Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தவிற்கு சார்பாகவா சிவாஜிலிங்கம் குருணாகலில் களமிறக்கப்பட்டார்?

Featured Replies

மகிந்தவிற்கு சார்பாகவா சிவாஜிலிங்கம் குருணாகலில் களமிறக்கப்பட்டார்?

வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இம்முறை குருணாகல் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபைக்குத் தெரிவான சிவாஜிலிங்கம் இம்முறை பொதுத் தேர்தலில் திடீரென குருணாகல் மாவட்டத்தில் களமிறங்குவதற்கான காரணம் என்ன என்பது குறித்த பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

எனினும், மகிந்த ராஜபக்சவின் பிரசாரத்திற்கு வலு சேர்ப்பதற்காகவே சிவாஜிலிங்கம் குருணாகல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ளதாக எம்முடன் உரையாடிய சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கான பின்னணியும், காரணமும் குறித்து அவரிடம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிய போது,

''மகாராஜா கூட்டு நிறுவனத்திற்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்காவிற்கும், சிவாஜலிங்கத்திற்கும் இருக்கும் நெருங்கிய தொடர்புகள் குறித்து பேசத்தொடங்கினார். எம்.கே. சிவாஜிலிங்கம், ஶ்ரீரங்கா ஆகியோருக்கிடையிலான கூட்டுதான் சிவாஜிலிங்கம் குருணாகல் மாவட்டத்தில் களமிறங்கக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்மூலம், மகிந்த ராஜபக்சவிற்கு சாதகமான நிலை ஏற்படும் என்பது இதன்மூலம் தெளிவானது. குருணாகல் மாவட்டத்திலுள்ள சிறுபான்மையினரின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு செல்வதைத் தடுப்பதற்காகவே சிவாஜிலிங்கம் குருணாகல் மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக தமிழ் சிறுபான்மையினர் மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களிக்கமாட்டார் என்பதுடன் அந்த வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தான் கிடைக்கும் என்பது குருணாகல் மாவட்டத்தில் உறுதியாகவுள்ளது. இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கும் வாக்குகளை சிதறடிப்பதற்காக சிவாஜிலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீரங்காவின் அனுசரணையுடன் குருணாகல் மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ளமை இதன்மூலம் புலனாகிறது.

அத்துடன், வடக்கிலுள்ள தமிழர் ஒருவர் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதன் மூலம் மகிந்த ராஜபக்ச இதனை இனவாத ரீதியான பிரசாரத்திற்குப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் சுட்டிக்காட்டினார்.

மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமாகவுள்ள ஶ்ரீரங்காவிற்கு இம்முறை பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசியப் பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.tamil.srilankamirror.com/news/item/3502-2015-07-15-10-15-23

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தவுக்கு வோட் பண்ண விருப்பமில்லாதவனும் இனி மகிந்தவுக்குத்தான் எண்டு சொல்லப்போறான். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் செல்லாக்காசு என்பவர்கள் தான்

இவர் மகிந்தவின் வாக்கை பிரிக்கும் அளவுக்கு சிறுபான்மையினரிடம் செல்வாக்குள்ளவர்  என்கின்றனர்

தப்பு அவரிடமிருப்பதாக தெரியவில்லை...

இனவாதத்தை தூண்டும் நோக்குடன் முற்றுமுழுதாக மகிந்தவின் ஆசியுடன் களமிறக்கப்பட்டுள்ளார் என்பதே உண்மை 

இவர் செல்லாக்காசு என்பவர்கள் தான்

இவர் மகிந்தவின் வாக்கை பிரிக்கும் அளவுக்கு சிறுபான்மையினரிடம் செல்வாக்குள்ளவர்  என்கின்றனர்

தப்பு அவரிடமிருப்பதாக தெரியவில்லை...

ஜனவரியில் முற்று முழுதாக ஆட்சிமாற்றத்துக்கு முன்னின்று உழைத்த ஊடகம் சக்தி சிரச என்பதில் யாருக்கும் ஐயமில்லை.அப்படியிருக்கும் போதுஅவர்கள் எப்படி இதில் சம்பந்தப்பட முடியும்.ஆனால் சிறி ரங்கா மகிந்தவுக்கு ஆதரவானவர் கனடாவிலும் லண்டனிலுமிருந்து தமிழர்களைத் திரட்டி இலங்கையில் முதலீடு செய்ய வைத்தவர்.இவர்களின் மதுபானக்கடைகள் தான் வடக்கில் அதிகமாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.மலையக மக்களிடம் சக்தி பண்பலை மூலமாக பரிச்சயமான ரங்கா அங்கு செல்வாக்கு மிகுந்தவராகத்திகழ்கின்றார் என்பதும் உண்மை. இன்று இலங்கையின் அரசியல் வரலாற்றில் முற்று முழுக்கத் தமிழ்ப்பெண்களை அரசியல் களத்தில் இறக்கி புரிந்த சாதனையானது தொழிலாளர் காங்கிரசின் இருப்பையே கேள்விக் குறிக்குள்ளாக்கியுள்ளது.ஆனாலும் இவர்கள் மீதுள்ள இந்த மகிந்தாவுக்கு ஆதரவான நிலைப்பாடு மிகவும் குழப்பகரமான நிலையைத் தோற்றுவிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

உந்த அரசியல் புண்ணாக்கு வேலைகள் இன்று நேற்று அல்ல. ஜெயவர்தனே, தனக்கு எதிராக நின்ற ஹெக்டர் ஹோப்பேகடுவாவுக்கு விழக்கூடிய தமிழ் வாக்குகள் சிதற வேண்டும் என்று, குமார் பொன்னம்பலத்தினை, தமிழ் ஈழம் வேண்டும் என உலகுக்கு காட்ட எனக்கு போடுங்கள், என்று சொல்லி நிற்க வைத்தார்.

மக்கள் எடுபடவில்லை.

குருநாகல் மாவட்டத்தில் மலையகத் தமிழரே அதிகம். அவர்களுக்கு சிவாஜிலிங்க்கதினை தெரியுமா?

Edited by Nathamuni

பழிவாங்கும் எண்ணத்தில் மகிந்த….

கிந்த ராஜபக்ஷ சிறுபான்மை மக்களை பழிவாங்கும் எண்ணத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகளாலேயே மகிந்தராஜபக்ஷ தோல்வியை தழுவினார்.

தமிழ் மக்கள் செறிவாக வாழ்கின்ற பகுதிகளில் மைத்திரிக்கே அதிக அளவு வாக்குகள் வழங்கப்பட்டிருந்தன.

எனினும் சிறிலங்காவின் தெற்கு பகுதிகளில் சிங்கள மக்கள் பெரும்பாலும் மகிந்தவுக்கே வாக்களித்திருந்தனர்.

இந்த நிலையில் தமது தோல்விக்கு காரணமாக அமைந்துள்ள தமிழ் மக்களை பழிவாங்கும் எண்ணம் மகிந்தவிடம் தீவிரமாக காணப்படுகிறது.

இதன்காரணமாகவே போட்டியிடும் குருணாகலை மாவட்டத்தில், அவரது தலைமையிலான வேட்பாளர் குழுவில் ஒரு சிறுபான்மை இனத்தவரேனும் உள்ளடக்கப்படவில்லை என்று அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.jvpnews.com/srilanka/116622.html

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.