Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களை அகதி முகாமாக்குகின்றது அரசு.

Featured Replies

வடக்குகிழக்கு பிரதேசங்களை

அகதி முகாமாக்குகின்றது அரசு

கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குற்றச்சாட்டு.

""வடக்கு கிழக்கில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களைச் சிங் கள அரசு அகதி முகாம்களாக மாற்றி வரு கின்றது.'' இவ்வாறு குற்றஞ்சாட்டியி ருக்கிறார் இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணா ரட்ன.

கொழும்பு "நிப்பொன் ஹோட் டலில்' நேற்றுக் காலை இடம்பெற்ற ஊடக வியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ""நாடு தற்போது மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. குறிப் பாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். வடக்கு கிழக்கை இலங்கை அரசு அகதி முகாம்களாக மாற்றி வருகின்றது. ஆனால், அரசோ நாட் டைப் பாதுகாக்கும் யுத்தமே தற்பொழுது நடைபெற்று வருகின்றது என்று கூறி வருகின்றது நாட்டின் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஒன்றிணைந்து மக்களுக்கு எது வித நன்மையையும் செய்யவில்லை. தமிழர்களின் பிரச்சினையை ஐக்கிய நாடு களின் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டாலும், இலங்கை அரசு ஏற்றுக்கொள்வதாக இல்லை'' என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2007 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினால் நாட்டு மக்க ளுக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை. மாறாக இலங்கை அரசின் போர்ச் செலவு களுக்கும், ஆடம்பரச் செலவுகளுக்குமே அது பயன்படப் போகின்றது. இதற்கு உதவியாக உலக முதலாளித்துவ நாடு களும் அரசின் பின்னால் செயற்பட்டு வருகின்றன. ரணிலின் கட்சி, அரசுக்கு இதுவே கடைசிச் சந்தர்ப்பம் என்று கூறி சாக்குப் போக்குக் கூறி வருகிறது. மேலும் தமிழ் மக்களுக்குச் சார்பாக நாடாளு மன்றத்தில் குரல் கொடுக்கும் ஒரேயொரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர் நடராஜா ரவிராஜ் சுட்டுக் கொல் லப்பட்டமை, ஜோஸப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் குமார் பொன்னம்பலம் கொலை செய் யப்பட்டமைக்கு அரசுகளே பொறுப் பேற்க வேண்டும். அதேபோல், முன் னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ் மன் கதிர்காமர் படுகொலை செய்யப் பட்டமைக்கு விடுதலைப் புலிகளே பொறுப்புக் கூற வேண்டும் பிரேஸில் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் எமது இடதுசாரி முன்னணியினர், தமிழர்கள் சார் பாகப் பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்றும், இனிவரும் காலங்களில் மஹிந்த அரசுக்கு எதி ராகப் போராட வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்றும் இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மேலும் தெரிவித்தார்.

www.uthayan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.