Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சினிமா கதாநாயகர்கள்போல் மகிந்த ராஜபக்சவும்...?

Featured Replies

சிறிலங்காவின் சனாதிபதி மகிந்தராஜபக்ச பதவி ஏற்று ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு 19 ஆம் திகதி காலை தனது சொந்த மாவட்டத்தில் (அம்பாந்தோட்டை) வீரவில என்னும் இடத்தில் சிறிலங்காவில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டுப் பேசுகையில் யாருடைய அழுத்தத்திற்கும் அரசாங்கம் பணிந்து செயற்படமாட்டாது என முழங்கினார்.

ஆனால் அன்று இரவு சனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் ஏ-9 பாதை- அதாவது முகமாலைச் சோதனைச்சாவடி- யாழ். குடாநாட்டிற்கான அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்ல ஒருநாள் மட்டும் திறக்கப்படுவதற்கு சனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பான தகவலை முதலில் வழங்கிய பி.பி.சி, இப்பாதையானது அடுத்த நாள் அதாவது 20 ஆம் திகதி திறக்கப்படும் என அரச தரப்புத் தெரிவித்ததாகத் கூறினும் பின்னர் வெளியாகிய தகவல்கள் எப்பொழுது என்று கூறாவது ஒருநாள் என்று மட்டும் கூறின. அதாவது ஏதோ ஒருநாள் என்று அர்த்தம் கொள்ளத்தக்கதாக அறிவிப்புக்கள் வெளியாயின.

எவரது அழுத்தத்திற்கும் பணிந்து செயற்படப் போவதில்லை எனச் சனாதிபதி மகிந்த சூளுரைத்து 12 மணி நேரத்திற்குள் இத்தகையதொரு அறிவிப்பை அவர் வெளியிட வேண்டி ஏன் வந்தது? அத்தகைய அவசியம் ஏன் ஏற்பட்டது?

மகிந்த ராஜபக்சவோ அன்றி அவரது அரசாங்கத்தரப்பினரோ, ஏ-9 பாதை எவ்வேளையிலும் திறக்கப்படமாட்டாது என்று தொடர்ந்து வலியுறுத்;தி வந்தனர். கடந்த சனிக்கிழமை பாராளுமன்றத்தில் பேசிய அமைச்சர் ரோஹித போகொல்லாகம தமிழ்க் கூட்டமைப்பினரின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அரசாங்கம் ஏ-9 வீதியைத் திறந்துவிடுமெனக் கனவுகாணக் கூடாதெனக் காட்டமாகத் தெரிவித்திருந்ததோடு, குடாநாட்டிற்கான பாதை மூடப்பட்டே இருக்கும், அப்பகுதி மக்களுக்குக் கப்பல் மூலம் பொருட்களை அனுப்பிவைக்கின்றோம் எனத் தெரிவித்திருந்தார்.

சனாதிபதியும், அமைச்சர்களும் அழுத்தங்களுக்குப் பணிந்து பாதை திறக்கப்படமாட்டாது என வலியுறுத்தி வந்த நிலையில் திடீரென ஒருநாளாயினும் பாதையைத் திறக்கப் போவதாக அறிவித்தது ஏன்? கப்பல் மூலம் போதிய உணவு அனுப்பப்படும் எனக் கூறியவர்கள் தரை வழிப்பாதையூடாக ஒரு தொகுதி உணவுப் பொருட்கள் அனுப்பப்படும் எனக் கூறியது எதற்காக? சிறிலங்கா அரசாங்கமும்- சனாதிபதி மகிந்த ராஜபக்சவும் நினைத்த மாத்திரத்தில் முடிவுகளை அறிவிக்கவும், அவற்றை நடைமுறைப்படுத்துவதும் சாத்தியப்பாடானதொரு சூழல் இலங்கையில் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு எனச் சனாதிபதியும் அவரது அரசாங்கத்தினரும் கூறிக் கொள்ளலாம். ஆனால் இலங்கையில் சிறிலங்கா ஆட்சியாளர்களின் ஆட்சி அதிகாரமென்பது ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அவர்கள் முதலில் விளங்கிக்கொள்ளுதல் வேண்டும். அதாவது மகிந்த ராஜபக்ச இலங்கைத்தீவிற்குள் எல்லைகள் இல்லை என்று கூறலாம். ஆனால் யதார்த்தத்தில் எல்லைகள் உண்டு.

அதாவது இலங்கையில் சிறிலங்கா அரசின் நிர்வாகப்பகுதி கட்டுப்பாட்டுப்பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி, நிர்வாகப்பகுதி என இரு பகுதிகள் உண்டு இதில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் சிறிலங்கா அரசின் ஆட்சி அதிகாரமோ, நிர்வாகமோ, சட்டம் ஒழுங்கோ ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இல்லை. இதனை முதலில் மகிந்த அரசு புரிந்து கொள்ளுதல் அவசியம். அதாவது தனது அதிகாரம் எல்லைக்குட்பட்டது என்பதை.

ஆகையினால் விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதியுடன் தொடர்புடைய எத்தகையதொரு விடயத்தையும் விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்போ, அனுமதியோ இன்றி அரசாங்கம் மேற்கொள்ள முடியாது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் இவற்றை மறந்து அரசாங்கம் மேற்கொள்ளும் அறிவிப்புக்கள் நடவடிக்கைகள் என்பன பயனளிப்பவையாக இருக்கமாட்டாது.

இந்த வகையிலேயே ஏ-9 பாதை திறப்பு விடயமும் கருத்தில் கொள்ளத்தக்கதாகும். ஏ-9 பாதை திறக்கப்படுதல் வேண்டும், அது அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்திற்காக மட்டுமல்ல, குடாநாட்டு மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தில் இருந்து பொருளாதார நடவடிக்கை வரையிலான அனைத்து தேவைக்கும் பயன்படுத்தப்படவேண்டும் என்பதே விடுதலைப் புலிகளின் நிலைப்பாடாகும்.

ஜெனீவாவில் நடந்த இரண்டாவது பேச்சுவார்த்தையின் போதும் இது விடுதலைப் புலிகளால் உறுதியாகவே முன்வைக்கப்பட்டதொன்றாகும். புலிகளின் இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடையவும், அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான திகதி குறிப்பிடப்பட முடியாமல் போனமைக்கும் காரணமாகும்.

இத்தகையதொரு நிலையில், மகிந்த ராஜபக்ச ஏ-9 பாதை திறப்பானது எத்தரப்புடனும் சம்பந்தப்பட்டதொரு விவகாரம் அல்ல என்பது போலவும், அரசாங்கம் தீர்மானித்தால் ஏ-9 பாதையைத் திறந்து விநியோகத்தை மேற்கொள்ளலாம் என்பது போன்றும் அறிவிப் பொன்றை வெளியிட்டமை அவரின் மோசடித்தனமான நடவடிக்கையே ஆகும்.

ஆனால் புலிகள் பக்கம் பந்தை எறியும் அரசாங்கத்தின் இந்நடவடிக்கையானது சிறு பிள்ளைத்தனமானது. அத்தோடு, அரசாங்கம் இதுவரை தெரிவித்துவந்த தனது நிலைப் பாட்டை ஏன் திடீரென மாற்றிக்கொண்டது என்பதும் பரிசீலனைக்குரியது. அதாவது ஏ-9 பாதையை ஒருநாள் திறக்கப் போவதாக விடுதலைப் புலிகளுக்கோ, கண்காணிப்புக்குழுவிற்கோ உத்தியோகபூர்வமாக அறிவிப்பு எதனையும் செய்யாது அறிவிப்புச் செய்துவிட்டு இதில் ஏற்படக்கூடிய தடங்கல்களுக்கான குற்றச்சாட்டுக்களைப் புலிகள் மீது சுமத்திவிடு வதே அரசின் நோக்கமாக இருத்தல்கூடும்.

அதாவது விடுதலைப் புலிகள் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு முட்டுக்கட்டைகளைத் தோற்றுவிப்பதாகச் சர்வதேச ரீதியில் பிரச்சாரப்படுத்திக் கொள்ள முற்படுவதாகும். இது சிறிலங்கா அரசாங்கத்தின் வழமையான பாணியாகும். ஆனால் சிறிலங்கா அரச தரப்பு இத்தகையதொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பினும், இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கவில்லை என்பதே யதார்த்த பூர்வமானதாகும்.

அதாவது சனாதிபதியின் உத்தரவு குறித்து ஏ-9 பாதையை மூடிவைத்துள்ள இராணுவமோ, யாழ். குடாநாட்டிற்குப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டிய அதிகாரிகளோ அறிந்திருக்கவில்லை. அதாவது அவர்களுக்கு இது குறித்த அறிவிப்புக்கள் விடுக்கப்படவில்லை அதிலும் குறிப்பாக முகமாலை சோதனைச் சாவடி திறக்கக் கூடியதானதொரு நிலையில் தற்பொழுது இல்லை எனக்கூறும் இராணு வத்தரப்பினருக்கு அறிவுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை.

இத்தகையதொரு நிலையில் சிறிலங்கா சனாதிபதியின் இத்திடீர் அறிவிப்பிற்குக் காரணம் என்ன? அழுத்தங்கள், நிர்ப்பந்தங்கள் இன்றி இத்தகையதொரு தீர்மானத்தை அவர் எடுக்க வேண்டி வந்ததாயின் அதற்குக் காரணம்தான் என்ன? அதாவது புதிய அழுத்தங்கள் ஏற்படலாம் என்பதினாலா? அன்றி கடற்படையினரின் துணையுடன் விநியோகம் மேற்கொள்ள முடியாது என்பதினாலா? அன்றி சீரற்ற காலநிலை காரணமாகவா? இவற்றைத் தவிர வேறு காரணிகள் இருப்பதாகவும் தெரியவில்லை. ஏனெனில் சிறிலங்கா அரசியல் களநிலையில் மாற்றமோ அன்றி அவர்களின் மனிதாபிமானச் செயற்பாடுகள் பரந்துபட்டதாக மாறிவிடவோ இல்லை. இன்னமும் படுகொலைகளும், தமிழர் மீதான வன்முறைகளும் மேற்கொள்ளப்பட்டே வருகின்றன.

சனாதிபதி மகிந்த ராஜபக்ச எத்தகைய அழுத்தங்களுக்கும் பணியப் போவதில்லை எனக் கூறலாம். ஆனால் அண்மைக்கால நிகழ்வுகள் சிறிலங்கா அரசு மீது இரு மட்டத் தில் இருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் என்ற ஊகத்தினை இராஜதந்திர வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

ஒன்று சிறிலங்கா அரசிற்கு நிதி உதவி அளித்துவரும் இணைத்தலைமை நாடுகள் நேற்றும் நேற்று முன்தினமும் வோஷிங்டனில் இடம்பெற்ற கூட்டத்தில் சில அழுத்தங்களைப் பிரயோகிப்பது தொடர்பாகச் சில தீர்மானங்களை மேற்கொள்ளலாம் என்ற எதிர்பார்க்கை பரவலாக இருந்தது. இதற்கு ஜெனீவாப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுறுவதற்கு அரசின் விட்டுக்கொடுக்காத போக்குக் காரணமாக இருந்ததென அவர்கள் கருதுவது காரணமாக அமையலாம் எனக் கருதப்பட்டது.

அடுத்ததாக ஐ.நா சபையின் சிறார்கள் மற்றும் இன மோதல்கள் தொடர்பான சிறப்புப் பிரதிநிதி அலன் றொக் சிறிலங்கா அரசைக் கண்டித்துக் கொழும்பில் வெளியிட்ட கருத்துக்களும் அவரது அறிக்கை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ள விடயம் காரணமாக இருக்கலாம்.

அதாவது சிறார்களை அரசுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுக்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று இணைத்துக் கொள்வதற்கும், ஆயுதப்பயிற்சி அளிப்பதற்கும் சிறிலங்கா இராணுவத்தினர் உதவி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளமையாகும்.

இவ்விரண்டு விடயங்களும் அதாவது இணைத்தலைமை நாடுகளின் கூட்டமும், ஐ.நா. சிறப்புப்பிரதிநிதியின் அறிக்கைகளும் சிறிலங்கா அரசிற்கு இராஜதந்திர ரீதியில் பின்னடைவாகவும் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கத்தக்கதானதொன்றா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.