Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தவின் கனவுக்கு ஆப்பு வைத்தார் மைத்திரி

Featured Replies

மகிந்தவின் கனவுக்கு ஆப்பு வைத்தார் மைத்திரி MAY 29, 2015 | 2:35by கார்வண்ணன்in செய்திகள்

mahinda-maithri-300x200.jpgவெற்றிலைச் சின்னத்தில், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன, கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் புதன்கிழமை மாலை நடத்திய சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை நிறுத்துவது தொடர்பான, சிறிலங்கா அதிபரின் நிலைப்பாடு குறித்து, இந்தக் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த போதே, மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியாது என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச நீண்டகாலமாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், பிரதமராகவும், இரண்டு தடவைகள், அதிபராகவும் இருந்திருக்கிறார்.

எனவே இன்னொருவருக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், கட்சியின் தலைவர் என்ற வகையில் தனது அடுத்த அரசியல் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு,  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட அனுமதிக்க முடியாது என்ற மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டை, கூட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் நிராகரித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், தற்போதைய ஐதேக அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவது குறித்தும்,  நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை தோற்றுவிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நேற்றுக்காலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள், மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

இதன் போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட மகிந்த ராஜபக்ச விருப்பம் வெளியிட்டதாக, கூட்டத்தில் பங்கெடுத்த கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் தமது முடிவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள், கட்சியின் செயலாளர் சுசில் பிரேம ஜெயந்த மூலம், சிறிலங்கா அதிபருக்குத் தெரியப்படுத்தவுள்ளனர்.

http://www.puthinappalakai.net/2015/05/29/news/6577

 

  • கருத்துக்கள உறவுகள்

----

மகிந்த ராஜபக்ச நீண்டகாலமாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், பிரதமராகவும், இரண்டு தடவைகள், அதிபராகவும் இருந்திருக்கிறார்.எனவே இன்னொருவருக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

மகிந்தவை.... இனி தலை தூக்க விட்டால், மைத்திரியின் பாடு திண்டாட்டம்.

உச்சந்தலையில்... ஒரு போடு போட்டு, மகிந்தவை ஒரு ஓரத்தில் உட்கார வைக்க வேண்டும். :D

பாராளுமன்ற உறுப்பினர் ஆகும் அளவு மஹிந்தவிற்கு மூளை வலியா? ராஜித பதில்

 

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெறும் அளவிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மூளை குழப்பம் உள்ளதென தான் நம்பவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (28) உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். 

அமைச்சருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான கேள்வி-பதில் அம்சம் வருமாறு, 

கேள்வி - மஹிந்த ராஜபக்ஷ இயலாது அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வந்தால்..? 

பதில் - இயலாமல் வர மாட்டார். இயன்றால் தானே வருவார். 

கேள்வி - வரமாட்டார் என்று நம்பிக்கையா? 

பதில் - ஜனாதிபதியாக இருந்துவிட்டு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக ஆகும் அளவிற்கு அவருக்கு மூளை வலி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. 

கேள்வி - அவர் (மஹிந்த) போட்டியிட மாட்டார் என நீங்கள் கூறுகிறீர்களா? 

பதில் - ஆம் இறுதி நாள்வரைக்கும் அவ்வளவு பிரச்சினை இருக்கும் என்று நான் தெரியவில்லை. பாராளுமன்ற உறுப்பினராக மஹிந்த ராஜபக்ஷவிற்கு மனநோய் இருப்பதாக தெரியவில்லை. அனைத்து பாதுகாவலர்களையும் விலக்கி இரண்டு பேருடன் மாத்திரம் வீதியில் செல்ல அவர் விரும்புவார் என்று தெரியவில்லை. ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினராக விரும்புவாரா? நான் பிரதேச சபை உறுப்பினராக விரும்புவேனா? இல்லை. அதுபோலதான். 

இதேவேளை, 20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் நேற்று அமைச்சரவையில் கூடிய கவனம் செலுத்தப்பட்டதாகவும் அதில் 15 யோசனைகள் முன்வைக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 225இல் இருந்து 255ஆக உயர்த்த யோசனை முன்வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

தேசிய பட்டியல் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 5%இல் இருந்து 1.5% அல்லது 1% குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டதாகவும் தொகுதிவாரி மற்றும் பல் அங்கத்தவர் தொகுதி மூலம் 165 பேரை தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகையை இனங்களுக்கு இடையில் பிரித்தல், மகளிர் பிரதிநிதித்துவத்தை 5% இருந்து 10% ஆக அதிகரித்தல் போன்ற யோசனைகளும் முன்வைக்கப்பட்டதாக ராஜித தெரிவித்தார். 

அந்த யோசனைகளை பரிசீலிக்க குழுவொன்றை அமைக்கவும் அந்தக்குழுவின் மூலம் தயாரிக்கப்படும் இறுதி ஆவணத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கையளித்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120261/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

மகிந்தவை.... இனி தலை தூக்க விட்டால், மைத்திரியின் பாடு திண்டாட்டம்.

உச்சந்தலையில்... ஒரு போடு போட்டு, மகிந்தவை ஒரு ஓரத்தில் உட்கார வைக்க வேண்டும். :D

 

 

ஸ் ரகசியம்!

என்னை சுட முயற்சித்தவரை பிரதம வேட்பாளராக நியமிப்பதா? ஒருபோதுமில்லை கடுந்தொனியில் மைத்திரி!

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டை குடியுரிமை யுள்ள புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு பா.உ சீட் தந்தால் என்ன ?மைத்திரியிடம் யாராவது சிபார்சு செய்யுங்கோ....:D

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அண்ணா, சந்தில சிந்து பாடுறீங்களே? புலம்பெயர்ந்தவை இனி பங்காளிகள் ஆக முடியாது, பார்வையாளர் மட்டும்தான் எண்டதை மறந்திட்டியளே? இதை நான் சொல்லேல்லை, நல்லாட்சியின் பங்காளிகள் சொல்லீனம்.

மஹிந்தவுக்கு வெற்றிலையில் இடமில்லை: மைத்திரி

 

article_1432876339-877.jpg

 

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 14 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.