Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பன்ச் மேல் பன்ச்" வசனம் பேசி சிலிக்கான் வேலியை சிலிர்க்க வைத்த மோடி

Featured Replies

"பன்ச் மேல் பன்ச்" வசனம் பேசி சிலிக்கான் வேலியை சிலிர்க்க வைத்த மோடி
 
 
 சான் ஜோஸ்: டிஜிட்டல் புரட்சி பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஒற்றை வரிகளில் பல பஞ்ச் வசனங்கள் பேசி சிலிக்கான் வேலியைச் சேர்ந்த ஐடி பெரும்தலைகளை கவர்ந்துள்ளார். அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சிலிக்கான் வேலி சென்றுள்ளார்.
Modi charms Silicon Valley with one-liners
அங்கு அவர் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சிஇஓக்களை சந்தித்து பேசினார்.

 மேலும் இன்று நடந்த டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

அவரது உரையின் சிறப்பு அம்சங்கள்,

நான் உங்களில் பலரை டெல்லி, நியூயார்க், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் சந்தித்துள்ளேன்.

ஃபேஸ்புக் மட்டும் ஒரு நாடாக இருந்தால் அது தான் மக்கள் தொகை அதிகம் உள்ள மூன்றாவது நாடு ஆகும்.

ட்விட்டர் அனைவரையும் ரிப்போர்டர் ஆக்கியுள்ளது.

ஒருவர் விழித்திருக்கிறாரா, தூங்குகிறாரா என்பது முக்கியம் அல்ல மாறாக அவர் ஆன்லைனில் இருக்கிறாரா, ஆப்லைனில் இருக்கிறாரா என்பது தான் முக்கியம்.

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இளம் வாலிபர் இந்தியாவில் உள்ள உடல்நலம் சரியில்லாத தனது பாட்டியுடன் தினமும் ஸ்கைப் மூலம் பேசி ஆறுதல் கூறுகிறார்.

பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை உணர்த்த ஹரியானாவைச் சேர்ந்த ஒரு தந்தை மகளுடன் செல்ஃபியை அறிமுகப்படுத்தியது சர்வதேச அளவில் பிரபலம் ஆனது.

இது எல்லாமே நீங்கள் செய்யும் பணியால் தான் சாத்தியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

மோடிக்கு துதி பாட ஒரு கோஸ்டி இந்தியாவில் இருக்கின்றது போல......அது சரி இதில எது  பஞ்ச்

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் பன்ச்...,

ஒருவர் விழித்திருக்கிறாரா, தூங்குகிறாரா என்பது முக்கியம் அல்ல மாறாக அவர் ஆன்லைனில் இருக்கிறாரா, ஆப்லைனில் இருக்கிறாரா என்பது தான் முக்கியம்.

 

மோடி ஒரு தடவை சொன்னா கோடி தடவை சொன்ன மாதிரி.....  ஹா... ஹா.... ஹா... . இது எப்படி இருக்கு...!  tw_blush:

  • தொடங்கியவர்
 

'டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தைப் பற்றி ‘ஒரு வரி’ யில் பேசி அசத்திய நரேந்திர மோடி

 
 
கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையுடன் கைகுலுக்கும் பிரதமர் மோடி. | படம்: பிடிஐ.
கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையுடன் கைகுலுக்கும் பிரதமர் மோடி. | படம்: பிடிஐ.

சிலிகான் வேலியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ஒரு வரியில் எல்லோரும் கவரும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றி பல கருத்துகளை தெரிவித்தார். அதைக் கேட்டு பிரபல நிறுவன தலைமை செயல் அதிகாரிகள் (சிஇஓ) ஆச்சரியம் அடைந்தனர்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிலிக்கான் வேலியில் நேற்று நடந்த டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் பேசினார். கூகுள், மைக்ரோசாப்ட், சிஸ்கோ உட்பட பல முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் மத்தியில் மோடி பேசுகையில், டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சி பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் பல கருத்துகளை ஒரு ஒரு வரியாக எல்லோரையும் கவரும் வகையில் குறிப்பிட்டார். அதன் விவரம் வருமாறு:

* உலகில் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையையும் மாற்றியுள்ளது சிலிகான் வேலி.

* உங்களில் பலரை டெல்லி, நியூயார்க், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் சந்தித்துள்ளேன்.

* முகநூல் உட்பட இவைதான் நமது உலகின் அண்டை வீட்டாராக உள்ளன.

* முகநூல் மட்டும் ஒரு நாடாக இருந்திருந்தால், அதுதான் மக்கள் தொகை அதிகம் கொண்ட 3-வது நாடாக இருந்திருக்கும்.

* கூகுள் ஆசிரியர்களை குறைத்துவிட்டது. மிகவும் விரும்பப்படுவதாக உள்ளது.

* ட்விட்டர் எல்லோரையும் நிருபர்களாக்கி உள்ளது.

* போக்குவரத்து விளக்குகள் வேலை செய்ய சிஸ்கோவின் ரவுட்டர்கள்தான் சிறந்தவை.

* நீங்கள் விழித்திருக்கிறீர்களா, தூங்குகிறீர்களா என்பது இப்போது முக்கியமில்லை.

* நீங்கள் ஆன்லைனில் இருக்கிறீர்களா ஆப் லைனில் இருக்கிறீர்களா என்பது முக்கியம்.

* நமது இளைஞர்களின் விவாதம் எல்லாம் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் அல்லது விண்டோஸ் பற்றியதாகவே உள்ளது.

* இவை எல்லாம் சிலிகான் வேலியில் உள்ள உங்களால்தான் சாத்தியமாகி இருக்கின்றன.

இவ்வாறு மோடி பேசினார்.

அவர் ஒவ்வொரு வரிகளாக சொல்லச் சொல்ல, பிரபல நிறுவனங்களின் அதிகாரிகள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தன்னுடைய சொந்த வாழ்க்கையை உதாரணமாகக் கூறி, இந்தியாவில் உள்ள கிராம பெண்கள்கூட இப்போது தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்து வைத்துள்ளனர் என்று மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

மோடி மேலும் பேசுகையில் கூறியதாவது:

நீண்ட பயணம் செய்யாமல், சாகசம் செய்யாமல், சிறிய தீவில் உள்ளவர்களைக் கூட தொடர்பு கொள்ள டிஜிட்டல் தொழில்நுட்பம் உதவி உள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு செல்போன் மூலம் பணத்தை வேறு ஒருவர் கணக்குக்கு மாற்ற முடிகிறது.

இந்தியாவில் குக்கிராமத்தில் உள்ள ஒரு தாய், தனக்கு பிறந்த குழந்தையை எளிதில் காப்பாற்ற முடிகிறது. குக்கிராமத்தில் உள்ள குழந்தை நல்ல கல்வியை பெற முடிகிறது. இவை எல்லாமே டிஜிட்டல் புரட்சியால்தான்.

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒருவர், இந்தியாவில் உடல்நலம் இல்லாமல் உள்ள தனது பாட்டியுடன் தினமும் ஸ்கைப் மூலம் பேசி ஆறுதல் சொல்கிறார். விவசாயிகள் தங்கள் நிலத்தின் மதிப்பை அறிந்துகொள்ள முடிகிறது, மீனவர்கள் அதிக மீன்களைப் பிடிக்க முடிகிறது. ‘செல்பி வித் டாட்டர்’ என்ற தலைப்பில் தனது மகளுடன் புகைப்படம் எடுத்து ஹரியாணாவைச் சேர்ந்த தந்தை வெளியிடுகிறார். அதன் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிகிறது.

இவை எல்லாமே சிலிகான் வேலியில் இருந்து கொண்டு நீங்கள் செய்யும் டிஜிட்டல் புரட்சியால்தான்.

இவ்வாறு மோடி பேசினார்.மோடியின் பேச்சைக் கேட்ட பிரபல நிறுவன அதிகாரிகள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

http://tamil.thehindu.com/india/டிஜிட்டல்-தொழில்நுட்பத்தைப்-பற்றி-ஒரு-வரி-யில்-பேசி-அசத்திய-நரேந்திர-மோடி/article7694867.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.