Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேவை நிரந்தர திறப்பு!!

Featured Replies

தேவை நிரந்தர திறப்பு!!

---------------------

தற்காலிகமாக சாலையைத் திறக்கும் இலங்கை அரசின் முடிவுக்கு புலிகள் எதிர்ப்பு!!

------------------------------------------------------------------------

இலங்கையின் வடக்குப் பகுதிக்குச் செல்லும் ஏ9 நெடுஞ் சாலையை அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் ஒரே முறை திறந்துவிடப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்தது. ஆனால் அத்தகைய தற்காலிக திறப்பு தங்களுக்குத் தேவையில்லை என்றும் நிரந்தரமாக நெடுஞ்சாலை திறந்துவிடப்பட வேண்டும் என்றும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இலங்கையின் வட பகுதியை தென் பகுதியுடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை ஏ9 கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி முதல் மூடப் பட்டதால் வட பகுதியில் வாழும் பெரும்பான்மை தமிழர்கள் சுமார் 5 லட்சம் பேர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக் காமல் அவதிப்பட்டு வந்தனர்.

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் அங்கு பொருட் களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. ஒரு முட்டைக்கு ரூபாய் 50 விலை கொடுத்து நாங்கள் தளர்ந்துவிட்டோம் என்கின்றனர் யாழ்ப்பாண மக்கள்.

இந்தியா உள்பட உலக நாடுகள் யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையை திறக்க இலங்கையை வற்புறுத்தி வந்தது. ëஜனிவாவில் நடந்த இலங்கை அரசு விடுதலைப் புலிகள் முதல் மாநாடும் இதனால் தோல்வியடைந்தது. இந்தியா கூட வட பகுதி மக்களுக்குத் தேவை யான அத்தியாவசிய பொருட்கள் 7 ஆயிரம் டன் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்றிரவு அதிபர் ராஜபக்சே யாழ்ப்பாணம் தேசிய நெடுஞ்சாலையை திறந்து அத்தியா வசிய பொருட்கள் செல்ல ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல தற்காலிகமாகத்தான் ஏ9 தேசிய நெடுஞ்சாலை திறக்கப்படுவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்துக்கான அத்தியா வசியப் பொருட்களை ஒரே முறையில் முகமாலை வழியாக ஏ-9 பாதையில் கொண்டு செல்வதாக மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளது சாத்தியமற்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங் கிணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விடுதலைப் புலி களின் நடமாட்டம் சரளமாக இருக்கவும் மறைந்திருந்து தாக்கு தல் நடத்த எளிதாக இருக்கவும் சாலை வரிகளை வசூலிப்பதன் வழி தங்கள் அமைப்புக்கு நிதி திரட்ட வுமே நெடுஞ்சாலையை நிரந்தர மாகத் திறக்க வேண்டும் என்பதில் புலிகள் உறுதியாக இருப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

யாழ்ப்பாணத்திற்கு அத்தியா வசியப் பொருட்களை ஏற்றிய டிரக் வாகனத்தை அனுமதிப்பதாகவும் ஆனால் தேதி குறிப்பிடாமல் ஞாயிறன்று இரவு அதிபர் ராஜபக்சேயின் அலுவலகம் அறிக்கை விடுத்தது. யாழ்ப்பாணம் பகுதிக்கு உணவு மற்றும் அத்தியா வசிய பெருட்களை அனுப்ப விரும்பும் அனைத்துலக தன்னார்வ அமைப்புகள் அதற்கான டிரக்குகளை விரைவில் ஏ9 நெடுஞ்சாலைக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப் பட்டனர்.

அமெரிக்கா வாஷிங்டன் நகரில் திங்களன்று இணைத்தலைமை நாடுகளின் மாநாடு நடை பெறுவ தாக இருந்த நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. இம் மாநாட்டில் பிற நாடுகள் இலங்கை அரசாங்கம் மீது கொண்டு வரப்போகும் அழுத்தங்களி லிருந்து விலகிக் கொள்வதற்கே இந்த அறிவிப்பு என்றும் கருத்து நிலவுகிறது.

அகதி பிரச்சினை

இது ஒரு பக்கப் பிரச்சினை என்றால், இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா செல்லும் கதையும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. இலங்கையின் திருக்கோணமலையிலிருந்து ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் நேற்று காலை ராமேஸ்வரம் வந்தனர். ஆள் ஒன்றுக்கு ரூபாய் 6,000 பணம் கொடுத்து கள்ளத் தோணியில் அவர்கள் ராமேஸ்வரம் வந்ததாகக் கூறினர்.

அவர்களை இந்திய அதிகாரிகள் வழக்கம்போல், மண்டபம் அகதிகள் முகாமுக்கு கொண்டு சென்றனர்.

இவ்வேளையில் 250 கோடி ரூபாய் செலவில் உருவாகவிருக்கும் இலங்கையின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையத்துக் கான அடிக்கல்லை அதிபர் ராஜபக்சே நாட்டியிருக்கிறார்.

இது ஆயிரத்து 150 ஹெக்டேர் நிலப்பரப்பில் நான்கு கிலோ மீட்டர் நீளமான ஓடுபாதைகளைக் கொண்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAMILMURASU-SINGAPORE

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜபக்சே யாழ்ப்பாணம் தேசிய நெடுஞ்சாலையை திறந்து அத்தியா வசிய பொருட்கள் செல்ல ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்???????

:):):mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.