Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனந்தியின் அரசியல் முடிவும் எதிர்காலமும்..... நடராஜா குருபரன்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தியின் அரசியல் முடிவும் எதிர்காலமும்..... நடராஜா குருபரன்...

 

"எந்தக் கட்சியில் இருப்பது என்பது முக்கியம் அல்ல மக்களுடனான உங்கள் பிணைப்பும், ஒடுக்கப்பட்டவர்களின், வஞ்சிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக நீங்கள் கொடுக்கும் குரல்களும் எதிர்காலத்தில் உங்களை அரசியல் தலமைத்துவத்திற்கு உயர்த்தும்... அதுவரை போராடுங்கள்....."


தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவித்துள்ளார்.


தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக தனித்து தேர்தலில் ஒரு அணியை இறக்க போவதில்லை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் விரும்பியிருந்த போதும் தமிழரசு கட்சியினரே ஆசன ஒதுக்கீட்டை மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்  தொடர்ச்சியாக, மக்களது ஆணையையும் மக்களது கருத்துகளையும் உறுப்பினர்களது எண்ணங்களையும் மதிக்காமல் புரிந்து கொள்ளாமல் தமிரசு கட்சி தலைமை எதேச்சதிகாரமாக செயற்படுவதை எதிர்த்து கட்சிக்குள் தொடர்ந்து போராட போவதாகவும் அனந்தி தெரிவித்துள்ளார்.

இது முகநூலில் Kanapathippillai Thulasithasan பகிர்ந்திருக்கும் தகவல்.... இந்த தகவலை பார்த்து மகிழ்ச்சி அடைபவர்களில் நானும் ஒருவன்....

அனந்தி.......
நீங்கள் ஒரு மாகாண சபை உறுப்பினராக, அரசியல்வாதியாக எனக்கு அறிமுகமாகவில்லை.... எமது குளோபல் தமிழ்ச் செய்திகளை வாசித்து அதனால் ஈர்க்கப்பட்ட வாசகியாக, கிளிநொச்சி மாவட்ட அரச அதிகாரியாக, எல்லாவற்றிற்கும் மேலாக 2002களில் இருந்து எனக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்த வவுனியா மாவட்ட அரசியற் பொறுப்பாளர், பின்னர் திருமலை மாவட்ட அரசியற் பொறுப்பாளர் எழிலனின் மனைவியாக அறிமுகமாகியிருந்தீர்கள்...

யுத்தத்தின் பின்னான சூழலில் வன்னியில் இருந்து துணிவுடன் என்னோடு தொடர்பெடுத்து பல ஆக்கங்களை அனுப்பியதுடன், மிகப் பெறுமதி வாய்ந்த பல செய்திகளை வெளிபடுத்த காரணமாக இருந்தீர்கள்.... மற்றவர்களுடன் பகிர முடியாத அரசியல் விடயங்களை என் மீதான நம்பிக்கை காரணமாக பகிர்ந்திருந்தீர்கள்....

இவ்வாறான தொடர் நட்புக் காரணமாக யுத்தத்தின் பின்னான நிலமைகள், காணமல் போனவர்கள் தொடர்பான போராட்டங்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் நலன்கள் முதலான விடயங்களில் நீங்கள் கொண்டிருந்த கரிசனை, அதற்காக முன்னெடுத்த போராட்டங்கள், சமூகத்தின் மீது நீங்கள் கொண்டிருந்த ஈடுபாடு என்பன எழிலனின் மனைவி என்பதற்காக அல்லாமல் ஒரு பெண் போராளி என்ற மதிப்பை என்னுள் ஏற்படுத்தியது.....

மகாண சபைக் காலத்தில் திடிரென ஒருநாள் தொலைபேசியில் சொன்னீர்கள், அண்ணை நான் மாகாண சபை தேர்தலில் வேட்பாளராக நிற்கப் போகிறேன்.. என்று. அதிர்ச்சியாக இருந்த போதும் என்னை அதில் இருந்து மீட்டு சரி இலங்கையின் தேர்தல்  அரசியல் என்பது சாக்கடை.. அதற்குள் நூழைந்தால் புரட்சிகரமானவர்களையும் அந்த சூழல் மாற்றி விடும்... என்றேன்... எனக்கும் தெரியும் அண்ணை... ஆனால் காணமல் போனவர்கள், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவர்களின் குரலாக ஒருவர் இருப்பது அவசியம் என உணர்கிறேன்.. கூட்டமைப்பும் விரும்புகிறார்கள்.. அதனால் களம் இறங்குகிறேன் என்றீர்கள்...

உங்கள் உறுதி பிடித்திருந்தது... மாகாண சபைக் காலத்தில், உங்களுக்கு குளோபல் தமிழ்ச் செய்திகள் கொடுத்த முக்கியத்துவத்தைப் போல் வேறு எந்த ஒரு ஊடகமும் கொடுத்திருக்குமோ தெரியவில்லை.... காரணம் நீங்கள் எழிலனின் மனைவி என்பதற்காக அல்ல... துணிவுடன் களத்தில் நிற்கும் பெண் போராளி என உங்கள் நடத்தைகள் எனக்கு தெளிவுபடுத்தியிருந்தன...

பலர் உங்களுக்கு கொடுத்த முக்கியத்துவம் குறித்து என்மீது ஆவேசம் கொண்டதுடன், குருபரன் அனந்திக்கு சார்பானவர் என சேற்றையும் வாரியிறைத்தனர்....

மாகாண சபைக் காலத்தில் உங்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறித்து லண்டன் நேரம் அதிகாலை 2 மணியளவில் கூட அவசர செய்தியை வெளியிட்டு இருந்தேன்....

ஆனால் பிற்காலத்தில் உங்களின் வேகம் குறித்து வேதனை அடைந்திருந்தேன்.... தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நான் உட்பட பலருக்கு கடுமையான விமர்சனங்கள் உண்டு.... ஒரு இயக்கமோ, கட்சியோ, கூட்டமைப்போ எதுவாக இருந்தாலும் அவைகளுக்கு எதிராக அவற்றின் உறுப்பினர் ஒருவரால் முன்னெடுக்கப்படும்  போராட்டம் முதலில் முழுமையானதாக உட்கட்சிப் போராட்டமாக இருக்க வேண்டும்... அவை ஊடகங்களில் வரும் அறிக்கைகளாக அமைய முடியாது...

ஆனால் உங்கள் ஆரம்ப போராட்டங்களே கூட்டமைப்பிற்கு எதிரான ஊடக அறிக்கைகளாக சந்திக்கு வந்தன.. கூட்டமைப்பிற்கு எதிரான. உங்களுடைய இந்தப் போராட்டத்தை கூட்டைப்புக்கு எதிரான அனைத்து தரப்பினரும் தத்தமது வசதிக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டனர்....

இதற்கு சிறந்த உதாரணம் தேர்தல் காலத்தில் “டான் ரீவி” உங்கள் ஊடக சந்திப்பில் எடுத்துக் கொண்ட உங்கள் குரலிலான ஒரு செய்தியை கூட்டமைப்பிற்கு எதிராக லாவகமாக பயன்படுத்தியது... இவ்வாறான செயற்பாடுகள் உங்கள் அரசியல் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்தியது...

இறுதியில் உங்கள் உத்வேகத்தை கூட்டைப்புக்கு எதிராக பயன்படுத்தியவர்கள், துரும்புச் சீட்டாக பாவித்தவர்கள் இன்று உங்களை தனித்து விட்டு தப்பித்துக் கொண்டார்கள்.... ஆரம்பத்தில் ஓர் உறுதிமிக்க சமூகப் போராளியாக இருந்த உங்களை நான் சொன்ன இலங்கை அரசியல் எந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது என்பதனை இப்போது உணர்ந்திருப்பீர்கள்...

ஆரம்பத்தில் உங்களை வீராங்கணையாக போற்றிப்பாடிய சமூக வலைத்தளங்கள், இணையங்களில் உங்கள் பெயர் சிக்கிச் சீரழிந்ததை கண்டு வேதனை அடைந்தேன்... அதன் ஒரு பகுதியாக உங்கள் தொடர்பில் வரும் சாதக பாதக செய்திகள் எல்லாவற்றையுமே புறக்கணித்தேன்.. நீங்களும் என் தொடர்பு எல்லையில் இருந்து விடுபட்டு சென்றிருந்தீர்கள்...


இதனால் நான் சாதித்தது ஒரு கள்ள மௌனம் என்று கூட யாராவது சொன்னால் மனச்சாட்சியுள்ள ஊடகன் என்ற வகையில் அந்த விமர்சனத்தை நான் ஏற்கத்தான் வேண்டும்.

இன்று கூட இந்த பதிவை எழுதியிருக்க மாட்டேன் தேர்தலில் போட்டியிடுவதில்லை என நீங்கள் எடுத்த முடிவும், வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என நமது செய்தியாளர் உறுதிபடத் தெரிவித்த செய்தியுமே இதனை எழுதத் தூண்டியது...

கூட்டமைப்பில் உள்ள சில தலைவர்கள் உங்களின் மீது கோபப்படலாம்... ஆனால் எனக்கு தெரிந்து கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் பலரும் உங்கள் மீது கரிசனை உடையவர்களாகவே இருக்கிறார்கள்... நீங்கள் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை சந்தித்து சென்ற பின் உங்கள் தொடர்பில் கூட்டமைப்பின் மற்றய தலைவர் ஒருவருக்கு சம்பந்தன் தெரிவித்த கருத்து இது “அனந்தி கெட்டிக்காரியாக இருக்கிறாள்... அவளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.... பொறுமையாக இருந்தால் அவளை வளர்த்துவிடலாம்..” கூட்டமைப்பிள் உள்ள 3 கட்சிகளின் தலைவர்கள் உங்கள் பக்கம் இருக்கிறார்கள்... சம்பந்தனும் மனதார உங்கள் பக்கம் இருக்கிறார்.... உள்ளிருந்து போராடுங்கள்... இந்த தேர்தலுடன் கூட்டமைப்பில் உள்ள பல முதியவர்கள் அரசயலில் இருந்து ஒதுங்க வேண்டியிருக்கும்... அப்போது அடுத்த தலைமுறையின் கையில் படிப்படியாக அதிகாரம் மாறும்....

தேரதல் அரசியலில் 2 வருடங்களைத் தான் கடந்திருக்கிறீர்கள்... உங்களுக்கு இன்னும் காலம் இருக்கிறது. வயது இருக்கிறது..  நடைமுறை சார்ந்து பல விடயங்களை கற்றுக்கொள்ளுங்கள்... மக்ளிடம் ஐக்கியமாகி அவர்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுங்கள்... உங்களால் இயன்ற போராட்டங்களை முன்னெடுங்கள்... மாகாண சபையில் ஏற்பட்ட திடீர் எழுச்சியால் வந்த 80ஆயிரத்திற்கு மேற்பட்ட விருப்பு வாக்குகள் மட்டும் உங்களை அரசியலில் நிலை நிறுத்த போதுமானதல்ல...

எந்தக் கட்சியில் இருப்பது என்பது முக்கியம் அல்ல மக்களுடனான உங்கள் பிணைப்பும், ஒடுக்கப்பட்டவர்களின், வஞ்சிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக நீங்கள் கொடுக்கும் குரல்களும் எதிர்காலத்தில் உங்களை அரசியல் தலமைத்துவத்திற்கு உயர்த்தும்... அதுவரை போராடுங்கள்.....

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121948/language/ta-IN/article.aspx

பிழம்பு

காலத்திற்கேற்ற நல்ல பதிவு

நன்றி

அருமையான பதிவு .. அனந்தி தமிழ் மக்கள் உங்களை மறக்க மாட்டார்கள் .அமைதியாக நல் அரசியலை செய்யுங்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சட்டத்தரணிகளை அரசியலாளர்களாகப்பார்த்துப் பழக்கப்பட்வர்.பின்னர் போராளிகள்  ஊடாக  ஒரு புரட்சிகர அரசியலைகண்டவர்கள். மீண்டும் அதே போராட்டத்தூடும் அதே சட்டத்தரணிகள்  வழியாகவும் புதிய அரசியல் நோக்கி எமது இலக்கை நிர்ணயம் செய்தவாறு நகர முற்படும்போது  முரண்நிலைகள் தவிர்க்க முடியாதவை. எனவே வளர்ந்துவரும் புதிய அரசியல் தலைமுறை சிலருக்குக் கொதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் அந்தக் கொதிநிலையைக் கடந்து காலூன்றுதலே அவசியமானது. அப்போது  மக்கள் உங்களோடு நிற்பார்கள்.

அனந்தியின் எதிர்காலத்தை மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.