Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோழி சந்தியா எக்னெலிகொட அவர்களுக்கு நன்றி - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக ஊடகவியலாளர் பிரகீத்தின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஜெனிவாவில் சாட்சியமளித்துள்ளார் - செய்தி

     

    மிகவும் நன்றி சந்தியா எக்னெலிகொட.

  • உங்கள் கணவர்  தியாகி பிரகீர்த்தி போன்ற உங்களைப் போன்ற பாசனா போன்ற நல்மனம் படைத்த சிங்கள ஊடகவியலாளர்களின் பங்களிபில்லாமல் இறுதிபோரின் போர்க்குற்றங்களும் இனக்கொலையும் முழுமையாக வெளிவந்திருக்காது. கோத்தபாய போன்ற போர்குற்றவாளிகள் உங்கள் கணவரைக் கடத்திக் கொன்றதுபோல  உண்மையையும் நீதியையும் கொன்று புதைத்திருப்பார்கள்..

    முற்போக்கான சிங்கள ஊடகவியலாளர்களின் மகத்தான பங்களிப்பை  நாம் இதுவரை முழுமையாக உணரவில்லை. போர்குற்ற ஆதாரங்களையும் அதன் இனக்கொலை பரிமாணத்தையும் வெளியில் கொண்டுவந்த சிங்கள ஊடகவியலாளர்களையும் சர்வதேச மயப்படுதிய உலக மனித உரிமை ஆர்வலர்களையும் தமிழர்கள் எல்லோரும் கை கூப்பி வாழ்த்த வேண்டும்.  

    போர்குற்ற/இனக்கொலை விசாரணைக்கான கோரிக்கையை தொடர்ந்து உயிர்ப்புடன் முன்னிலைபடுத்திய தமிழக தமிழர்களையும் மலேசிய உலக தமிழ் ஆதரவாளர்களையும் மற்றும் புலம்பெயர் தமிழ் ஆர்வலர்களையும் போற்றுதல் வேண்டும்.

  •  

    நாம் மெதுவாக முன்னேறியபோதும் சரியான திசையிலேயே நாம் நகர்கிறோம் என்பது மகிழ்ச்சிதருகிறது.

     இனக்கொலையின் பின்னரும் அரசியல் ரீதியாக  நொருங்கிப்போகாமல் ஈழத் தமிழர்கள் எடுத்த துணிச்சலும் நிதானமுமான அரசியல் நிலைபாடுதான் இன்று நாம் பெற்றிருக்கும் அனைத்து  ஆரம்ப வெற்றிகளுக்கும் ஆதாரமாக இருந்தது. மோசமான உயிர் அச்சுறுத்தல் நிலையிலும் தேர்தல் வாக்களிப்புகள்மூலம் சரணாகதி அடையாத எதிர்ப்பை உலக சமூகத்துக்கு உணர்த்திய ஈழத் தமிழ் மக்களை நாம் அனைவரும் இரு கை கூப்பி வணங்குகவேண்டும் .- வ.ஐ.ச.ஜெயபாலன்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களால் தேர்வு செய்யபட்ட எமது பிரதிநிதி அது இன அழிப்பு இல்லை என்று வாதாடிவரும் நிலையில் 
இவாவிற்கு இது தேவை இல்லாத விடயம்.

அவர்கள் இராசாயன ஆயுதம் பாவித்தார்கள் என்பது 
இன அழிப்பு என்ற வாதத்திற்கு துணைபோகலாம். 

தமிழன் என்ற முறையில் 
எமது பிரதிநிதிக்கு முட்டுகட்டையாக இருக்கும் இவருக்கு 
எனது கண்டனங்களை தெரிவிக்க விரும்புகிறேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம் மருதங்கேணி.

என் முகநூலுக்கு ஒரு முஸ்லிம் தோழன் பின்வரும் கருத்தை எழுதியிருந்தான். முக்கியத்துவம் கருதி அதனை இங்கு பிரசுரிக்கிறேன்.

"Hyder Ali இது போன்ற ஏறாலமான சிங்கள பெரும் பாண்மை இனத்தை சேர்ந்த ஊடவியளார்கள் புலம் பெயர்ந்து வாழ்கிரார்கள். வெள்ளை கொடி விவகாரத்துடன் தொடர்பு பட்ட முக்கிய சாட்ச்சி சரத் பொன்சேகாவின் ஒலிப்பதிவு அடங்கிய சாட்ச்சியுடன் கோட்டாவுக்கு அஞ்சி திரை மறைவில் வாழ்ந்து வருகிறார். இவர்களை அனுகுவதற்கு தமிழ் அமைப்புக்கள் தவரி விட்டது."

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.