Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு அரசு சம்பளம்: சீமான் அதிரடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு அரசு சம்பளம்: சீமான் அதிரடி!

 

 

தேனி: நான் முதல்வரானால் ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு அரசு சம்பளம் வழங்குவேன் என்று தேனியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

2.jpg

வருகின்ற சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? என்ற கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று தேனியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு  சீமான் பேசும்போது, ''130 கோடி தமிழன் இருந்தும், தனியாக வாழ ஒரு நாடு இல்லாமல் இருக்கிறோம். இந்த நிலைக்கு காரணம், இதுவரை நம் இனத்தின் தலைவன் ஒருவன் நம்மை ஆளாததே.

இந்தியை எதிர்ப்பதுபோல் ஆட்சியை பிடித்த தி.மு.க., இந்தியை திணித்த காங்கிரசிடமே கூட்டணி வைத்தது. கச்சத்தீவை இந்திரா தாரை வார்த்தபோது முதல்வராக இருந்த கருணாநிதி, அதை தடுக்காமல் தேர்தல் அறிக்கையில் கச்சதீவை மீட்போம் என்கிறார். அப்படியானால், இதுவரை என்ன செய்தார்? கச்சத்தீவு எப்போதும் இந்தியாவுடன் இருந்ததில்லை என சொன்ன காங்கிரஸ், உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தபோது, 'கொடுத்தது கொடுத்ததுதான்' என்றது. உங்களிடம் இல்லாததை எப்படி அவர்களுக்கு கொடுப்பீர்கள்?

4.jpg

நான் முதல்வரானால், 'கச்சத்தீவை திருப்பிக்கொடு, இல்லையேல் எங்களை வெட்டிவிடு' என்பேன். 'மேக் இன் இண்டியா', 'மேட் இன் இந்தியா',  'டிஜிட்டல் இந்தியா', 'கிளீன் இன் இந்தியா' என நாட்டின் பிரதமராக இருப்பவர் சொல்லும் எல்லாவற்றிலும் இந்தியா இருக்கிறது. ஆனால், அவர்தான் இந்தியாவில் இல்லை.

நான் முதல்வரானால் பாண்டியன்-பொன்னம்பலாரில் அணையைக் கட்டுவேன். எங்களுக்கு வர வேண்டிய தண்ணீரை தாருங்கள் என கேரளத்தினர் கேட்டால், முல்லை பெரியாறில் எங்களுக்கு வர வேண்டிய தண்ணீரைக் கொடு என்று கேட்பேன். கடந்த ஐம்பது ஆண்டுகளில் மத்திய, மாநில அமைச்சர்களின் கொள்ளையடித்த பணத்தை வாங்கி மதுரை, தேனி, மாவட்டங்களில் 500 ஏக்கரில் ஏரி அமைப்பேன். அதற்கான தண்ணீருக்கு நீர்பாதைகளை உருவாக்குவேன்.

3.jpg

வேளாண்மையை தேசிய தொழிலாளாகவும், கம்பு, சோளம், குதிரைவாலியை தேசியப்பயிர்களாகவும், விவசாய தொழில் செய்து அறுபது வயதை கடந்த முதியவர்களுக்கு  உதவித்தொகை வழங்குவேன். பனை மரங்களை பெருக்கும் வகையில் பல கோடி பனை திட்டம், மண்பானை தொழிற்சாலை, நெசவு வேலையை அரசு வேலையாக்குதல், ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு அரசு சம்பளம் வழங்குவேன். ஆடு, மாடு, தேனீ வளர்க்காமல் எப்படி பொருளாதாரம் மேம்பாடு அடையும்?
 
தனியார் பள்ளி, கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களைவிட, அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வாக தரப்படும். எம்.எல்.ஏ, எம்.பி., ஆசிரியர் ஆகியோரின் குழந்தைகள் அரசுப்பள்ளிகளிலேயே படிக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகியவற்றை இலவசமாக கொடுத்து, தடையற்ற மின்சாரத்தை கொடுப்பேன். இன விடுதலை ஒன்றையே இலக்காக கொண்டு நாங்கள் போராடி வருகிறோம்" என்றார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போடி தொகுதிக்கு அன்பழகனையும், கம்பம் தொகுதிக்கு ஜெயபாலையும், ஆண்டிபட்டி தொகுதிக்கு தம்பி ஆனந்தனையும் அறிவித்தார் சீமான்

உ.சிவராமன்
ச.மோகனப்பிரியா


படங்கள்:
வீ.சக்தி அருணகிரி

 

http://www.vikatan.com/news/article.php?aid=53369&utm_source=vuukle&utm_medium=referral

  • கருத்துக்கள உறவுகள்

அட்ரா சக்கை அப்பிடி போடுங்க அரிவாளை :grin: 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் அகதிகளுக்கே ஓய்வூதியம் கொடுக்கிறாங்க.. பாவம் உழைக்கும் மக்களுக்கு தமிழக அரசு கொடுப்பதில்லை. ஆடு மாடு மேய்க்காட்டி பால்.. இறைச்சி இல்லை. இரண்டும் இல்லையேல் ஆள் வளர்ச்சி இல்லை. உலகில் அதிகம் பால் குடிக்கும் மக்கள் தானாம்.. அதிகம் வளர்ச்சி அடையினம்.. சொல்கிறது ஆய்வு. தமிழக சிறுவர்களின் போசாக்கின்மையை நீங்க.. இந்த சம்பள அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால்.. பால்.. இறைச்சி உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு காணலாம். தமிழகத்தின் வளர்ச்சி.. ஈழத்தில் தமிழர்களின் இருப்புக்கு அவசியம். tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.