Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பீபா ஊழல்: 2006 உலகக் கிண்ண ஏலத்தில் தவறு ஏற்பு

Featured Replies

பீபா ஊழல்: 2006 உலகக் கிண்ண ஏலத்தில் தவறு ஏற்பு
 

article_1445950468-oozalomam.jpg2006ஆம் ஆண்டு ஜேர்மனியில் இடம்பெற்ற கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் ஏலத்தில் தவறுகள் காணப்பட்டதை ஏற்றுக் கொள்வதாக, அந்த உலகக் கிண்ணத்தின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் ஜேர்மனிக்காக உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்த தலைவருமான பிரான்ஸ் பெக்கென்பவர் தெரிவித்துள்ளார்.

எனினும், வாக்குகளை விலைகொடுத்து வாங்கியமை குறித்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

சஞ்சிகையொன்று வெளிப்படுத்திய குற்றச்சாட்டின்படி, 6.7 மில்லியன் யூரோக்களைச் செலுத்தி, ஜேர்மனுக்கான வாக்குகள் விலைகொடுத்து வாங்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், பிரான்ஸின் கருத்தின்படி, நிதியியல் மானியமொன்றுக்காக, பீபாவுக்குப் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பீபாவிடமிருந்து கொடுப்பனவு அளவைக் குறைப்பதற்காக, பீபா நிதியியல் குழுவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவொன்றை ஏற்றதாகத் தெரிவித்துள்ள அவர், தற்போது அதை எண்ணிப் பார்க்கும் போது, அதை நிராகரித்திருக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக, அந்தத் தவறுக்கான பொறுப்பை ஏற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

- See more at: http://www.tamilmirror.lk/157626#sthash.U4MoE3DX.dpuf
  • தொடங்கியவர்

ஜெர்மனிய கால்பந்து சம்மேளனத்தில் நிதி மோசடி தொடர்பில் சோதனை

 
2006ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஜெர்மனியில் நடைபெற்றது
AFP 2006ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஜெர்மனியில் நடைபெற்றது

கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை ஜெர்மனிக்கு வழங்கப்பட்டதில் வரி ஏய்ப்பு நடைபெற்றிருக்கும் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

ஜெர்மனிய கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் காவல்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனைகளை நடத்தியுள்ளனர்.

 

கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை ஜெர்மனிக்கு வழங்கப்பட்டதில் வரி ஏய்ப்பு நடைபெற்றிருக்கும் எனும் சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடைபெற்றுள்ளது.

ஜெர்மனியக் கால்பந்து சம்மேளனத்திடமிருந்து, சர்வதேசக் காலபந்து சம்மேளனமான ஃபிஃபாவுக்கு ஏழு மில்லியன் டாலர்கள் பணப் பரிவர்த்தனை நடைபெற்றது தொடர்பிலேயே விசாரணை நடைபெறுகிறது என ஜெர்மனிய அரச வழக்கறிஞர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை போட்டியை ஜெர்மனி நடத்துவதற்கு ஏதுவாக வாக்குகளைப் பெறுவதற்காகவே அந்தப் பணம் வழங்கப்பட்டது என குற்றச்சாட்டுகள் இருந்தன.

ஆனால் இதை ஜெர்மனியக் காலபந்து சம்மேளனம் மறுத்துள்ளது.

ஜெர்மனியக் கால்பந்து சம்மேளனத்தின் இந்நாள் மற்றும் முன்னாள் தலைவர்களின் இல்லங்களிலும் சோதனைகளை நடைபெற்றன என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

http://tamil.thehindu.com/bbc-tamil/ஜெர்மனிய-கால்பந்து-சம்மேளனத்தில்-நிதி-மோசடி-தொடர்பில்-சோதனை/article7838486.ece

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனிக்கு  ஏழரைச்சனியின்  ஆரம்பக்கட்டம் தொடங்கீட்டுது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.