Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டிஷன் போடாத தேவதை

Featured Replies


ஆண்கள் உலகம் நமகெல்லாம் அறிமுகபடுத்தப்படுவது அப்பா மூலம் தான். இருப்பினும் அதை இன்னும் சுவாரஸ்யமாக்குவது சகோதரனே. ரிக்கி மார்டினையும், WWF ராக்கையும், கிரிகெட்டின் சகல சூட்சுமங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துவது அவனே! நிலைக்கண்ணாடி முன் AXE வாசனையை தருவதற்கும், கண்ணாடியில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் பொட்டுக்காக கடுப்படிபதற்காகவும் எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். எண்ணிலடங்கா நினைவுகள் என் தம்பியோடு இருக்கின்றன எனினும் இந்த பதிவு அதில் ஒரு துளி - 

மத்திய தர வர்க்கத்துக்கே உரிய கோட்பாட்டின் படி பொறியியல் படித்து, கொஞ்ச காலம் சில பல உப்புமா கம்பெனிகெல்லாம் கோடு எழுதிக்கொடுத்து ஒரு வழியாக ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ப்ராஜெக்ட் லீடர் ஆனான். அவர்கள் அதோடு விடாமல் H1B யும், அமெரிக்க கனவையும் அவனுக்கு தந்தார்கள். அன்று முதல் எங்கள் அம்மாவுக்கு, பிள்ளை அமெரிக்கா போனால் 'குடியும் குடித்தனமுமாக' ஆகி "Meet my darling wife!" என்று ஒரு வெள்ளைக்காரியை கொண்டு வந்தது நிறுத்த போவதாக கனவு வர ஆரம்பித்தது.. இன்னும், பிள்ளையார் சதுர்த்திக்கு 'பர்கர்' படையல் பண்ண வேண்டி வந்துவிடுமோ என்றெல்லாம் தினம் ஒரு தினுசாக கவலை பட ஆரம்பித்தாள். இந்த விஷயத்தில் மட்டும் சுதந்திரத்திற்கு முன் வடக்கே வசித்த மோகன்லால் கரம்சந்த் காந்தியின் அம்மாவிற்கும், சுதந்திரத்திற்கு பின்னான தென் தமிழ்நாட்டின் சிற்றூரில் வசிக்கும் என் அம்மாவிற்கும் ஒன்றுப்போலவே யோசிக்க முடிந்திருக்கிறது.  அமெரிக்காவிற்கு கல்யாணம் பண்ணித்தான் அனுப்புவேன் என்று உறுதியாக சொல்லிவிட்டாள்.

அவன், இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தான்.  ஆனாலும், அம்மா செண்டிமெண்ட்டாவது தோற்பதாவது? அம்மாவும் அப்பாவும் ஊரிலும், தம்பி எங்களோடு சென்னையிலும் இருந்ததால் வசதி கருதி வரன் பார்க்கும் பொறுப்பு எனக்கு வந்தது.  ஆரம்பத்தில் பெண் தேடுதலில் ஒரு வித அகம்பாவத்தோடு இருந்ததென்னவோ நிஜம் தான். காரணம் மூன்று -  முதலாவதாக என் தம்பி இள வயது அஜித் போல படு ஸ்மார்டாக இருந்தது.  இரண்டாவது நல்ல குடும்பம், வேலை மற்றும் கெட்ட பழக்கம் எதுவுமில்லை என்பது கல்யாணத்துக்கு போதுமானதாக நான் அப்பாவியாக நினைத்திருந்தது மற்றும் மூன்றாவதாக பெண்ணை பற்றி அவனுக்கு பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தது.

பிரபல மாட்ரிமோனி முதல் தெருகோடி மாமாவின் டைரி வரை சகலத்திலும் ஃபோட்டோவோடு பதிந்ததில், என் தம்பிக்கு எப்போதும் தன்னை யாரோ தன்னை கவனித்து கொண்டே இருப்பது போல பிரமையெல்லாம் வந்தது.  பெண் தேடும் போது புரிந்த உண்மை என்னவென்றால்,  இப்போதெல்லாம் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்வீட்டாரிடமும், தேர்ந்தெடுக்கப்படும் பாக்கியம் மட்டும் மாப்பிள்ளை  ட்டாரும் பெற்றிருப்பது! பெண் வீட்டார் நம்மிடம் இருந்து ஜாதகம்-போட்டோ-ஆபீஸ் அட்ரஸ்- என சகலமும் சப்ஜாடாக பெற்று கொண்டு பதிலுக்கு கடுகத்தனை பெண்ணை பற்றி சொல்கிறார்கள். பெரும்பாலான  இன்டெர்வியு கேள்விகள் போனில் தான் - உங்க தம்பி  IT ல எவ்ளோ வருஷமா இருக்கார்? எங்க பொண்ணுக்காக மாற்றல் வாங்கிப்பாரா?அமெரிக்கா வாய்ப்பு இருக்கா? வொர்க் ஹவர்ஸ் எப்படி?... கேள்விகள்..கேள்விகள்..(டாய்லெட் போனா எவ்ளோ நேரம் எடுத்துப்பார் என்று கூட கேட்டுவிடுவார்களோ என்று பயம் வந்திருக்கிறது!) நாம் ஏதாவது பெண்ணை பற்றி கேட்டால் மட்டும் எதோ பேங்க் பாலன்சை பற்றி கேட்டது போல் பதறுகிறார்கள்.
received_852544131449901_1.jpg
 ஒரு முறை ஜாதகம் எல்லாம் பொருந்தி டெலிபோனிக் இன்டர்வியு முடிந்து வீட்டுக்கு கூரியரில் போட்டோ அனுப்பி வைத்தார்கள். வாழ்க்கையில் முதல் முறையாக பணம் கொடுத்து பெற்று கொண்டோம்(இப்படி பண்ண முடியும் என்று உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?) உள்ளே நாலு பெண்கள் நிற்கும் போட்டோவும், பெண்ணின் தகப்பனார் கடிதாசியும். 'மூன்றாவதாக நிற்கும் பச்சை சுடிதார் அணிந்த பெண்' என்று குறிப்பு!! நிச்சயமாக நாலு பெண்களில் அவள் தான் அழகி. அது அவருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் விஷயம் கடிதத்தின் பின் இருந்தது - கடுகு 200 gm, நல்லெண்ணெய் அரை லிட்டர் என்று ஆரம்பித்து பெண்கள் சமாசாரம் வரை உள்ள மளிகை லிஸ்ட்! என் தம்பி, 'இதெல்லாம் நம்மள பெண் பார்க்க வரும் போது வாங்க சொல்லியிருக்காங்களா' என்று  அப்பாவியாய் கேட்க, எங்களுக்கோ ஏக எரிச்சல். இன்னும் கொஞ்சம் தண்டச்செலவு செய்து போட்டோவை திருப்பிஅனுப்பி வைத்தோம். வாழ்க்கையில் சிக்கனம் இருக்கலாம் ஆனா சிக்கனமே வாழ்க்கையாக வாழ்பவர்களை எங்கிருந்து மனதிற்கு சிக்கென பிடிக்கிறது?

இன்னும் சில பெண் பார்க்கும் அனுபவங்கள் இவ்வாறு இருந்தன -

ஒரு பெண் - கண்ணாடி அணிந்து, அதுக்கு மேல் வழியாக பார்த்து இன்டர்வியூவை ஆரம்பித்தாள். Ayn Rand இல் ஆரம்பித்து சகல புத்தகங்களை பற்றியும் கேட்க துவங்க.. நம்ம ஆளோ, 'பேப்பர்' என்ற வஸ்து கண்டுபிடிதிருப்பதே பஜ்ஜியிலிருந்து எண்ணெய் எடுபதற்காக என்றிருப்பவன். (ரிசல்ட் பற்றி தனியாக வேறு சொல்ல வேண்டுமா??) வெளியில் வந்து, இனி கண்ணாடி அணிந்த பெண் வேண்டாம். அதிலும் கண்ணாடிக்கு மேல் வழியாக பார்த்தால் கண்டிப்பாக வேண்டாம், ஏனெனில் அவர்கள் எட்டாம் வகுப்பு கணக்கு டீச்சரை நினைவு படுத்துவதாக சொல்லி நொந்துப் போனான்.

மற்றொரு நாள் - மற்றொரு குடும்பம். இவர்கள் சிம்பிள் ஆக ஒரே கேள்வி தான் கேட்டார்கள் - "கல்யாணத்திற்கு பிறகு ஜாயிண்ட் பாமிலியா?" நானும், "ஆமாம்.அம்மா அப்பாவிற்கு என் தம்பி ஒரே பையன். அதனால் அவனோடு தான் இருப்பார்கள்" என்றேன். மறுநாள் போனில், "எங்களுக்கு பெரிய்ய(?) குடும்பம் சரிவராது, சாரி !" என்றார்கள். என்னம்மா இது, நீ கொஞ்சம் குண்டா இருக்கறதால  தம்பி வாழ்கை கேள்விகுறி ஆகிடும் போலிருக்கே? என்று கொஞ்சநாளைக்கு அம்மாவை கலாய்த்து கொண்டிருந்தோம்.

 இதெல்லாம் வேண்டாம் என்று ரோஜா அரவிந்த்சாமி போல கிராமத்து பெண்ணை பார்க்க போய், அவர்கள் கேட்ட கேள்வியில் ஜெர்கானதும் உண்டு! அவங்க கேட்டது - "எங்க பொண்ண மாடர்ன் டிரஸ் போட சொல்லுவீங்களா?" எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. இந்த காலத்தில் இப்படி ஒரு பொண்ணா என்று. எதுக்கும் கேட்போம் என்று,"எத மாடர்ன் டிரஸ் ன்னு சொல்றீங்கன்னு?" கேட்டால், "அதாம்மா ஸூ.. டிதாரு" என்று ஒரு பாட்டி ராகமாக இழுத்தார். என் தம்பி, 'ஐயோ விக்னா நான் தெரியாம சின்ன வயசுல உன்னோட சண்டைப் போட்டிருக்கலாம். அதுக்காக என் வாழ்கையோட விளையாடிடாத.' என்று அழாத குறைதான்..

இன்னும் பல இடங்களில் போட்டோவில் பார்த்த பெண்ணிற்கும் நேரில் பார்பதற்கும் 60 வித்யாசங்கள் கண்டுபிடிக்கச் செய்து பைத்தியமாக்குகிறார்கள். அவர்களை பொருத்தவரையில் +2 படித்தப்போதும், காலேஜில் படிக்கும் போதும், வேலைக்கும் செல்கின்ற போதும் இருப்பது ஒரே பெண் தான். ஆனால் நம் மூளையோ, 15 கிலோ எடை அதிகரிப்பில் வேறு பெண்ணாக எண்ணச்செய்கிறது.

இப்டியே ஒரு வருடம் போனதில் - ஏன்டா, நீ அழகா இருந்து என்ன பிரயோஜனம்? லவ் பண்ணத்தெரியலையே என்று நான் அவனையும், உன்னால ஒரு பொண்ணு கூட எனக்கு பார்க்கமுடியல, நீயெல்லாம் ஒரு அக்காவா என்று அவன் என்னையும் மாறி மாறி கடுப்பேத்திக்கொண்டோம். என் தம்பிக்காக அம்மா கோவில் பிரகாரத்தை சுற்றிய சுற்றில், அந்த தெய்வமே இளைத்து போய்விட்டதாக கூட தோன்றும்.
இவ்வளவு புலம்பிய பின்  பெண் கிடைத்தாளா இல்லையா என்று முடிக்கவில்லை என்றால் எப்படி? ஒருவழியாக என் தம்பிக்கான பெண் கிடைத்தாள். அவள் ஒரு கண்டிஷன் போடாத தேவதை!

 

http://mymarsandvenus.blogspot.in/2015/05/blog-post.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.