Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்திலோ, கிழக்கிலோ காட்டாத கறுப்புக்கொடியை பொலனறுவவில் காட்டிவிட்டனர்! - மஹிந்தவின் ஆதங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திலோ, கிழக்கிலோ காட்டாத கறுப்புக்கொடியை பொலனறுவவில் காட்டிவிட்டனர்! - மஹிந்தவின் ஆதங்கம்

[saturday 2015-06-13 08:00]
mahinda-sad-350-news.jpg

நான் யாழ்ப்பாணம் சென்றேன். கிழக்கு மாகாணம் சென்றேன். ஆனால் அங்கெல்லாம் எனக்கெதிராக கறுப்புகொடிகள் பறக்கவிடப்படவில்லை. ஆனால் பொலன்னறுவையில் எனக்கெதிராக கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. ஒரு சிலரின் தேவைக்காக மேற்கொள்ளப்பட்ட முட்டாள் தனமான செயல் இதுவாகும் எனத்தெரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, புலிகளின் தேவைகளுக்காக எம்மை சிறைக்கூண்டுகளில் அடைக்கின்றார்கள் என்றும் கூறியுள்ளார்.

  

 

பொலன்னறுவை வெலிகந்த ஸ்ரீ சுதர்ஷன விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.இங்கு முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது,

 

மக்கள் ஆணையில்லா ரணிலுக்கு முதுகெலும்பிருக்குமானால் சுயநம்பிக்கை இருக்குமானால் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்த வேண்டுமென சவால் விடுக்கின்றேன். நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் வெள்ளைக்கொடிகள் பறந்த காலம் ஒன்றிருந்தது. அந்த யுகத்திற்கு 2009 ஆம் ஆண்டு நாம் முற்றுப்புள்ளி வைத்தோம்.

 

நான் யாழ்ப்பாணம் சென்றேன். கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தேன். ஆனால் கறுப்புக்கொடிகள் பறக்க விடப்படவில்லை. ஆனால் இன்று பொலன்னறுவையில் ஒரு சிலரின் தேவைகளுக்காக கறுப்பு கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. இவ்வாறான முட்டாள் தனமான செயல்களை மேற்கொள்ள வேண்டாம்.

கீழ்த்தரமான விதத்தில் இன்று நாம் பழிவாங்கப்படுகின்றோம். சேறு பூசுகிறார்கள். இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்தேன். சர்வதேச நீதிமன்றங்களுக்கு எம்மை கொண்டு செல்வார்களாம். புலிகளின் தேவைகளுக்காக எம்மவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். நிதிக்குற்றவியல் பிரிவென அவர்களுக்கும் தேவையான விதத்தில் ஓர் பிரிவை ஏற்படுத்தி கொண்டு அவர்களுக்கு பிடிக்காதவர்களை விசாரிக்கிறார்கள். கைது செய்கிறார்கள். இந்த நிதிக்குற்றவியல் பிரிவு சட்ட ரீதியானதல்ல.உதவிகளை செய்தாலும் சமுர்த்தியை வழங்கினாலும் இது குற்றச்செயலாகவே நோக்கப்படுகின்றது.

 

பராக்கிரம சமுத்திரத்தில் துறைமுகத்தை ஏற்படுத்துகின்றார்கள். இன்று அங்கிருந்த படகையும் காணவில்லை.எம்மால் விகாரைகளுக்கு செல்ல முடியவில்லை. மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. நீர் விநியோகம் தடை செய்யப்படுகிறது. ஒரு சிலரின் தேவைகளுக்காக கறுப்பு கொடிகள் பறக்கவிடப்படுகின்றன. பொலன்னறுவையில் விவசாயத்தலைவரொருவர் நாட்டில் தலைவரானபோது நாம் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் இன்று மக்கள் ஆணையில்லாத ரணில் குழுவினரோடு இணைந்து எம்மை சிறையில் அடைத்து ஊழல் மோசடிக்காரர்கள் என்ற முத்திரை குத்துவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

இதனை தொலைக்காட்சிகளில் பத்திரிகைகளில் விசேட செய்திகளில் காண்பிக்கப்படுகின்றது. இது தான் இன்றைய நல்லாட்சியா? நான் இன்று இந்த விகாரைக்கு விஜயம் செய்வதை தடுப்பதற்காக விகாரைகளுக்கு ரூபா 20 இலட்சம் வழங்க முன்வந்துள்னளர். ஆனால் விகாராதிபதிகள் அதனை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள். அந்தளவிற்கு இந்த அரசாங்கம் என்னை கண்டு பயந்து போயுள்ளது. எனவே உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்கவும் பொதுத்தேர்தலை நடத்தவும் இதற்கு முகம்கொடுப்பதற்கு எப்போதும் நாம் தயாராகவே உள்ளோம் என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=133952&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே ! நீங்க கொடி காட்டினவனை விட்டுவைப்பீங்களா அண்ணே? கோமணம் கட்டுற தேவையே இல்லாமல் பண்ணிடமாட்டீங்க?

இப்ப வடகிழக்கிற்கு போய் பாருங்கண்ணே

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அம்மான் ராஜபக்ச அணியுடன் இன்று இந்த ஊரவலத்தில் காணப்பட்டார்.

 

பொலனறுவையில் முப்படையினரும் , புலணாய்வுபடையினரும் அதிகளவு இருந்தால் கறுப்பு கொடி உங்களுக்கு காட்டியிருக்க மாட்டார்கள்....மேலும் அப்போழுது நீங்கள் ஜனாதிபதி....இப்போ முன்னாள் ஜனாதிபதி...பல்லுபுடுங்கப்பட்ட பாம்பு....

  • கருத்துக்கள உறவுகள்

தப்பி தவறி திருப்பி ஆட்சிக்கு வந்தால் கறுப்பு கொடி காட்டியவர்களை ஒரு வழி பண்ணி விடுவீர்கள் என்று தான் தமிழ் மக்கள் கறுப்பு கொடி காட்டாமல் விட்டார்களோ தெரியவில்லை. ஆனால் இப்போ வடக்கு கிழக்குக்குக்கு போனால் கட்டாயம் கறுப்பு கொடி காட்டுவார்கள் என நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.