Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூரில் மீள்குடியேற சென்ற மக்கள் பொலிஸாரினால் வெளியேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அல்லல்படுவது எமது மக்கள் தான்..

இதில் என்ன மாற்றுக்கருத்து....

 

 

 

இருந்தாலும் இரண்டு கண்களையும் தமிழரே  கொடுத்தாலும்

சிங்களம் ஒரு முடியையும் இழக்காது என்று தமிழரின் வரலாற்றில் ஏமாற்றப்பட்ட கதைகள் ஏராளம்

 

 

ஆனால் வெற்றியைக்கொண்டாட எடுத்துக்கொண்ட அக்கறையில்

தலைவர்கள் வரலாற்றை சிங்களத்தை புரிந்து கொண்டது மிகமிக்குறைவு என்பது தெரிகிறது...

இல்லாது விட்டால் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சிங்களத்துக்கு இந்தளவு குவிந்திரா....

 

 

  • 2 weeks later...

மே 18 இல் சுமந்திரன், சம்பந்தன் எங்கே ஒளித்தார்கள்? தமிழன் என்று சொல்ல தயங்குகின்றார்களா? - ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.

 

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆயுப்போராட்டமும் அதனைத் தாங்கிசென்ற விடுதலைப்புலிகளும், லட்சத்துக்குமேலான மக்களும் கொன்றொழிக்கப்பட்ட தினமான மே18 ஆனாது ஈழத்தமிழர்கள் மட்டுமல்லாது, தமிழகத்து தமிழர் மட்டுமன்றி மனிதத்தினை மதிக்கும் அனைத்துலக மக்களாலும் மறக்கமுடியாமல் போன ஒரு துன்பியல் நாள். இந்நாளில் கொல்லப்பட்ட மக்களிற்கான நீதி கிடைத்தால் கூட அந்நாள் அனைத்து மக்களின் மனங்களில் வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாத வலிகள் நிறைந்த நாளாகவே இருக்கும். இனப்படுகொலை நடைபெற்று 6 ஆண்டுகள் கடந்தாலும், குறித்த நாளில் அனைத்து தமிழர்களும் ஏதோ ஒரு வகையில் பல அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது அஞ்சலி செய்து கொண்டே வந்துள்ளனர்.

 

ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்பின்னர் தமிழ்மக்களின் தலைவராக வந்தவராக சொல்லப்படும் திரு சம்பந்தன் அவர்களும், அரசியல் இராஜதந்திரியாக தன்னை வெளிப்படுத்தி வரும் திரு. சுமந்திரன் ஆகியோர்கள் வடகிழக்கில் நடைபெற்ற எந்த அஞ்சலி நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை.

தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டு வெறுக்கபட்ட சிங்கக் கொடியை ரணில் அவர்களோடு சேர்ந்து உயர்த்திக் காட்டியபோதும், தந்தை செல்வா காலம் தொட்டு புறக்கணித்து வந்த சிறிலங்கா சுதந்திர தின விழாவில், சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தது அது காலத்தின் தேவை என மழுப்பினார்கள்.

சிங்கள படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொள்ளாமல் விட்டமையானது இவர்கள் மீது மிகுந்த கோபத்தினையே தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. இப்படியான இவர்கள் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்று தருவார்கள் என்றோ, எமது மக்களிள் விடிவிற்காக எப்படி குரல் கொடுப்பாகள் என்றோ நம்பவே முடியாது. கலந்து கொள்ளாமைக்கான காரணங்கள் எதைச் சொன்னாலும்; மக்கள் எனியும் அதனை நம்ப தயாராகவில்லை.

தமிழ் மக்களின் நிகழ்வில் கலந்து கொண்டால் சிங்கள ஆட்சியாளர்களை அல்லது சிங்கள மக்களின் இதயத்தை நோக வைக்கும் என்று நினைத்து அன்று ஓய்வு எடுத்தார்களோ தெரியவில்லை.

அல்லது சர்வதேச அழுத்தம், இந்தியாவின் அழுத்தம் என்று காரணத்தை சொல்லப்போகின்றார்களோ தெரியவில்லை. ஆனால் அவர்கள் என்ன காரணத்தினை சொன்னாலும், தமிழ் மக்களின் முக்கியமான ஒரு நினைவு நாளில் கண்டிப்பாக கலந்து கொள்ளாமையானது பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்துவதோடு கடும் சினத்தினையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் தான் தமிழ் இனத்தின் தலைவர்கள் என்று சர்வதேசம் பார்க்கும் போது, அவர்களே தமிழ் மக்களின் நினைவு தினத்தினை புறக்கணிப்பு செய்யும் போது அனைத்துலகத்திற்கு பிழையான ஒரு எண்ணப்பாட்டினை ஏற்படுத்துவதோடு, தமிழ் மக்களோ ஐ. நா நோக்கிய எமக்கான நீதியை வேண்டி கையேந்திக் கொண்டிருக்கும் போது, இப்படியான தலைவர்கள் மக்களின் எதிர்பார்ப்பினை சிதைத்து, இனப்படுகொலை நடைபெற்றதை மறுதலித்து சிறிலங்கா அரசாங்கமே விசாரணையை மேற்கொண்டு தீர்கட்டும் என்ற நிலையை ஏற்படுத்தி விடுவார்களோ என்று எண்ண தோன்றுகின்றது.

சிங்கள் மக்களின் மனங்களை வெல்லவேண்டும் என்றும் ஆட்சியாளர்களின் இதையத்தோடு பின்னி பிணைந்திருக்க வேண்டும் என்றும் அறிக்கை விட்டு இறுதியில் தமிழ் மக்களின் மனங்களில் இருந்து நிரந்தரமாக பிரியவேண்டிய நிலைக்கு வந்துவிட்டார்களோ என எண்ணத் தோன்றுகின்றது.

தமிழ் மக்களின் மனங்களில் இருந்து நிரந்தரமாக பிரிந்தாலும் பறவாயில்லை, ஆனால் எமது மக்கள் என்ன நோக்கத்திற்காக மாண்டு போனார்களோ அவர்களின் நோக்கத்தை இலட்சியத்தினை, விடுதலைக் கனவை ஏறி மிதித்து தமிழர்களை நிரந்தர அடிமைகள் ஆக்கப்பார்க்கின்றார்கள் என்று எண்ணத்தோன்றுகின்றது.

இதற்கு எந்த தமிழ் மக்களும் இடம் கொடுக்கமாட்டார்கள் என்பதோடு, ஜனநாயக வழியில் அவர்களுக்கான தண்டனையை மக்கள் நிச்சயம் கொடுத்து அவர்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவார்கள்.

- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு-

http://www.tamilsforobama.com/

யாழ்ப்பாணம் ஏழாலையில் புலிகளின் ஆதரவாளர் என ஒரு பெண்மணியைச் சந்தேகித்தனர் மண்டையன் குழுவினர். அதனை உறுதிப்படுத்த போராளிகள் போல அவரது வீட்டுக்குச் சென்றனர். லோலோ அண்ணை சாப்பாட்டுப் பார்சல் வாங்கிவரச் சொன்னார்.” என்று கூறினர்.

அந்தக் காலத்தில் லோலோவின் பெயர் பிரசித்தம். அந்த வீட்டிலோ சமையல் இன்னமும் பூரணமாக முடிவடையவில்லை. இந்த நிலையில் அடுத்த வீட்டுப் பெண்மணியை வேலிக்குள்ளால் அழைத்து சில கறிகளை வாங்கினார் அந்தப் பெண்மணி.

இருவருமாக சாப்பாட்டுப் பொதிகளைத் தயார் செய்து இவர்களிடம் வழங்கினர். அவற்றைக் கையில் வாங்கியவுடனேயே அவ்விரு பெண்மணிகளையும் சுட்டுக் கொன்றனர் மண்டையன் குழுவினர். என்ன ரசணையுடன் அந்தச் சாப்பாட்டுப் பொதிகளைச் சுவைத்தார்களோ ?

ஏனெனில் வீட்டுச் சாப்பாடு என்பது அவர்களுக்கு அக் காலத்தில் எட்டாக் கனிதானே.

ர். ஆனந்தனோ சேமமடுவில் இருந்த குமுதன் என்ற போராளியின் வீட்டுக்குச் சென்று அனைவரையும் கைது செய்தார். அவர்களை நடத்தியே தமது முகாமுக்குக் கூட்டிச் சென்றாகாலில் செருப்புடன் அவர்கள் புறப்பட்டபோது ‘ செருப்புப் போட வேண்டாம். செருப்பைத் தலையில் பிடித்துக் கொண்டே நடவுங்கோ ” என்று கூறினார். முகாமில் நடந்த விசாரணைகள் சித்திரவதைக்குப் பின் ‘ இனி நீங்கள் சிரட்டை ஏந்தித் தான் சாப்பிடவேண்டும்.” என்று திமிருடன் கூறினார். அதாவது இனி நீங்கள் பிச்சைக்காரரின் நிலையில் தான் வாழவேண்டும் என்பதே அதன் கருத்து.

சமாதான காலத்தில் இவர் வன்னி மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் சேமமடு மக்களுக்குப் போதனை செய்யப்போனார். அவ்வளவு தான் அன்று இவரால் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட குமுதனின் தம்பி கோடரியுடன் இவரைத் தாக்க முனைந்தார். ஊரவர்களால் அவரது ஆவேசத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கான நியாயமான காரணங்களும் இருந்தன. அதேவேளை சிவசக்தி ஆனந்தனோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர். ஒரு வழியாக போராளி ஞானம் அசம்பாவிதம் ஏதாவது நடைபெறாமல் பெரும் முயற்சியெடுத்து இவரைக் காப்பாற்றி வேறு வழியால் அனுப்பி வைத்தார். இன்று இவர் அறிக்கைகள் விடுகிறார். இது மூன்றாவது வேதம்.

இன்னும் என்னென்ன வேதங்களைக் கேட்க வேண்டிய அவலம் தமிழ் மக்களின் காதுகளுக்கு இருக்கிறதோ. அன்று குமுதனின் குடும்பத்தவர்களைச் சிரட்டை ஏந்தித்தான் சாப்பிடவேண்டும் என்று இவர் சொன்னார். இன்று அரசியல்வாதிகளைத் தவிர ஏனையோர் கிட்டத்தட்ட அதே நிலையில் தான் வாழ்கிறார்கள்

http://www.yarl.com/forum3/index.php?/topic/158845-வேதம்-ஓதும்-சாத்தான்கள்/

சம்பந்தன் ஐயாவோ ,சுமந்திரனோ நாங்களோ மற்றவர்களுக்காக வேஷம் போடுகின்றவர்கள் இல்லை .

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு திரியில் எழுதியதைதான் இங்கும் இடுகிறேன்

இப்படியான பக்கங்களை கொண்டவர்களுடன் ஏனய்யா கூட்டு வைக்கிறீர்கள்? தேர்தல் வந்தவுடன். ஏன் இவர்களுக்கு சீட்டு ஒதுக்குகிறீர்கள் ? எல்லா தொகுதிகளிலும் தமிழரசுக் கட்சியினரே போட்டியிடலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பில் இருந்து இவர்களை துரத்தும் காலமும் வரோணும். வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பில் இருந்து இவர்களை துரத்தும் காலமும் வரோணும். வரும்.

இவர்களை துரத்திவிட்டு எதுக்கையா கூட்டமைப்பு ? எப்படி ஐயா கூட்மைப்பு ? தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று தமிழரசுக் கட்சி மட்டும் இருப்பதா?

மீண்டும் கேட்கிறேன் இவர்களுடன் தமிழரசுக் கட்சியாகிய உங்களுக்கேனய்யா கூட்டு?

  • கருத்துக்கள உறவுகள்

நான் தமிழரசுக் கட்சிக்காரனில்லை.

சுரேஸ், ஆனந்தன், போன்ற தமிழ் மக்களுக்கு எதிராக crimes against humanity செய்தவர்களை துரத்தி விட்டு, இதே அமைப்புகளில் இருக்கும் ஐங்கரநேசன் போன்ற கறை இல்லாதவர்களை முன்கொணர வேண்டும்.

படிபடியாக இது நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் தமிழரசுக் கட்சிக்காரனில்லை.

சுரேஸ், ஆனந்தன், போன்ற தமிழ் மக்களுக்கு எதிராக crimes against humanity செய்தவர்களை துரத்தி விட்டு, இதே அமைப்புகளில் இருக்கும் ஐங்கரநேசன் போன்ற கறை இல்லாதவர்களை முன்கொணர வேண்டும்.

படிபடியாக இது நடக்கும்.

கோசான் நீங்கள் சொல்வது கறை இல்லாத தனிநபர்களை முன்நிலைப்படுத்துங்கள் கறை படிந்த அமைப்பினூடாக என்பது வியப்புக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

அமைப்புகள் புனருத்தானம் அடையலாம்,

அப்படி புனருத்தானம் அடைவதற்கு ஆக்கள் மாற்றப் பட வேண்டும்.

தமிழ் மக்களுக்கு எதிராக தாம் இழைத்த குற்றங்களுக்கே இன்னும் பொது மன்னிப்பு கேட்காத இவர்கள், மக்கள் பிரதிநிதிகளாய் இருப்பது மட்டுமின்றி போர்குற்ற விசாரணை வேறு கேட்பது - மிலேச்சதனமாது.

  • கருத்துக்கள உறவுகள்

மீரா சுரேசின் ஆதரவாளர் என்ற வகையில் உங்களிடம் ஒரு கேள்வி.

கூட்டமைப்பு சம்-சும் வழியில்தான் போகுது.

எவ்வளவு குத்தி முறிஞ்சாலும் சுரேசின் பேச்சை கூட்டைப்பில் யாரும் கேக்கவில்லை.

விடயங்கள் பல அவருக்கு தெரியாமலே நடக்கிறது.

இப்படி ஒரு கேவலமான நிலையில் சுரேஸ் ஏன் கூட்டமைப்பில் தொடர்கிறார்?

சம்-சும் கூட்டமைப்பை விட்டுப் போகத்தேவையில்லை - ஏனெண்டால் அவர்கள் விரும்பிய படியே எல்லாம் நடக்குது.

1)சுரேஸ் எம்பி பதவிக்காக இப்படி கேவலமாக நடத்தப்பட்டும் கூட்டமைப்பில் ஒட்டிக்கொண்டுள்ளாரா?

2)அல்லது -தமிழர் ஒற்றுமை குலையக்கூடாது என்பதுக்கா?

பதில் 2 வது எனில் - தமிழரசுக் கட்சி சுரேஸ் போன்றோருடன் கூட்டு வைக்கவும் அதுவே ஏன் காரணமாய் இருக்க கூடாது.

தமிழரசு கட்சி சுரேசை சேர்பது வாக்குக்காக, ஆனால் சுரேஸ் தமிழரசு கட்சியுடன் சேர்வது ஒற்றுமைக்காக என்று காமெடி பண்ண மாட்டீர்கள் என நம்புகிறேன்.

தன் சுயநலனுக்காய் ஈபிஆ ர் எல் எப் ஐ ரெண்டாய் உடைத்தவர்தான் சுரேஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் முதலில் சுரேசின் ஆதரவாளர் என்ற மாயையை நீக்குங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீக்கியாச்சு.

இப்ப பதில் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் EPRLF உடைந்ததிற்கு வருதப்படுவது நகைப்புக்குரியது.

கூட்டமைப்பிலிருந்து யார் வெளியே போனாலும் மக்கள் வாக்களிப்பார்களா என்ற சந்தேகத்தில்தான் எவருமே (தமிழரசு கட்சி உட்பட) வெளியே போகும் யோசனையில் இல்லை.

நிச்சயமாக சுரேசும் சரி மற்றவர்களும் சரி தமிழ் மக்களுக்காக தான் போராட்டத்திலும் அரசியலிலும் பங்கெடுத்தனர்.

பதிவு செய்யப்பட்ட (சும்மின் கூற்றுப்படி) கூட்டமைப்பில் தலைவர் ,செயலாளர் , பேச்சாளர் என்று ஒரு கொமிற்றி இருக்கும் போது அந்த கொமிற்றிக்கு தெரியாமல் சில தனிப்பட்ட நபர்களால் குறிப்பாக நிர்வாகத்தில் இல்லாத ஒருவரால் சில நடவடிக்கைகள் தொடர்ச்சியாக செய்யப்படும் போது அவர் அது பற்றி மக்களுக்கு தெரிவிப்பதில் தவறில்லை.

ஒற்றுமை குலையக்கூடாது என்று எல்லோரும் வெளியே சொன்னாலும் உண்மையில் வாக்கிற்காக தான் கூட்மைப்பில் தூங்குகிறார்கள்.

தமிழரசுக் கட்சியும் சரி மற்ற கட்சிகளும் சரி கூட்டமைப்பை விட்டு வெளியேறவும் மாட்டார்கள் மற்றக் கட்சியை வெளியேறு என்று பகிரங்கமாக சொல்லவும் மாட்டார்கள்.

தேசியத்தலைவரின் உந்துதலாலும் அவரது சிறந்த நல்லெண்ணத்தாலும் உருவாக்கப்பட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பு .இதிலிருந்து தமிழரசு கட்சி கூட வெளி போகமாட்டார்கள் . அப்படியாயின் அவர்களும் அரசியல் அனாதைகள் தான் ... இங்க தான் மக்களுக்கு தலைவர் மீதுள்ள நம்பிக்கை உள்ளது ... இதனை எவர் மீறினாலும் மக்கள தூக்கி எறிவார்கள் அது சம்பந்தனோ அல்லது சுரேசோ ... யாராக இருந்தாலும் .... 
 
கிட்டத்தட்ட சம்பந்தன் , சுரேஸ் இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாதவர்கள் .. எப்ப தேசியத்தலைவர் இவர்கள் எல்லாரயும் ஒனறினைத்தாரோ அப்ப தான் மக்கள இவர்களை நம்ப தொடங்கினார்கள் ...
 
தந்தை செல்வாவின் கொள்கைகளை காற்றில் விட்டவர் தானே இந்த சம்பந்தன் ... அதேமதிரி மண்டையன் குழு  கொலையாளி தான் சுரேஷ் ..இவர்கள் எல்லாருக்கும் அடையாளம் கிடைத்தது எங்கள் தேசியத்தலைவரால் நியமிக்கப்பட்டார்கள் என்பதால் தான் ....வெளியேறி பாருங்கள் தெரியும் உங்கள் மதிப்பு என்னவென்று ...
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.