்)

இலங்கையில் அரச ஊடகங்களும் சிங்கள ஊடகங்களும் பிராந்திய ஊடகங்களும் முனைப்புறுத்திக் கூற விரும்பாத மூன்று முக்கிய சம்பவங்கள் சென்றவாரம் நிகழ்ந்துள்ளன. இலங்கைத் தமிழர் உரிமைப் போராட்டம் பற்றிய இலங்கை நிலை, பிராந்திய நிலை முக்கியத்துவங்களை அவை எதிர்பாராத அழுத்தங்களையும் பரிமாணங்களையும் தந்துள்ளன.

முதலாவது, ரவிராஜின் கொலை பற்றிய கொழும்பில் நிகழ்ந்த பதிற்குறி. அரச சார்பற்ற நிறுவனமொன்றினது நிதிப் பலத்துடன் இலங்கையின் தீவிர இடதுசாரி சக்திகளான விக்கிரமபாகு கருணாரட்ண, ஸ்ரீ துங்க ஜயசூரிய, மேலக மக்கள் முன்னணியின் மனோ கணேசன் ஆகியோர் மிகவும் எதிர்பாராதளவுக்கு மிகப் பெரிய ஊர்வலமொன்றை நடத்தினர். அதற்கு ரவிராஜின் பூதவுடலும் கொண்டு செல்லப்பட்டது. அந்த ஊர்வலத்திலும் கூட்டத்திலும் ஏறத்தாழ 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள் என்றும் அதில் பாதித் தொகையினருக்கு மேல் சிங்கள மக்களே கலந்து கொண்டனர் என்பதும் இப்பொழுது தெளிவாகத் தெரிகிறது. அந்த வைபவத்திலே கலந்து கொண்ட இரண்டு பிரதான சிங்கள ஊடகவியலாளர்களோடும் ஓர் அதி முக்கிய அரசியல் வாதியோடும் அதில் கலந்து கொண்ட சிங்கள மக்கள் நிலைப்பாடு பற்றி உரையாட வாய்ப்பு கிட்டிற்று. அவர்கள் மிக மிக தெளிவாக சொன்ன செய்தி இது தான். ரவிராஜின் அரசியல் கருத்துகளை நாம் ஏற்கவில்லை. நிச்சயமாக ஏற்கவில்லை. ஆனால், அவர் தமிழ் மக்கள் படும் இன்னல்கள் பற்றி எமது மொழியிலேயே (சிங்களத்திலேயே) எடுத்துக் கூறியது எமக்கு அதிர்ச்சியையும் தமிழ் மக்கள் தங்கள் பிச்சினை பற்றிக் கொண்டிருக்கும் உணர்வாழத்தையும் காட்டுவதாக அமைந்தது.

அரச ஊடகங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர் என்பதை கூறிய போதும், (இதற்கு பி.பி.சி.யும் விலக்கானதல்ல) கொழும்பின் யுத்த விரோத இயக்கத்தினரால் ஏறத்தாழ 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள மக்களை ஒன்று திரட்ட முடிந்தது. தன் கொள்கைகளை எடுத்துக் கூறியதற்காக கொழும்பிலேயே ஒருவர் கொல்லப்பட்டார் என்பது சாதாரண சிங்கள மக்களின் மனச்சாட்சியை அதிர வைப்பதாகவிருந்தது. ஏனெனில், அவை வட, கிழக்குக்கு மாத்திரமே உரியதென்றும் அங்கு அது பயங்கரவாதத்தின் செயற்பாடென்றும் இவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டிருந்தது. கொழும்பில் ரவிராஜின் கொலை கொழும்பில் இலைமறை காயாகவுள்ள பயங்கர வாதத்தை எடுத்துக் காட்டிற்று. ஜே.வி.பி., ஹெல உறுமய கூட கொலையை கண்டித்தன.

தமிழ் மக்களின் பிரச்சினையை சிங்கள மொழியிலே எடுத்துக் கூறி அதை நாட்டின் பிரச்சினையாக எடுத்துக் காட்டியது தான் முக்கியப்பட்டது. அரசாங்கம் கூட ஒதுங்கி நிற்க முடியவில்லை.

கொழும்பின் இந்த பதிற்குறியை அரசாங்கமோ, வெளிநாட்டு தூதரகங்களோ, வெளிநாட்டு ஊடகங்களோ எதிர்பார்க்கவில்லை. இவ்விடயம் தமிழரின் உரிமைப் போராட்ட முன்னெடுப்பு முறைமை பற்றி ஒரு முக்கிய தடத்தை சுட்டிக் காட்டுகின்றது எனலாம். தமிழர்களின் கோரிக்கைகளுக்கான நியாயப்பாடுகளையும் நிலைப்பாடுகளையும் சிங்களத்திலே இயக்க நிலைப்பட எடுத்துக் கூறுவதன் மூலம் சிங்கள மக்களின் புரிந்துணர்வை பெற்றுக் கொள்ளலாம் என்பதை அந்தச் சம்பவம் மிகத் தெளிவாக காட்டிற்று.

பயங்கரவாதம், பிரிவினை வாதம் போன்ற கோஷங்களை பயன்படுத்தி தமிழர் உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்த முடியாது என்பது தெரிகின்றது. இத்தகையதொரு புரிந்துணர்வு இருக்குமேல் வெளிநாடுகளும் தமிழர் உரிமைப் போராட்டத்தின் முன்வைப்புகளையும் செல் நெறிகளையும் புரிந்து கொள்ள முடியும். தமிழர்களுக்கு இந்த கோரிக்கைகளை வைப்பதற்கான உரிமையுண்டு என்பதை சிங்கள மக்களில் சிலராவது ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் இது காட்டுகின்றது.

அடுத்த நிகழ்ச்சி, யாழ்ப்பாணத்தின் பட்டினி நிலைமைபற்றியும் ஏ௯ பாதை திறப்பதைப் பற்றியும் சிங்களக் கலைஞர்கள் புத்தி ஜீவிகள் சிலர் காட்டிய பதிற்குறியாகும். பேராசிரியர் சுச்சரித்த கமலத், திரைப்பட இயக்குநர் அசோக கந்தகம, தர்மசிறி பண்டாரநாயக்க ஆகியோர் இவ் இயக்கத்தில் முன்னிலைப்படுபவர்கள். யாழ்ப்பாணத்தின் பட்டினி நிலைமையை போக்க உணவுப் பொதிகளை சேகரித்து யாழ்ப்பாணத்துக்கு அனுப்ப அலரிமாளிகையிடம் தருவோம் என்ற நிலைப்பாடு அசாதாரணமானதாகும்.

அது மாத்திரமல்ல இந்த முக்கியஸ்தர்களில் சிலர் இலங்கை தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்பவர்கள். மேலே குறிப்பிட்ட இடதுசாரி முக்கியஸ்தர்களும் இலங்கை தமிழர்களுக்கான அரசியல் சுயநிர்ணய உரிமையை வற்புறுத்துபவர்கள் ஆவர்.

இலங்கை தமிழரின் உரிமைப் போராட்டம் வலுவான நியாயப்பாடுகளைக் கொண்டது என்பதனை ஜே.வி.பி., ஹெல உறுமயவின் சிங்களத்துவ இனவாத கோஷத்தினிடையேயும் முன்வைக்க தயாராக விருக்கின்றனர் என்பதனை காட்டுகின்றது. இதனை இலங்கை தமிழர் உரிமைப் போராட்டம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்...? எவ்வாறு பயன்படுத்த போகின்றது என்கின்ற பிரச்சினைகளை மிக ஆணித்தரமாகவே கிளப்புகின்றன.

குறிப்பாக அயல் நாடுகள் பலவற்றில் தமிழர் உரிமைப் போராட்டங்கள் பற்றிய அவ்வந் நாட்டு அரசியல் மையங்கள் கூறுவன. (தங்கள் நாட்டு மக்களுக்கு எடுத்துக் காட்டுவன.) எத்துணை தவறானவை என்பதனை இது காட்டும். மேலும் ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் அமெரிக்காவிலும் இந்த உண்மை வலுவாக எடுத்துக் கூறப்பட வேண்டும். ஏனெனில், அந்த நாடுகளிலும் வாய்ப்பாட்டு ரீதியாக சில நிலைப்பாடுகளை திரும்பத் திரும்ப கூறுவது மரபாகிவிட்டது.

மூன்றாவது விடயம் ஏ௯ பாதை திறப்பு பற்றிய இணைத்தலைமை நாடுகளுடைய சிரத்தையாகும். ஏ௯ பாதை மூடப்பட்டிருப்பதால் பாரிய பொருளாதார சீர்குலைவு ஏற்படவில்லை என்பதை சொல்லாமலேயே சொல்லுகின்ற முறையில் சில நாடுகள் காங்கேசன்துறைக்கு பொருட்களை அனுப்ப தீர்மானித்துள்ள நிலையில் இணைத் தலைமை நாடுகள் ஏ௯ பாதை திறப்பு பற்றி அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் கவனம் செலுத்த வேண்டுமென்ற அறிக்கை மிக முக்கியமானதாகும்.

குறிப்பாக பெற்றோல், மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நீங்க இரண்டு வார காலமாவது செல்லுமென்று சென்ற வெள்ளியன்று அரசாங்கமே சொல்லத் தொடங்கிவிட்டது.

ஹெகலிய ரம்புக்வெல கூட அது பற்றி குறிப்புரை கூற விரும்பவில்லை போலத் தெரிகின்றது. யாழ்ப்பாணத்து நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது என்பதனை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு அதனை கவனிப்பதற்கு அமைச்சர் ஒருவரை அனுப்பியுள்ளது. உள்ளூர் பொருள் விநியோக முறைமையிலேயே குறைபாடுள்ளது ஏ௯ மூடப்பட்டதால் அல்ல என்ற வாதத்தை சற்று அழுத்தமாகவே முன்வைக்க வேண்டிய தேவை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. இதுவரை யாழ்ப்பாணத்தில் பொருட்கள் கிடைப்பது பற்றியும் விநியோகம் பற்றியும் எதுவும் கூறாமல் கப்பல்களில் அனுப்பப்படும் உணவு குழந்தை மா பெட்டிகளின் தொன் அளவுக் கணக்கை கூறிய ஊடகங்கள் நேற்று முதல் பாட்டை மாத்திரமல்ல குரலையும் மாற்றியுள்ளன.

தேச நிலைப்பட்ட முக்கியத்துவம் யாதெனில், ஜனாதிபதி இது பற்றி உடனடியாக கவனிக்க வேண்டிய அரசியல் நிர்ப்பந்தமாகும்.

இந்த 3 சம்பவங்களின் பின்னரும் தமிழரின் உரிமைப் போராட்ட முன்னெடுப்பு நிச்சயமாக புதியதொரு பரிமாணத்தை எட்டியுள்ளது. இந்த திருப்புமுனையை ஏற்படுத்தியமைக்கு கொழும்பிலுள்ள யுத்த விரோத சக்திகளை பாராட்ட வேண்டியது கடமையாகின்றது. ரவிராஜின் பாரிய இழப்பை தாங்க வேண்டியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கு அனுதாபம் தெரிவிக்க வேண்டுவது என்பது கடமையென்றாலும் அவர்கள் ரவிராஜின் பூதவுடலை கொண்டு செல்வதற்கு ஏ௯ பாதையை திறவுங்கள் என்று கேட்டது ரவிராஜின் நினைவையே கொச்சைப்படுத்துவது போலவிருந்தது. ஏ௯ பாதையை மூடுவதன் மூலம் அரசியல்-இராணுவ மயப்படுத்தப்படுவதையும் இராணுவம்- அரசியல் மயப்படுத்தப்படுவதையும் கூறி பல நாட்கள் ஆகிவிட்டன.

பூதவுடலை கொண்டு செல்ல கூட மறுத்து விட்டார்கள். என்றதொரு நியாயத்தை முன்வைப்பது தமிழர் உரிமைப் போராட்டத்தின் நெஞ்சு நிமிர்ந்த போக்குக்கு ஊறுசெய்வதாகவே அமைந்தது என்பதை கூறியே ஆக வேண்டும்.

மகிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் சகல சிங்கள சக்திகளையும் ஒன்றிணைக்க விரும்புகின்ற அதேவேளையில் தொழிலாளர்களை வென்றெடுக்க முடியவில்லை என்பதனை இந்த பட்ஜெட் காட்டுகின்றது. அரசாங்கத்துக்கு சமாதான எதிர்பார்ப்புகள் இல்லையென்பதனை பட்ஜெட் ஒதுக்கீடுகள் மூலம் நன்கு தெளிவாகின்றது.

இதற்கு மேல் வடக்கு, கிழக்கு இணைவை நிர்வாக பூர்வமாக நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு நிர்ப்பந்தமும் உள்ளது. அது பற்றி ஜே.வி.பி.யே மௌனம் சாதிக்கும் அளவுக்கு இப்பொழுது அரசாங்கம் தளம்புகின்றது. தமிழர் உரிமைப் போராட்டத்தின் முன்னெடுப்புகள் இந்த முரண்பாடுகளை வெளிப்படுத்துவது மாத்திரமல்லாமல் இந்த உரிமைப் போராட்டமானது இந்த நாட்டு மக்கள் எல்லோரையும் உள்ளடக்கியது என்பதனை வற்புறுத்த வேண்டிய அவசியமும் உள்ளது.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.