Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆணாதிக்க முஸ்லிம் மதமும் பெண்ணும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆணாதிக்கத்தின் இன்னுமொருவடிவமே முஸ்லிம் மதமாகும். வரலாற்று ஒட்டத்தில் கிறிஸ்தவத்துக்கு பின் முஸ்லிம் மதம் உருவான போது, அக் காலத்துக்கே உரிய கிறிஸ்தவத்தை விட முற்போக்கான பாத்திரத்தை முஸ்லிம்மதம் ஆற்றியது. இது இருந்த சமுகத்தின் சில மூடப்பழக்க வழங்கள் மீதான மாற்றத்துடன் சமுதாயத்தில் சில முன்னேறிய சீர்திருத்தத்தை முன்தள்ளியது. இது அக்காலத்துக்கே உரிய பல தீர்வுகளை சீர்திருத்தத்தினுடாக முன்வைத்தது. இந்த வகையில் பெண்கள் மீது மதத்தை நிலைநிறுத்தும் வடிவில் சில சீர்திருத்தத்தையும் முன்வைத்தது. கிறிஸ்தவம் தோன்றிய போது உந்தப்பட்ட சமுக ஆற்றலை பின்னால் அவை இறுகிய இயங்கியல் அற்ற இறுக்கமான ஒழுக்கமாக மாறிய போது, வளர்ச்சி இறுகி ஐடமானது. இது போல் முஸ்லிம் மதமும் சமுகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியபின் கிறிஸ்தவ மதத்திற்கு எது நடந்ததோ அதுவே இதற்கும் விதியாகியது. இன்று கிறிஸ்தவ மதம் பொருளாதார மாற்றத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் சிதைந்த போதும், மதத்துக்கு வெளியில் சமூக பாய்ச்சலைக் கண்டது. முஸ்லிம் மதம் பலம் பெற்ற நாட்டின் பொருளாதாரம், ஏகாதிபத்திய அமைப்பால் பாதுகாக்கப்படுவதால் தகர்ந்துவிடவில்லை. இதனால், அதை பாதுகாக்கும் ஆணாதிக்க மதப் பிற்போக்குகால் மிக ஆழமாக பெண்ணின் இழிநிலை துன்பகாரமானதாக மாறியது.

இதை நாம் திருக்குர்ஆன் மூலம் ஆராய்வோம். அல் 2:222-223 இல், ~~அது ஒரு துய்மையற்ற நிலை. ஆகவே மாதவிடாய்க் காலத்தில் பெண்களைவிட்டு விலகியிருங்கள். ....துய்மையடைந்துவிட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள்.... உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளை நிலங்களாவர். எனவே, நீங்கள் விரும்பும் முறையில் உங்களுக்குரிய விளைநிலங்களுக்குச் செல்லுங்கள். மேலும் உங்களுடைய வருங்காலத்துக்காக முன் கூட்டியே ஏதாவது செய்து கொள்வதில் அக்கறை காட்டுங்கள்.||92 பெண்ணின் மாதவிடாய் தூய்மையற்றது என்பது அறிவியல் ரீதியில் அன்று விதந்துரைக்கப்படவில்லை. ஏனெனின், அக்காலத்தில் மாதவிடாய் இரத்தம் வெளியேறும் ஓரு நிகழ்ச்சியாகவே கருதப்பட்டதுடன், மாதவிடாய்க்கான காரணம் அண்மைய கண்டுபிடிப்பாகும்;. இந்து மதம் மாதவிடாயை தூய்மையற்றதாக கருதி பெண்களை விலக்கியது போலவே, இஸ்லாம் மதமும் விலக்கியது. பெண்கள் ஓட்டு மொத்தமாகவே மசுதிக்கு ஆண்கள் செல்வது போல் செல்லமுடியாத இரண்டாம் பிரiஐயாக வாழ்வதும், இந்து மதத்தில் பார்ப்பணப் பெண்களே கோயில் உட்பகுதிக்கு செல்ல முடியாத நிலையையும் இங்கு கவனத்தில் எடுப்பின், பெண்ணின் உரிமையில் மதங்கள் தமது பிற்போக்கை காட்டுவதை காணமுடியும்;. கிறிஸ்தவம், பெண்கள் பூசாகராக முடியாத ஆணாதிக்கம் போன்று எல்லா மதங்களும் பெண்ணை அடிமைப்படுத்தி வைத்துள்ளது. இதில் இருந்தே மாதவிடாய் போன்றவை பெண்ணின் இழிவாக்கப்பட்டு அசுத்தமானதாக புனைந்து அதை ஆணுக்கு போதிப்பதும், பெண்ணை ஒதுக்குவதும் அரங்கேறுகின்றது.

பெண்ணை விளை நிலத்துக்கு ஒப்பிடும் திருக்குர்ஆன் பெண்ணை பிள்ளை பெற்றுப்போடும் இயந்திரமாகவே கருதுகின்றது. சமுதாயத்தில் பூமியை தாயாக கருதி மதித்த போது, பெண்ணின் தாய்மை அதையொட்டி மதிப்புக்குள்ளானது. இதன் பின்னால் பெண்ணை ஆணின் உரிமையாக்கி, சொத்தாக்கிய போது, குர்ஆன் பெண்ணின் உரிமையை மறுக்கின்றது. பெண் மீதான உரிமையை, ஆணுக்கு விலக்கப்பட்ட நிலைமைகள் தவிர்த்து, மற்றைய நிலைமைகளில் விரும்பியவாறு செயல்பட இஸ்லாம் கோருகின்றது. இங்கு பெண்ணின் உரிமை முற்றுமுழுதாக புறக்கணிக்கப்படுகின்றது. அத்துடன் வருங்கால ஆணின் வாரிசுகளை உருவாக்க இந்த பூமி பயன்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டி பெண்,பாலியல் நுகர்வுக்கான ஊடகமாகவும், பிள்ளைபெறும் இயந்திரமாகவும் குர்ஆன் நிலைநிறுத்துகின்றது. காலத்தால் இன்று நாம் வெகுபின்தள்ளப்பட்ட நிலையில், குர்ஆன் கூற்றுகள், பெண் மீதான ஆணாதிக்கத்தை அதன் இறுகிய வடிவில் திணிக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அத்2-226,227,228,229,230,231,232,233,234,235,236,237 இல், விவாகரத்து மற்றும் சொத்துரிமை, பெண்ணின் நிலை தொடர்பாக வரையறுத்துள்ளதைப் பார்ப்போம். ~~விவாகரத்து செய்ய தீர்மனித்த ஆண் குறித்த தவணையில் விடுவிக்க வேண்டும்;. விடுவிக்காது துன்புறுத்தின் குற்றமாகும். இந்த விலகளின் பின் பெண் விரும்பின் வேறு ஒரு ஆணை மணப்பதை தடுத்தல் குற்றமாகும். பெண்ணின் விருப்பு மதிக்கப்பட கோருகின்றது. இந்த நிலையில் பால்குடிக்கும் குழந்தை இருப்பின் கணவனின் விருப்பப்படி குழந்தைக்கு இரண்டு வருடம் பால் கொடுக்க வேண்டும். அதே நேரம் குழந்தைக்கான செலவும், தாய்க்கான செலவையும் தந்தை கொடுப்பதுடன் குழந்தையின் வாரிசுரிமை தந்தைக்குச் சேரும்;. இதில் இருந்து விலகின் பரஸ்பர விருப்புடன் விலகமுடியும்;. கணவன் இறந்தால் நாலுமாதம் பத்து நாட்கள் காத்திருந்த பின், திருமணத்தை செய்யமுடியும்;. பெண் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பிறக்கும் வரை காத்திருந்து திருமணம் செய்யமுடியும்;. இத்திருமணம் பகிரங்கமாக செய்யவேண்டும்;. இக்காலத்துக்கு முன் அலங்கரிப்பது தடைசெய்யப்பட்டது. விவாகரத்து செய்யும் ஆண் பெண்ணுக்கு வாழ்வுக்கு அடிப்டையாக எதாவது கொடுக்கவேண்டும்;. திருமணத்துக்கு முன் கொடுக்க தீர்மானித்த பின், அப் பெண்ணுடன் உடலுறவு கொள்ளாது விவாகரத்து செய்யின் அவன் கொடுக்க ஒத்துக் கொண்டதில் அரைவாசியை கொடுக்க வேண்டும். கணவன் இறந்தால், அப் பெண் அவ் வீட்டில் வாழும் உரிமையை ஒருவருடங்கள் அனுமதித்தது.||91 முஸ்லிம் மதம் இருந்து வந்த சமூகத்தின் மீது, தனது ஒழுக்க சட்டக் கோவையை குர்ஆன் மூலம் ஏற்படுத்திய போது, பெண்கள் அனுபவித்த சில சுதந்திரங்கள் மீது சகிப்பு தன்மை காட்ட வேண்டியிருந்தது. முகமதுநபிகள் தனது வாழ்க்கையை விதவையுடன் தொடங்கிய போதும், விவாகரத்து மீது தனது எதிர்ப்பை தெரிவித்தே வந்தார். ஆனால் சமூகத்தில் ஜனநாயக எல்லையை அவரால் மீறமுடியவில்லை. ஆண்கள் |தாலக்| கூறி பெண்ணை கைவிட்டு செல்லுவது அதிகரித்த போது, விவாகரத்துக்கு எதிராகவே அவர் பல சந்தர்ப்பத்தில் கருத்துரைத்துள்ளார். அது போல் ஒரு பெண் தான் விவாகரத்து செய்ய உள்ளதாக நபிகள் இடம் கூறிய போது அவர் இதை எதிர்க்கின்றார். அப்போது அப்பெண் கேட்கிறாள் இது கட்டளையா அல்லது ஆலோசனையா என்று கேட்க நபிகள் ஆலோசனை என்று கூறி பின்வாங்குகின்றார். அதே நேரம் அப்பெண் நபிகளின் கூற்றை அலட்சியபடுத்தி விவாகரத்தை செய்கின்றார். இத்தகவலை ஆஸ்கர் அலிஎஞ்ஐpனீர் எழுதிய முஸ்லீம் பெண்களும் அவர்களுடைய உரிமைகளும் என்ற நூலில் காணமுடிகின்றது.

ஆகவே அரபு சமூகத்தில்; பெண்கூட விவாகரத்துரிமையை மிக சுதந்திரமாக அக்காலத்தில் கொண்டு இருந்தாள். ஆண்கள் எவ்வளவு இலகுவாக விவாகரத்தை பெற்றனரோ அதே அளவுக்கு பெண் பெற்றிருந்தாள். தனிச்சொத்துரிமையின் வளர்ச்சி பெற்ற வழியில் ஆணின் விவாகரத்து பெண்ணை பொருளியல் ரீதியில் படுமோசமான வாழ்க்கைக்கு இட்டுச்சென்றது. அதே நேரம் சொத்துரிமையை வைத்திருந்தோர், விவாகரத்தை இலகுவாக எடுத்தனர். தனிச்சொத்துரிமை ஆதிக்கத்தை பெற்று வளர்ந்த போக்கில், பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் நபிகள் பெண்ணுக்கான சொத்துப் பாதுகாப்பை வைப்பதன் மூலம், பெண்ணின் பொருளாதார சீரழிவை தடுக்க பெண்ணின் பங்கு தெளிவாக்கப்படுகின்றது. இது மற்றைய மதங்களில் இருந்து வேறுபட்ட ஒரு முற்போக்கான வடிவமாகும்;. விவாகரத்துக்குள்ளாகும் பெண் மறு திருமணத்தை செய்யும் உரிமையை கொண்டிருந்தாள். இதுவும் மற்றயை மதங்களில் இருந்து ஒருமுற்போக்கான பாத்திரமாகும்;. இது நபிகளின் கண்டுபிடிப்போ, அல்லது புதிய புரட்சியோ அல்ல. நபிகள் இருந்த உரிமையை தனது போதனைகளில் அங்கீகரித்து ஒழுங்குபடுத்தினர் அவ்வளவே. ஆனால் பின்னால் இது இன்று மாறிவந்த தனிச்சொத்துரிமையின் ஆதிக்கம் பெண்ணின் சொத்துரிமையை முற்றாக ஆணாதிக்க ஜனநாயகத்தில் பிடுங்கிய போது குர்ஆன் அதற்கு இசைவாக மறுவாசிப்பு செய்து நியாப்படுத்தியது. பெண்ணின் உரிமைகள் நபிகளின் ஒழுக்கப் பண்பாட்டில், கடவுளுக்கான மதிப்புடன் தனிச்சொத்துரிமையால் விபச்சாரம் செய்யப்பட்டபோது, கடவுள் சொத்துரிமையின் வாரிசாகினர்.

பெண்ணின் விவாகரத்து, மறுமணம், குழந்தையின் எதிர்காலம், பெண்ணின் பொருளாதார பாதுகாப்பு போன்றன தனிச்சொத்துரிமை வளர்ச்சியில் பெண்ணுக்கு எதிராக மாறிச் சென்ற நிலையில், பெண்ணின் சீரழிவை பாதுகாக்க நபிகள் இதை சீர்திருத்திய ஒழுக்கம்தான் பெண்பற்றிய குர்ஆனின் விளக்கமாகும்;. இந்த ஒழுக்க கோவையை நபிகள் ஏற்படுத்திய அதே நேரம், தனிச்சொத்துரிமை ஆதிக்கத்தால் பெண் இழந்து, ஆண் பெற்று வந்த ஆதிக்கத்தையும், அதையொட்டிய நபிகளின் ஆணாதிக்க ஒழுக்கமாக்கியதை, தொடர்ந்து நாம் பார்ப்போம்;.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அத் 4.3,4,7,11,12, இல், ~~அநாதை(ப்பெண்)களுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் நீதமாக நடத்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின், ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கரங்களை சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். அத்துடன் நீங்கள் அப்பெண்ணுக்கு கொடுக்கும் அன்பளிப்பை முற்றாக கொடுத்துவிடும்படி கோருகின்றார். அப்பெண்ணின் அனுமதி இருப்பின் மாத்திரம் ஆண் அப்பெண்ணின் சொத்தில் அனுபவிக்கமுடியும்;. இறந்தவரின் சொத்தில் ஆண், பெண்ணுக்கு சமபங்கு வழங்கக் கோருகின்றது. குழந்தைக்கான விடயத்தில் பெண்ணின் சொத்தைப் போல், ஆண் இருமடங்கு செலவு செய்யக் கோருகின்றது. அதே நேரம் ஒருவரின் சொத்தில் பங்கு பெறுவது தொடர்பாக அவரைச் சுற்றித் தெளிவாக பங்கு பிரிக்கப்ட்டுள்ளது.||91 நபிகள் பெண்வழி சமூகத்தில் இருந்து ஆண்வழிச் சமுகம் வளர்ச்சி பெற்ற நிலையில் பெண்ணின் துயரத்தில் இருந்து ஆண்வழிச் சமூகத்தில் செய்த சீர்திருத்தமே இவை. பெண்ணின் பொருளாதார பாதுகாப்பு மீது அதிக கவனம் செலுத்தியே இஸ்லாம் மதத்தை நிறுவமுடிந்தது. நபிகள் தன்வாழ்க்கை முழுக்க நடத்தி பல படையெடுப்புகளில் ஆண்களின் இழப்பு பெண்களை அநாதையாக்கியது. அதே நேரம் கொல்லப்பட்ட எதிரியின் மனைவிகள் குழந்தைகள் அநாதையாதல், மற்றும் சிறைபிடிக்கப்ட்ட பெண்கள், மற்றும் யுத்தத்தால் பெண்கள் ஆண்களை பெற முடியாத சீரழிவுகள் எதிர்கொள்ளப்பட்டது. இதனால், ஆணாதிக்க சமுகத்தில் ஆண், பெண் மீதான யுத்த வன்முறை, மற்றும் அநாதைகள் மீதான பாலியல் அத்துமீறல்களை கட்டுப்படுத்த, ஆணுக்கு பல மனைவிமுறையை ஒழுக்கமாக்கின்னார். இங்கு பெண்களின் உரிமை பற்றி அக்கறை காட்டப்படவில்லை. இந்த ஆண்களின் சலுகை, பல மனைவிமாரை வைத்திருக்கும் உரிமை, பெண் விவாகரத்து எடுப்பதை அச்சுறுத்தியது. விவாகரத்துரிமையை பெண்ணிடம் இருந்து இந்த ஆணாதிக்க ஆதிக்கம் மறைமுகமாக பறித்தெடுத்த போது, அது ஆணுக்கு சலுகையாக மாறியது. சமுகத்தில் அதிகரித்த பெண்ணின் எண்ணிக்கை, பலதாரமணத்தை ஆணுக்கு வழங்கியது. ஆணின் விவாகரத்துரிமை பெண்ணை மேலும் அடிமையாக்கி, பெண் மீதான ஆணின் விவாகரத்து பெண்களை பாலியல் ரீதியல் அனுபவித்த பின் விவாகரத்தும், புதிய பெண்ணை பலதாரமணத்துக்குள் இணைத்துக் கொள்வதும் என இந்த நபிகளின் சீர்திருத்தம் ஆணாதிக்கவழியில் மேலும் சீரழிந்து வளர்ச்சி பெற்றது. இது பெண்ணின் சொத்துரிமை பாதுகாப்பை கேலி செய்தது. பெண்ணை பாதுகாக்க வழங்கிய சொத்துரிமை ஆணின் பலதாரமணத்தில் சொத்து இழப்புக்கு வழிகாட்டியது. பெண் குடும்பத்தை விட்டு வெளியேறுவது அச்சத்தை ஏற்படுத்தும் சீரழிவுக்கு இட்டுச் சென்றது. ஆண்களின் கரங்களில் சிக்கிய பெண்ணை திருமணம் செய்ய நபிகள் ஆலோசனை வழங்குகின்றார். அந்தளவுக்கு யுத்த கைதியாக பெண்கள் சிக்கியதும், பாலியல் ரீதியில் அனுபவித்ததையும் நபிகளால் தடுக்கமுடியவில்லை. யுத்தத்தை நடத்தியவர் முன்னால் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு சிதைக்கப்பட்ட போது, திருமணம் மூலம் அதை தணிக்க முயன்றாரே ஓழிய தடுக்கவோ (ஏனெனின் யுத்தத்தில் பெண்ணை அடைவது யுத்த உற்சாகத்தின் வடிவமாக இருந்து வருகின்றது) முடியவில்லை. அதை அங்கீகரித்தபடியே அதை திருமணத்தில் சாந்தப்படுத்த முனைந்தார். இங்கு பெண்களின் பக்கத்தில் இருந்து நபிகள் இதை அனுகவில்லை. மாறாக ஆணாதிக்கத்தின் பக்கத்தில் இருந்தே அணுகிய நபிகள், குர்ஆன் மூலம் பெண்களின் சில பாதுகாப்பை வழங்க முனைந்தார். ஆனால் ஆணாதிக்க சமூகம் வளர்ச்சிக்கு முன்னால்; நபிகளின் கோட்பாடுகள் தூக்கியெறியப்பட்டன. அவரின் தொடர்ச்சியான யுத்தம் சமுகத்தை சிதைக்க, ஆண் பெண்ணுக்கு பரிசு கொடுத்து திருமணம் செய்தது படிப்படியாக அவசியமற்றதாகி, எதிர் நிலைக்கு கவிழ்ந்தது. தனிச் சொத்தின் வரிசுரிமை ஆணுக்கு மாற, அதை பெறும் வளர்ச்சியில் ஆண் சொத்தை பெண்ணிடம் எதிர் பார்ப்பது அவசியமாகியது.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்கள் மனைவியரை இக்களத்தில் சுதந்திரமாகக் கருத்துப்பகிர அழையுங்கள். அப்போதுதான் உங்கள் ஒவ்வொருவரின் உண்மை முகமும் தெரியும். நீங்கள் எல்லாம் ஆணாதிக்கவாதிகளா இல்லையா என்பது...அவர்களின் சுதந்திரக் கருத்துப் பகிர்விலேயே தெரியும். உங்கள் மனைவியரின் குரலை பூட்டி வைத்துவிட்டு நீங்களோ ஊரைப் பார்த்து ஆணாதிக்க உலகம் என்பீர்கள். ஆனால் வீட்டிலோ நீங்களே கொடிய ஆணாதிக்கவாதிகளாக இருப்பீர்கள்..! இதைத்தான் பல ஆண்கள் செய்து வருகின்றனர். ஊரிக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடி என்பதுதான் பலரின் நிலை. இந்த நிலை உலகுக்கு அவசியமில்லை. இப்படியான போலிகளின் கருத்தும் அவசியமில்லை. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்கள் மனைவியரை இக்களத்தில் சுதந்திரமாகக் கருத்துப்பகிர அழையுங்கள். அப்போதுதான் உங்கள் ஒவ்வொருவரின் உண்மை முகமும் தெரியும். நீங்கள் எல்லாம் ஆணாதிக்கவாதிகளா இல்லையா என்பது...அவர்களின் சுதந்திரக் கருத்துப் பகிர்விலேயே தெரியும். உங்கள் மனைவியரின் குரலை பூட்டி வைத்துவிட்டு நீங்களோ ஊரைப் பார்த்து ஆணாதிக்க உலகம் என்பீர்கள். ஆனால் வீட்டிலோ நீங்களே கொடிய ஆணாதிக்கவாதிகளாக இருப்பீர்கள்..! இதைத்தான் பல ஆண்கள் செய்து வருகின்றனர். ஊரிக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடி என்பதுதான் பலரின் நிலை. இந்த நிலை உலகுக்கு அவசியமில்லை. இப்படியான போலிகளின் கருத்தும் அவசியமில்லை. :lol:

மனைவிமாரோ, காதலிகளோ இங்கு வந்து கருத்துக்கள் எழுத முடியாத அளவிற்கு ஆணாதிக்க வெறியர்கள் நிரம்பி வழிகின்றனர் (ஒருவரே பல முகமூடிகளில் வருவதும் நிகழ்கின்றது).. யாழ் களத்தில் கருத்தெழுதிய பெண்களும் காணாமல் போய்விட்டனர். இப்படியான விவாதங்களில் கலந்து வீண்பெயர் கேட்க வேண்டுமே என்று பயந்து தலைகாட்டாமல் இருக்குமளவிற்கு உங்களைப் போன்றோர் கருத்தெழுதிக் கொண்டிருக்கின்றீர்கள் (முன்பு குருவியாக இருந்தீர். சுயதடை போட்ட பின்பும் சொரணை இல்லாமல் மீண்டும் வேறு பெயர்களில் வந்திருக்கின்றீர். இப்படியே தொடருவீர்)..

ஒன்றுமட்டும் நிச்சயம்.. உம்மைப் போன்றோரின் கருத்துக்களுக்கு "ஆமாம்" போடுவதற்கு ஒரு சகோதரிகளும் வரமாட்டார்கள் (நீரே பெண் பெயரில் வந்து வக்காலத்து வாங்கினாலும் வாங்குவீர்)

  • கருத்துக்கள உறவுகள்

மனைவிமாரோ, காதலிகளோ இங்கு வந்து கருத்துக்கள் எழுத முடியாத அளவிற்கு ஆணாதிக்க வெறியர்கள் நிரம்பி வழிகின்றனர் (ஒருவரே பல முகமூடிகளில் வருவதும் நிகழ்கின்றது).. யாழ் களத்தில் கருத்தெழுதிய பெண்களும் காணாமல் போய்விட்டனர். இப்படியான விவாதங்களில் கலந்து வீண்பெயர் கேட்க வேண்டுமே என்று பயந்து தலைகாட்டாமல் இருக்குமளவிற்கு உங்களைப் போன்றோர் கருத்தெழுதிக் கொண்டிருக்கின்றீர்கள் (முன்பு குருவியாக இருந்தீர். சுயதடை போட்ட பின்பும் சொரணை இல்லாமல் மீண்டும் வேறு பெயர்களில் வந்திருக்கின்றீர். இப்படியே தொடருவீர்)..

ஒன்றுமட்டும் நிச்சயம்.. உம்மைப் போன்றோரின் கருத்துக்களுக்கு "ஆமாம்" போடுவதற்கு ஒரு சகோதரிகளும் வரமாட்டார்கள் (நீரே பெண் பெயரில் வந்து வக்காலத்து வாங்கினாலும் வாங்குவீர்)

குருவி என்பவர் யார் என்றே நமக்குத் தெரியாது. உங்களுக்கு அவரின் பாதிப்பு என்பதற்காக காண்பவர்களை எல்லாம் மாலைக் கண்ணோடு குருவிகளாக நோக்குவது தவறு. கள நிர்வாகிகளும் இவர்தான் அவர் அவர்தான் இவர் என்ற பாணியில் கருத்தெழுதுவதைத் தவிர்க்க சொல்லி உள்ளனர். சொல்லியும் திருந்திற நிலையில் நீங்கள் சிலர் இல்லை. :lol::lol:

குருவியோடு மோத விருப்பம் என்றால் பகிரங்கமாக அழைத்து மோதிக்கொள்ளுங்கள். அவரை வைத்து மற்றவர்களை பேசிக் காலம் கழிப்பதை நிறுத்துங்கள்.

இங்கு கருத்து மோதல் அல்லது கருத்துப்பகிர்வுதான் நிகழ்கிறது. உங்களால் பெண்களுக்காக குரல் கொடுக்க முடிகிறது என்றால் ஏன் பெண்களால் முடியாது என்று தீர்மானிக்கிறீர்கள். இது சுத்த ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு. பெண்கள் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டுமே தவிர பதுங்கி இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. இப்படித்தான் ஆதிகாலந்தொட்டு பெண்கள் தங்கள் ஆற்றாமைக்கு முதலிடம் வழங்கி சமூகத்துக்கு அதுவும் ஆண்களுக்குப் பயந்து பதுங்கிக் கொண்டிருக்கின்றனர். இது பெண்களின் ஆற்றாமையையே குறிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். பெண்களுக்காக பெரியார் குரல் கொடுப்பதிலும் பெண்ணே குரல் கொடுக்க வேண்டும். அதுதான் அவளின் தேவைகளை உணர்வுகளை அனுபவங்களைச் சரிவர வெளிக்கொணரும். மாற்றங்களை வலியுறுத்தும்.

பைத்தியக்காரர்களோடும் நாம் வாதாடிக் கொண்டுதான் இருக்கின்றோம். அதற்காக அவர்களுக்குப் பயந்து ஐயோ எங்கட மவுசு குறைஞ்சிடும் எங்களைத் தூசணத்தில் திட்டி விடுவார்கள்..அதனால் எங்கள் மானம் போயிடும் என்று ஓடி ஒழியுற நிலை எம்மிடமில்லை. உங்கள் போன்றவர்களின் தூசணங்களை எதிர் கொண்டுதான் உள்ளோம். ஆனால் பெண்களுக்காக அவர்களின் ஆற்றாமை கருதி ஆண்கள் சிலர் குரல் கொடுப்பதை ஆணாதிக்க நிலையென்றே கொள்ள வேண்டும். ஏன் பெண்களுக்கு சூழலுக்கு ஏற்ப தங்கள் கருத்துக்களை வைக்கத் திராணியை வளர்க்க அனுமதிக்கிறீர்கள் இல்லை. இதையேதான் முஸ்லீம் ஆண்களும் செய்கின்றனர். வெளியில் போனால் துஸ்டன் கை பட்டிடும் கால் பட்டிடும் கண்பட்டிடும் என்று வீட்டுக்குள் பூட்டி வைத்து மூடி வைத்து சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதையே உங்கள் போன்றோர் ஆணாதிக்கம் என்று வரைந்து கொண்டு குருவி போன்றவர்களுக்குப் பயந்து பெண்கள் கருத்தே வைக்காமல் ஓடி ஒழிக்கிறார்கள்..அதுதான் நாங்கள் அவர்களுக்கு பதுங்குமிடம் வழங்கிக் கொண்டு அவர்களுக்காக குரல் கொடுக்கின்றோம் எங்கிறீர்கள். வெட்கமாக வில்லை. இதைத்தான் முஸ்லீம் ஆண்களும் முகத்தை மூட வைத்துச் செய்கின்றனர்.

உண்மையைச் சொன்னால் குருவி என்பவர் என்ன சொன்னாரோ எமக்கு தெரியாது..உங்களுடைய பலானக் கதைகளைப் பெண்கள் படித்துவிட்டால் உங்கள் மவுசு குறைந்திடுமோ என்ற அச்சத்தில் அவர்களை அனுமதிப்பதில்லை. இல்ல உங்கள் சுயரூபங்கள் வெளிப்பட்டு விடும் என்று பயந்தோ அல்லது உங்களின் திறமைகளுக்கு அவர்கள் போட்டியாகி விடுவரோ என்ற அச்சத்தில் தான் அவர்களின் சுதந்திரக் கருத்துப் பகிர்வையே சாக்குப் போக்குச் சொல்லி மறுதலிக்கிறீர்கள். உங்கள் போன்ற ஆண்களே ஆணாதிக்கத்தின் மூல கர்த்தாக்கள் என்பதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. உங்களைத் திருத்துங்கள் உலகம் திருந்திக் கொள்ளும்..என்பதே இதில் எங்கள் கருத்தாக இருக்க முடியும். :P :lol::D

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவானை நிறையப் பேர் "குருவியர்" என்று சொல்கிறார்கள்.

"குருவியர்" களத்தில் இருந்த பொழுது நான் யாழ் களத்தில் தீவிரமாக இல்லை. இப்பொழுதுதான் அதிகம் எழுதுகிறேன்.

என்னால் இருவரும் ஒன்றா என்று சொல்ல முடியாது உள்ளது.

நெடுக்காலபோவான் "குருவியர்" என்று சொல்லப்படுவதற்கு என்ன காரணம்?

யாராவது இதை சொல்லுங்களேன்.

நெடுக்காலபோவானிடம் இதற்கு ஏதாவது விளக்கம் உள்ளதா? ஏன் உங்களை மற்றவர்கள் அப்படி சொல்கிறார்கள்? உங்களுக்கும் அவருக்கும் உள்ள ஒற்றுமைகள் என்ன?

அல்லது இது பற்றி ஒரு தனித் தலைப்பு போடுவோமா?

கருத்துக்கு பதிற் கருத்து எழுதாமல் கருத்து எழுதுபவர் மேல் கற்பனையான வசைபாடல்கள் நிகழ்த்துவது.மேற் போக்கான புரிதலின் அடிப்படையில் விதண்டாவாதம் செய்வது.தலைப்புக்குச் சம்பந்தம் இல்லாமல் எழுதி கருத்தைத் திசை திருப்பவது.தொடர்ச்சியான தனி நபர் தாக்குதல்களால் கருத்தாடுபவரை சலிப்படைய வைப்பது.இப்படி பலரை களத்தில் இருந்து விலக வைத்தவர் குருவி .கடையில் தன் வினை தன்னைச் சுட, நீங்களும் உங்கள் யாழ்க்களமும் எனக்கா வேறு இடம் இல்லை என்று சொல்லிப் போட்டு போய் விட்டார்.பின்னர் பலமுகமூடிகளில் வந்து யாழ்க் களத்தைத் திட்டித் தீர்த்தார்.கடைசியா நெடுக்காலபோவான் என்ற முகமூடியில் அவதரித்தார்.குருவியின் அதே பாணியிலையே நெடுக்காலபோவானும் தொடர்கிறார்.

குருவி என்பவர் எவ்வாறு மிகவும் பிற் போக்கான கருத்துக்களைக் கொண்டிருந்தாரோ அவரைப் போலவே நெடுக்கால போவானது கருத்துக்களும் இருக்கின்றன.

இவரது இந்த தனித்துவமான குணாம்சங்களால் இவரை இலகுவில் இனங்கண்டு கொள்ளலாம். :lol::D

சபேசன்... உந்த நீட்டு வேசமே கொஞ்சம் பராவாயில்லை.......பறவைக்காரர் ..முதல் பந்தியில் சொன்னதுக்கு அடுத்த பந்தியிலை எதிராக கதைப்பார்.... அவருக்கு கூகிள் தளத்தில் ஆதாரம் தேடி தனது பழைவாத கருத்துக்களுக்கு வலு சோர்க்க பாடுபடுவர்... அவர் .... இந்து மதம் கூட நெகழ்ச்சியாய்... காலத்தின் தன்மை மாறினாலும்..... இவர் மாற மாட்டார்.... ஆணாதிக்க சிந்தனையின் மொத்த உருவம்... SEX என்பது பிள்ளை பெறுவதற்க்கு மட்டும் என்று நினைக்கும் அப்பாவியான இயலாதவர்... இந்து மதம் நெகுழும் போக்கால் வர்ணங்களை மறந்தாலும்..... ஆறுமுகவாலரின் நவீன வாரிசாக தன்னை உருவகபடுத்தி... நடை முறை படுத்த விரும்புவர்..... அவருடன் தொடர்ந்து வாதிட்டு வந்தால் கட்டாயம் மனோத்தவ டாக்டரை பார்க்க வேண்டிய நிலமை ஏற்படும்.

எப்பாற்படினும் தனது கொள்கைகளை நிலை நாட்ட முயலும் நல்ல கெட்டிக்கார நய வஞ்சக கடை கெட்ட புத்திஜீவி...

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கு பதிற் கருத்து எழுதாமல் கருத்து எழுதுபவர் மேல் கற்பனையான வசைபாடல்கள் நிகழ்த்துவது.மேற் போக்கான புரிதலின் அடிப்படையில் விதண்டாவாதம் செய்வது.தலைப்புக்குச் சம்பந்தம் இல்லாமல் எழுதி கருத்தைத் திசை திருப்பவது.தொடர்ச்சியான தனி நபர் தாக்குதல்களால் கருத்தாடுபவரை சலிப்படைய வைப்பது.இப்படி பலரை களத்தில் இருந்து விலக வைத்தவர் குருவி .கடையில் தன் வினை தன்னைச் சுட, நீங்களும் உங்கள் யாழ்க்களமும் எனக்கா வேறு இடம் இல்லை என்று சொல்லிப் போட்டு போய் விட்டார்.பின்னர் பலமுகமூடிகளில் வந்து யாழ்க் களத்தைத் திட்டித் தீர்த்தார்.கடைசியா நெடுக்காலபோவான் என்ற முகமூடியில் அவதரித்தார்.குருவியின் அதே பாணியிலையே நெடுக்காலபோவானும் தொடர்கிறார்.

குருவி என்பவர் எவ்வாறு மிகவும் பிற் போக்கான கருத்துக்களைக் கொண்டிருந்தாரோ அவரைப் போலவே நெடுக்கால போவானது கருத்துக்களும் இருக்கின்றன.

இவரது இந்த தனித்துவமான குணாம்சங்களால் இவரை இலகுவில் இனங்கண்டு கொள்ளலாம். :D:lol:

குருவியால ரெம்ப பாதிக்கப்பட்டவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். ஆனால் உங்களின் ஒருதலைப்பட்ச குற்றச்சாட்டுகளை வைத்துக் குருவியை எடைபோடும் அளவுக்கு நாம் முட்டாள்கள் அல்ல.

நீங்கள் தான் அதிகம் மேற்சொன்ன வேலையைச் செய்பவர் என்பதை நாம் வந்த பின்னரே அவதானித்து இருக்கின்றோம். சமாதானம் பறவைகள் குருவிகள் நெடுக்காலபோவன் எல்லாம் ஒருவரே என்று கருத்துக்குக் கருத்து எழுதாமல்.. அடுத்தவர்களின் கருத்தைவிடுத்து.. ஆட்களுக்குப் பதிலளித்து வந்தவர்களில் முதன்மையானவர் நீங்கள். உங்களின் அட்டகாசம் தாங்க முடியாமலே தான் நிர்வாகம் உத்தரவிட்டது. சந்தேகத்தின் பெயரின் அவர்தான் இவர் இவர்தான் அவர் என்றெல்லாம் எழுத வேண்டாம் என்று. அதன் பிறகு கொஞ்சம் அடக்கி வாசித்து வருகிறீர்கள். இப்போ தேவையற்ற சர்ச்சைகள் பல குறைந்திருப்பதற்குக் காரணம் உங்களின் கருத்தாடல் கொஞ்சம் தேறி இருப்பதுதான். மட்டுறுத்தினர் வைத்த சூட்டுக்குப் பிற்பாடு.

இங்கு கேட்கப்பட்டது பெண்களுக்காக நீங்கள் குரல்கொடுப்பதை விடுத்து உங்கள் மனைவியரே இங்கு வந்து தங்கள் கருத்தைச் சுதந்திரமாக அளிக்க அனுமதியுங்கள் என்றுதான். அப்போதான் உலகைப் பார்த்து அடுத்தவரைப் பார்த்து ஆணாதிக்கம் என்று கூக்குரல் இடுபவர்களின் உண்மை முகம் தெரியும். முஸ்லீம் ஆண்களும் தாங்கள் பெண்களுக்காக இறைவனால் இயக்கப்படுவதாகத்தான் கூறிச் செயற்படுகின்றனர்.பெண்களின் உரிமைகளை அதனால் மட்டுப்படுத்துகின்றனர். அதையேதான் நீங்களும் பூச்சாண்டிக் காரணங்கள் சொல்லி பெண்களின் கருத்துச் சுதந்திர உரிமையைக் கூட பாவிக்க அனுமதிக்கிறீர்கள் இல்லை. ஊரார் பெண்களுக்கு உபதேசம் மட்டும் செய்கிறீர்கள்..!

குருவியின் பிற்போக்குவாதம் எது என்று எமக்குத் தெரியாது. ஆனால் எமது வாதம் ஐநா மனித உரிமைகள் விதிமுறைகளுக்கு அமைந்த மனித உரிமைகளைப் பாதுகாப்பது. புரட்சி மண்ணாங்கட்டி என்று கொண்டு அவரவர் தங்கள் தங்கள் வக்கிர சிந்தனைகளை முற்போக்காகக் காட்ட அனுமதிக்க முடியாது.

நீங்கள் வைத்து வரும் முற்போக்குக் கருத்துக்களின் பட்டியல்....

1. பலானம் பற்றி கதைப்பது..முற்போக்கு

2. ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பது முற்போக்கு

3. கணவன் மனைவி அடுத்தவருடன் உறவு வைப்பது முற்போக்கு

4. வீதியில் உடுப்பின்றிப் போவது முற்போக்கு

5. மதங்கள் இல்லாமல் மதுக்கோப்பையோடு வாழ்வது முற்போக்கு.

6. மனித ஈடேற்றத்துக்கு சேவை வழங்கக் கூடிய தொழில் செய்ய வாய்ப்பிருப்பினும்..அவற்றைத் தேடாமல்..வறுமை என்றால் விபச்சாரம் செய்யவது முற்போக்கு.

7. காலத்துக்கு காலம் செருகப்பட்ட புனைகதைகளுக்கு பலான விளக்கம் அளிப்பது முற்போக்கு. அங்கு அறிவியலே இல்லை என்று காட்டுதல் பகுத்தறிவு.

8. கலாசாரம் பண்பாட்டில் பொதிந்திருக்கும் மனித நாகரிக விழுமியங்களைக் கைவிடுவது முற்போக்கு.

9. ஆண்களும் பெண்களும் விலங்குகள் போல நடத்தை கொள்வது முற்போக்கு...!

10. சமூகத்தில் அருகிவரும் சமூகப் பிறழ்வுகளை நோண்டி நாற வைத்து தூண்டிவிட்டு வேடிக்கை காட்டுவது முற்போக்கு. அதன் மூலம் மனித மனங்களை காயப்படுத்துவது முற்போக்கு.

யாருக்கு கதையளந்து கொண்டிருக்கிறீர்கள். அறிவற்ற ஜடங்களுக்கல்ல..மக்களுக்கு. அவர்களின் அறிவுமட்டம் உங்களையும் விட கூடவாகக் கூட இருக்கலாம் குறைவாக இருக்கலாம். அவற்றையும் புரிந்து முற்போக்கு என்பதற்கு சரியான வரையறை இட்டுக் கொள்ளுங்கள்.

எம்மைப் பொறுத்தவரை தனி மனித உரிமைகளுக்கும் சமூக உரிமைகளுக்கும் பாதிப்புக்களற்ற வகையில் மனித சமூகத்தைப் பலப்படுத்தக் கூடிய மனித நாகரிகத்தின் அடுத்தடுத்த படிநிலை வளர்ச்சிக்குரிய அம்சங்களே முற்போக்கு என்பதாக அமையும். மனித சமூகத்தைப் பலவீனப்படுத்தக் கூடிய எவையும் முற்போக்கல்ல. வழமையினின்றும் மாறுபட்டவை எல்லாம் முற்போக்காகாது. குருவி என்பவருக்கும் இப்படிப் பார்வை இருக்கலாம். சமாதானத்துக்கு இருக்கலாம். பறவைகளுக்கு இருக்கலாம். நோர்வேயில் இருந்து ஒருவர் வந்தார் அவரும் குருவியாகப் பேச்சு வாங்கியவர் அவருக்கும் இருக்கலாம். எல்லோரும் உங்களுக்கு ஆமாப்போட வேண்டும் என்பதல்ல நியதி. அவரவர் தங்கள் சொந்தக் கருத்துக்கும் சுயத்துக்கும் உரித்துடையவர்கள் என்பதையும் அவதானிக்க மறுக்காதீர்கள். அதிகம் கற்கால சிந்தனையோடு நீங்கள் தான் முற்போக்கு என்று சொல்லித் திரிகிறீர்கள்..! :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுமட்டும் நிச்சயம்.. உம்மைப் போன்றோரின் கருத்துக்களுக்கு "ஆமாம்" போடுவதற்கு ஒரு சகோதரிகளும் வரமாட்டார்கள் (நீரே பெண் பெயரில் வந்து வக்காலத்து வாங்கினாலும் வாங்குவீர்) :lol::D :P :P :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமுகத்தில் இருந்து உருவான நபிகள் தனது ஆணாதிக்க கண்ணோட்டத்தில், பெண்ணை ஆணின் விளைநிலமாகவே கருதியதும், ஆணின் உரிமையை மீள உறுதி செய்ததுடன், இன்றைய நிலைக்கு ஏற்ப ஆணாதிக்கத்தை முஸ்லிம் மதம் குர்ஆன் ஊடாக நிறுவமுடிந்தது. இதை மேலும் பார்ப்போம்;.

பாகிஸ்தான் சிறையில் உள்ள 70 வீதமான பெண் கைதிகளை பொலிசார் பாலியலில் பல்வேறு வன்முறைக்கு உள்ளாக்குகின்றனர். 90 வீதமான பெண்களுக்கு தாம் எந்தச் சட்டத்தின் கீழ் அடைத்து வைத்திருக்கின்றோம் எனத் தெரியாது. 50 முதல் 80 வீதமான பெண்கள் ||ஹ்தூக்|| கீழ் அடைக்கப்பட்டு உள்ளனர். இச்சட்டம் பெண்ணை சந்தேகத்துக்குரிய காரணம் மட்டுமே குற்றவாளியாக்கின்றது. அதேநேரம், ஆண்களுக்கு இச்சட்டம் நாலுசாட்சிகள் மூலமே குற்றவாளி என நிறுவ முடியும்.110 ஆனால் ­ஹ்தூக் சட்டம், பெண்ணுக்கு எதிரானதாக மேலும் ஆணாதிக்கமாக திரிபடைந்ததயே மேலுள்ளது காட்டுகின்றது. இதன் அடிப்படையான ஆணாதிக்க விளக்கத்தைப் பார்ப்போம்.

அத்.4.15,16,21,22, இல், ~~உங்களுடைய பெண்கள் எவர்கள் மானக்கேடான செயல் புரிந்துவிடுகின்றார்களோ, அவர்களின் குற்றத்தை நிறுவ நாலு சாட்சியைக் கொண்டுவாருங்கள். அவர்கள் சாட்சியளித்துவிட்டால் அப்பெண்களுக்கு மரணம்வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஏதேனுமொரு தீர்ப்பை வழங்கும்வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள். விதவைப் பெண்களின் வாரிசுதராக இருந்து அப் பெண்ணின் சொத்தை அபகரிக்காது இருக்க கோருகின்றது.||91

இந்த ஷரீஆ சட்டமே பெண்ணை இழிவுபடுத்துகின்றது. குர்ஆன் தன்னகத்தே என்னதான் மறுவாசிப்புக்கு பின்னால் ஜனநாயக வேடம் போட்டாலும், இஸ்லாமிய சட்டங்கள் வருகின்ற போது, கொடூரமாக தன்னை வெளிப்படுத்துகின்றது. உதாரணமாக பாகிஸ்தான் ஷரீஆ சட்டத்தை தொடர்ந்து பெண்களின் துன்பம் எண்ணில் அடங்காது. ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ இஸ்லாமிய ஷரீஆ சட்டங்கள் பெண் மீது தனது கொடூரமான அடக்குமுறையை கையாள்வதை ~~நாங்கள் ஆண்களுக்காக படைக்கப்பட்ட மாணிக்கங்கள்||(188)109 என்ற தலைப்பிலான கட்டுரை தெளிவாக்கின்றது. பாகிஸ்தானில் மூன்று மணிநேரத்துக்கு ஒரு பாலியல் வல்லுறவு நடப்பதாகவும், 65 சதவீதமான பாலியல் வல்லுறவு இளம் வயதினருக்கு நிகழ்வதுடன், நாலில் ஒன்று கும்பல் பாலியல் கற்பழிப்பாகவும் இருக்கின்றது. நீதிமன்றத்துக்கு வரும் வழக்கில் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் ஆணாதிக்கம் சார்ந்து பெண்ணை துன்புறுத்துகின்றது. பெண் மிககேவலமாக சிதைக்கப்படுவதுடன் பெண் குற்றத்தை நிறுவாவிட்டால் அவளுக்கு கசையடியும், சிறைத்தண்டனையும் பரிசளிக்கப்படுகின்றது. பாலியல் வல்லுறவுக்கு மேலாக பெண் அதற்காக தண்டனையும் ஷரீஆ சட்டம் வழங்குகின்றது. இதுதான் நபிகள் பெண்களுக்கு கொடுத்த ஆணாதிக்க கொடையாகும்.

பெண்ணின் மீதான சந்தேகம் மற்றும் ஆணாதிக்க ஒழுக்கம் பற்றிய மதிப்பீட்டை மீறும் பெண்களை தண்டிக்கும் உரிமையை நபிகள் அங்கீகரிக்கின்றார். அப் பெண்களை வீட்டில் சிறைவைக்கும் அதிகாரத்தை வழங்கியதன் மூலம் பெண்ணின் நியாயம் மறுக்கப்பட்டு ஆணின் அதிகாரம் மதத்தால் அங்கீகரிக்கப்ட்டது. அத்துடன் இன்று முஸ்லிம் பெண்கள் வீட்டில் பூட்டிவைக்க இதுவே அடிப்படையாகி, முழுப் பெண்களையும் பாலியல் கட்டுபாட்டு கண்காணிப்புக்குள்ளாக்கி குற்றவாளியாக்க துணையானது. இது எல்லையற்ற வகையில் ஆணாதிக்கம் விளக்கம் கொடுக்கவும், சாட்சி என்பது ஆணாதிக்க சமூக சாட்சியாக அதுவே ஒழுக்க எல்லையாகியது. இதனால் வீட்டில் தொடர்ச்சியான சிறைக்குள் எல்லாப் பெண்களும் தள்ளப்பட்டுள்ளனர்.

அத்4.22,23 இல், ~~தந்தையார் திருமணம் செய்த பெண்ணை மகன் திருமணம் செய்யாது இருக்கக் கோருகின்றது. அத்துடன் இது முன்பு நடந்து விட்டது. ஆனால் இது மானக்கேடானதும், வெறுக்கத் தக்கதும், கீழ்தரமானதுமான நடத்தையாகும். திருமணம் செய்ய விலக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக தாய், புதல்விகள், சகோதரிகள், தந்தையின் சகோதார்கள் சகோதரின் புதல்விகள், பாலுட்ட்டிய மற்றைய தாய்மார், பால்குடி சகோதரிகள், மனைவியாரின் தாய்மார், மனைவியின் முன்னாள் கணவனுடன் பிறந்த பெண், உங்கள் மடியில் வளர்ந்த பிள்ளைகள் உடன் திருமணம், பாலியல் உடலுறவு தவிர்க்க கோரப்பட்டது. திருமணம் செய்தும் மனைவியுடன் உடலுறவு கொள்ளவில்லை எனின் அவர்களின் முதல் திருமணத்து குழந்தையுடன் உடலுறவு கொள்ளமுடியும். மகன் வழி மனைவியுடனும் மற்றும் மகள் வழி பிள்ளைகளுடன் உடலுறவு தடுக்கப்பட்டது. அத்துடன் இரு சகோதரிகளை மணப்பது தடை செய்யப்ட்டது. ஆனால் இவை முன்பு நடந்து விட்டது.||91

நபிகளின் தனிச்சொத்துரிமை ஆணாதிக்க சமூக ஓழுக்கத்தை மதத்தினூடாக உறுதிப்படுத்தி நிறுவ முற்பட்ட போது, பழைய ஆண் பெண் உறவில் கட்டுப்பாடு அவசியமாகின்றது. இந்த வகையில் வரைமுறையற்ற புணர்ச்சியை தடுப்பது மட்டும்றி, பின்னால் உருவான குலத்துக்கு குலம் நடந்த திருமணத்தின் எச்ச சொச்சங்களையும் தடுப்பது அவசியமாகின்றது. இந்த வகையில் இரு சகோதரிகளை திருமணம் செய்யத் தடை வருகின்றது. அத்துடன் வரைமுறையற்ற புணர்ச்சி காலத்தில் நிலவிய அணைத்து வகை உறவுகளின் எச்ச சொச்சங்களையும் தடை செய்ய படுகின்றது. ~~இது முன்னால் நடந்து விட்டது|| என்றதன் ஊடாக இதன் வரலாற்று ஆதாரத்தை குர்ஆன் ஏற்றுக் கொண்டு தனியுடமை ஒருதாரமணத்தை பெண்களுக்கும், பலதாரமணத்தை ஆணுக்கும் ஒழுக்கமாக்கிய போது பழையதையும், அதன் எச்ச சொச்சத்தையும் மறுப்பது கேவலமானதாக காட்டி மறுப்பது அவசியமாகின்றது. அது எல்லா ஆணாதிக்க ஒருதாரமணத்தைப் போல் கட்டமைக்கப்பட்டது. வரைமுறையற்ற புணர்ச்சி எவ்வளவுக்கு சுதந்திரமாக இருந்ததோ, அந்தளவுக்கு சமூக இயங்கியல் வளர்ச்சியை மட்டுப்படுத்தி மிருகத்தின் எல்லையில் நீடித்ததோ, அந்தளவுக்கு பின்தங்கிய பாலியல் உறவாக நீடித்தது. அதில் இருந்து ஏற்படுத்தப்பட்ட தடை சமுகத்தை வளர்ச்சிக்கு உள்ளாக்கிய அதே நேரம், இது தனிச் சொத்துரிமையூடாக இயங்கியல் வளர்ச்சிகண்ட ஆணாதிக்கத்தின் விளைவால், பெண்ணின் சுதந்திரத்தை மட்டுப்படுத்த அடிப்படையாகியது. இது பெண்ணை, ஆணின் தனிச்சொத்துரிமை சார்ந்து பின் இழுபட்டு வாழ வைத்ததன் மூலம் சமுதாயத்தின் வளர்ச்சி இயங்கியலுக்கு முரணாக முடமாக்கப்பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமண விலக்கு என்பது ஆணாதிக்க ஆதிக்கத்திலும் அதிகாரத்தாலும் எல்லைப்படுத்தப்பட்டது. இதை ஆராய்வோம். அத் 4.24,25 இல், ~~மேலும் பிறருக்கு மனைவியராக இருக்கின்றவர்களும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளனர். ஆனால் யுத்தத்தில்) உங்கள் கைவசம் வந்து விட்ட பெண்கள் விதிவிலக்கானவர்கள். இது இறைசட்டமாகும். இவர்களைத் தவிர பணத்தின் வாயிலாக பெண்ணை அடைவது உரிமையாகும்;. ஆனால் இது நிபந்தனைக்கு உட்பட்டது. அதாவது திருமணத்தின் எல்லைவரை கொண்டுவந்து விடவேண்டும்;. இதற்கு முன் உடலுறவு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இந்த எல்லையில் உடலுறவு அனுமதிக்கப்படுகின்றது.||91 யுத்தம் பெண்களின் மீதான புதிய ஆணாதிக்க அடக்குமுறையாக விதிவிலக்கு பெண்ணுக்கு கற்பழிப்பாக இருந்துள்ளது. யுத்தத்தில் வெல்பவனின் சொத்தாக பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டனர். பெண் மீதான கற்பழிப்பை இறை சட்டத்தின் ஊடாக ஜனநாயகப்படுத்தினர். இதன் மூலம் அநீதிகள் இறை சட்டத்தினுடாக சமூக அங்கீகாரமாகியது. நபிகள் வாழ்ந்த காலத்தில் நடத்திய யுத்தங்களின் உற்சாகமான ஆணாதிக்க வெற்றிக்கு இவை நிறையவே பங்காற்றியுள்ளது. இதனால் தான் யுத்தத்தில் கைப்பற்றிய பெண்ணின் மீதான ஆணின் உரிமை குர்ஆன் சுட்டிக்காட்டி பாலியல் வல்லுறவுகளின் மீது பாதுகாத்து நிற்கின்றது. அப்பெண்கள் அடிமையாக பாலியல் நுகர்வுப் பண்டமாக ஆண்களின் காலடியில் இஸ்லாமின் பெயரில் வீழ்த்தப்பட்டனர். யுத்தப் பெண் கைதிகளின் மீதான பாலியல் அதிகாரத்தை பெற்றவர்கள், தமது அதிகாரத்தால் சகமனிதனின் மனைவியை கைப்பற்றுவது அதிகரித்ததை தொடர்ந்து, இது விலக்கப்பட்டு தடைசெய்யப்பட்டது.

இந்த தடையிலும் பணம் மூலம் பெண்ணை அடைவது அங்கீகரிக்கப்பட்டது. அதாவது யுத்தத்தில் சூறையாடி பணக்காரரான அதிகாரவர்க்கம் பணத்தைக் கொண்டு சக மனிதனின் மனைவியை அடைவது நிபந்தனையுடன் அங்கீகரித்ததன் மூலம், ஆணாதிக்க யுத்தம் வெற்றிகரமாக தொடர முடிந்;தது. இதன் மூலம் சொத்துடைய ஆணாதிக்க வர்க்க நலன்களை நபிகள் இறை சட்டமாக்கின்னர். இது பெண் மீதான ஆணாதிக்க அதிகாரத்தை மேலும் மூலதனத்துக்கு உட்படுத்துகின்றது. இதனை தொடர்ந்து கவனிப்போம்.

அத் 4.34,35 இல், ~~ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்கு காரணம் அல்லாஹ் அவர்களின் சிலருக்குச், சிலரைவிட உயர்வை அளித்திருக்கிறான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும்;. எனவே, ஒழுக்கமான பெண்கள் கீழ்படிந்தே நடப்பார்கள். மேலும் ஆண்கள் இல்லாத போது (அப்பெண்கள்) அல்லாவின் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் இருக்கின்ற காரணத்தால் அவர்களின் உரிமைகளைப் பேணுவார்கள். மேலும் எந்தப் பெண்கள் குறித்து அவர்கள் (தம் கணவர்கள்) மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அந்தப் பெண்களுக்கு, நல்லறிவு புகட்டுங்கள்; படுக்கைகளிலிருந்தும் அவர்களை ஒதுக்கி வையுங்கள்; மேலும் அவர்களை அடியுங்கள்.||91 பெண்களை ஆணுக்கு கீழ்ப்படிந்து நடக்க கோரும் குர்ஆன் பெண்ணின் கீழ்ப்படிவுக்கான காரணம் ஆணின் செல்வத்தில் வாழ்பவள் என்பதை விளக்குகின்றது. இந்தச் செல்வத்தை அல்லா கொடுத்தார் என்றதான் மூலம் ஆணாதிக்க தனிச் சொத்துரிமையை இறை சட்டமாக்கினர். இதன் மீதான போராட்டமின்றி பெண் விடுதலை சாத்தியமில்லை. பெண் இழந்து போன சொத்துரிமையை மீளப் பெறும் சமூக மயமாக்கல் போராட்டத்தினுடாகவே, பெண்ணின் விடுதலை நிபந்தனையாகின்றது. தனிச் சொத்துரிமையே பெண் அடிமைப்பட்டதற்கு காரணம் என்பதை, நபிகள் புரிந்து, அதனால் பெண்களை அதற்குட்பட்டு வாழக் கோரிய அளவுக்கு இன்று பெண்ணிலைவாதிகள் தனிச்சொத்துரிமைக்கான காரணத்தை காண மறுக்கின்றனர். நபிகள் அனுபவரீதியாக யுத்தத்தில் கொள்ளையடித்த செல்வச் செழிப்பில் பெண் மேலும் மேலும் அடிமையாக சிதைந்து சென்றதை, ஒரு தத்துவவாதிக்குரிய அனுபவத்துடன் காரணத்தை சரியாகவே புரிந்த கொண்டு விளக்கினர். இதனால் பெண்களின் உரிமைகள் சிலவற்றை நிபந்தனைக்குட்படுத்தி பாதுகாக்க முற்பட்டார். ஆனால் ஆணாதிக்க சொத்துரிமை, யுத்த செழிப்பால் வேகமாக வளர்ந்த போது, பெண்ணின் அடிமைத்தனத்தை அங்கீகரிப்பது மட்டுமே நபிகளின் அதிகாரத்தை உறுதி செய்யும் சமூக எல்லையாகவிருந்தது.

இந்த அனுபவத்தை யதார்த்தவாதியாக தொகுத்துக் கொண்ட நபிகள், பெண்ணின் அடிமைத்தனத்தை சொத்தரிமைக்கு பின்னால் சரியாகவே கண்டார். இதனடிப்படையில் விளக்கியதுடன் சொத்துரிமையை இறைவனின் சட்டமாக காட்டியதன் மூலம், ஆணாதிக்கத்தை சட்டமாக்கினர். இந்தளவுக்கு நபிகள் புரிந்தகளவுக்கு மார்க்சியத்துக்கு எதிரான கோட்பாட்டாளர்கள், பெண்ணியல்வாதிகள் புரிய, பார்க்க சொந்த வர்க்க நலன்களுடன் மறுக்கின்றனர். அதாவது, மார்க்சியத்துக்கு எதிரான பெண்ணியல் வாதிகள் தனிச்சொத்துரிமையின் ஆதிக்க, ஆணாதிக்க போக்கை காண மறுத்து, அது பற்றிய மௌனத்துடன் பெண்ணுக்கு அதற்குட்பட்ட தீர்வை நபிகள் வழியில் மீளவும் வைக்கின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணின் சொத்துரிமை இன்மையே பெண்ணின் அடிமைத்தனத்துக்கு காரணம், என்பதை குர்ஆன் ஏற்றக் கொண்டே அடிமைத்தனத்தை நியாப்படுத்துகின்றது. அடுத்து பெண்ணின் மீதான ஆணின் சந்தேகம் அப்பெண்ணை கண்காணிக்க முடியும்;. புத்தியும், பாலியவிலிருந்து விலதியும், அடிக்கவும் அல்லா அனுமதிக்கின்றார். பெண்மீதான எல்லா மனித சமூகமும் அடிமைப்படுத்தி எதைச் செய்கின்றதோ அதையே நபிகளின் ஆணாதிக்க கட்டளைப்படி, பின்னால் குர்ஆனும் அடிக்க அனுமதிக்கின்றது. பெண்ணின் உரிமை, அவளின் ஜனநாயகம், அவளின் தெரிவு எல்லாம் இஸ்லாம் மறுத்த பெண்ணை அடிக்க அனுமதித்ததன் மூலம் உண்மையில் இஸ்லாம் பெண்களுக்கு எதிராக உள்ள ஒருமதம்தான்;. இதை போற்றி வணங்குவதும் பாதுகாப்பதும் சொந்த விலங்கை பாதுகாக்கவும், ஆணிடம் அடியை வாங்கி சிறுமைப்படவும் தான். இன்று ஆப்பகானிஸ்தான், பாகிஸ்தான், அல்ஐPரியா... என்று எங்கும் இஸ்லாமிய புரட்சியை கோருபவர்கள் சரி, தனி நாட்டை கோருபவர்கள் சரி பெண்ணின் அடிமைத்தனத்தை குர்ஆனின் வழியில் அடக்கி ஒடுக்கத்தான் என்பதை அவர்களின் அதிகாரத்தில் சிக்கிய பெண்களின் நிலை காட்டுகின்றது.

அத் 24.23,24,25,26,31,33 இல், ~~கற்புடைய, கள்ளங்கபடமற்ற, இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் மீது எவர்கள் அவதூறு கூறுகின்றார்களோ அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டுள்ளார்கள். ஒழுக்கங்கெட்ட பெண்கள், ஒழுக்கங்கெட்ட ஆண்களுக்கும், ஒழுக்கம் கெட்ட ஆண்கள், ஒழுக்கங் கெட்ட பெண்களுக்கும் உரியவர்ககளாவர். தூய்மையான பெண்கள் தூய்மையான ஆண்களுக்கும், தூய்மையான ஆண்கள் தூய்மையான பெண்களுக்கும் உரியவர்களாவர். இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும்; தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக்கட்டும். தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும். அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முந்தானையைப் போட்டுக் கொள்ளட்டும்... ஒழுக்கக்கேடான பெண் முன் கண்ணியமான முஸ்லிம் பெண் தன் அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. ஏனெனின், தவறான வேட்கைக்கு அப் பெண் துணியலாம் என்பதால், அவள் முன் அலங்காரம் தவிர்க்கப்பட வேண்டும். ......தாங்கள் மறைத்து வைத்திருக்கும் தங்களின் அழகை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக தங்களுடைய கால்களைப் பூமியில் அடித்துக் கொண்டு நடக்க வேண்டும். மேலும், உலக வாழ்க்கையில் இலாபங்களைத் தேடிக்கொள்வதற்காக உங்கள் அடிமைப் பெண்களை விபச்சாரத்திற்காக பலவந்தப்படுத்தாதீர்கள்.||91 இறை வாழிபாடு கொண்ட கற்பு பெண்ணின் அணிகலன் ஆகின்றது. அவள் மீது குற்றம் சாட்ட முடியாது. இதற்கு இறைவன் சாட்சியாகி பாதுகாப்பார் என்றதன் மூலம் பெண்ணிடம் ஆணாதிக்க கற்பைப் பேண கோருகின்றது குர்ஆன். ஆனால் இது ஆணுக்கு கண்டும் காணாது விடப்படுகின்றது.

இதில் இருந்தே கற்பு இழந்த ஓழுக்கம் கெட்ட பெண், கற்பு அற்ற ஆணையே திருமணம் செய்ய வேண்டும். அதாவது ஒழுக்கம் ஆணாதிக்க எல்லையால் சமூகத்தை இரண்டாக்கி, ஒழுக்கமுள்ளவன் (இங்கு ஒழுக்கம் சொத்துரிமை அதிகாரத்தால் தீர்மானிக்கப்டுகின்றது.) தனது சொந்த பலத்தால் சமுதாயத்தை ஒழுங்குபடுத்த அதிகாரத்தை கையாழும் போது எழுந்ததே குர்ஆன் ஆகும். இங்கு மனித உணர்வுகள் ஆணாதிக்க ஓழுக்கத்தின் முன் புறக்கணித்து அடக்குமுறைகளை பரிசளிக்கின்றது. பெண்ணுக்கும் ஆணுக்கும் உடுப்பு, அழகு வெளிப்படுத்துவதில் வேறுபட்ட வகையில் ஆணாதிக்க ஒழுக்கம் முன்வைக்கப்படகின்றது. பெண்ணின் அழகை மறைக்கக் கோரியும், அவளின் முகத்தை மூடிக் கட்டிய பின் அவளை வீட்டில் பூட்டி வைக்கும் குர்ஆனில் ஆணாதிக்க விளக்கம் ஆதாரமாகவுள்ளது. முஸ்லிம் சமுகத்துக்கு மட்டுமேயான ஆணாதிக்க அடக்குமுறையின் வடிவமாக நீடிக்கும் முகத்தை மறைக்கும் ஃபர்தா என்ற ஆணாதிக்க வடிவம், மற்றைய சமுகத்தில் வேறுபட்ட எல்லைக்குள்தான் உள்ளது. இன்று இதையே ஆப்கானிஸ்தான் முதல் தீவிர இஸ்லாமிய மதவாதிகளின் அதிகாரம் ஏற்பட்ட பிரதேசங்களில், பெண் முகத்தை மூடியபடி வீட்டுக்குள் அடைத்து வரும் ஆணாதிக்க அதிகார வடிவங்கள், பெண்ணின் இயல்பான வாழ்க்கையை கூட நசுக்கி ஒடுக்குகின்றது. தீவிர தேசியவாதம் கொண்ட எல்லா வலது பிரிவுகளும் ஆணாதிக்க எல்லையில் இருந்தே இவைகளை கடைப்பிடித்து வருகின்றது. இதையொத்த ஆணாதிக்க ஒடுக்குமுறைகள் பல்வேறு சமுதாயத்தில் காணப்படுகின்றது. உதாரணமாக, கென்யா நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் அப்பெண் குழந்தையின் பெண்ணுறுப்பில் உள்ள உணர்ச்சிப் பகுதியை வெட்டி எறியப்பட்ட பின் பெண்ணுறுப்பை தைத்து விடுவார்கள். அப்பெண் திருமணம் ஆனபின்பே அத்தையலை அறுத்து ஆணாதிக்க கற்பை உறுதிசெய்கின்றனர். இதற்கும் எம்நாட்டில் இருக்கும் பல்வேறு ஆணாதிக்க ஒழுக்ககோவைக்கும் அதிக வேறுபாடில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களின் காமப் பார்வையில் இருந்து பாதுகாக்கும் கவசமாக ஃபர்தா உள்ளது என்ற வாதமும், ஃபர்தாவை அணியாமல் விடுவது பெண்ணின் உரிமை என்ற நேர் எதிர் பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன. இரண்டுமே சமுதாய ரீதியில் ஆணாதிக்க கூறுகளைக் கொண்டவை. அதாவது ஆணாதிக்கத்தின் காமப் பார்வையில் இருந்து பாதுகாக்கும் கவசம் ஃபர்தா என்ற கூற்றின் பின், ஆணாதிக்கம் தன்னையும், தனது ஆணாதிக்க வக்கிரத்தையும் நியாப்படுத்துகின்றது. ஆணாதிக்க காமத்தனத்தை பாதுகாக்கவும், அதை கண்டிக்கவும் மறுத்து மத ஒழுக்கத்தை ஆணாதிக்க வழியில் கோருகின்றது. மறுபுறம் ஃபர்தா அணியாமல் விடுவது பெண்ணின் உரிமை என்பதன் மூலம், அதை துக்கி வீசும் போது ஆணாதிக்க காமக் கண்ணுக்கு தீணிபோடப்படுகின்றது. இன்று ஏகாதிபத்தியம் பெண்ணை நிர்வாணமாக்கி சினிமா முதல் கடற்கரை வரை நிறுத்திய யதார்த்த வழியில் ஃபர்தா துறப்பு, ஆணின் காமப் பசிக்கு துணைபோகின்றது. அதாவது மார்பு தெரிய மேற்கில் பெண் திரிவது போல், முகம் தெரிய முஸ்லிம் நாடுகளில் பெண் திரிவது பெண்ணின் உரிமையாக இருப்பதில்லை. மாறாக, எப்போதும் ஆணாதிக்கத்தின் கோரிக்கையாக உள்ளது. ஆணாதிக்கத்தின் மதப் பழமைக்கும், ஏகாதிபத்திய நவீனத்துவத்துக்குமிடையில் உள்ள முரண்பாட்டில் பெண் மீதான விடுதலை பற்றியும், பெண் மீதான அடக்கு முறைபற்றியும் விவாதங்கள் ஒழுக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன.

பாட்டாளி வர்க்கம் இதை எப்படி அணுகுகின்றது. ஃபர்தாவை பெண் அடக்குமுறையின் சின்னமாக காண்கின்றது. ஆணாதிக்க ஒழுக்கத்தக்கு கவசமாக காண்கின்றது. பெண்ணின் இருண்ட கண்ணுக்கு பகலை மறுக்கும் கவசமாகின்றது; முகத்துக்கு முன் போடப்பட்ட இரும்பு வேலியாகின்றது. இதற்கு முன்னால் சமூகம் என்ற இலற்றோனிக் கவசம் பெண்ணை மூடிமறைக்கின்றது. ஆனால் இதை ஒழிப்பதில் ஏகாதிபத்திய பெண்ணியத்தில் இருந்து திட்டவட்டமாக முரண்படுகின்றது. அதாவது, ஆணாதிக்க காமத்தனத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆணைக் கண்டித்து எதிர்த்து போராடி அதை முடிவுகட்டுவதன் மூலம் ஃபர்தாவை ஒழிக்க முனைகின்றது. ஃபர்தாவை கழற்றுகின்ற ஏகாதிபத்திய காமப் பார்வைக்கு எதிரான போராட்டத்தில், ஏகாதிபத்திய வக்கிரத்தை எதிர்த்து அதை ஒழிக்கும் போராட்டத்தில் கோருகின்றது. இந்த போராட்டத்தில் பெண்களிடத்தில் ஃபர்தாவை தூக்கியெறிய கோரும் போது, ஏகாதிபத்திய விபச்சார பெண்ணியத்துக்கு எதிரான போராட்த்திலும், பழைமையான ஆணாதிக்க கண்ணோட்த்துக்கு எதிரான போராட்டத்திலும் கோருகின்றது. அராஜகவாத பெண்ணிய நடத்தைகளை எதிர்க்கின்றது. இது ஏகாதிபத்திய பெண்ணியத்தில் சங்கமிப்பதை பறைசாற்றுகின்றது. மொத்தத்தில் பெண்ணியத்தை ஆணாதிக்கத்துக்கு எதிரான வர்க்க அரசியல் நடைமுறை போராட்டத்தில் ஆயுதபாணியாகியபடி, ஃபர்தாவை ஒழிக்க கோருகின்றது. இல்லாத ஃபர்தா ஒழிப்பு விபச்சாரமாக இருப்பதை எதிர்த்து அம்பலப்படுத்துகின்றது.

கலப்பு இனமக்கள் உள்ள நாடுகளில் பார்தவை கழற்றுகின்ற போது முஸ்லிம் மத அடையாளத்தை பெண்களிடம் துறக்க கோருகின்றது. இது அனைத்துவகை பெண்ணையும் சொந்த மத அடையாளங்களை துறக்க கோருவதன் மூலம், ஆணாதிக்க மத அடையாள காமப் பார்வையை சிதைக்க கோருகின்றது. இதன் மூலம் மத ஆணாதிக்க அடையாளங்களையும், ஃபர்தா போன்ற பெண் அடிமைச் சின்னங்களையும் போராட்டங்களின் ஊடாக ஒழிப்பதை நிபந்தனையாக்குகின்றது. இதுபோன்று, இஸ்லாம் மதம் பெண்ணுக்கு ஏற்டுபடுத்திய மற்றொரு அடக்குமுறை சின்னத்தை ஆராய்வோம்.

குர்ஆன் அழகை மறைத்த பின் வீதியில் நடக்கும் போது, பெண் வருவதை வெளிப்படுத்த காலால் உதைந்து நடக்க கோரும் ஆணாதிக்க வக்கிரம் மதமாகின்றது. இயல்பான நடைக்குப் பதில் துன்பத்தில் நடக்க கோரும் வதையில் பெண் நசுக்கி பிரசவவலியானது. இந்த இறை கோட்பாட்டில் பெண்ணை வீட்டில் பூட்டியும், பல மனைவிகளை வீட்டில் அடைத்தும், அடிமைப் பெண்களால் வீட்டை நிரப்பிய பின் பெண்ணின் பாலியல் உணர்வு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பெண்கள் தமக்கிடையில் ஒரிணச் சேர்க்கையை தொடங்குவது தவிர்க்க முடியாதது ஆக்கியது. இதானல் அப்படிப்பட்ட பெண்கள் முனனும் ஆணாதிக்க இறைமொழி மீளவும் அலங்காரத்தை தடுக்க கோருகின்றது. இயற்கையான பாலியல் செயல்பாட்டை கட்டுப்படுத்தி பின் பக்க விளைவுகளை தடுக்க பெண்ணுக்கு புதிய ஆணாதிக்க கட்டுப்பாடுகள் அவசியமாகின்றது.

யுத்தத்திலும், வறுமையிலும் இஸ்லாமிய ஆண்களை கைப்பற்றிய பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சம்பாதிப்பது முஸ்லிம் பண்பாடாகியது. இதில் குர்ஆன் சீர்திருத்தம் செய்ய அடிமைப் பெண்களை பலாக்காரம் செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்த வேண்டாம் என்று ஆணைவழங்குகின்றது. விரும்பியவளை பயன்படுத்த அனுமதித்து குர்ஆன் அதை தடுத்துவிடவில்லை. எந்தப் பெண் விரும்பி விபச்சாரத்தை நாடுவள் என்பதை நபிகள் எழுப்பியதில்லை. உண்மையில் இதனூடாக சமுதாயத்தில் பெண்களின் போராட்டத்தை மட்டுப்படுத்த சீர்திருத்தத்தை புகுத்தி அல்லது விதிவிலக்கை கொடுத்து, ஆணாதிக்கத்துக்கு பாதுகாப்பு வழங்கியதே நபிகளின் பெண் பற்றிய ஒழுக்கமாக இருந்தது. அடிமைப் பெண் என்பவள் ஆணின் பாலியல் பண்டம்தான் என்பதை எல்லா உலக அடிமை வரலாறுகளும் காட்டுகின்றன. இதை தடுக்க எந்த சீர்திருத்தமும் முயலவில்லை. சில விலக்குகளை மட்டுமே வழங்கி வந்தனர்.

சில புரட்சிகள் சில மக்கள் கூட்டத்துக்கு மட்டும் விலக்கு அளித்து புரட்சி செய்தவனுக்கு சலுகை அளித்தது. தனிச்சொத்துரிமை எல்லைக்குள்ளான ஆணாதிக்க புரட்சிகள், பெண்கள் கோரிய சீர்திருத்தங்கள் எல்லாம் சிலவற்றுக்கு சலுகை அல்லது மாற்றம் இதற்கு அப்பால் எதையும் தாண்டியவையல்ல.

இஸ்லாமிய மதம் பற்றி இங்கு விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. யாழ்களத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் கூட எந்த இஸ்லாமிய மதத்தவரும் இல்லை தமது நம்பிக்கை பற்றி பிரதிவாதங்களையோ விமர்சனங்களையோ வைக்க.

அத்தோடு அவர்களது மத நம்பிக்கை எமது கலாச்சாரம் சமூக வாழ்க்கை முறைகள் மீது எவற்றையும் நான் அறிய திணிக்கவில்லை அவற்றிற்கான சான்றுகளும் இல்லை. தமிழர்களில் அறுதிப் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள் என்ற குழப்பத்தில் திரியும் சைவ ப+ர்வீகத்தைக் கொண்டவர்கள். எனவே இவை பற்றிய விமர்சனங்கள் வாதங்கள் பயனுள்ளதாகவும் இருக்கும். அத்தோடு போதிய அளவில் எதிர்வாதமும் விளக்கமும் தர இங்கு அந்த மதங் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.

கிறீஸ்தவ மதத்தினரும் சிறுபான்மையினர். அந்த மதத்தின் தாக்கம் திணிப்பு என்பது எமது சமூகத்தில் பாரிய அளவில் பாதகமான முறையில் இருப்பதாக தெரியவில்லை. பொருளாதார நெருக்கடியில் வறுமையில் இருப்பவர்களை மதம் மாற்றுவதை எதிர்க்கிறேன். அது போன்ற நடவடிக்கைகள் தவறானது. அதே நேரம் சாதிரீதியான அழுத்தங்களில் இருந்து தப்பிக் கொள்ள மதம் மாறுவது இந்துமதத்தின் போதனையின் அடிப்படையான பலவீனத்தின் வெளிப்பாடே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.