Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சென்னையில் 40 டிகிரி வெயில்

Featured Replies

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 40 டிகிரி வெயில்: மேலும் 2 நாட்களுக்கு தகிக்கும்

 

heat_waves_2328068h.jpg

 

தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று சென்னையில் 40 டிகிரி வெயில் பதிவானது.சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசுகிறது. கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் அதிகபட்ச வெயில் சென்னையில்தான் பதிவாகிறது. இதனால், சென்னைவாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் சிக்கிக்கொண்ட வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

 
கடல் காற்று தாமதமாக வீசுவதால், பகலில் அனல் காற்று வீசுகிறது. மாலை நேரங்களில் கடல் காற்று வீச ஆரம்பித்த பிறகு வெப்பம் தணிந்து காணப்படுகிறது.
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் 40.1 டிகிரி செல்சியஸும், மீனம்பாக்கத்தில் 39.5 டிகிரி செல்சியஸும் நேற்று பதிவானது. அதற்கு அடுத்த படியாக கடலூரில் 38.8 டிகிரி, புதுச்சேரியில் 38.6 டிகிரி, திருநெல்வேலியில் 37.5 டிகிரி, வேலூரில் 37.4 டிகிரி, திருச்சி, மதுரையில் 37 டிகிரி வெப்பம் பதிவானது.
 
சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெயில் சுமார் 41 டிகிரி அளவுக்கு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Keywords: அதிகபட்ச வெயில், சென்னையில் 40 டிகிரி வெயில், மேலும் 2 நாட்களுக்கு தகிக்கும்
 
  • கருத்துக்கள உறவுகள்

இலவசமாய் சோனா bath (வெக்கை குளியல் ) எடுக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திரப் பிரதேசத்தில்.... இந்த கத்திரி வெய்யிலால், இதுவரை 230 பலியாகி விட்டதாக செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திரப் பிரதேசத்தில்.... இந்த கத்திரி வெய்யிலால், இதுவரை 230 பலியாகி விட்டதாக செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.

ஆந்திரம், தெலங்கானாவில் வெயிலுக்கு இதுவரை 470 பேர் பலி: சென்னையில் புழுதிப் புயலுக்கு வாய்ப்பு

இணையப் பிரிவு

COMMENT (1)   ·   PRINT   ·   T+  
 
 
 
 
 
niz_2417224f.jpg
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்| படம்: கே.வி.ரமணா

ஞாயிற்றுகிழமை நிலவரப்படி சுட்டு எரிக்கும் வெயிலுக்கு ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் 290 பேரும், தெலங்கானாவில் 186 பேரும் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக அலகாபாத் நகரில் பம்ராலியில் 47.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

ஆந்திரா, தெலங்கானாவில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அனல் காற்றுக்கும் வெயிலுக்கும் 470 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் புழுதிப் புயலுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அடுத்து சில நாட்களுக்கு வெப்பத்தின் அளவு குறைய வாய்ப்பில்லை என ஆந்திர மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் சேர்த்து மொத்தம் 470 பேர் பலியாகியுள்ள நிலையில், பலியானவர்களில் பெரும்பாலனவர்கள் கூலித் தொழிலாளிகள் எனத் தெரியவந்துள்ளது.

எனவே, இருமாநில அரசுகளும், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றுவர்கள் பணி நேரத்தில் மாறுதல் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த வாரத்தில், வெள்ளிக்கிழமையன்று தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதும், உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத் நகரில் நேற்று 47.7 டிகிரி செல்சியஸ் பதிவானதுமே அதிகபட்ச வெப்பமாகும்.

இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பு:

கடலோர ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்களில் சில பகுதிகளில் இன்றைக்கும் (திங்கள்கிழமை) வெப்பக் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், டெல்லி, ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் வாரத்தில் டெல்லியில் அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புழுதிப் புயலுக்கு வாய்ப்பு:

டெல்லி, ஹரியாணா, பஞ்சாப், மேற்கு உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் புழுதிப் புயல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் (25,26 தேதிகள்) தமிழகம், புதுச்சேரியிலும் புழுதிப் புயல் வீசலாம் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திரம், தெலங்கானாவில் வெயிலுக்கு இதுவரை 470 பேர் பலி: சென்னையில் புழுதிப் புயலுக்கு வாய்ப்பு

----

 

470 பேர் வெய்யிலால் மரணம் என்பது அதிகம்.

எனக்குப் புரியாதது..... இதனை விட வெய்யில் அதிகம் உள்ள பகுதிகளான பாலைவனங்களில் மக்கள் வசிக்கின்றார்களே...

அங்கு இல்லாத, மரணம் இங்கு ஏன்? அதற்குரிய.... தற்காப்பு விழிப்புணர்வு மக்களிடம் இல்லையா? அல்லது அந்த வெய்யிலை தாங்கும் உடற் பலம் அந்த இடத்து மக்களுக்கு பழக்கப் படவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

சுருக்கமாக சொன்னால் திடிரென ஏற்படும் நீரின்இழப்பை உடம்பு சமன் செய்வதில் உள்ள குறை பாடு காரணமாகும். 

சென்னை: இந்தியாவில் வெயிலின் உக்கிரத்திற்கு இதுவரை 2,005 பேர் பலியாகி உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல வட மாநிலங்களிலும் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வெயில் கொடுமைக்கு ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி உள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/heat-wave-kills-more-than-2005-india-227757.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.