Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேசிய அரசாங்கம் அமையாது! எதிர்க்கட்சித் தலைவர் பதவி சம்பந்தனுக்குக் கிடைக்காது!

Featured Replies

தேசிய கொள்கையை செயல்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒருங்கிணைந்த அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க திட்டமிட்டுள்ளதாக ஶ்ரீலங்கா மிரர் இணையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த ஒருங்கிணைந்த அரசாங்கத்தை ஸ்தாபித்து குறித்த தேசிய கொள்கையை சமர்ப்பித்து இன்று (20) மாலை நடைபெறும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அங்கீகாரம் பெறப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தல் காலத்தில் தேசிய அரசாங்கம் அமைக்கப்படமாட்டாது என தொடர்ச்சியாக கூறிவந்த நிலையில், அரசியலமைப்பில் உள்ள சிக்கலை கவனத்தில் கொண்டு ''தேசிய அரசாங்கம்'' என்ற பெயரை பயன்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்தே ஸ்தாபிக்கப்படவுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும், இதற்கும் எவ்வித தொடர்பும் இருக்காது எனக் கூறப்படுகிறது.

சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள இதர கட்சிகள் இதற்கு இணங்காவிடின் இந்த ஒருங்கிணைந்த அரசாங்கத்திற்குள் வராதிருக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த அரசாங்கம் என்ற யோசனைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த டளஸ் அழகப்பெரும இன்று மதியம் வரை எதிர்ப்பை வெளியிட்டு வந்தபோதிலும், தற்போது அவர் இந்த யோசனைக்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஶ்ரீலங்கா மிரர் இணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

எனினும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

குறித்த ஒருங்கிணைந்த அரசாங்கத்தை ஸ்தாபிப்பதில் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோர் முன்னின்று செயற்படுவதாக தெரியவருகிறது.

இதேவேளை, ஒருங்கிணைந்த அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்குத் தேவையான யோசனைகள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் தலைமையிலான ஐவர் கொண்ட குழுவினால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் 19ஆவது திருத்தச் சட்டப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கும். எனினும், தேசிய அரசாங்கம் என்ற பதம் இல்லாது ஒருங்கிணைந்த அரசாங்கம் என்ற நிலைப்பாட்டில் தற்போது பிரதான இரண்டு கட்சிகளும் இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி சம்பந்தனுக்குக் கிடைக்காது எனத் தெரியவருகிறது.

http://www.tamil.srilankamirror.com/news/item/4029-2015-08-20-08-05-30

  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்கா சறுக்கிட்டான் சிங்களவன்

இனி வாழ்வில் அந்த சறுக்கல் வரவிடமாட்டான்.

ஆனால் தமிழன்.......:(

ஒருக்கா சறுக்கிட்டான் சிங்களவன்

இனி வாழ்வில் அந்த சறுக்கல் வரவிடமாட்டான்.

ஆனால் தமிழன்.......:(

சறுக்கீசிலேயே தூங்கி எழுவான்

  • கருத்துக்கள உறவுகள்

சறுக்கீசிலேயே தூங்கி எழுவான்

அவங்கள் பேய் சுழியங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.