Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 18...!!!(கவிதைச்சரம்)

Featured Replies

மே 18!!!

11245473_10152953323268002_5633350400577

குற்றுயிராய் ஒரு உயிர்

குடல் கிழிந்து ஒரு உயிர்

பாதி எரிந்தபடி ஒரு உயிர்

உருக்குலைந்து ஒரு உயிர்

அழுகுரலோடு ஒரு உயிர்

அனாதையாய் ஒரு உயிர்

நஞ்சுண்டபடி ஒரு உயிர்

கடந்து ஓடினோம்

உணர்வும் செத்து 

உயிரும் செத்து

முள்ளிவாய்க்கால் வரை!!!

எல்லாம் தின்று 

ஏப்பம் விட்டு

நந்திக்கடலில்

கறை படிந்த கை கழுவி

ஒன்றுமில்லை என்றான்

புத்தன்!!

மே மாதம்

நினைவழியா மாதம்

இன்றும் பிண்வாடையும்

கந்தகவாசமும் நாசில்

அரிக்கும் மாதம்...

சூட்சிகள் செய்து

மனட்சாட்சிகள் இல்லா

கொலைக்களம்

சாட்சிகள் ஆனவர்

நாக்குகள் அறுத்து

ஊமைகள் ஆன சோகம்

செங்குரிதி ஓடி

வெந்தணல் ஆன

எம்மவர் நினைவுகள் 

அழியா மாதம்

இது ஊழிக்கூத்து

நிகழ்ந்த மாதம்!

அடி மனதோடு

நெருப்பென எரியும்

வலி சுமந்த மாதம்!!!

 

..................////.......................

11041157_10152971433458002_1035654605532

ஓலை குடிசை

ஓட்டை வழியே 

மழைதுளிகள் 

உள்ளே

ஊத்தும்

குண்டுக்கோப்பை நிறைக்கும்

ஒழுக்குத்தண்ணீர்

நாய் குரைக்கும்

காகம் கரையும்

அம்மா அடிக்கடி எட்டிப்பாக்குறா

காணாமல் போன அண்ணா 

வருவான் எண்டு...

அம்மாக்கு தெரியாது

அண்ணாவின் 

மரணச்சான்றிதழை

விதானையார் அப்பாவிடம்

போன மாதம்

கொடுத்தது..!!!

 

...............////................

 

10502028_383296011860801_757098569333444

 

முள்ளிவாய்க்காலில் 

இறைச்சிக்கடை திறந்து

தமிழனின் உடன் இறைச்சியும்

இரத்தவறுவலும்

செய்து கொடுத்தான் 

மகிந்த....

 

திண்டு ரசித்து

ஏப்பம் விட்டு மகிந்தவின்

சால்வையில்

கை துடைத்தான்

பான் கீன் மூன்...

 

எங்களுக்கும் வேண்டும்

பந்தியும் பரிமாறலும் என

கேட்டு வாங்கித்திண்டார்கள்

ஒபாமாவும் சோனியாவும்...

 

கடைசிப்பந்தி 

மே18 இல்...

பந்திக்கு பிந்தாமல்

திண்டு தீர்த்தார்த்தார்கள்

கோதபாயவும் பசிலும்...

 

எங்களையும் ..

பந்திக்கு அழைக்கவில்லையே

என ஏங்கினார்கள்

ரணிலும் சந்திரிக்காவும்...

 

பந்திக்கு முந்தி

கோதாபாயவின்

கோப்பையில்

திண்டதால்

பொன்சேகா சிறையில்..

 

மகிந்த திண்ட 

கோப்பை நக்கி ..

கைசூப்பி ருசித்தான் 

மைத்திரி...

 

எல்லாரும் திண்ட எச்சில்

கோப்பைகளை கழுவி

அடுக்கிவைத்தார்கள்

எட்டப்பர்கள்....

 

தன் இனம் 

தன் உறவு

அரக்கர்களால்

ருசிக்கப்படுவதை பார்த்து

துடிதுடித்து உண்ணாமல்

உறங்காமல்

இருந்தான்

புலம்பெயர் தமிழன்...!!!

-------------////------------------------

968824_137850969738641_2016397362_n.jpg?

 

தாயகத்தில் இருக்கும்

எங்கள் உறவுகளே..!!!

உங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது

தீபங்கள் ஏற்றக்கூடாது என்பதற்காக...

உங்கள் நாக்குகள் அறுக்கப்பட்டுள்ளன..

அழக்கூடாது என்பதற்காக..

உங்கள் கண்கள் பிடுங்கப்பட்டுள்ளன...

கண்ணீர் சிந்தக்கூடாது என்பதற்காக...

மோட்டு சிங்களவனுக்கு தெரியாது

உங்கள் கைகள்

உங்கள் கண்கள்

உங்கள் உரிமைக்குரல்கள்

புலம்பெயர்ந்து இன்னும் உயிரோடு இருப்பது...

உங்களுக்காக நாங்கள் தீபங்கள் ஏற்றுவோம்...

உங்களுக்காக நாங்கள் பேசுவோம்...

உங்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம்...

உங்கள் கண்ணீரை 

நாங்கள் துடைப்போம்...

உங்கள் துயரங்களில் 

நாங்கள துணையாவோம்...

எங்கள் தலையில் 

வீட்டு முற்றத்து 

மணல் மண்ணும்..

எங்கள் பல் இடுக்கில் 

சூப்பிய பனம்பழத்தின் குந்தும் இப்போதும்

இருக்கிறது....

காலம் வரும்...

நாங்கள் எல்லோரும்

ஒன்றாய் விளக்கேற்ற..!!!

காலம் வரும்...

நாங்கள் எல்லோரும்

கட்டிப்பிடித்து கதறி அழுது

எங்கள் கவலைகள் மறக்க..

புலம்பெயர்ந்தது ...

எங்கள்

உடல்கள் மட்டுமே

உணர்வுகள் அல்ல.!!!

 

-தமிழ்ப்பொடியன்-

18.05.2015

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

மே 18!!!

------

காலம் வரும்...

நாங்கள் எல்லோரும்

ஒன்றாய் விளக்கேற்ற..!!!

காலம் வரும்...

நாங்கள் எல்லோரும்

கட்டிப்பிடித்து கதறி அழுது

எங்கள் கவலைகள் மறக்க..

புலம்பெயர்ந்தது ...

எங்கள்

உடல்கள் மட்டுமே

உணர்வுகள் அல்ல.!!!

 

-தமிழ்ப்பொடியன்-

18.05.2015

 

புலம்பெயர்ந்தது ...

எங்கள்

உடல்கள் மட்டுமே

உணர்வுகள் அல்ல.!!!

  • கருத்துக்கள உறவுகள்

புலத்துக்கும், நிலத்துக்கும்...,

இடையில் விரிகின்ற வெளி,

வேண்டுமென்றே அகலிக்கப்படும் வேளையில்,

 

உங்கள் கவிதை,

உண்மைகளைத் தேடுகின்றது!

 

கைகளும், நாக்குகளும் மட்டும்,

அறுக்கப்படவில்லை!

இன்னும் கீழே சென்று..,

கருப்பைப் பைகள் வரை,

கத்திகள் நீள்கின்றன! 

 

திண்டு ரசித்து
ஏப்பம் விட்டு மகிந்தவின்
சால்வையில்
கை துடைத்தான்
பான் கீன் மூன்...

 

 

நிதர்சனமான வரிகள்! நன்றி!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

 

மே 18!!!

11245473_10152953323268002_5633350400577

குற்றுயிராய் ஒரு உயிர்

குடல் கிழிந்து ஒரு உயிர்

பாதி எரிந்தபடி ஒரு உயிர்

உருக்குலைந்து ஒரு உயிர்

அழுகுரலோடு ஒரு உயிர்

அனாதையாய் ஒரு உயிர்

நஞ்சுண்டபடி ஒரு உயிர்

கடந்து ஓடினோம்

உணர்வும் செத்து 

உயிரும் செத்து

முள்ளிவாய்க்கால் வரை!!!

எல்லாம் தின்று 

ஏப்பம் விட்டு

நந்திக்கடலில்

கறை படிந்த கை கழுவி

ஒன்றுமில்லை என்றான்

புத்தன்!!

மே மாதம்

நினைவழியா மாதம்

இன்றும் பிண்வாடையும்

கந்தகவாசமும் நாசில்

அரிக்கும் மாதம்...

சூட்சிகள் செய்து

மனட்சாட்சிகள் இல்லா

கொலைக்களம்

சாட்சிகள் ஆனவர்

நாக்குகள் அறுத்து

ஊமைகள் ஆன சோகம்

செங்குரிதி ஓடி

வெந்தணல் ஆன

எம்மவர் நினைவுகள் 

அழியா மாதம்

இது ஊழிக்கூத்து

நிகழ்ந்த மாதம்!

அடி மனதோடு

நெருப்பென எரியும்

வலி சுமந்த மாதம்!!!

 

..................////.......................

11041157_10152971433458002_1035654605532

ஓலை குடிசை

ஓட்டை வழியே 

மழைதுளிகள் 

உள்ளே

ஊத்தும்

குண்டுக்கோப்பை நிறைக்கும்

ஒழுக்குத்தண்ணீர்

நாய் குரைக்கும்

காகம் கரையும்

அம்மா அடிக்கடி எட்டிப்பாக்குறா

காணாமல் போன அண்ணா 

வருவான் எண்டு...

அம்மாக்கு தெரியாது

அண்ணாவின் 

மரணச்சான்றிதழை

விதானையார் அப்பாவிடம்

போன மாதம்

கொடுத்தது..!!!

 

...............////................

 

10502028_383296011860801_757098569333444

 

முள்ளிவாய்க்காலில் 

இறைச்சிக்கடை திறந்து

தமிழனின் உடன் இறைச்சியும்

இரத்தவறுவலும்

செய்து கொடுத்தான் 

மகிந்த....

 

திண்டு ரசித்து

ஏப்பம் விட்டு மகிந்தவின்

சால்வையில்

கை துடைத்தான்

பான் கீன் மூன்...

 

எங்களுக்கும் வேண்டும்

பந்தியும் பரிமாறலும் என

கேட்டு வாங்கித்திண்டார்கள்

ஒபாமாவும் சோனியாவும்...

 

கடைசிப்பந்தி 

மே18 இல்...

பந்திக்கு பிந்தாமல்

திண்டு தீர்த்தார்த்தார்கள்

கோதபாயவும் பசிலும்...

 

எங்களையும் ..

பந்திக்கு அழைக்கவில்லையே

என ஏங்கினார்கள்

ரணிலும் சந்திரிக்காவும்...

 

பந்திக்கு முந்தி

கோதாபாயவின்

கோப்பையில்

திண்டதால்

பொன்சேகா சிறையில்..

 

மகிந்த திண்ட 

கோப்பை நக்கி ..

கைசூப்பி ருசித்தான் 

மைத்திரி...

 

எல்லாரும் திண்ட எச்சில்

கோப்பைகளை கழுவி

அடுக்கிவைத்தார்கள்

எட்டப்பர்கள்....

 

தன் இனம் 

தன் உறவு

அரக்கர்களால்

ருசிக்கப்படுவதை பார்த்து

துடிதுடித்து உண்ணாமல்

உறங்காமல்

இருந்தான்

புலம்பெயர் தமிழன்...!!!

-------------////------------------------

968824_137850969738641_2016397362_n.jpg?

 

தாயகத்தில் இருக்கும்

எங்கள் உறவுகளே..!!!

உங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது

தீபங்கள் ஏற்றக்கூடாது என்பதற்காக...

உங்கள் நாக்குகள் அறுக்கப்பட்டுள்ளன..

அழக்கூடாது என்பதற்காக..

உங்கள் கண்கள் பிடுங்கப்பட்டுள்ளன...

கண்ணீர் சிந்தக்கூடாது என்பதற்காக...

மோட்டு சிங்களவனுக்கு தெரியாது

உங்கள் கைகள்

உங்கள் கண்கள்

உங்கள் உரிமைக்குரல்கள்

புலம்பெயர்ந்து இன்னும் உயிரோடு இருப்பது...

உங்களுக்காக நாங்கள் தீபங்கள் ஏற்றுவோம்...

உங்களுக்காக நாங்கள் பேசுவோம்...

உங்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம்...

உங்கள் கண்ணீரை 

நாங்கள் துடைப்போம்...

உங்கள் துயரங்களில் 

நாங்கள துணையாவோம்...

எங்கள் தலையில் 

வீட்டு முற்றத்து 

மணல் மண்ணும்..

எங்கள் பல் இடுக்கில் 

சூப்பிய பனம்பழத்தின் குந்தும் இப்போதும்

இருக்கிறது....

காலம் வரும்...

நாங்கள் எல்லோரும்

ஒன்றாய் விளக்கேற்ற..!!!

காலம் வரும்...

நாங்கள் எல்லோரும்

கட்டிப்பிடித்து கதறி அழுது

எங்கள் கவலைகள் மறக்க..

புலம்பெயர்ந்தது ...

எங்கள்

உடல்கள் மட்டுமே

உணர்வுகள் அல்ல.!!!

 

-தமிழ்ப்பொடியன்-

18.05.2015

 

 

 

 

 

 

தங்களுக்காக குரல் கொடுப்போம் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் எம் மக்களை காப்பாற்ற இன்னும் எவ்வளவு காலம் அவர்கள் காத்திருக்கவேண்டும்?

இங்கேதானே ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில் நிற்கின்றார்களே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.