Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவிலிருந்து ஈழத்துக்கு உதவி

Featured Replies

Operation USA என்ற அமெரிக்கத் தொண்டு நிறுவனம் தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கிலேற்பட்டிருக்கும் மனித அவலத்துக்குச் செவிமடுத்திருக்கின்றது. இந்நிறுவனம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைக் கொண்டு செல்லும் வழிகளை ஏற்படுத்தித் தருமாறு அமெரிக்க அரசாங்கத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அழுத்தம் கொடுத்திருக்கிறது. மருத்துவ உதவிப் பொருட்கள், சத்துணவுப் பொருட்கள் மற்றும் நிதி ஆகியவற்றை இது பெற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்கத் தமிழர்கள் இதன் மூலமாகத் தம் உதவிகளை ஈழத்தமிழர்களுக்கு அளிக்கலாம்.

சுனாமியாலும் போரினாலும் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இலங்கைக்குச் சர்வதேசங்களிலுமிருந்தும் வந்த சுனாமி நிதியானது சமமில்லாதவகையில் பகிர்ந்தளிக்கப்பட்டதால், சிங்களப்பகுதிகளில் முக்கால் பங்கு வேலைகள் முடிந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டார்கள். ஆனால் தமிழர் பகுதிகளிலோ வெறும் கால்வாசி மக்கள் கூட தற்காலிக முகாம்களைவிட்டு இன்னும் வெளியேறமுடியாத நிலையில் இருக்கிறார்கள். தொடர்ந்து நிகழும் இனப்போர் இதனை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.

தமிழர்களின் நிலை குறித்த புள்ளிவிபரங்கள் கவலையளிப்பன:

சுனாமியால் இடம் பெயர்ந்தோர் - 312, 000

போரினால் இடம் பெயர்ந்தோர் - 201, 800

தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தோர் - 15, 000

ஏ-9 சாலை திறக்கப்படாததால் யாழ் தீவில் இடருறுவோர் - 600, 000

வாகரையில் (இரண்டு நாட்களுக்கு முன் அரசப் படையினர் இவர்கள் மேல் வான் தாக்குதல் நடத்தி 45க்கும் மேலான அகதிகளைக் கொன்றிருக்கிறார்கள்) இருக்கும் முகாம்களில் இருப்போர் - 43, 000.

தற்காலிக முகாம்களில் வசிக்கும் இவர்களுடைய உடனடித் தேவைகள் மருந்துகளும், உணவுமாகும். இம்மக்களுக்கு உதவியளிக்கும் வகையில் Operation USA மனிதாபிமானப் பங்களிப்பைக் கொடையாளர்களிடமிருந்து எதிர்நோக்கியிருக்கிறது. இந்நிறுவனத்தில் தன்னை இணைத்துப் பணியாற்றி வரும் நிம்மி கௌரிநாதனையோ அல்லது சூசன் ஃபாசிகையோ கீழ்க்கண்ட முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். நிம்மி கௌரிநாதன் ஏற்கெனவே ஈழத்தில் தன்னார்வலராக வேலை செய்த அனுபவம் கொண்டிருக்கும், கலிபோர்னியப் பல்கலைக்கழகம் -லாஸ் ஏஞ்சலசில் அரசியலறிவியல் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர்.

எப்படிக் கொடுப்பது:

இணையத்தின் மூலமாக https://donate.opusa.org:444/form.php

தொலைபேசி மூலமாக (1-800-678-7255)

அஞ்சல் வழியாக (3617 Hayden Avenue, Suite A, Culver City, California 90232)

உங்கள் நன்கொடையில் “இலங்கையின் வடக்கு-கிழக்குக்காக” என்று குறிப்பிடவும்.

தொடர்புகள்:

ngowrinathan@opusa.org – Nimmi Gowrinathan

sfassig@opusa.org – Susan Fassig

நன்றி : http://bhaarathi.net/sundara/?p=294

இதன் நம்பகத் தன்மை பற்றி அறியேன் இருப்பினும் எந்த வகையிலயிலாவது உதவும் என்பதனாலே இங்கு அறியத் தருகின்றென் இருப்பினும் அமெரிக்க வாழ் ஈழத்தமிழர் இ இதைப்பற்றி அறிந்து உண்மை நிலையை அறியத் தந்தால் உதவி புரிய விரும்புபவாகள் க்கு உதவியாக இருக்கும்

நன்றி

ஈழத்திலிருந்து

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.