Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலை வதைமுகாம் ஆதாரம் அம்பலம்! கடற்படைத் தளபதி சிக்கினார்!

Featured Replies

திருமலை வதைமுகாம் ஆதாரம் அம்பலம்! கடற்படைத் தளபதி சிக்கினார்!
[ செவ்வாய்க்கிழமை, 23 யூன் 2015, 07:01.11 PM GMT ]
kv_thavarasa_03.jpg
2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் தெகிவளையில ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் கடற்படையைச் சேர்ந்தவர்கள் தொடர்புபட்டுள்ளனர்.

கடற்படையைச் சேர்ந்த லுதினன் கமாண்டர்களான ரணசிங்க சுமித் ரணசிங்க, ஹெட்டிஆராச்சி பிரசாத், சம்பத் முனசிங்க ஆகியோர் மூவருக்கும் எதிராக சான்று உள்ளதெனவும் இந்தக் கடத்தலில் புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான நிசாந்த டி சில்வா சாட்சியமளித்தார்

 

 

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு விசாரணையில் புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான நிசாந்த டி சில்வா சாட்சியத்தை சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா நெறிப்படுத்துகையில்,

சாட்சி மேலும் தனது சாட்சியத்தில் கடற்படையை சேர்ந்த லுதினன் கமாண்டர்களான ரணசிங்க சுமித் ரணசிங்க, ஹெட்டிஆராச்சி பிரசாத், சம்பத் முனசிங்க ஆகிய மூவரும் கொழும்பு தெகிவளை, செட்டித்தெரு, வத்தளை ஆகிய இடங்களில் வைத்து 11பேரைக் கடத்தியதாகவும் அவர்களில் தெகிவளையில் கடத்தப்பட்ட ஜந்து மாணவர்களும் உள்ளடங்குவதாக சாட்சியமளித்தார்.

மேலும் தனது சாட்சியத்தில் கடத்தியவர்கள் இவ்வாறு கடத்திக் கொண்டுவந்து முதலில் சைத்திய வீதியிலும் பின்னர் திருகோணமலை கடற்படை சித்திரவதை முகாமில் அடைத்து வைத்ததன் பின் மாணவர்களை விடுதலை செய்வதற்கு கப்பமாக ஒவ்வொருவரிடமும் ஒரு கோடி ருபா கப்பம் கோரியுள்ளதாகவும் சான்று காணப்படுவதாக சாட்சியம் அளித்ததார்.

இதன்போது சாட்சியத்தை நெறிப்படுத்திய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா, சாட்சியிடம் மூன்று கடற்படை அதிகாரிகளும் மாணவர்களை கடத்திவந்து சித்திரவதை முகாமில் தடுத்த வைத்து கப்பம் கோரியமையை கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு தெரியுமா என வினவியபோது சாட்சி தனது சாட்சியத்தில்,

கடற்படைப் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தமையை முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவும், முன்னாள் கடற்படை பேச்சாளர் திசாநாயகாவும் நன்கு அறிந்திருந்ததாகவும் தனது சாட்சியத்தில் தெரிவித்ததுடன் தளபதி வசந்த கரன்னாகொட நினைந்திருந்தால் இந்த மாணவர்களை விடுதலை செய்திருக்கலாம் எனவும் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

42 சாட்சியங்களை விசாரணைக்கு உட்படுத்தியதுடன் சைத்திய வீதியிலுள்ள தடுப்பு முகாமையும் திருகோணமலையில் அமைந்துள்ள கடற்படை சித்திரவதை முகாமையும் விசாரணைக்குழு சென்று பார்வையிட்டு விசாரணை நடாத்தியதில் வெளிவந்த சான்றுகளின் அடிப்படையிலேயே சாட்சியம் அளிப்பதாக சாட்சி நீதிமன்றில் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை ஜிலை மாதம் 14ம் திகதிக்கு பிரதான நீதிமன்ற நீதிபதி கியான் பிலபிடிய ஒத்திவைத்தார்.

மனுதாரர்கள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணிகளான கே.வி தவராசாவும் ஜே.சி வலியமுனவும் ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/show-RUmtyGRXSUfv3G.html#

 

Edited by BLUE BIRD

  • தொடங்கியவர்

அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடம் மிகவும் மோசமானதாக இருந்துள்ளது. அதற்குள் உயிர் வாழ்வது மிகவும் கடினமானது.  அவற்றை இப்போது முத்திரையிட்டு மூடியுள்ளோம்.

அந்த அறைகள், டச்சுக்காரர்களால் ஆயுதங்கள் வைக்கப் பயன்படுத்தப்பட்டவை.

இந்த இளைஞர்கள் கடத்தலுக்கு, கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னகொடவின் பாதுகாப்பு அணியில் இருந்த லெப்.கொமாண்டர் சம்பத் முனசிங்க, ஹெற்றியாராச்சி, ரணசிங்க ஆகிய அதிகாரிகள் பொறுப்பாக இருந்துள்ளனர்.

இந்தக் கடத்தல், குறித்து கடற்படைத் தளபதி நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.

கடத்தப்பட்டவர்களை விடுவிக்க பெற்றோரிடம் 5 இலட்சம் ரூபா தொடக்கம் 10 மில்லியன் ரூபா வரை கப்பமாக கோரப்பட்டுள்ளது.

இதுபற்றிய அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ளோம். அவரது பதில் கிடைக்கவில்லை.” என்றும் உதவி ஆய்வாளர் நிசாந்த சில்வா சாட்சியம் அளித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவும் செய்து விட்டு, எப்படி இன்னும் வெளியே இருக்கிறார்கள்? :(

பிடிச்சு உள்ள போடுங்க, ஜட் ஜயா.. 

தலைப்பு நன்றாக இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

தடியைக் கொடுத்து அடியை வாங்கும் உந்த கிரிமினல் வசந்த கருணாகொட இப்ப ஜப்பான் தூதுவர்....:o

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைப்பற்றி புலம்பெயர்ந்தவர்கள் பேசாமல் இருப்பது ஒன்றும் புதினமான காரியம் அல்ல. 

த தே கூ. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.