Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெர்மனி மேயர் தேர்தல் கருத்து கணிப்பு: இந்திய வம்சாவளி வேட்பாளர் முன்னிலை

Featured Replies

 
ஜெர்மனி மேயர் தேர்தல் கருத்து கணிப்பு: இந்திய வம்சாவளி வேட்பாளர் முன்னிலை
 
 
 
 
 
 
 
 
 
Tamil_News_large_1339927.jpg
 

பெர்லின்: மேற்கு - மத்திய ஐரோப்பாவைச் சேர்ந்த, ஜெர்மனியில், நாளை மறுநாள், மேயர் தேர்தல் நடைபெறுகிறது.

 

இதில், பான் நகர மேயர் வேட்பாளராக, பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் - சி.டி.யு., கட்சியைச் சேர்ந்த, அசோக் ஸ்ரீதரன், 49, களமிறங்கியுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், சமூக ஜனநாயக கட்சி - எஸ்.பி.டி., வேட்பாளர் பீட்டர் ருஹென்ஸ்ட்ரோத் பாயரை விட, கூடுதல் ஓட்டுகளை பெறுவார் என, கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. எனினும், கருத்துக் கணிப்பில் நடுநிலை வகித்த, 26 சதவீத வாக்காளர்களின் ஓட்டு தான், வெற்றியை தீர்மானிக்கும்.

 

இந்திய தந்தைக்கும், ஜெர்மனி தாய்க்கும் பிறந்த அசோக் ஸ்ரீதரன், கோனிங்ஸ்வின்டர்( நகர துணை மேயராகவும், கருவூலத் துறை தலைவராகவும் உள்ளார். இவர் வெற்றி பெற்றால், ஜெர்மனியில், முக்கிய நகரின், முதல் இந்திய வம்சாவளி மேயர் என்ற சிறப்பை பெறுவார்.பான்(BONN) நகரின் மேயர் பதவியை, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, சி.டி.யு., தக்கவைத்துக் கொண்டுள்ளது. இம்முறையாவது, எஸ்.பி.டி., கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

 

முந்தைய தலைநகரம்:


 

கடந்த, 1939, செப்., 1 முதல், 1945, செப்., 2 வரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, ஜெர்மனி பிளவுபட்டது. பான், மேற்கு ஜெர்மனியின் தலைநகராகவும், பெர்லின், கிழக்கு ஜெர்மனியின் தலைநகரமாகவும் விளங்கின. இந்நிலையில், 45 ஆண்டுகளுக்குப் பிறகு, 1990, அக்., 3ல், கிழக்கு - மேற்கு ஜெர்மனி நாடுகள் ஒன்றாக இணைந்தன. ஒன்றுபட்ட ஜெர்மனியின் தலைநகராக, பெர்லின் உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1339927

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியின்... பான், நகர மேயராக.... ஸ்ரீதரன் வெற்றி பெற,
தமிழ்சிறியின், முற்கூட்டிய வாழ்த்துக்கள்.
போடுங்கம்மா.... ஒட்டு, ஸ்ரீதரனின்... சின்னத்தைப் பார்த்து. :grin:

  • தொடங்கியவர்

http://www.brandenburg-cdu.de/image/content_multi_text/45.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உப்பிடித்தான் இன்னொரு இந்தியவம்சாவளி அரசியல்வாதியும் ஜேர்மனியிலை நல்லாய் மின்னினவர்.. சின்னப்பிள்ளையளின்ரை நிர்வாண படங்களை இன்ரநெட்டிலை டவுண்லோட் பண்ணி பார்த்தவர் எண்டு ஆளை பதவியிலையிருந்தே தூக்கீட்டாங்கள்.....:innocent:

காட்டிக்குடுத்தது கனடா இரகசிய பொலிசுtw_glasses:


சிங்கன்ரை தேப்பன் மலையாளம்(பாதிரியார் வேலை) தாய் ஜேர்மன்:grin:

4521775_1_dpa_148890001438B0BD.jpg?versi

29376998,30824468,highRes,01K+02_71-7823

  • கருத்துக்கள உறவுகள்

பிழைக்கத் தெரிந்தவன் தான்... மலையாளத்தான்.
அது...தான், இம்பூட்டு... தூரம் வந்து, ஜெர்மன் மக்களுக்கு தொண்டாற்ற வந்துள்ளார்கள். :cool:

  • தொடங்கியவர்

ஜெர்மனி நகர மேயராக இந்தியர் தேர்வு

 
அசோக் ஸ்ரீதரன்
அசோக் ஸ்ரீதரன்

ஜெர்மனியின் பான் நகர மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் ஸ்ரீதரன் (49) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜெர்மனி பிளவுபட்டது. பான் மேற்கு ஜெர்மனியின் தலைநகராகவும் பெர்லின் கிழக்கு ஜெர்மனியின் தலைநகரமாகவும் விளங்கின. 45 ஆண்டுகளுக்குப் பிறகு 1990-ல் கிழக்கு, மேற்கு ஜெர்மனி நாடுகள் ஒன்றாக இணைந்தன. தற்போது ஒன்றுபட்ட ஜெர்மனியின் தலைநகராக பெர்லின் உள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியின் பான் நகர மேயர் தேர்தல் நேற்றுமுன்தினம் நடை பெற்றது. இதில் பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கிறிஸ்டியன் டெமாகரடிக் யூனியன் -சி.டி.யு. கட்சி யைச் சேர்ந்த அசோக் ஸ்ரீதரன் அமோக வெற்றி பெற்றார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவர், தற்போது கோனிங்ஸ்வின்டர் நகர துணை மேயராகவும், கருவூலத் துறை தலைவராகவும் உள்ளார். இந்திய தந்தைக்கும் ஜெர்மனி தாய்க்கும் பிறந்த அசோக் ஸ்ரீதரன் ஜெர்மனியின் முதல் இந்திய வம்சாவளி மேயர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

http://tamil.thehindu.com/world/ஜெர்மனி-நகர-மேயராக-இந்தியர்-தேர்வு/article7654746.ece

  • தொடங்கியவர்
ஜெர்மனி மேயர் தேர்தல்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் ஸ்ரீதரன் வெற்றி
 
 
 
Tamil_News_large_1341891.jpg
 

பெர்லின்: மேற்கு - மத்திய ஐரோப்பாவைச் சேர்ந்த, ஜெர்மனியில், பான் நகர மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அசோக் ஸ்ரீதரன், 49, வெற்றி பெற்றுள்ளார்.

ஜெர்மனியில், நேற்று முன்தினம், பான் நகர மேயருக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், ஜெர்மனி பிரதமர், ஏஞ்சலா மெர்கலின், சி.டி.யு., எனப்படும், கிறிஸ்டியன் ஜனநாயக சங்கத்தின் வேட்பாளராக, அசோக் ஸ்ரீதரன் போட்டியிட்டார். இவருக்கு, 50.06 சதவீத ஓட்டுகள் கிடைத்தன.சமூக ஜனநாயக கட்சியான, எஸ்.பி.டி.,யின் வேட்பாளர் பீட்டர் ருஹென்ஸ்ட்ரோத் பாயருக்கு, 23.68 சதவீத ஓட்டுகளும், பசுமை கட்சி வேட்பாளர் டாம் ஷிமிட்டுக்கு, 22.14 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன.

 

அசோக் ஸ்ரீதரன், பெற்ற மகத்தான வெற்றி, எதிர்க்கட்சிகளுக்கு வியப்பை அளித்துள்ளது. பான் நகரை, 21 ஆண்டுகளாக எஸ்.பி.டி., ஆட்சி செய்து வந்தது. இதற்கு, அசோக் ஸ்ரீதரன் வெற்றி மூலம், சி.டி.யு., முற்றுப்புள்ளி வைத்துள்ளது.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், ஜெர்மனியின் முக்கிய நகரான, பானின் மேயராக வருவது, இதுவே முதன் முறையாகும். அசோக் ஸ்ரீதரன், அக்டோபர், 21ல், மேயர் பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய தந்தைக்கும், ஜெர்மனி தாய்க்கும் பிறந்த அசோக் ஸ்ரீதரன், தற்போது, கோனிங்ஸ்வின்டர் நகர துணை மேயராகவும், கருவூலத் துறை தலைவராகவும் உள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1341891

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.