Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை; 7 பேருக்கு ஆயுள்: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

Featured Replies

2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை; 7 பேருக்கு ஆயுள்: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

 
 
மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிகள் | கோப்புப் படம்: பிடிஐ
மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிகள் | கோப்புப் படம்: பிடிஐ

கடந்த 2006-ம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 12 பேரில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஐவரும் இந்த முக்கியக் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவர்கள். மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிண்டே இத்தீர்ப்பை வழங்கினார்.

வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட மற்ற 7 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி, மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மரண தண்டனை பெறும் ஐவர்:

கமல் அன்சாரி, பைசல் ஷேக், எஹ்தே ஷாம் சித்திக்கி, நவீது கான், ஆசிப் பஷீர் கான் ஆகிய ஐவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்த குற்றத்துக்காக இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழும், தீவிரவாத தாக்குதல் நடத்தியதற்காக யு.ஏ.பி.ஏ சட்டப்பிரிவு 16-ன் கீழும் இவர்கள் ஐவருக்கும் மரண தண்டை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

7 பேருக்கு ஆயுள்:

தன்வீர் அகமது அன்சாரி (37), முகமது மஜீத் ஷபி (32), ஷேக் ஆலம் ஷேக் (41), முகமது சாஜித் அன்சாரி (34), முஸாமில் ஷேக் (27), ஷோஹைல் முகமது ஷே (43), ஜமீர் அகமது (36) ஆகிய 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கு பின்னணி:

மும்பையில் 2006 ஜூலை 11-ம் தேதி புறநகர் ரயில்களில் ஆர்டிஎக்ஸ் ரக குண்டுகள் வெடித்ததில் 188 பேர் உயிரிழந்தனர்; 829 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்ற கடந்த 11-ம் தேதி தீர்ப்பளித்தது. இதில் ஒருவர் விடுவிக்கப்பட்டார்.

குற்றவாளிகள் அனைவரும் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தினருடன் (இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்) தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த 12 பேருக்கான தண்டனை விவரத்தை நீதிபதி யாதின் டி ஷிண்டே செப்டம்பர் 30-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார். அதன்படி, இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.

http://tamil.thehindu.com/india/2006-மும்பை-ரயில்-குண்டுவெடிப்பு-வழக்கில்-5-பேருக்கு-மரண-தண்டனை-7-பேருக்கு-ஆயுள்-சிறப்பு-நீதிமன்றம்-தீர்ப்பு/article7705882.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்திய பயங்கரவாதிகள் தண்டிக்கப்படவேண்டும்.  அந்தவகையில் இம்முடிவு வரவேற்கத் தக்கது!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வழக்கை பின்தொடர்பவர்களுக்கு இது ஒரு விசுகோத்து இந்திய நாடகம் என்பது புரியும்.

சிறிய தகவல் துணுக்குகள் 
(குண்டு வெடிப்பு ஜூலை 11 ஆம் திகதி)

முதல் நாளே 350பேர் கைது செய்யபட்டார்கள் 
யாவரும் 2 வருடம் மேல் தடுத்துவைக்க பட்டர்கள். 

14ஆம் திகதி ஜூலை 
இதை லக்சார் அல் குவாப் செய்ததாக அறிவித்தார்கள். 


இரண்டு நாள் கழித்து 
லக்சார் அல் தோய்ப்பா மீதும் இஸ்லாமிய மாணவர் முன்னேற்றம் மீதும் பழி போட்டார்கள்.
350 பேர் கைது வெளிப்படையானது என்றாலும் 600 பேருக்கு மேல் கைதுசெய்ய பட்டார்கள் 
350 போரையும் தொடர்ந்தும் தடுத்து வைக்க இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் மீது பழி போட்டார்கள்.

இரண்டுமே தாம் செய்யவில்லை என்று உத்தியோக பூர்வமாக அறிவிக்கிறார்கள். 

30 செப்டெம்பெர் பாகிஸ்தான் உளவு துறை மீது பழி போடுகிறார்கள். 

இதில் 18ஆம் திகதி பீகாரில் வைத்து கைது செய்யபட்ட இருவர் (தற்போதைய குற்றவாளிகள்) தாம் சிமி அமைப்பை 
சேர்ந்ததாக சொன்னார்கள் என்று ..... (சொன்னார்கள்). 

உடனேயே அப்துல் கரீம் துண்டா மசொபா கென்யாவில் வைத்து கைதாகிறார். (இவர் லக்சர் அல் தோய்ப்பாவை சேர்ந்தவர்) 
பின்பு சிமி அமைப்பு மூல காரணி ஆக்குவதற்கு இவருடைய கைது ஒத்தது வரவில்லை என்பதால் 
அவருக்கு தொடர்பில்லை என்று அறிவிக்கிறார்கள். 

2006 இறுதியில் சிமி அமைப்பே முக்கிய குற்றவாளிகள் ஆக்கபட்டார்கள் 
அவர்களை பேட்டி கண்ட தொலைகாட்சிக்கு தாம் வெற்று பேப்பரில் கையப்பமிட பணிகபட்டு 
தாம் குற்றவாளிகள் ஆக்க பட்டோம் என்று சொல்கிறார்கள். 

2007இல் எம் கே நாராயணன் ஜெம்மா இஸ்லாமியா மீது குற்றம் சாட்டுகிறார். 
இன்னமும் சரியான ஆதாரம் ஏதும் இல்லை வழக்கு கோட்டுக்கு வந்துவிட்டது 
ஆதராம் கேட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைக்கிறார்கள். 
(சர்வதேச ஆதரவை திரட்டும் அதீத புத்தி அது. ஜெம்மா இஸ்லாமியா எஜிப்து நாட்டு ஜிகாடிஸ்களுடன் தொடர்பு கொண்டது அல் சஹுவாரி யுடன் உறவு கொண்டது எஜிப்த்து ஜிஹாடிஸ்டுகள்தான் அந்தரக்ஸ் தாக்குதலை செய்தவர்கள். தவிர பிரஷர் குக்கரில் குண்டு வைக்கும் தொழில்நுட்பத்தை அறிமுக படுத்தியவர்கள்) 

27 பெரவரி 2009இல் கைதுசெய்யபட்டவர்களில் ஒருவரான இந்தியன் முஜாஹீடினை சேர்ந்த சாஹிட் சீய்க் தாம்தான் செய்ததாக 
குற்றத்தை ஒப்புகொள்கிறார். அவரது ஒப்புதல் வாக்குமூலம் டிவியில் ஒளிபரப்பகுகிறது. 
இப்போதும் சிமி தான் முக்கிய குற்றவாளியாக அமைப்பாக இருக்கிறது. 

9189d7ffd6ad611f71598c99373d_grande.jpg

260787-mumbai-train-blasts.jpg

நேற்று 12 பேர் குற்றவாளிகள் என்று இந்த தீர்ப்பு மகாராஸ்டிர குற்றவியல் நீதிமன்றில் இருந்து வெளியாகுகிறது. 

terror-charges.jpg?w=620

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.