Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகநூலில் இருந்து நடிகர் சிவகுமார் திடீர் விலகல்!

Featured Replies

முகநூலில் இருந்து நடிகர் சிவகுமார் திடீர் விலகல்!

sivakumar.jpgசென்னை: சிலர் சாதி பற்றிய கருத்து பரிமாற்றத்தை முன்வைத்ததால்,  முகநூலில் (ஃபேஸ் புக்) இருந்து விலகுவதாக நடிகர் சிவகுமார் அறிவித்துள்ளார்.

நடிகர் சிவகுமார், தனது முகநூலில் தந்தை பெரியார், ஜான்சி ராணி, வேலுநாச்சியார், முத்துவடுகநாதன், எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா ஆகியோரை பற்றி தொடர்ந்து எழுதி வந்தார்.

இதை தொடர்ந்து தீரன் சின்னமலை பற்றி சமீபத்தில் அவர் எழுதினார். இதைத் தொடர்ந்து, அவரது முகநூலில் சாதி பற்றிய கருத்துக்களை சிலர் பரிமாறியதோடு நிற்காமல், ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் வகையிலான வார்த்தைகளையும் வெளியிட்டார்கள். இதைத் தொடர்ந்து, முகநூல் கணக்கில் இருந்து நடிகர் சிவகுமார் விலகிக்கொள்வதாக தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது முகநூலில், ''என்னை மனிதப் புனிதன் என்றோ, வழிகாட்டும் தலைவன் என்றோ, வாரி வழங்கும் வள்ளல் என்றோ, பேரறிவாளன் என்றோ, நடிப்புக்கலை, ஓவியக் கலையில் கரை கண்டவன் என்றோ, பெரிய சாதனையாளன் என்றோ நினைத்துக் கொண்டு நான் முகநூலில் பதிவிடவில்லை. 70 வயதைத் தாண்டி, முடிந்தவரை நேர்மையாக, இந்த மண்ணில் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளவே எழுதி வந்தேன்.

இது சிலருக்குள் உறங்கிக் கொண்டிருந்த வன்மத்தை, சாதி வெறியை வளர்த்துக்கொள்ள காரணமாக இருக்கிறது என்று அறிந்து வருந்துகிறேன். தனிப்பட்ட முறையில் என்னை தாக்கவும், குடும்பத்தினரை குறைகூறவும், நானே களம் அமைத்துக்கொடுத்ததாக உணர்கிறேன். என் உலகம் சிறியது. அதில் என் வாழ்க்கை மிகவும் எளிமையானது. இது உங்கள் உலகம், உங்கள் சுதந்திரம். நீங்கள் நினைத்தபடி வாழுங்கள். எல்லாரும் இன்புற்றிருக்கவே இத்துடன் என் முகநூல் பதிவுகளை நிறைவு செய்கிறேன்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=48608

  • தொடங்கியவர்

நடிகர் சிவகுமார் ஃபேஸ்புக்கை விட்டு வெளியேற இந்த கட்டுரைதான் காரணமா?

டிகர் சிவகுமார் ஃபேஸ்புக் தளத்தில் இருந்து விலகியுள்ளார். அவர் எழுதிய இந்த கட்டுரையில் சாதி குறித்த கருத்துகள் பகிரப்பட்டதால், சிவகுமார் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

வேலு நாச்சியார் பிறந்து 26 வருடம் கழித்து 1756-ல் கொங்கு மண்ணில் பிறந்தவர்- தீரன் சின்னமலை. இளம் வயதிலேயே கல்வி,கேள்வி - வில்,வாள், சிலம்பம், குதிரை ஏற்றத்தில் தேர்ச்சி....எல்லாச் சாதியினரும் கூட்டாளிகள்..... மைசூர் திப்பு ஆட்கள் சேலம், தர்மபுரி, சங்ககிரி பகுதியில் கப்பம் வசூல்...
அவர்களைத் தடுத்து நிறுத்தி -வசூல் தொகையை வாங்கிக் கொண்டு -'சிவன்மலை- சென்னிமலைக்கிடையே - சின்னமலை நான்' என்று திப்புவிடம் சொல் என்றார்..பின் 10,000 வீரர்களுடன் மைசூர் சென்று, திப்புவுடன் கைகோர்த்து, பொது எதிரி வெள்ளையனோடு மோதினார்.


கள்ளிக்கோட்டையிலிருந்து 27,000 வீரர்களுடன் வந்து 2 மாதம் போரிட்ட ஜெனரல் ஹாரிஸ், திப்புவைக் கொன்று மைசூரைக் கைப்பற்றினான் . ஊர் திரும்பிய தீரன், ஓடாநிலையில் கோட்டை கட்டி படைபலம் பெருக்கினார்..புதிதாய் வந்த கர்னல் மேக்ஸ்வெல் -'கொங்கு நாட்டை நீ வைத்துக்கொள் .
காவிரிக் கரையில், குதிரைப்படை நிறுத்த அனுமதி கொடு' எனக் கேட்க தீரன் மறுத்தார்...1801 -ல் காவிரி ஆற்றுக்குள் மேக்ஸ்வெல் குதிரைப் படை.. சுழலுக்குள்ளும் பாறை இடுக்குகளிலும் குதிரைகள் சிக்கித் தத்தளிக்க - தீரன் அந்தக் குதிரைகளை வெட்டிச் சாய்த்தார்...
1802 -ல் பழிவாங்க, ஓடாநிலை கோட்டையில் முற்றுகைப் போர்..தீரன் கையாள் கருப்பன் சேர்வை தலையை, மேக்ஸ்வெல்,வாள் பதம் பார்க்க,பாய்ந்து சென்ற தீரன், இளநி போல், கர்னல் தலையைச் சீவி, கரும்புள்ளி, செம்புள்ளி
குத்தி - கட்டை வண்டியில் தலையை
ஊர் வலமாக எடுத்துச் சென்றார்..

theeran.jpg


siva_1_350.jpgமைசூர், ஜென்ரல் ஹாரிஸ், இப்போது இங்கே...1804 - அரச்சலூர் அம்மன் திருவிழா..3000 வீரர்களுடன் ஹாரிஸ்...
ஷூ காலில் கோயிலுள் சென்று தேரை உடைத்தான்... செய்தி எட்டிட ஒற்றை ஆளாக, எறிகுண்டுகளுடன் குதிரையில் வந்து, அத்தனை வீரர்களையும் எறிகுண்டால் தாக்கி,விரட்டினார் தீரன்.
அவமானப்பட்ட ஹாரிஸ் -சென்னையிலிருந்து 70 பீரங்கிகள்- கள்ளிக்கோட்டையிலிருந்து, யுத்த
தளவாடங்களுடன் வந்து, அதிகாலை
4 மணிக்கே கோட்டையைத் தாக்கி
உள்ளே நுழைந்தால்.! .ஈ காக்கை அங்கு
இல்லை. அறுந்து போன செருப்புகளின்
அடிப்பகுதியில் -மைசூரில் கைதாகி அப்ரூவரான,தீரனின் வலது கரம் வேலப்பன்- உளவாளியாக இருந்து- அவ்வப்போது கள்ளிக் கோட்டையிலிருந்து தீரனுக்கு ரகசியமாகச் செய்தி அனுப்பிய கடிதங்கள்.!! அடுத்த கணம், செருப்புத் தைத்த பொல்லான், ரகசியம் சொல்ல மறுக்க, கோட்டை மீது வைத்து சுட்டுக் கொன்றனர்...அடுத்து வேலப்பன் தலை தரையில் உருண்டது....
சின்னமலை எங்கே ? பழனி கருமலைப் பகுதியில் தலை மறைவு.அங்கே தேடுதல் வேட்டை.. திண்டுக்கல் ஷேக் ஹுசைன் வீட்டு திருமணத்திலும் மாறு வேடத்தில் தப்பி விட்டார்.. வெறிநாயைப் போல் வெள்ளையர் தேடல்.. காட்டுக்குள் ஒரு குடிசை !! நல்லான் சமையல். அவனை நம்பி, ஆயுதங்களை வாசலில் வைத்துவிட்டு சாப்பிட இலையில் உட்கார, 200 வீரர்கள் சுற்றி வளைத்து கைது.. துரோகி நல்லான் காட்டிக் கொடுத்துவிட்டான். 1805 -ஜூலை
31-ந்தேதி சங்ககிரிக்கோட்டை
உச்சியில், தம்பி கிலேதருடன், தீரன் சின்னமலை நாட்டு விடுதலைக்காக தூக்குக் கயிறை முத்தமிட்டார் !!

http://www.vikatan.com/news/article.php?aid=48609

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயதிலும் சிவகுமார் அவர்கள் மனிதர்களுக்கு ஏதாவது நன்மை செய்யலாம் என நினைத்தாலும் அதற்கும் குதர்க்கமாக எழுதுபவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.