Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய கூட்டமைப்பு புலம்பெயர் தமிழர் ஐக்கியம் ஓங்குக - ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

GREETINGS TO TNA. WHAT NEXT?
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாழ்த்துக்கள். அடுத்து என்ன?

எதிர்பார்த்ததுபோல தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. கூட்டமைப்புக்கு நல் வாழ்த்துக்கள். இனிச் செய்ய வேண்டியது என்ன என்கிற கேழ்வியை வெற்றி எம்முன்னே நகர்த்தியுள்ளது.

போர்க்காலத்தில்  உரிய இடங்களில் நான் கோட்பாட்டு ரீதியாக வற்புறுத்தி வந்ததுபோல நாம் மிகச் சிறிய இனம் என்பதையும் எதிரி பலமானவன் என்பதையும் நமக்கு சாதகமான பலம் பெருக்கிகளை (multipliers) இணைத்து நம் வலிமையை பெருக்குவதன் மூலம் மட்டுமே  நம்மால் வெற்றிபெற  முடியும் என்பதை . கூட்டமைப்பின் வெற்றித் தருணத்தில்  மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

நாம் மிக மிகச் சின்ன இனம். நம்மை வலுப்படுத்தக்கூடிய தேசிய சர்வதேசிய  வலு பெருக்கிகளை இனம்கண்டு இணைத்து செயல்படுவதன் மூலம் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும். இந்த வகையில் புலம்பெயர் தமிழர் சக உலகதமிழர் ஆதரவு மிக முக்கியமான பல பெருக்கியாகும். இந்தியா அமரிக்கா மற்றும் மேற்க்குலக ஆதரவும் மிக முக்கியமான பல பெருக்கியாகும். இவற்றோடு முஸ்லிம் தலமைகளோடு குறைந்த பட்ச்ச நல்லிணக்கம் அத்தியாவசியமான பெருக்கியாகும். இவையெல்லாம் வெளிவாரி பல பெருக்கிகளுள் முக்கியமான சிலவாகும். 

ஜாதிரீதியாக ஒடுக்கபட்ட மக்களதும் பால் ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்களினதும் பிரதேச ரீதியாக பிந்தங்கிய மாவட்ட மக்களதும் பங்களிப்பு உடனடியாக உச்சப்படுத்தப் படவேண்டிய மிக முக்கியமான உள்வாரிப் பல பெருக்கியாகும்.இந்த விடயங்களில் உள்ள நிறையின்மையை கூட்டமைப்பு உடனடியாக செம்மைப் படுத்த முன்வருதல் வேண்டும். நமக்கு கிடைத்துள்ள பலத்தாலல்ல கிடைத்த பலத்தைப் பெருக்குவதால் மட்டும்தான் தமிழர்கள் தேசிய சர்வதேச ரீதியாக அரசியல் வெற்றிகளை ஈட்டமுடியும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். 

யாழ்ப்பணத்தில் சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களதும் பால்ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்களுகளதும் பங்குபற்றலும் பங்களிப்பும் என்கிற பெருக்கியை தமிழர் கூட்டமைப்பு கண்டுகொள்ளாதமைதான் டக்ளஸ் தேவானந்தாவினதும் விஜயகலாவினதும் வெற்றிக்கு வழி வகுத்தது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறே

தமிழ் தேசிய கூட்டமைப்பு புலம்பெயர் தமிழர்களதும் தமிழகம் உட்பட உலகத் தமிழர்களதும் ஆதரவு உடனடியாக வென்றெடுக்க வேண்டிய வெளிவாரிப் பல பெருக்கி என்பதை இனம்கொண்டு போர்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன். அதேசமயம் புலம் பெயர்ந்த தமிழர்களும் உலக தமிழர்களும் ஈழத் தமிழரது தலைமையின் ஊற்று  கழத்தில் வாழும் தமிழ் மக்கள் மட்டுமே என்பதை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். தமிழர் கூட்டமைப்பும் புலம் பெயர்ந்த தமிழர் தலைவர்களும் ஈழத்து முஸ்லிம் மக்களோடும் தலைவர்களோடும்  இணக்கம் காணும் வழிமுறைகளில் விரதியோ சலிப்போ அடையாது தொடர்ந்தும் முய்ற்ச்சியை தொடரவேண்ட

புலம் பெரய் தமிழர்களும் தமிழக உலகத் தமிழர்களும்  சம்பந்தர் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ள  இந்த வெற்றிக்கு நிபந்தனையற்ற ஆதரவை உறுதிப் படுத்த வேண்டும்.

ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் புதிய வடிவமும் புதிய நெறியும் உருவாகும் இந்த அரிய தருணத்தில் விமர்சனங்கலை ஆக்கபூர்வமாக்கி ஒன்றுணைவோம் 

 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

 

GREETINGS TO TNA. WHAT NEXT?
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாழ்த்துக்கள். அடுத்து என்ன?

எதிர்பார்த்ததுபோல தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. கூட்டமைப்புக்கு நல் வாழ்த்துக்கள். இனிச் செய்ய வேண்டியது என்ன என்கிற கேழ்வியை வெற்றி எம்முன்னே நகர்த்தியுள்ளது.

போர்க்காலத்தில்  உரிய இடங்களில் நான் கோட்பாட்டு ரீதியாக வற்புறுத்தி வந்ததுபோல நாம் மிகச் சிறிய இனம் என்பதையும் எதிரி பலமானவன் என்பதையும் நமக்கு சாதகமான பலம் பெருக்கிகளை (multipliers) இணைத்து நம் வலிமையை பெருக்குவதன் மூலம் மட்டுமே  நம்மால் வெற்றிபெற  முடியும் என்பதை . கூட்டமைப்பின் வெற்றித் தருணத்தில்  மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

நாம் மிக மிகச் சின்ன இனம். நம்மை வலுப்படுத்தக்கூடிய தேசிய சர்வதேசிய  வலு பெருக்கிகளை இனம்கண்டு இணைத்து செயல்படுவதன் மூலம் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும். இந்த வகையில் புலம்பெயர் தமிழர் சக உலகதமிழர் ஆதரவு மிக முக்கியமான பல பெருக்கியாகும். இந்தியா அமரிக்கா மற்றும் மேற்க்குலக ஆதரவும் மிக முக்கியமான பல பெருக்கியாகும். இவற்றோடு முஸ்லிம் தலமைகளோடு குறைந்த பட்ச்ச நல்லிணக்கம் அத்தியாவசியமான பெருக்கியாகும். இவையெல்லாம் வெளிவாரி பல பெருக்கிகளுள் முக்கியமான சிலவாகும். 

ஜாதிரீதியாக ஒடுக்கபட்ட மக்களதும் பால் ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்களினதும் பிரதேச ரீதியாக பிந்தங்கிய மாவட்ட மக்களதும் பங்களிப்பு உடனடியாக உச்சப்படுத்தப் படவேண்டிய மிக முக்கியமான உள்வாரிப் பல பெருக்கியாகும்.இந்த விடயங்களில் உள்ள நிறையின்மையை கூட்டமைப்பு உடனடியாக செம்மைப் படுத்த முன்வருதல் வேண்டும். நமக்கு கிடைத்துள்ள பலத்தாலல்ல கிடைத்த பலத்தைப் பெருக்குவதால் மட்டும்தான் தமிழர்கள் தேசிய சர்வதேச ரீதியாக அரசியல் வெற்றிகளை ஈட்டமுடியும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். 

யாழ்ப்பணத்தில் சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களதும் பால்ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்களுகளதும் பங்குபற்றலும் பங்களிப்பும் என்கிற பெருக்கியை தமிழர் கூட்டமைப்பு கண்டுகொள்ளாதமைதான் டக்ளஸ் தேவானந்தாவினதும் விஜயகலாவினதும் வெற்றிக்கு வழி வகுத்தது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறே

தமிழ் தேசிய கூட்டமைப்பு புலம்பெயர் தமிழர்களதும் தமிழகம் உட்பட உலகத் தமிழர்களதும் ஆதரவு உடனடியாக வென்றெடுக்க வேண்டிய வெளிவாரிப் பல பெருக்கி என்பதை இனம்கொண்டு போர்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன். அதேசமயம் புலம் பெயர்ந்த தமிழர்களும் உலக தமிழர்களும் ஈழத் தமிழரது தலைமையின் ஊற்று  கழத்தில் வாழும் தமிழ் மக்கள் மட்டுமே என்பதை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். தமிழர் கூட்டமைப்பும் புலம் பெயர்ந்த தமிழர் தலைவர்களும் ஈழத்து முஸ்லிம் மக்களோடும் தலைவர்களோடும்  இணக்கம் காணும் வழிமுறைகளில் விரதியோ சலிப்போ அடையாது தொடர்ந்தும் முய்ற்ச்சியை தொடரவேண்ட

புலம் பெரய் தமிழர்களும் தமிழக உலகத் தமிழர்களும்  சம்பந்தர் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ள  இந்த வெற்றிக்கு நிபந்தனையற்ற ஆதரவை உறுதிப் படுத்த வேண்டும்.

ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் புதிய வடிவமும் புதிய நெறியும் உருவாகும் இந்த அரிய தருணத்தில் விமர்சனங்கலை ஆக்கபூர்வமாக்கி ஒன்றுணைவோம் 

நன்றி  தோழர் 

ஆனால் கூட்டமைப்பு இதுவரை இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதா?

நம்பிக்கை தானும் வைத்துள்ளதா என்றால் பதில் பூச்சியமே..

இனிப்பாருங்கள்

உள்ளதையும் உடைத்து

தமிழரசுக்கபட்சியைத்தூக்கிப்பிடித்து

தனியே போவார்கள்

இது தான் அவர்களது  இலக்காக இருக்கிறது

இருக்குமே தவிர

தமிழரது நலன்கள் ஒற்றுமை இதெல்லாம்.......???:(:(:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.