Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 69
  • Views 17.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி.   கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்து

  • இ.பு.ஞானப்பிரகாசன்
    இ.பு.ஞானப்பிரகாசன்

    மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன்! எழுத்து: இ.பு.ஞானப்பிரகாசன் நாள்: 27.11.15 பகுப்பு: அஞ்சலி, இனப்படுகொலை, இனம், ஈழம், கவிதை, தமிழர், தமிழ், விடுதலைப்புலிகள்  

  • வாத்தியார்
    வாத்தியார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்

 

 

  • தொடங்கியவர்

 

அனைவருக்கும் வணக்கம்,

இத்திரியில் தொடர்ந்தும் ஊக்கத்துடன் பதிவிட்டுவரும் உறவுகளுக்கு மிக்கநன்றி. இவ்வருட மாவீரர்தின நிகழ்வுகள் பற்றி உங்களுக்கு தெரிந்த இத்திரியில் பதியப்படாத நிகழ்வுகள் பற்றி தெரிந்திருந்தால் அவற்றை இங்கு பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  

 

  • தொடங்கியவர்
மாவீரர் தினம்! ஏற்றப்படுவது தீபங்கள் அல்ல உள்ளத்து தீக்காயங்கள்!
 
27_1.jpg
விடுதலை இயக்கத்தின் முதல் மாவீரன் லெப்.சங்கர் தன்னுயிரைத் துறந்த நாளின் ஞாபகத்தினை அடியொற்றி அனுஷ்டிக்கப்படும் மகத்தான நாளே மாவீரர் தினம் என அழைக்கப்படுகின்றது.

மாவீரர் தினம் ஆரம்பத்தில் அனுஷ்டிக்கப்படுவதற்கும், தற்போது அனுஷ்டிக்கப்படுவதற்கும் ஒரே காரணம் நிச்சியமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மாவீரர் தினம் தோன்றியமைக்கு பின்வரும் சம்பவம் காரணமாக இருக்கலாம்.

ஒரு நாள் அதிகாலை, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றிச் சிங்கள இராணுவம் முற்றுகையிடுகிறது.

1982ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாவகச்சேரியில் பொலிஸ் நிலையத்தைத் தாக்கியபோது காயமடைந்த விடுதலைப்புலிகளுக்கு அந்த வீட்டில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இராணுவத்தினரால் அந்த வீடு முற்றுகையிடப்படுகிறது.

அவ் வேளையில் அங்கிருந்த ஒரு இளைஞன் முற்றுகையிட்டவர்களை நோக்கி, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டவாறே வீட்டு மதிலைத் தாண்டிக் குதித்து ஓடுகிறான்.

அவனை நோக்கிச் சிங்கள இராணுவத்தினரின் துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாகத் தீர்க்கப்படுகின்றன. அப்போது அந்த இளைஞனின் வயிற்றில் ஒரு குண்டு பாய்கிறது.

படுகாயமுற்ற நிலையிலும் கூட அவன் இராணுவத்தினரிடம் அகப்பட்டு விடக்கூடாது என்ற இலட்சிய உறுதியோடு இரண்டு மைல்தூரம் இடைவிடாமல் ஓடி தன் இயக்கத் தோழர்களின் இருப்பிடத்தை அடைகிறான்.

விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டமாகையால் அப்போது அங்கு போதிய மருத்துவ வசதி ஏற்படுத்தப்படவில்லை.

அவசர அவசரமாக முதலுதவிகள் செய்யப்பட்ட நிலையில் அவனை தோழர்கள் விசைப்படகு மூலம் கடல்மார்க்கமாகத் தமிழகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கை, முற்றுகை இவற்றைத்தாண்டி தமிழகம் செல்ல ஒரு வாரமாகிறது.

தமிழகத்தில் தலைவர் பிரபாகரனைக் கண்டு பேசும்வரை அவன் நினைவு தப்பவில்லை.

இருந்தபோதிலும் வயிற்றில் ஏற்பட்ட காயத்தின் நிலை மோசமடைந்தது. அவனைப் பிழைக்கவைக்க அவனது தோழர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

தலைவரும், தோழர்களும் கண்கலங்கி நிற்க 27-11-1982 அன்று, மாலை 6.05 மணிக்கு அந்த இளைஞன் இயக்கத்தில் முதற் களப்பலியாகும் பெருமையை அணைத்துக்கொள்கிறான்.

இதே நாள் இதே நேரமே தமிழீழ மாவீரர் நாளாக நினைவு கூரப்பட்டு, மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்படுகிறது.

இந்நிலையில் அன்று ஒருவனின் மரணத்தில் ஆரம்பித்த மாவீரர் தினமானது இன்று பலரின் நினைவலைகளை ஞாபகப்படுத்தும் தினமாக கொண்டாடப்படுகின்றது.

இந்நிலையில் 2009 ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் மக்களை பொறுத்த வரையில் இழந்த தமது உறவுகளை ஞாபகப்படுத்தவேண்டும் என்பதற்காக மட்டுமா மாவீரர் தினத்தினை கொண்டாடுகின்றார்கள்? என்றால் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஒவ்வொரு வருடமும் பேரினத்திற்கு தமது தேவைகளை எடுத்துச்சொல்லும் தினமாகவே மாவீரர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பேரினம் தமிழினத்தின் தேவைகளை உணர்ந்து, தமிழ் மக்களது தேவைகளை பெற்றுக்கொடுத்திருந்தால் மாவீரர் தினமானது பேரினத்திற்கு நன்றி நவிழும் நாளாகவே தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் நடந்தது என்ன?

தமிழ் மக்களின் சாதாரண கோரிக்கைகளுக்கு கூட கடந்த கால அரசாங்கங்கள் செவிசாய்க்கவில்லை.

மாறாக தமிழின உயிர்களையே சாய்த்தன.

ஆனால் தற்போது நல்லாட்சி மலர்ந்துள்ள இச் சூழ்நிலையில் நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நன்கு உணர்ந்து தேவைகளை பெற்றக்கொடுக்க முன்வருமானால், எதிர்வரும் மாவீரர் தினம் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நன்றி கூறும் நாளாகும் என்பதில் எவ்வ்வித சந்தேகங்களும் இல்லை.

தமிழ் மக்களை பொறுத்த வரை தனது மண்ணில் தான் சுதந்திரமாக வாழும் நாள் வர வேண்டும்.

சிறைபிடிக்கப்பட்ட அனைத்து தமிழ் போராளிகளும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.

பறிக்கப்பட்ட காணிகளும், உடைமைகளும் திருப்பி வழங்கப்பட வேண்டும்.

உயிர் அச்சத்தால் பிறந்த நாட்டை விட்டு அந்நிய நாடுகளில் அநாதைகளாக வாழும் தமிழின சொந்தங்கள், மீண்டும் வந்து தமது சொந்த மண்ணில் சோறாக்கி உண்ண வேண்டும்.

இத்தனை எதிர்பார்ப்புக்களில் தான் மாவீரர் தினத்தினை தமிழ் மக்கள் இன்றும் அனுஷ்டிக்கிறார்கள் என்பதே நிஜம்.

தமிழ் மக்களின் மாவீரர் தின எதிர்பார்ப்பு மாண்டவர்களை மீட்டி பார்ப்பது மட்டமல்ல. இனியாவது தமிழ் மக்கள் தனது சொந்த மண்ணில் மார்பு தட்டி வாழவேண்டும்.

இனி பிறக்கும் தமிழ்த்தாயின் செல்ல குழந்தை சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும்.

இரத்தம் படிந்த தமிழின வரலாறு இனியாவது எவ்வித தோட்டாக்களின் சத்தங்கள் இல்லாமல் எழுத பட வேண்டும்.

அதுவரையில் எந்த எதிர்ப்பு வந்தாலும், மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படும் என்பதே நிஜம்.

ஆயுத கூர்முனையில் மாவீரர் தினத்தை தடுக்கலாம். ஆனால் ஆழமாக வேர்கொண்டுள்ள ஆள் மனது காயங்களை என்றும் தடுக்க முடியாது.

போராட்டமே வாழ்க்கையாகி போன ஆண்டான் அடிமை முறைமையின் எச்சசொச்சங்களை இன்றும் பழக்கமாக்கிக் கொண்டுள்ள பேரினம், பகைமைகளை மறந்து, தோழமையின் வலிமையினை உணர்ந்து, தமிழ் மக்களின் தேவைகளுக்கு முழுமையாக செவி சாய்த்து, உண்மை பௌத்த நெறியின் பிரகாரம் வாழ தலைப்பட்டால், 2016 ம் ஆண்டின் மாவீரர் தினத்தில் தமிழ் மக்கள், உங்களுக்காக சேர்த்து ஒரு விளக்கு ஏற்றுவார்கள்.

உள்ளத்தால் போற்றுவார்கள்.

அதுவரையில் தமிழ் மக்களின் உள்ளத்து தீ காயங்கள் தீபங்களாக ஏற்றப்பட்டுக்கொண்டேயிருக்கும்.

-திவி-

http://www.tamilwin.com/show-RUmtzBRZSWnwzF.html

  • கருத்துக்கள உறவுகள்

lt_col_kumuthan.gif

இயற்கை அழகூட்டும் வனப்புக்களை தன்னகத்தே கொண்டது யாழ். மாவட்டம். இங்கே வானை முட்டும் தென்னை மரங்கள் அதிகம் நிறைந்து வளம் தரும் வடமராட்சிக் கிழக்கில் உடுத்துறை என்னும் சிற்றூரில் தவராசதுரை - அன்னலட்சுமி இணையருக்கு மகனாகப்பிறந்தான் குமுதன். இவனுக்குப் பெற்றோர் இட்டபெயர் நாகேஸ்வரன்.
 
lt_col_kumuthan2.jpgநாகேஸ்வரன்தான் அவர்களிற்கு மூத்த மகன். இவனுக்குப் பின் முன்று தம்பிமாரும், நான்கு தங்கைகளுமாக அன்புடன் வளர்ந்து வந்தான். உடன்பிறப்புக்களுடன் மிகவும் அன்பாகப் பழகுவான். நாகேஸ்வரன் தன் தொடக்க கல்வியை யாழ். ஆழியவளை சி.சி.த.க.கனிஷ்ட வித்தியாலயத்தில் ஆண்டு ஒன்று முதல் ஆண்டு ஆறு வரை கற்றான். படிப்பிலே மிகவும் கெட்டிக்காரன். படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி கலை நிகழ்விலும் சரி நல்ல கெட்டிக்காரன் தான். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் இவனுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பள்ளியில் அனைவரோடும் அன்பாகவும் பண்பாகவும் நடந்துகொள்வான். ஆனால் படிப்பை இடையிலே நிறுத்திக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
 
நாகேஸ்வரனின் குடும்பத்தொழில் கடற்றொழிலாக இருந்தது. இவன் சிறுவயதிலே நன்றாக நீந்துவான். புலிக்குட்டிக்குப் பாய்ச்சலும் மீன்குஞ்சுக்கு நீச்சலும் கற்றுக்கொடுக்க வேண்டுமா என்றொரு பழமொழி உண்டு. அதுபோல இவனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க யாரேனும் தேவையில்லை தானே. சிறுவயதிலே தந்தையுடன் சேர்ந்து கடலிலே தொழிலுக்குச் செல்வான். சிறுவயதிலே குடும்பப்பாரம் இவனது கையிலே இருந்தது. அதனால், கடற்றொழிலில் அனுபவமுள்ள இளைஞனாக வளர்ந்து வந்தான். தந்தைக்கு உறுதுணையாக இருந்து பொருளாதார வளத்தைப் பெருக்க உழைத்தவன் நாகேஸ்வரன்.
 
நாகேஸ்வரன் கலை ஆர்வம் கொண்ட இளைஞனாக வளர்ந்துவந்தான். தற்காப்புக்கலைகளில் பயிற்சி பெற்று பரிசில்கள் பெற்றிருக்கிறான். மற்றும் விளையாட்டுத்துறையிலும் ஆர்வம் உள்ளவன். இவனது பகுதியிலுள்ள செந்தமிழ் விளையாட்டுக்கழகத்தில் ஒரு விளையாட்டு வீரன். காற்பந்தாட்டம் ஓட்டம் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டு சிறப்புப்பரிசுகளைமயும் பெற்றுக்கொண்டான். அத்துடன் கிராமிய கலைவடிவான கூத்து வடிவ நிகழ்வுகளிலும் கலைஞனாக நடித்திருக்கிறான். குறிப்பாக காத்தவராயன் கூத்துநிகழ்வில் காத்தவராயன் பாத்திரமேற்று நடித்து மக்கள் மத்தியிலே பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இதைவிட கட்டுமரம் வலித்தல், நீச்சல், தலையணை சண்டை அனைத்திலும் பங்குபற்றுவான். நாகேஸ்வரன் மிகுந்த துணிவும், உறுதியும் கொண்ட இளைஞன். தனது முயற்சியால் தனித்து கடற்தொழில் செய்யுமளவுக்கு வளர்ந்திருக்கிறான்.
 
இப்படியாக கடற்றொழிலில் இவனது இளமைக்காலம் போய்க் கொண்டிருக்கும் வேளையில் கடலிலே சிறிலங்கா கடற்படையின் வெறித்தாக்குதல்கள் இடம்பெறும். அப்போதெல்லாம் இவன் தனது கட்டுமரத்தை கடலிலே விட்டுவிட்டு நீந்திக்கரை சேருவான். இவ்வாறு பல தடவை கடற்படையிடம் பிடிபடாமல் தப்பிவந்திருக்கிறானெனின் இவன் வீரமுள்ளவன் தான் என்று சொல்லாம்.
 
கடற்கரையோரம் வீடு அமைந்துள்ளதால் கடற்கரையோரங்களிலே இவனது உடன்பிறப்புக்களுடன் நின்று விளையாடுவான். அவர்களுடன் தானும் சிறுபிள்ளையாக மாறி மகிழ்வுடன் விளையாடுவான்.
 
1991ல் வெற்றிலைக்கேணி சிறிலங்கா படைகளால் வல்வளைப்புச் செய்யப்பட்டவேளை மக்கள் இடம்பெயர்ந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இவனது குடும்பம் செம்பியன்பற்று பகுதியில் இருந்தது. தாயக மண்ணில் சிறிலங்கா படைகளின் வன்செயல்கள் அதிகரித்துக்கொண்டிருந்த காலத்தில் நாகேஸ்வரன் தன்னை உணர்ந்து தாய்நாட்டின் விடுதலைக்கு வலுச்சேர்க்க விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்துகொள்கிறான்.
 
இவன் கடற்புலிப் போராளிகள் அணியிலே இணைந்து கொள்கிறான். தொடக்க, அடிப்படைப்பயிற்சிகளை வேகமான முறையில் எடுத்து முடித்துக்கொண்டான். பயிற்சிப் பாசறையிலே பயிற்சி ஆசிரியர்களோடும் போராளிகளோடும் அன்பாய் பழகினான். பயிற்சி முகாமில் இவனது திறமையால் பரிசுகளையும் பெற்று நல்லதொரு வீரனாக உருவெடுக்கிறான். அங்கே தனது பெயரை குமுதன் என்று மாற்றிக்கொண்டான். குமுதனின் மிடுக்கான தோற்றமும் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையம் அஞ்சா நெஞ்சமும் இன்னும் நினைவில் நிற்கின்றன.
 
குமுதன் கனரக பயிற்சி முதல் கட்டளை அதிகாரி பயிற்சி வரை பெற்றிருந்தான். ஏற்கனவே கடல் அனுபவமுள்ள குமுதன் கடற்சண்டையிலே சிறந்ததொரு கடற்புலி வீரனென்றால் அதுமிகையாகாது. பல கடற்சண்டைகளிலே போராடிய வீரன். கடற்பயிற்சிகள் யாவும் இனவனுக்கு விருப்பமானவை. தலைவரிடமும் பல பரிசுகளைப் பெற்றிருக்கிறான். நீச்சல், வேக நீச்சல், கட்டுமரம் வலித்தல், படகு ஓட்டம், வேக ஓட்டம் இப்படி பல விளையாட்டுக்களில் இவன் தனது முத்திரையைப் பதித்துவைத்திருக்கிறான். சிறு வயது முதல் கடல் அன்னையோடு குமுதனுக்கு இருந்த தொடர்பு இக்காலங்களில் அதிகமாக இருந்தது. நீலவரியணிந்த வீரப்புலியாய் நீந்தித்திரிவான் குமுதன்.
 
16-09-2001 அன்று பருத்தித்துறை கடலிலே நடந்த பீரங்கிப்படகுத் தாக்குதலிலும் இவனது பணி முதன்மையாக இருந்தது. கடலிலே நடந்த சமரின்போது எதிரியின் குண்டுபட்டு கடலன்னையின் மடிமீது தலை சாய்ந்தான் லெப்.கேணல் குமுதனாக. தமிழீழ மண்ணிலே உறைந்துவிட்டான்.
 
கடலிலே மீனைப்போல நீந்தித்திரிந்த வரிப்புலி ஒன்று கடல்தாயின் விடிவிற்காய் தன் உயிரை தியாகம் செய்துவிட்டது. இந்த விடுதலை வீரனின் வீர உணர்வுகளை தமிழீழம் என்றமே மறக்காது. மாவீரர்கள் மரணத்தின் பின்பும் வாழும் பாக்கியம் பெற்றவர்கள். உலகம் உள்ளவரை அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் சிரஞ்சீவிகள்.
 
'மானுட விடுதலைக்கு உயிர் தந்தார் யாரோ அவர் இனம், மதம், மொழி கடந்து நேற்றுப்போல் இன்றும் நாளையும் என்றென்றும் எதிலும் உயிர்வாழ்வர்"
 
- போராளி நளாயினி -

 

 

http://www.veeravengaikal.com/index.php/azhiyachsudarkal/42-ltcolonel-kumuthan-thavarasathurai-nageswaran-uduthurai-jaffna

  • கருத்துக்கள உறவுகள்

lt_col_jeevan.gif

கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முட்செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. - கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப் பிடிக்கப்படுகின்றன. ஆபத்தைத் தவிர்க்கும் அளவிற்கு தேவையான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து செல்வதே ஒரு கலை. தென் ஈழக் காடுகளிலே இந்தக் காலைதான் தேவையான அரிச்சுவடி. கத்தி வெட்டுப் போல் ஒரு நகர்வு... கை வீசும் தென்றல் போல் ஒரு நகர்வு... இப்படி புத்தியையும் பலத்தையும் எடைபோட்டு நடந்ததாலேயே அங்கு போராட்டம் தாக்குப்பிடித்து, தளிர்கொண்டது. கத்தியையும் புத்தியையும் இடம்மாறி வைத்தவர்களை காலம் மட்டுமல்ல, காடுகள் கூட கை கழுவி விடும்.
 
ஒரு பத்தாண்டிற்கு மேலாக கொழும்பு ரோட்டிற்கு குறுக்காக நடந்த பெரும்பாலான நகர்வுகளை ஜீவன் தான் வழி நடத்தியிருக்கிறான். தவழ்ந்து திரிந்து வேவு பார்ப்பதும், தாக்குதல் செய்து தலை நிமிர்ந்ததும், தவறு செய்து தண்டனை பெற்றதும், உயிரைப் பணயம் வைத்து உறுதியை நாட்டியதும் எல்லாமே இந்த கொழும்பு ரோட்டில்தான். அதன் இரு மருங்கிலும் நிற்கும் மரங்கள், வயல் வரம்புகள், மின் கோபுரங்கள், மண் மேடுகள் என்று எல்லாமே ஜீவனின் மனதுக்குள் அடக்கம்.
 
* * * * * * * * * * * * * * * * * * * * * *
 
அணியின் நகர்வு தடைப்படுகின்றது. பாதை தவறியது தெரியவருகிறது. பெரியதொரு காவு அணியையும் அதற்கேற்ற சண்டை அணியையும் கொண்ட அந்த நீண்ட மனிதக் கோடு மீண்டும் நகரத் தொடங்கியது. இப்போது அதன் முதல் ஆளாக ஜீவன் நடந்து கொண்டிருக்கிறான்.
 
இது ஜீவனது வழமையான பாணி என்பதால் ஒரு தளபதியை முதல் ஆளாக விட்டு பின்னே செல்லும் போது உண்டாகும் கூச்சம் பலருக்கு ஏற்படுவதில்லை. ஆபத்தை நாடிச் செல்லும் ஜீவனின் இயல்பிற்கு சிங்கபுர நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
 
சிங்கபுர தங்கக பகுதி படையினருக்கு ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது. ஒரு இடத்தில் பல தடவை பதுங்கித் தாக்குதல் செய்யப்பட்டதே அதன் காரணம். அதிலே இரண்டாவது தாக்குதல் 1992ம் ஆண்டு இடம் பெற்றது அதிலே ஜீவன் களத்தளபதி.
 
இதற்கு முன்பு நிகழ்ந்த தாக்குதலிலே கொல்லப்பட்ட எதிரிகளின் நினைவாக அமைக்கப்பட்ட சிறிய நினைவுத் தூபியை நிலையெடுத்த இடத்தில் இருந்தே பார்க்கக் கூடியதாக இருந்தது. எதிரி அதிலே காப்பு நிலையெடுத்து எம்மைத் தாக்கினாலே தவிர, அதைச் சேதப்படுத்த வேண்டாம் என்று இறுதி முதற் கொகுப்புரையில் எமக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
 
தாக்குதல் தொடங்கியது.
 
எதிரியின் கவச ஊர்தியை நோக்கி ஆர்.பி.ஜி. கணையொன்று சீறிச்சென்று வெடிக்க எங்கும் புகைமயம். பவள் உடைந்து விட்டதா? என்ற கூச்சலும் பொறிகளின் உறுமலுடன் வேட்டொலியுமாக சிறு குழப்பம் நிலவினாலும் ஆங்காங்கே தென்பட்ட எதிரிகள் சுட்டு விழுத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். புகை விலகிய போது பவலிற்கு மிக நெருக்கமாக ஜீவன் ரீ56 -2 உடன் நிற்பதையும் அவனின் தலையின் மேலாக 50 கலிபரால் சிவப்பாக தும்பியபடி பவல் பின்வாங்கி ஓடுவதையும் காணக் கூடியதாக இருந்தது. எந்தச் சமரின் போதும் இறுக்கமான பகுதிக்கே ஜீவன் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம், அந்தப் பகுதியிலும் மிக இறுக்கமான இடம் நோக்கியே ஜீவன் ஈர்க்கப்பட்டதற்கு அவனது போரார்வமும் மாசற்ற வீரமுமே காரணம். "எங்கும் செல்வோம்" என்று எம் படைகள் எழுந்து நடந்ததும் "எதிலும் வெல்வோம்" என்று சூழ் கொட்டி நிமிர்ந்ததும் ஜீவன்களாலே அன்றி வேறு வழிகளில் அல்ல.
 
ஜீவனின் வாழ்க்கைத் தடத்தில் பயத்திற்கு மட்டுமல்லாது பகட்டிற்கும் இடமிருக்கவில்லை. தலைமைத்துவப் பாடநெறியொன்றில் எல்லோரையும் விட அதிக புள்ளிகளை ஜீவன் பெற்றபோது, பகட்டு ஏதுமின்றி தனிமையிலிருந்து ஜீவன் கற்றதையும் தலைவரின் பேச்சடங்கிய ஒலிநாடாக்களை பரபரப்பின்றி கேட்டு வந்ததையும் அறியாத பலர் மூக்கிலே விரல் வைத்தார்கள். நடையுடை பாவனைகளில் கூட ஜீவன் எளிமையானவன்.
 
போராளிகளுடன் சேர்ந்து பதுங்கு அகழி வெட்டிக் கொண்டிருந்த ஜீவன் சற்றுக் களையாற, சராசரிப் போராளியின் உடையில் தனது தளபதி இருப்பார் என்பதைச் சற்றும் எதிர்பாராத புதிய போராளி தொடர்ந்து ஜீவனை ஏவியதும் அடுத்த தேனீர் இடைவேளை வரை ஜீவன் பதுங்கு அகழி வெட்டியதும் மங்கிப் போக முடியாத மனப்பதிவுகள்.
 
வன்னியிலே நடந்த பல மறிப்புச் சமர்களிலே இறுக்கமானவை எனக் கருதப்பட்ட இடங்களிலும் 'ஓயாத அலைகள் - 2' நடவடிக்கையிலும் முக்கிய பங்கு வகித்து, பின் மட்டு - அம்பாறை மாவட்ட இணைத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின் - ஏறத்தாழ பதினைந்தாண்டு காலம் வெடிப்புகையையும், சமர்ப் புழுதியையும் சுவாசித்ததால் முப்பதாவது வயதில் முதற் தடவையாக ஈழை நோயால் பாதிக்கப்பட்ட பின் நிகழ்கிறது இச் சம்பவம். இந்த எளிமை கலந்த ஈகை உழைப்புக்களாலேயே பெரு வெற்றிகள் சாத்தியமாகின என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
 
87ன் தொடக்கத்தில் இயக்கத்தில் இணைந்து கொண்ட ஜீவன் 90ன் பிற்பகுதியில் ஒரு தனிச் சண்டை அணியின் தலைமையாளனாக வளர்ந்திருந்தான். தானே வேவு பார்த்து, திட்டமிட்டு, களத்தில் வழி நடத்துவதையே அவன் எப்போதும் விரும்பினான். வெற்றியும் அவனையே விரும்பியது.
 
எதிரியின் மீது தாக்குதல், போர்க் கருவிகள் பறிப்பு என்ற செய்தி கிடைக்கும் போதெல்லாம், அத் தாக்குதல்களின் தன்மையை ஒப்பிட்டு இது ஜீவனுடைய பாணியில் அல்லவா அமைந்திருக்கிறது என்று பேசுகின்ற அளவிற்கு சிறு தாக்குதல்களில் தனி முத்திரை பதித்திருந்தான் ஜீவன். இது எந்த வீரனுக்கும் இலகுவில் கிடைத்துவிடாத மிகவுயர்ந்த பேறு.
 
மூன்றாம் ஈழப்போர் தொடங்கி 97ன் தொடக்கத்திற்கும் இடையேயான காலத்தில் ஜீவன் வாகரை பிரதேச கட்டளை மேலாளராக இருந்த போதே பல சிறு தாக்குதல்களின் மூலம் கிடைக்கக் கூடிய பெரிய நன்மைகளை் அவனால் ஏற்படுத்தப்பட்ட . கதிரவெளி வரை பரவியிருந்த எதிரி முகாம்கள் ஐந்து காயான்கேணிப் பகுதியையும் கடந்து பின்வாங்கப்பட்டன. மக்களின் கல்வி பண்பாட்டு முறைகள் சீர் பெற்றன. மருத்துவமனை அடங்கலான எமது முகாம்கள் பல குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டன. வாகரை முதன்மைச் சாலைக்கு அருகே (திருமலை வீதி) மாவீரர் துயிலும் இல்லம் நிறுவப்பட்டது.
 
அங்கே நிகழ்த்தப்பட்ட போர்ச் சாதனை பற்றி அக்காலத்தில் மாவட்ட அறிக்கைப் பிரிவின் மேலாளராகவிருந்த மேஜர் லோகசுந்தரம் (வீரச்சாவு: 05.03.1999 மாவடி முன்மாரிப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினருடனான மோதலில்) அவர்கள் கூறியது: "அந்த அறிக்கைகளை ஒப்பிடுவது ஒரு புதிய அனுபவம். 20 மாத காலத்தினுள் வாகரைப் பிரதேச 'விசாலகன் படையணி' சந்திவெளி, சித்தாண்டிப் பகுதிகளில் நிகழ்த்திய நான்கு பெரும் தாக்குதல்கள், மாவடி முன்மாரிப் பிரதேசத்தில் நிகழ்ந்த நடுத்தர அளவிலான சில தாக்குதல்களிலும் கலந்து கொண்டது போக தமது பகுதிகளில் மட்டும் தனியாகச் செய்த நடுத்தர மற்றும் சிறிய தாக்குதல்களில் 340ற்கும் மேற்பட்ட படைக்கலங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இப்படியொரு விடயத்தை இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை."
 
சாதனைகள் பொதித்த ஜீவனின் போரியல் வாழ்வில் சோதனைகளுக்கும் குறைவில்லை. குடும்பிமலைப் பகுதியில் கொமாண்டோக்களுக்கு எதிரான தாக்குதலிலும், பூநகரித் தவளைச் சமரிலும் பின்பு கூமாஞ்சோலை முகாம் தாக்குதலிலும் உடலின் எடையில் ஈயமும் பங்கேற்கும் அளவிற்கு செம்மையாகக் காயப்பட்டிருந்தான்.
 
"ஜீவன் உன்ர குப்பியையும், தகட்டையும் வாங்கிப் போட்டு தண்டித்து சமைக்க விடும்படி பொறுப்பாளர் சொல்லியிருக்கிறார்."
 
இதே கொழும்பு ரோட்டிலேயே, போராளிகளின் சுமைகருதி, தவிர்க்கவேண்டிய பாதையொன்றினூடாக வழி நடாத்தியதால் ஏற்பட்ட இழப்பிற்கான தண்டனை அறிவித்தலை தனது உணர்வுகளைச் சிரமப்பட்டு அடக்கியபடி இன்னுமொரு தளபதி ஜீவனிடம் கூறியபோது மிக அமைதியாகப் பதில் வந்தது. "சரி நிறைவேற்றுங்கள்"
 
அதைத் தொடர்ந்து ஒரு புதியை போராளியைப் போல 'புளுக்குணாவ' முகாம் தகர்ப்பிற்கான தடையுடைப்புப் பயிற்சி பெறுகிறான் ஜீவன். தொட்டாற் சுருங்கி முட்கள் முழங்காலிலும், முழங்கையிலும் புண்களை ஏற்படுத்துகின்றன.
 
தன்னைத் தோள் பிடித்து தூக்கி நிறுத்திய தளபதி, அரவணைத்து ஆறுதல் தந்த தோழன், முன் நடந்து வீரம் காட்டி விழுப்புண் சுமந்த பெருமகன் - மண் தேய்ந்த காயத்துடன் பயிற்சி பெறுவதைக் காண பயிற்சிப் பொறுப்பாளனின் மனம் விம்முகின்றது.
 
"ஜீவண்ணன்...... நீங்கள் எழுந்து போய் சற்று ஓய்வெடுக்கலாம்."
 
புலிக்குறோளில் போய்க் கொண்டிருந்த ஜீவனிடமிருந்து நிமிர்ந்து பார்க்காமலே பதில் வருகின்றது.
 
"எல்லோருக்கும் பொதுவான விதிகளே எனக்கும் பொருந்தும்"
 
இறுக்கமான முகத்துடன் தொடர்ந்து நகரும் ஜீவனைப் பார்க்க பயிற்சி பொறுப்பாசிரியனின் உதடுகள் துடித்து வழிகள் பொங்க குரல் தளம்பாமல் சமாளித்தபடி கூறுகிறான்.
 
"பயிற்சிப் புண் அதிகமாகி விட்ட போராளிகளுக்கு நாங்கள் பயிற்சி தருவதில்லை. இங்கு நானே பொறுப்பாளன். இது என்னுடைய கட்டளை. நீங்கள் எழும்பலாம்."
 
இதுவரை தங்கள் உணர்வுகளை மரக்க வைத்து ஜீவனுடன் நகர்ந்து கொண்டிருந்த அத்தனை போராளிகளும் நன்றிப் பெருக்கோடும் நிம்மதிப் பெருமூச்சோடும் பயிற்சிப் பொறுப்பாசிரியனை நிமிர்ந்து பார்க்கிறார்கள். ஒவ்வொரு சோடிக் கண்களிலும் ஒவ்வொரு சோடிக் கண்ணீர் துளிகள்.
 
ஜீவனுடைய எளிமையையும் ஈகையும் போலவே குறும்புகைளையும் குறைவான பக்கங்களையும் கூடத் தலைவர் அறிந்திருந்தார். இருப்பினும் சுற்றாரைக், கற்றோரே காமுறுவர் என்பது போல, பலம் பலத்திற்கு மரியாதை செய்யும் என்பது போல வீரம் வீரத்தால் ஈர்க்கப்படுவதும் தவிர்க்க முடியாததது என்பதை ஜீவனின் சாவிற்குப் பின்னான தலைவனின் உணர்வு வெளிப்பாடுகள் திரைவிலக்கித் தெரியவைத்தன - தெளிய வைத்தன. சராசரிக்கும் மேலான ஜீவனின் போரியல் பண்புகளை தலைவர் அவதானித்தே வைத்திருக்கிறார்.
 
* * * * * * * * * * * * * * * * * * * * * *
 
சாலையில் ஜீவன் மிடுக்காய் கால்பாரவி நிற்க நிழல்போலக் கடந்து செல்கிறார்கள் போராளிகள். அந்த இருட்டிலும் ஆட்களை அடையாளம் கண்டு காதோடு நலம் விசாரித்து, தூரம் சொல்லி, தோள் தட்டி துரிதப்படுத்தி நிற்கிறான் ஜீவன். ஆபத்தை நோக்கி முதல் ஆளாய்ச் சென்று அதன் நடுவில் நின்று நம்பிக்கை தருவதும் கடைசி ஆளாகவே அவ்விடத்தை விட்டு அகலுவதும் போராளிகள் ஜீவன் மேல் பற்று வைப்பதற்கு முதன்மைக் காரணங்கள். வீரமுள்ள எவராலும் ஜீவனை வெறுக்க முடியாது.
 
"நாங்கள் சுமந்து திரியும் ரவைகளில் எந்தெந்த ரவை எந்தெந்தச் படையாளின் உடலுக்குரியதோ தெரியவில்லை. இதே போல எனக்குரிய ரவையையும் ஒரு படையாள் இப்போது சுமந்து திரிவான். அது எப்போது புறப்படும் என்பது எவருக்கும் தெரியாது." சண்டைகளின் முன்னான நகைச்சுவைப் பொழுதுகளில் சிரித்தபடி ஜீவன் சொல்வதும வழக்கம். அன்று, கொழும்பு ரோட்டின் மையிருளிலே ஈழப்போரின் இன்னுமொரு அத்தியாயம் முடிய இருந்த சூழ்நிலையில், பதுங்கிக் கிடந்த படையாள் ஒருவனின் தொடக்க ரவையாக அது புறப்படும் என்பதையும் எவரும் அறிந்திருக்கவில்லை.
 
ஜீவனின் நினைவுகளை மீட்கும் போது, தனக்குக் கீழுள்ள படைத் தலைவர்களின் உணவுத் தட்டுகளைக் கூட கழுவி வைத்து ஒழுக்கம் பழக்கும் எளிமையா? அல்லது முன் செல்லும் போது முதல்வனாகவும் பின் வலிக்கும் போது இறுதி ஆளாகவும் வரும் தலைமைத்துவமா? எது மேலோங்கி நிற்கிறது என்று அலசினால் அவையிரண்டையும் விட அவனின் களவீரமே எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்து கிடக்கிறது. பிறந்த போது குடிசையில் பிறந்த ஜீவன் இறந்தபோது ஈழத்தின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்ததற்கும் அவனது ஏழ்மையற்ற மிடுக்கே காரணம்.
 
பிறப்பினால், எவருக்கும் பெருமைவருவதாக நாம் நம்புவதில்லை. ஜீவன் தன் நடப்பினால் தாய் மண்ணின் தலையைப் பலமுறை நிமிர வைத்திருக்கிறான். அவன் இழப்பினால் தாய் மண்ணே துயரம் ததும்பும் பெருமையுடன் ஒரு கணம் தலை குனிந்து நிற்கிறது.
 
ஜீவனின் இரத்தம் தோய்ந்த கொழும்புச் சாலையில் இருக்கும் எதிரிச் சுவடுகள் ஒரு நாள் துடைத்தழிக்கப்படும். அந்த உன்னத விடுதலை திருநாளின் போது தாயகப் பெருஞ்சாலைகள் கருந்தாரிட்டு செவ்வனே மெழுகப்படும். ஆனால் ஜீவனின் உணர்வு சுமந்து நிற்கும் ஒவ்வொரு தோழனுக்கும் அது செஞ்சாலை.
 
- இராசமைந்தன் -

 

http://www.veeravengaikal.com/index.php/battlefieldheroes/23-lt-colonel-jeevanelilavan-pillaiyan-chanramohan-santhiveli-batticaloa

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • தொடங்கியவர்

 

 

ஒருமுறை ஒன்றாய் கூடி எங்களை அழவிடுங்கள்!
[ புதன்கிழமை, 25 நவம்பர் 2015, 05:16.21 PM GMT ]
alavidunkal_plz_001.jpg
நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள் ஆனால் எங்களுக்கு இந்த நாட்டில் உள்ள எல்லா இன மக்களுக்கும் இருக்கின்ற உரிமை எங்களுக்கு இல்லை.

 நாங்கள் எங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடிய இனம் எங்களது பிள்ளைகள் எங்களது உறவுகள் எங்கள் மீது திணிக்கப்பட்ட வன்முறைக்கு எதிராக ஆயுதம் ஏந்தச் சென்றவர்கள் அவர்களை நாங்கள் ஆயுதம் ஏந்தச் சொல்லவில்லை. என மாவீரர்களின் தாயார் கதறுகின்றார்கள்.

ஆனால் அவர்கள் எங்கள் பிள்ளைகள். அவர்கள் இறந்தால் அவர்களை நினைத்து அழுவதற்கு எமக்கு உரிமை வேண்டும். எங்கள் இனத்தில் இலட்சக்கணக்கான பிள்ளைகள் உயிரிழந்து உள்ளார்கள். அவர்களை நினைத்து ஒரு விளக்கு கூட ஏத்தக் கூடாது என கூறுவது என்ன நியாயம்?

எங்களின் உள்ளக் குமுறல்களை அடக்கியாள நினைப்பதுதான் நல்லாட்சியா? இதுதான் அரசின் நல்லிணக்கமா? என உயிரிழந்த விடுதலைப்புலி போராளிகளின் தாய்மார்கள் தங்களின் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர் 

மாவீரர் மாதமான இந்த மாதத்தில் விடுதலைப்புலிகளின் காலத்தில் உயிரிழந்த தங்களது மகன்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியதாகவும், ஆனால் கடந்த பல ஆண்டகளாக அவர்களுக்கு ஒரு விளக்கு கூட ஏற்றி அஞ்சலி செலுத்த முடியவில்லை.

மேலும், தங்களது உறவினர்களை புதைத்த புதைகுழிகளை இராணுவம் அழித்துவிட்டதால் தங்களது பிள்ளைகளுக்கு ஒரு நினைவிடம் கூட இல்லை என்றும், தங்களது ஏக்கத்தை வெளிப்படுத்திய வயதான தாய்மார் சிலர் தங்கது செய்திகளையோ தங்களையோ வெளிக்காட்ட வேண்டமெனவும் முடிந்தால் தங்களது உள்ளக் குமுறல்களை உலகிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்துமாறு கூறியுள்ளனர்.

அவர்கள் கேட்பது நியாயமா?

முதலில் இந்த நாட்டில் நடைபெற்ற யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு இனங்களைச் சேர்ந்த போர் வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்கான சமமான உரிமையை அரசாங்கம் வழங்கவேண்டும் என்பதே தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகவுள்ளது.

அதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கினால் நாட்டில் நல்லிணக்கம் உருவாகுவதற்கு சிறந்த வழியாக இருக்கும். முதலில் தமிழ் மக்களை ஒரு இடத்தில் கூடி ஒப்பாரிவைக்க விடுங்கள். அவர்களின் ஆழ்மனங்களுக்கு உள்ளே பதிந்து கிடக்கும், தேங்கிக்கிடக்கும் உணர்வுகளை ஏக்கங்களை கவலைகளை சொல்லி அழுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுங்கள்.

தமிழ் மக்கள் தங்களது 30 வருட அவலங்களை ஒரு இடத்தில் கூடி சுதந்திரமாக அழுது தீர்க்கட்டும். அவர்கள் அழாதவரை அவர்களின் இருமாப்பக்களும் நெஞ்சுரமும் இன்னும் அதிகரிக்குமே தவிர அது குறையப்போவதில்லை.

எனவே தமிழர்களை ஒருமுறை அழவிடுங்கள். நல்லாட்சி அரசே தமிழர்களை ஒருமுறை அழவிடுங்கள். இதுவே தமிழர்கள் மனதில் ஆழப்பதிந்து கிடக்கும் ஏக்கம். எனவே ஒரு முறை அவர்களை அழ விடுங்கள்.

கார்த்திகைப் பூக்கள் பூத்துக் குழுங்கும் கார்த்திகை மாதமென்றால் வடகிழக்கில் உள்ள தமிழர்களுக்கு ஒரு உணர்வு பூர்வமான மாதமாகும். ஒருபுறம் தமிழ் கடவுளாக முருகனுக்கு கார்த்திகை தீபம். மறு புறம் தமிழர்களுக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்ததினம். எல்லாவற்றிற்கும் மேலாக தமிழர்களின் விடுதலைக்காய் தன்னை அர்ப்பணித்து ஆகுதியான மாவீரர்களுக்கான மாவீரர் நாள்வாரம் எனக் கார்த்திகை மாதம் தமிழர்களுக்கான மிக முக்கியம் வாய்ந்த மாதமாக திகழ்கின்றது.

கடந்த இராணுவ ஆக்கிரமிப்பு காலங்களில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பலர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் மாவீரர் நாள் போன்றவற்றையெல்லாம் இந்த கார்த்திகை தீபத்திருநாளில் விளக்கேற்றி உணர்வு பூர்வமாக அனுஸ்டித்துவருவதாக கூறி இலங்கை இராணுவம் இந்த கார்த்திகை தீபம் ஏற்வதற்கெ தடைவிதித்து வந்திருந்தது.

தமிழர்களின் உணர்வுகளை எப்படியெல்லாம் அடக்கியாள சிங்கள தேசம் முற்பட்டாலும் அது வேறோரு வடிவம்பெற்று வெளிவந்தமையே அதிகம். அந்தவகையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் கூட தமிழ் மக்கள் தங்களின் உயிர் நீத்த பிள்ளைகளுக்கோ அல்லது உறவினர்களுக்கோ அஞ்சலி செலுத்த அனுமதிக்கவில்லை.

விடுதலைப் புலிகள் வானத்தில் இருந்து நேரடியாக குதித்தவர்களோ அல்லது வேறு நாட்டில் இருந்து இங்கு வந்தவர்களோ அல்ல. அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதுடன் அவர்கள் தமிழ் மக்களுக்காக போராடிய தமிழ் பிள்ளைகள்.

எப்படி சிங்களத் தாய்க்கு இராணுவ வீரன் ஒருவன் எப்படிப் பிள்ளையோ, அப்படித்தான் தமிழ் தாய்க்கு விடுதலைப்புலி வீரன் ஒரு பிள்ளை இதை முதலில் அரசாங்கம் ஏற்றுக்கொள்வேண்டும் இதை ஏற்றுக் கொள்ளாத அரசாங்கம் தமிழ் மக்களுக்கான உரிமைகளை எப்படி கொடுக்கப்போகின்றது?

எனவே தமிழர்களிடம் தேங்கிக்கிடக்கும் உணர்வுகளை ஏக்கங்களை கவலைகளை சொல்லி அழுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுங்கள். தமிழ் மக்கள் தங்களது பல்லாண்டுகால அவலங்களை ஒரு இடத்தில் கூடி சுதந்திரமாக அழுது தீர்க்கட்டும் அதற்கான சுதந்திரத்தை பெற்றுக்கொடுங்கள்.

மரணித்த என் மகனுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்த அனுமதி கிடைக்குமா? கதறியழுத தாய்

போராட்டத்தில் உயிர் நீத்த என் மகனுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்த இந்த நல்லாட்சியில் அனுமதி கிடைக்குமா என ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் இருக்கின்றாள் இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த தாய்.

தனது இரண்டு பிள்ளைகளையும் இழந்த துயரத்தில் இருந்த தாய்க்கு தனது கணவனையும் இழக்க நேரிட்டது, இதனால் மிகவும் மனமுடைந்து தனது வீட்டு சுவரில் மாட்டியிருக்கும் படத்துக்கு கூட விளக்குகொழுத்த பயத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

நாங்கள் இந்த அரசாங்கத்திடம் கேட்பது இறந்த எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையை, என்னைப் போன்று இன்று எத்தனையோ தாய்மார்கள் கண்ணீர் விட்டு கதறுகின்றார்கள் தங்களின் மகள் மற்றும் மகன், கணவன்மார்களின் உருவப்படத்துக்கு ஒரு விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்துவதற்கு.

எங்களின் மனதில் இந்த நல்லாட்சி அரசாங்கம் நிலைத்து நிற்கவேண்டுமாயின், நாங்கள் கேட்கும் இந்த கோரிக்கையை செவிமடுத்து நல்லதொரு பதிலை தெரிவிக்க வேண்டுமென்றார்.

 

http://www.tamilwin.com/show-RUmtzBRZSWnw7I.html

  • தொடங்கியவர்
ஆனையிறவு வெளியில் பறக்கிறது புலிக்கொடி
flag_anaiyiravu_ltte-001.jpg
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ள ஆனையிறவு வெளியில் இன்று அதிகாலை தொடக்கம் தமிழீழத் தேசிய கொடி பறந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் மூன்று என்ற தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இத்தாக்குதலின் மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது, பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வெற்றியை நினைவுபடுத்தும் வகையில் இன்று புலிக்கொடியை பறக்க விட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

அத்தோடு தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

விடுதலைப் புலிகளின் கொடி 1977ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்து வருகிறது.

தமிழீழ விடுதலைப் போரில் வீரமரணமடைந்தவர்களை நினைவுகூர்ந்து மாவீரர் நாளில் (நவம்பர் 21 1990) முதல் தடவையாக பிரபாகரனது பாசறையில் ஏற்றி வைக்கப்பெற்றது.

நாட்டைப் போற்றி வணங்குதற்கு ஈடாக தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது.

தேசியக்கொடியை வணங்குவது, நாட்டை வணங்குவது போலாகும். நாட்டின் தலைவர், படை, ஆட்சி என்பவற்றைவிடவும் உயர்ந்ததாகத் தேசியக்கொடி மதிக்கப்படுகின்றது.

எனவேதான் எந்தவொரு நாட்டிலும் எந்தச் சிறப்பு நிகழ்வுகளின்போதும் நாட்டின் தலைவர், படை வீரர், அரசுப் பணியாளர், குடிமக்கள் அனைவரும் கொடிவணக்கம் செய்கின்றனர்.

flag_anaiyiravu_001.jpg

http://www.tamilwin.com/show-RUmtzBRaSWnx2C.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இணைப்புக்களுக்கு நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன்!

எழுத்து: இ.பு.ஞானப்பிரகாசன் நாள்: 27.11.15 பகுப்பு: அஞ்சலி, இனப்படுகொலை, இனம், ஈழம், கவிதை, தமிழர், தமிழ், விடுதலைப்புலிகள்
 
Tamil Marty's Day - 2015
 

‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்’ எனும் இறையுணர்வுப் பாடலை ஈழத் தமிழுணர்வுப் பாடலாய் மாற்றி இந்த ‘மாவீரர் திருநா’ளில் என் தமிழஞ்சலியாய்ச் சாற்றுகிறேன்!
 
பல்லவி

மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன் - நான்
 
மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன்
 
கல்லானாலும் துயிலும் இல்லக் கல்லாவேன் - கருங்
கல்லானாலும் துயிலும் இல்லக் கல்லாவேன் - பசும்
புல்லானாலும் கரிகாலன் கை வில்லாவேன் - நான்
 
மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன்
 
உருவடி -

பொருளானாலும் விடுதலைக்கே எரிபொருளாவேன் - வெறும்
கரியானாலும் தமிழை எழுதத் துணையாவேன்
 
பேச்சானாலும் தமிழர் உரிமைப் பேச்சாவேன் - தமிழ்ப்
பேச்சானாலும் தமிழர் உரிமைப் பேச்சாவேன் - விடும்
மூச்சானாலும் ஈழத்துக்காய் நான்விடுவேன் - நான்

மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன்
 
உருவடி -

சொல்லானாலும் மானம் என்னும் சொல்லாவேன் - உதிர்
சருகானாலும் தமிழ் மண்ணுக்கே உரமாவேன்
 
துகளானாலும் பகைவர் விழிக்கு வினையாவேன் - தூசித்
துகளானாலும் பகைவர் விழிக்கு வினையாவேன் - தனி
உயிரானாலும் மீண்டும் நற்றமிழ்ப் பயிராவேன் - நான்

மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன் 
  • கருத்துக்கள உறவுகள்

மாவ்வீரர் எமது தெய்வங்கள்....

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 25/11/2015 at 11:07 AM, Surveyor said:

 

அனைவருக்கும் வணக்கம்,

இத்திரியில் தொடர்ந்தும் ஊக்கத்துடன் பதிவிட்டுவரும் உறவுகளுக்கு மிக்கநன்றி. இவ்வருட மாவீரர்தின நிகழ்வுகள் பற்றி உங்களுக்கு தெரிந்த இத்திரியில் பதியப்படாத நிகழ்வுகள் பற்றி தெரிந்திருந்தால் அவற்றை இங்கு பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  

கடந்த மாவீரர் தினத்தின்போது ஐபிசி தமிழ் ரிவியில் ஒளிபரப்பான ‘மாவீரம் போகவில்லை‘ என்ற தலைப்பிலான கவியரங்க ஒளிப்பதிவு இருந்தால் யாராவது தயவு செய்து போட முடியுமா?

 

 

 

On 25/11/2015 at 11:07 AM, Surveyor said:

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.