Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் டயாஸ்பொறா பலமானதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் டயாஸ்பொறா பலமானதா?

கலாநிதி சர்வேந்திரா

தமிழ் டயாஸ்பொறா பலமானதா?
 

 

தமிழ் டயாஸ்பொறாவின் பலம் தொடர்பான கருத்துக்கள் அண்மையில் வெளிப்பட்டிருந்தன. எரிக் சூல்கெய்ம் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்கள் என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இரு வாரங்களுக்கு முன்னர் இலண்டன் பேச்சுவார்த்தை தொடர்பாக நிலாந்தன் எழுதிய கட்டுரையில் எரிக் சூல்கெய்ம் வெளிப்படுத்திய கருத்தைக் குறிப்பிட்டு இலண்டன் பேச்சுவார்த்தைகளின் போதும் பின்னும் தமிழ் டயாஸ்பொறா நடந்து கொள்வதைப் பாரத்தால் அப்படியா தெரிகிறது என்ற கேள்வியினை எழுப்பியிருந்தார்.

உண்மையில் தமிழ் டயாஸ்பொறா பலம்மிக்கதுதானா? இதுவே இன்றைய பத்தியின் பேசுபொருள் ஆகிறது. இங்கு பலம் என்பது எதனைக் குறிக்கிறது? வளங்கள் நிறைந்த சமூகம் என்பதையா? அனைத்துலக நண்பர்கள் நிறைந்தவர்கள் என்பதனையா? தாம் வாழும் நாடுகளின் அரசியல் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தும் ஆற்றல் கொண்டவர்கள் என்பதனையா?

எரிக் சூல்கெய்ம் புலம்பெயர் தமிழ் மக்கள் பலம்மிக்கவர்கள் என்பதனை அவர்கள் வளம் மிகுந்த மக்கள் என்ற அர்த்தத்திலேயே வெளிப்படுத்தியுள்ளார். கடந்த மாதம் ஒஸ்லோவில் தமிழ் டயாஸ்பொறாவுடன் அவர் நடத்திய சந்திப்பில், சற்று விபரமாகவே தாம் பலம் என்று கருதுவதைப் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். புலம்பெயர் தமிழ் மக்கள் கடும் உழைப்பாளிகள் என்பதனையும், பெருந்தொகையான உயர்தொழில் நிபுணர்களைக் கொண்ட சமூகம் என்பதனையும் பல்வேறு துறைகளில் பிரவேசித்து வெற்றி கண்டுவரும் மக்கள் என்பதனையும் அவர் அந்தச் சந்திப்பில் சிலாகித்துப் பேசினார். புலம்பெயர் மக்கள் அரசியற் பலம் கொண்டவர்கள் என்ற அர்த்தத்தில் சூல்கெய்ம் தனது கருத்தை வெளியிடவில்லை. உண்மையில் தமிழ் டயாஸ்பொறாவின் அரசியல் நிலைப்பாடு சூல்கெய்மை பெரிதும் கவர்ந்ததாகத் தெரியவில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகப் பகுதிகளை மீளக் கட்டியெழுப்பும் பலம் தமிழ் டயாஸ்பொறாவுக்கு உண்டு என்ற அர்த்தத்திலேயே அவர் தமிழ் டயாஸ்பொறாவின் பலம் பற்றிப் பேசுகிறார்.

இந்த அர்த்தத்தில புலம்பெயர் தமிழ் மக்கள் பலம் கொண்டவர்கள் என்பது உண்மையே. ஆனால் நடைமுறையில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் கடந்த பின்னரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகப் பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு தமிழ் டயாஸ்பொறா பாரிய பங்களிப்பை வழங்கும் நிலைமைகள் தோற்றம் பெறவில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் சிறிய அளவிலான புனர்வாழ்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலுமே புலம்பெயர் தமிழ் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. மேம்பாட்டின் அரசியல் (Politics of development), சிறிலங்கா அரசின் கெடுபிடிகள், தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்கா படையினரின் பிரசன்னம், நிறுவனங்களின் பற்றாக்குறை, நம்பகத்தன்மையில் ஏற்பட்ட வீழ்ச்சி, முதலீடு செய்வதற்கான உகந்த சூழல் உருவாக்கப்படாமை, துறைசார் வழிகாட்டுதல் இன்மை, புலம்பெயர் மக்கள் பாதுகாப்பு உணர்வுடன் தாயக மேம்பாட்டில் பங்கு பெறுவதற்கான பொறிமுறை ஏற்படுத்தப்படாமை போன்ற பல விடயங்கள் இதற்குக் காரணங்களாக உள்ளன.

நிலாந்தன் தமிழ் டயாஸ்பொறாவின் பலம் என்பதனை அதனது அரசியற் பரிமாணத்துடன் நோக்குகின்றார். தமிழ் டயாஸ்பொறாவின் அரசியற் பரிமாணத்தை, அரசியற் பலத்தை நாம் இரண்டு தளங்களில் மதிப்பீடு செய்ய வேண்டும். முதலாவது தளம் தமிழ் டயாஸ்பொறா தமிழர் தேசத்தின் அரசியற் பலத்துக்கு வழங்கும் பங்கு தொடர்பானது. இதனைப் புரிந்துகொள்ள நாம் ஒரு கற்பனை எடுகோளை கவனத்திற் கொள்ளல் பயன் தரும். முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின்னர் தமிழ் டயாஸ்பொறா என்ற அங்கம் இல்லாத நிலையில் ஈழத் தமிழர் தேசம் இருந்திருந்தால் அதன் அரசியற்பலம் எவ்வாறு இருந்திருக்கும்?

தமிழ் டயாஸ்பொறா பலமானதா?

இத்தகையதொரு நிலை இருந்திருப்பின் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியற்பலம் தற்போதய அரசியற் பலத்தை விடக் குறைவானதாகவே இருந்திருக்கும். ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினை தற்போதய அளவை விடக் குறைந்தளவு அனைத்துலகக் கவனத்தையே ஈர்த்திருக்கும். யுத்தத்தால் அழிவுற்ற தேசத்தைக் கட்டியெழுப்பவதற்கு ஒப்பீட்டளவில் குறைந்தளவு வளங்களே தமிழர் தேசத்திடம் இருந்திருக்கும். இதனைக் குறிப்பிடும் இதேவேளை, புலம்பெயர்வினால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் நாம் கவனத்திற் கொண்டாக வேண்டும். இருப்பினும் தமிழ் டயாஸ்பொறா தமிழர் தேசத்தின் வளங்களில் ஒன்று என்பதனையும் அது ஈழத் தமிழர் தேசத்தின் அரசியற்பலத்தின் ஓர் ஊற்று என்பதனையும் நாம் உணர்ந்து கொள்ளல் அவ்வளவு கடினம் அல்ல. இந்த வகையில் தமிழ் டயாஸ்பொறாவின் பங்கு தமிழர் தேசத்தின் அரசியற் பலத்தின் உள்ளகப் பரிமாணத்தில் முக்கியமாகிறது.

இரண்டாவது தளம் தமிழர்களின் தேசியப் பிரச்சினை தொடர்பாகத் தாம் வாழும் நாடுகளின் அரசியல் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தும் ஆற்றல் எவ்வளவு தூரம் தமிழ் டயாஸ்பொறாவுக்கு உண்டு என்பதனை நோக்குவதில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்தத் தளத்தில் இருந்து பார்த்தால் தமிழ் டயாஸ்பொறாவின் அரசியற்பலம் வலுவற்றதாகவே உள்ளது. தமிழ் டயாஸ்பொறா மட்டுமன்றி ஏனைய பல டயாஸ்பொறாக்களின் நிலையும் இதுதான். தமிழ் டயாஸ்பொறா ஒப்பீட்டளவில் இளையது. தமிழ் டயாஸ்பொறாவின் முதலாம் தலைமுறையின் வாழக்கைப் போராட்டமும் வாழ்க்கைமுறையும் தாம் வாழும் நாடுகளின் அரசியல் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்த உறுதுணையாகும் வகையிலான உறவுகளையும் தொடர்புகளையும் பேணுவதற்கு இடம் தரவில்லை. மேலும் தமிழ் டயாஸ்பொறா கொண்டிருக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும், மேற்குலக நாடுகள் தமது நலன்களின் அடிப்படையில் இலங்கைத் தீவின் தேசிய இனப் பிரச்சினை குறித்துக் கொண்டிருக்கும் நிலைப்பாட்டுக்குமிடையே பாரிய இடைவெளி உண்டு. இதனால் புலம்பெயர் தமிழ் அரசியல் அமைப்புகளின் நிலை எதிர்நீச்சல் போடுவது போன்றதுதான். தாம் வாழும் நாடுகளின் அரசியல் முடிவுகளை எதிர்த்துச் செயற்பட வேண்டிய நிலையில்தான் அவர்கள் உள்ளார்கள். அரசுகளின் விருப்பத்துக்கமைய நடந்தால் தமிழ் மக்களின் அடிப்படைகள் பலவற்றைக் கைவிட வேண்டிவரும். இத்தகையதொரு சூழலில் தமிழ் டயாஸ்பொறாவை யூதர்களுடன் ஒப்புவமை செய்வதனை அர்த்தமற்ற ஓர் அணுகுமுறை என்றே கூற வேண்டும்

தமிழ் டயாஸ்பொறா தாம் வாழும் நாடுகளின் அரசியல் முடிவுகளில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்த முடியும்? இதற்கு அனைத்துலக உறவுகள் கோட்பாட்டில் இருந்து பதில் காண முயல்வோம். அனைத்துலுக உறவுகள் கோட்பாட்டு அணுகுமுறைகளில் Realism, Constructivism என்ற இரு அணுகுமுறைகள் முக்கியம் பெறுன்றன. Realism அனைத்துலுக உறவுகளில் நலன்களின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுகிறது. Constructivism உலக சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விழுமியங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுகிறது. இவை இரண்டையும் இணைத்துப் பார்த்தால் அரசுகள் தமது நலன்களை அடைந்து கொள்வதற்கு அனைத்துலக விழுமியங்களை மீறாது செயற்பட வேண்டியது முக்கியமானதாக உள்ளது. இதனால்தான் எண்ணைக்காகச் சண்டை பிடித்தாலும் ஜனநாயகத்துக்காகவும் தற்பாதுகாப்புக்காகவும் சண்டை பிடிப்பதாகச் சொல்ல வேண்டிய தேவை அரசுகளுக்கு ஏற்படுகிறது. நலன்களுக்கும் தர்மத்துக்குமான இச் சண்டையில் அரசுகளின் நலன்களின் கணக்கை தமிழ் டயாஸ்பொறாவால் மாற்றுவது கடினமானது. ஆனால் உலக விழுமியங்களுக்கு மாறாகத் தாம் வாழும் நாடுகளின் அரசுகள் நடப்பதைத் தடுக்கும் வகையில் வியூகம் அமைத்துச் செயற்படும் வாய்ப்பு தமிழ் டயாஸ்பொறாவுக்கு உண்டு.

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=6&contentid=cef3b450-fd11-4061-8635-365935418c9c

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் டயஸ்போறாவில் புலம்பெயர் புலிவால்கள், கடைசி பஸ்ஸில் வந்த படிக்காத மேதைகள், மலசலகூடம் கழுவிகள், கோப்பை கழுவிகள் இப்படிப்பலர் உள்ளனர் எனப் புலத்து அரசியல் தலைமைகளும் புலத்தின் அதிகார வர்க்கத்தினரும் சொல்லினம். அதாவது அவர்களது பலமென்பது கழுவிஊத்தும் பலம் எனக்கூறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் டயஸ்பெறா நல்ல பலமாக விசிலடிக்கக்கூடிய விசிலடிச்சான் குஞ்சுகள்! அதுவும் கொத்துரொட்டி சாப்பிட்டு நல்ல ஸ்ரோங்! எனவே நல்ல பலமானவர்கள். ஆனால் என்ன இப்ப களத்தில பலிக்கடாக்கள் இல்லை. அதனால பலமா விசிலடிக்க இப்ப முடியுதில்ல.  அதுக்குத்தான் இப்ப தீவிர முனைப்பில இருக்கினம்.  இப்ப வருமானம் கொஞ்சம் வீக் தான் ஆனாள் முந்திச் சேர்த்த காசு நிறைய இருக்கிறதால பேஸ்மண்டு நல்ல ஸ்ராங்கா இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கு தமிழ் எப்பவும் wishful thinking ஆகத் தான் கட்டுரைகள் போடுகிறது என நான் நினைக்கிறேன்.

என் கருத்து, தமிழ் டயஸ்போறாவின் பலம் என்பது ஊரில் உள்ள மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து சில சமயங்களில் மௌனமும் சில சமயங்களில் குரலும் தருவதன் மூலமே பயனுள்ளதாக மாற முடியும். உதாரணமாக, சுமந்திரன் தன் முயற்சியால் உள்ளூர் மக்களுக்கு நன்மை செய்கிறேன் என்றால், நாம் செய்ய வேண்டியது மௌனமாய் இருப்பது (அவ்வளவு கஷ்டமாப்பா அது?:mellow:). அதே வேளை சுமந்திரன் நேர் எதிராய் திரும்பி "வடக்கில் இராணுவம் இருக்கட்டும்!" என்று ஒரு வரி தானும் சொன்னால் பகிரங்கமாகக் கண்டித்துக் குரல் கொடுக்கலாம். ஆனால் சும்மா ஆளைப் பிடிக்கவில்லை என்பதற்காக சுமந்திரன் செய்யும்/சொல்லும் எல்லாத்திற்கும் கூவிக் கொண்டும் பொய்ச்செய்தி போட்டுக் கொண்டும் இருந்தால் தமிழ் டயஸ்போரா வெறும் தவளைக் கூட்டமாகத் தான் மாறும்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.