Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

17 வருடங்களின் பின் சந்திக்க வந்த கணவனை பொலிஸில் ஒப்படைத்த மனைவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

( எம். செல்வராஜா )

நீதிமன்றத்தினால் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டு பதினேழு வருடங்களுக்குப் பின்னர்  தன்னை சந்திக்க வந்த கணவனை, மனைவி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று எல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர், மனைவியை விட்டுப் பிரிந்ததினால் அவருக்கெதிராக மனைவினால் தொடரப்பட்ட வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்நிலையில், பல நீதிமன்ற அழைப்பாணைகளை புறக்கணித்தமையினால் பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த 1998 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி குறிப்பிட்ட நபருக்கு எதிராக பிடி விறாந்தினை பிறப்பித்திருந்தது.

அதன் பின்னர் கடந்த பதினேழு வருடகாலமாக மனைவியையோ பிள்ளைகளையோ பார்க்க வராமல்  குறித்த நபர் தலைமறைவாகியிருந்துள்ளார்.

இதையடுத்து அந்நபர்  நேற்றிரவு மனைவியை சந்திக்க வந்ந நிலையில், மனைவி எல்ல பொலிஸ் நிலையத்திற்கு கணவன் குறித்து தகவலை கொடுத்துள்ளார். 
குறித்த தகவலினடிப்படையில் எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எல்.டி.எம். கருணாரட்ன தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததும். குறிப்பிட்ட நபரை, அவரது மனைவியே பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தார்.

கைது செய்யப்பட்ட நபரை, பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிசார் நடவடிக்ககைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2015/09/26/17-வருடங்களின்-பின்-சந்திக்க-வந்த-கணவனை-பொலிஸில்-ஒப்படைத்த-மனைவி

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலம் ஒளிந்திருந்ததால் வந்த தலைவலியை விட, இனி ஒளித்து வைப்பதால் வரும் தலை வலி, சட்டச் சிக்கல் அதிகம்.

நல்ல முடிவு. நல்ல மனைவி, நல்ல தாய். பிள்ளைகளுக்கு தொடர்ந்து அம்மா இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

 

மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர், மனைவியை விட்டுப் பிரிந்ததினால் அவருக்கெதிராக மனைவினால் தொடரப்பட்ட வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அதன் பின்னர் கடந்த பதினேழு வருடகாலமாக மனைவியையோ பிள்ளைகளையோ பார்க்க வராமல்  குறித்த நபர் தலைமறைவாகியிருந்துள்ளார்.

இதையடுத்து அந்நபர்  நேற்றிரவு மனைவியை சந்திக்க வந்ந நிலையில், மனைவி எல்ல பொலிஸ் நிலையத்திற்கு கணவன் குறித்து தகவலை கொடுத்துள்ளார். 

17 வருசமாக.... வராத அந்த நபர், இரவு வந்தது தான்... பிரச்சினையின் மூல காரணம்.
பாவி... மனுஷன், நாலாவது பிள்ளை கொடுக்க வந்துள்ளார் போல் தெரிகிறது.SmileysLaughing_lol_crying_100-101

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.