Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித அவலங்களும் இராணுவ அனுகூலங்களும்.

Featured Replies

மனித அவலங்களும் இராணுவ அனுகூலங்களும்.

-அருஸ்- (வேல்ஸ்)-

இராணுவ மேலான்மையை நிலைநிறுத்துவதற்காக சிங்கள அரசு யாழ். குடாவில் உள்ள ஆறு லட்சம் மக்களையும், கிழக்கில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களையும் படுகொலை செய்யத் தயாராகி வருகின்றது. இதன் அங்கமாகவே ஏ-9 பாதையை மூடியதுடன், வாகரையிலும் திட்டமிட்ட மனித அவலங்களை உருவாக்கி வருகின்றது.

போரில் ஈடுபடும் தரப்புக்கள் துப்பாக்கி, வெடிமருந்துகளுக்கு இணையான ஆயுதமாக உணவையும்; பயன்படுத்துவதுண்டு. சாதாரண காலத்தைவிட போரின் போது அல்லது ஒரு அழுத்தமான சூழ்நிலையில் ஏற்படுத்தப்படும் உணவுத்தடைகள் அங்கு வாழும் மக்களுக்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தவல்லது. ஏனெனில்

போரின்போது மக்களின் விவசாய மற்றும் கடல்சார் நடவடிக்கைகள் பாதிப்படைவதுடன், தொழில்புரியும் மக்களும் இடம் பெயர வேண்டிய நிலமையும் ஏற்படுகின்றது.

போக்குவரத்து நெருக்கடியினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை உள்ளுரிலேயே விநியோகமும் செய்ய முடியாத நிலையும் உண்டாகின்றது.

போரின் போதான பொருளாதாரச்சுமை அப்பாவி மக்களின் வாழ்க்கையில் பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் கிடைக்கும் உணவுப்பொருட்களையும் அதிக விலை கொடுத்து வாங்கமுடியாத நிலையையும் உருவாக்கி விடுகின்றது.

எனவே தான் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உணவை போரியல் ஆயுதமாக பயன்படுத்துவதை சர்வதேசமும், ஐ.நாவும் கடுமையாக தடைசெய்திருந்தன. ஆனால் உலக வரலாற்றில் இனவாத அரசுகளும் சரி ஜனநாயக நாடுகள் என தம்பட்டம் அடிப்பவர்களும் சரி உணவையும், பாலியல் வன்புணர்வுகளையும், படுகொலைகளையும் போரியல் ஆயுதமாக பயன்படுத்துவதை நிறுத்தியது கிடையாது.

பனிப்போர் காலத்தில் சோவியத்தின் மீதும் அதன் முன்பும் பின்னரும் அரபு நாடுகள் மீதும் அந்த நாடுகளை அடிபணிய வைக்கும் ஆயுதமாக உணவை அமெரிக்கா பயன்படுத்தியதுண்டு. சூடானில் பெண்கள் மீதான வன்முறைகளையும், பாலியல் வன்புணர்வுகளையும் போரியல் ஆயுதமாக அந்த அரசு பயன்படுத்தியதுண்டு. கோசோவா, பாலஸ்தீனம், ருவாண்டா என படுகொலை கலாச்சாரமும் மறையவிலை.

அதாவது மக்களின் மனவுறுதியையும் விடுதலை வேட்கையையும் மழுங்கடிக்கும் நோக்கம் தான் இத்தகைய மனித அவலங்களை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணம். இரண்டம் உலகப்போருக்கு முன்பு நிகழ்ந்த போர்களில் மக்களின் இழப்புக்கள் படையினரின் இழப்புக்களுடன் ஒப்பிடும் போது 5 சதவீதமானது. ஆனால் அதன்பின்னர் இன்றுவரை நடைபெறும் போர்களில் படையினரின் இழப்புக்களுடன் ஒப்பிடும் போது பொதுமக்களின் இழப்புக்கள் 90 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

இது எதைக்காட்டுகிறது? போரை வெல்வதற்கு மக்களை அழிக்கும் உத்திகளையே பெரும்பாலான நாடுகள் கடைப்பிடிக்கின்றன. இதற்கு ஆதாரமாக ஜப்பானில் அழிந்து போன மக்கள் செறிந்த இரு நகரங்கள், வியட்நாமில் கொல்லப்பட்ட மில்லியன் கணக்கான மக்கள், இன்றும் ஈராக்கில் கொல்லப்படும் இலட்சக்கணக்கான மக்களையும் குறிப்பிடலாம்.

சிங்கள அரசும் தனது இராணுவ இயலாமையை மறைப்பதற்கும், படையினரின் நலன்களை பேணுவதற்கும் தமிழ் மக்களின் மீதான இன அழிப்பைத் தான் முதன்மைப்படுத்தியுள்ளது. இது இருவகைப்படும்

நேரடியாக இனஅழிப்பு: படுகொலைகள், குண்டுவீச்சுக்கள், விமானத்தாக்குதல்கள் போன்றன இதில் அடங்கும்.

நேரடியற்ற இன அழிப்பு: பொருளாதாரத்தடைகள், போக்குவரத்து தடைகள் காணாமல் போதல் என்பன இதில் அடங்கும்.

அரசின் இந்த இன அழிப்புக்களின் பின்னணியில் பாரிய இராணுவ நலன்களே உள்ளது. அதாவது 40,000 படையினரை பாதுகாக்க ஆறு லட்சம் மக்களை கேடயமாக்கியதுடன் சிங்கள அரச நீதித்துறையால் பிரிக்கப்பட்ட வடக்கையும் கிழக்கையும் செயல்வடிவில் பிரிப்பதற்கு வாகரை ஆக்கிரமிப்பிற்கும் முயற்சி செய்கிறது.

சிங்கள அரசுகளை பொறுத்தவரை கிழக்கை முற்றுமுழுதாக தழிழீழ போராட்டத்தில் இருந்து அந்நியப்படுத்துவதன் மூலம் போராட்டத்தை பலவீனப்படுத்திவிடலாம் என கனவு காண்பது வழமை. கனவு என்று மட்டும் கூறிவிட முடியாது இந்தியாவினதும் சில மேற்குலக நாடுகளினதும் ஆலோசனைகளும் இது தான்.

இங்கு இந்தியாவின் செயற்பாட்டை நேரடியாக குறிப்பிடுவதன் காரணம் அதன் இரட்டை முகக்கொள்கை தான். தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு முகத்தையும் சிங்கள அரசிற்கு ஒரு முகத்தையும் தான் இந்திய மத்திய அரசு காட்டிவருகிறது. இதற்கு ஆதாரங்கள் மிகப்பல.

இந்திய மத்திய அரசு சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்ட எந்த ஒரு படுகொலையையும் இதுவரை கண்டித்தது இல்லை (இது இந்தியாவின் காந்தீயக்கொள்ளையாகக்கூட இருக்கலாம்). மேலும் சிங்கள அரசினால் கொள்வனவு செய்யப்படும் மிக்-29 வகை போர் விமானங்களுக்கான பயிற்சியையும் மிக இரகசியமாக சிங்கள விமானப்படைக்கு வழங்கி வருகின்றது.

கருணாவின் பிளவின் போது அவரின் மனைவி நிராவையும் பிள்ளைகளையும் பெங்களுரில் பாதுகாப்பாக வைத்திருந்தது, போர்நிறுத்த காலத்தில் இராணுவ ஆலோசனைகளை வழங்கியது (உயர் பாதுகாப்புவலையம் தொடர்பான அறிக்கை) என்பனவும் போர்நிறுத்தத்தை முறிப்பதற்கு இந்திய மத்திய அரசு எடுத்த முயற்சியாகவே நோக்கப்படுகின்றது.

அதாவது தமிழ் நாட்டு மக்களையும் அதன் தலைவர்களையும், உலகத்தமிழ் மக்களையும் ஏமாளிகளாகவே இந்திய மத்திய அரசும், அதன் கொள்கை வகுப்பாளர்களும் கருதிவருகிறார்கள்.

தமிழீழப் போராட்டம் உக்கிரமடைந்த போது வடக்கையும் கிழக்கையும் துண்டாட மணலாற்றில் போடப்பட்ட வேலியைப் போல. பொலநறுவையில் இருந்து கதிரவெளி வரை ஒரு குறுக்கு வேலியை போட முற்பட்டுள்ளது சிங்கள அரசு. இது தான் மட்டக்களப்பின் வடக்குமுனையான வாகரை ஆக்கிரமிப்புக்கான நோக்கம். பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்தில் கிழக்கிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் போன்றதொரு செயற்பாட்டைத்தான் மகிந்தரும் செயற்படுத்த முனைகிறார்.

வன்னிக்கும் திருமலைக்கும் இடையான தடுப்பு வேலியாக மணலாறையும், திருமலைக்கும், மட்டக்களப்பிற்கும் இடையிலான தடுப்புச்சுவராக கதிரவெளியையும் பயன்படுத்துவது தான் அரசின் தந்திரம். திருமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையிலான தொடர்பிற்கும், வன்னிக்கும் கிழக்கிற்கும் இடையிலான கடற்தொடர்பிற்கும் (கடல்வழி போக்குவரத்து) வாகரை பிரதேசம் முக்கியத்துவம் வாய்ந்தது.

இது 1995 இற்கு முன்னர் சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியே. சந்திரிகாவின் ஆட்சியின் போது யாழ். குடாவின் ஆக்கிரமிப்புக்காக இங்கு இருந்து துருப்புக்கள் வடபகுதிக்கு நாகர்த்தப்பட்டிருந்தனர்.

அன்றைய அரசின் கணக்கின்படி கிழக்கில் உள்ள துருப்புக்களை பயன்படுத்தி யாழ். குடாவை முதலில் கைப்பற்றுவது. பின்னர் சொற்ப துருப்புக்களை அங்கு நிறுத்திவிட்டு மீண்டும் கிழக்கை ஆக்கிரமிப்பது தான் திட்டம். ஆனால் புலிகள் தமது பலத்தை சிதைவடையாமல் பாதுகாத்தது யாழில் புகுந்த படையினரை மீளமுடியாது புதையச் செய்துவிட்டது.

மேலும் ஆனையிறவு, தீச்சுவாலைச் சமரின் பின்னர் யாழ். குடாவை பாதுகாக்க மேலும் துருப்புக்கள் சிங்களப்படைக்கு தேவைப்பட்டது. இந்த நிலை இந்த வருடம் நிகழ்ந்த முகமாலைச்சமர் மற்றும் கடற்சமர்களுடன் தலைகீழாக மாறிவிட்டது. அதாவது யாழை தக்கவைக்க இராணுவத்தால் முடியாது என்ற நிலையை சிங்கள தேசம் உணர்ந்துள்ளது. எனவே தான் தனது இறுதி முயற்சியாக ஆறு லட்சம் மக்களை மனிதக் கேடயங்களாக்கிதுடன் அவர்களுக்கான உணவையும் போரியல் ஆயுதமாக்கியுள்ளது.

சிங்கள படைத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேக்காவின் 'யாழ். குடாவை புலிகள் கைப்பற்ற முயன்றால் பாரிய விலையை செலுத்தவேண்டி இருக்கும்" என்ற கூற்றும். பொதுமக்களை கேடயமாக்கி யாழை பாதுகாக்கும் திட்டத்தை தான் எதிர்வு கூறுகின்றது.

தனது ஆக்கிரமிப்புப்படைகளை பொதுமக்களை பயன்படுத்தி பாதுகாத்துக்கொண்டு தமிழீழப்பகுதியை மூன்று துண்டுகளாக (முகமாலை, மணலாறு, கதிரவெளி) கூறுபோடுவதன் மூலம் புலிகளின் நகர்வுகளை கட்டுப்படுத்தி விடலாம் என்பது இராணுவ வல்லுநர்களின் கருத்து.

ஆனால் களநிலைமையும் சிங்கள அரசின் படைபலமும் எவ்வளவு தூரம் தாக்குப்பிடிக்க போதுமானது என்பதில் தான் கள யதார்த்தம் தங்கியுள்ளது.

ஏனெனில் அண்மையில் நடைபெற்ற தாக்குதல்களை எல்லாம் நோக்கும் போது சரணடையும் அல்லது கைது செய்யப்படும் படைவீரர்களின் எண்ணிக்கை அதிகம். மறுவடிவில் சொல்வதானால் களத்தில் தமது சகாக்களை கூட காப்பாற்ற முடியாத நிலையில் தான் சிங்களப்படை உள்ளது. இந்த நிலமை சிங்கள அரசிற்கு புரியுதோ இல்லையோ சர்வதேசத்திற்கு நன்கு புரிந்துள்ளது. எனவே தான் முழு அளவிலான போர் ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.

இந்த வாரம் வொசிங்ரனில் நடந்த இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் சிங்கள அரசு மீது வீழ்ந்த கண்டனங்களும் அரசின் சீண்டல்களால் முழு அளவிலான போர் ஏற்பட்டு விடக்கூடாது என்ற உள்நோக்கை கொண்டதுவே. அவர்கள் அமைதி வழியிலான தீர்வை ஏற்படுத்த விரும்பின் சிங்கள அரசின் இராணுவ நடவடிக்கைக்கான காரணங்களை தான் புறம்தள்ளியிருக்க வேண்டும்.

எனினும் இணைத்தலைமை நாடுகளின் தற்போதைய அறிக்கையில் இருந்து ஒன்று மட்டும் புலனாகின்றது. அவர்கள் இம்முறை பேச்சுக்கான காலத்தை தீர்மானிக்க முற்படவில்லை மாறாக அரசை போர்நிறுத்தத்தை கடைப்பிடிக்கும்படியே வற்புறுத்தி உள்ளார்கள்.

அதாவது போர்நிறுத்தத்தை சீராக நடைமுறைப்படுத்தாது பேசுவதில் பயனில்லை என்பதை காலம் கடந்து தற்போது தான் அவர்கள் உணர்ந்துள்ளதாக தெரிகின்றது. தற்போது தோன்றியுள்ள இந்த சுடலை ஞானம் யாருக்கும் உதவப்போவதில்லை. ஏனெனில் இப்படியான கண்டனங்கள் மூலம் கட்டுப்படுத்தும் அளவிற்கு தற்போதைய நிலைமை இல்லை.

அரசின் சீண்டல்களையும், மக்களின் மீது திணிக்கப்படும் அவலங்களையும் புலிகள் நீண்டகாலம் பொறுக்கப்போவதில்லை என்பது சர்வதேசத்திற்கு மட்டுமல்ல சிங்கள அரசிற்கும் உள்ளுர புரிந்த விடயம் தான். ஆனால் புலிகளின் இலக்கு எது என்பது புரியாமல் தான் சிங்களப்படைகள் திண்டாடுகின்றன.

அதாவது திருமலையை கைப்பற்றப் போகிறார்களா? மன்னாரின் வீழ்ச்சியுடன் யாழ். குடா மீதான முற்றுகை மேலும் இறுகப்போகிறதா? இல்லை ஏ-9 பாதையை நிரந்தரமாக திறந்து மனித அவலங்களை தடுப்பதற்காக யாழ். குடாவை மீட்கப்போகிறார்களா? என்பது தான் சிங்கள அரசிற்கு புரியாத புதிரான விடயம். ஏனெனில் இந்த மூன்று இலக்குகளில் ஒன்றை இழந்தாலும் சிங்கள அரசின் போரின் போக்கு மாறிவிடும். மேலும் இந்த மூன்று கேந்திர மையங்களையும் தக்கவைப்பதற்கு பலமான கடற்படையும் அவசியம். ஆனால் சிங்களக்கடற்படையின் தற்போதைய நிலை இதற்கு ஈடுகொடுக்குமா?

சாம்பூர், மாவிலாறு ஆக்கிரமிப்புக்கள் பற்றி அதிகம் பேசாத கண்காணிப்பு குழுவினதும், மூச்சே விடாத இணைத்தலைமை நாடுகளினதும் நடவடிக்கைகள் புலிகளின் நடவடிக்கைக்கு பச்சைக்கொடி காட்டியதாகவே அர்த்தம் கொள்ள செய்துள்ளது.

அது மட்டுமல்லாது தனது படை நலன்களுக்காக சிங்கள அரசால் அப்பட்டமாக மீறப்படும் மனித உரிமை மீறல்கள், போர் விதிமுறை மீறல்கள், திட்டமிட்ட இன அழிப்புக்களுக்கும் காட்டமான கண்டனங்களை பிரயோகிக்கவோ அல்லது நடவடிக்கைகளை எடுக்கவோ உலகத்தில் ஜனநாயகம் பற்றி பேசும் ஆசியநாடுகளும் சரி மேற்குலகும் சரி முயற்சிக்கவில்லை.

அதாவது மிகப்பொரும் மனித அவலங்களுக்குள் ஒளிந்துள்ள இராணுவ அனுகூலங்களுக்கு மறைமுக ஆதரவை வாழங்குவதாகவே இதை அர்த்தப்படுத்த முடியும். ஆனால் சிங்கள அரசினதும், இந்தியாவினதும், சில மேற்குலக நாடுகளினதும் நடவடிக்கைகள் எமக்கு ஒன்றை மட்டும் புரியவைத்துள்ளது. அதாவது சிங்கள அரசினால் ஏற்படுத்தப்படும் மனித அவலங்களை நாம் அவர்களுக்கு இராணுவ அவலங்களாக மாற்றும் போது தான் எமது துன்பங்கள் முடிவுக்குவரும்.

இதற்கு ஒன்று திரண்ட தமிழ் மக்களின் பங்களிப்புத்தான் இன்று முக்கியமானது. ஏனெனில் சிங்கள அரசின் போர்முனைப்பை முறியடிப்பதற்கு புலிகள் தங்களிடம் உள்ள படை, ஆயுத, நிதி வளங்களை (சுநளழரசஉநள) கொண்டு தான் போரிட முடியும். இந்த வளங்களை நாம் அதிகரிக்கும் போதுதான் விடிவு எமக்கு அருகில் தெரியும் என்பதுடன் சர்வதேசமும் எதிரிமீது கண்டனம் விட முன்நிற்கும்.

www.tamilnaatham.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.